அடியார்களின் ஆரோக்கியமே சற்குருவின் ஆனந்தம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கம்பி இசை நோய் நிவாரணம்

ஆரோக்யம் என்னும்போது இது பொதுவாக உடல் ஆரோக்கியத்தைக் குறித்தாலும், உண்மையில் உடல், மனம், உள்ளம் ஆகிய அனைத்துமே ஆரோக்யத்துடன் திகழ்ந்தால்தான் நாம் ஆரோக்யம் என்றால் என்பதையே உணர முடியும். இந்த முழுமையான ஆரோக்யமே நாம் கடவுளை நெருங்க துணை புரியும். ஆரோக்யமான உடலோ மனமோ இல்லாமல் எவரும் இறைவனை நெருங்கியதே இல்லை.

முழுமையான ஆரோக்யத்தைப் பெற கோடி கோடியான வழிபாட்டு முறைகள் நம் சற்குருவால் அளிக்கப்பட்டாலும் விதிவசத்தால் இவை எவற்றையுமே உணரக் கூட முடியாத நிலையில் உள்ள பல அடியார்களுக்கு உதவி புரியும் முகமாகவே இங்கு கம்பி இசை அளிக்கப்பட்டுள்ளது. உடலை அசைக்கக் கூட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும், உடல் அசைந்தாலும் ஒருநிலைப்படுத்த முடியாத நிலையில் பலவீனமாக உள்ள மனத்தை உடையவர்களுக்கும் இங்கு அளிக்கப்பட்டுள்ள கீதங்கள் பெரிதும் துணை புரியும்.

தினமும் உறங்கப் போகும் முன் அல்லது நேரம் சாதகமாக உள்ள எந்த நேரத்திலும் இங்கு அளிக்கப்பட்டுள்ள இசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் மனம் சிறிது சிறிதாக அமைதி பெறும். அதைத் தொடர்ந்து ஆழ்ந்த உறக்கம் கிட்டுவதால் உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி குடிகொள்ளும். கோயில் தரிசனங்கள், நலம் தரும் தேவாரப் பதிகங்களை ஓதுதல், மலைத் தலங்ளை, திருத்தலங்களை கிரிவலம் வருதல், முறையான தர்ப்பண வழிபாடுகள் மூலம் ஆரோக்யம் நன்னிலையை அடையும். இங்குள்ள இசை அடியார்களுக்கு மன அமைதியையும், மனத் தெளிவையும் தருமே தவிர இது எக்காலத்தும் முழுமையான வழிபாடாக அமையாது என்பதை அடியார்கள் நினைவில் கொள்ளவும்.

இங்கு அளித்துள்ள இசையைத் தொடர்ந்து கேட்பதால் உடலும் மனமும் அமைதி பெறுவதால் அதன் மூலம் கிட்டும் ஆரோக்யத்தின் துணை கொண்டு இங்கு அளிக்கப்பட்டுள்ள இலம்பயங்கோட்டூர் முத்திரையை படுக்கையில் அமர்ந்தவாறே பழகி சுய நாம ஜபமோ அல்லது ஏதாவது ஒரு காயத்ரீ மந்திரத்தை ஓதுவதால் நோயாளிகள் எழுந்து நடக்கும் நிலையை அடைவார்கள். நோய்க்கான மூல காரணங்கள் சுய நாம ஜபத்தால் உணர்த்தப்படும். நோய்க்கான காரணம் தெரிந்து விட்டால், அதை நிவர்த்தி செய்வது ஒன்றும் சிரமம் அல்லவே.

     பிறவிப் பிணி அகல
     கண்ணொளி பெருக
     ஆழ்ந்த உறக்கத்திற்கு
     இதய நோய்கள் அகல
     இரத்த சோகை
     நிவர்த்தியாக
     சுகப் பிரசவம் பெற
     தோல் நோய்
     நிவாரணம்
     தீய பழக்கங்கள் மறைய
     மாத விலக்கு
     துன்பங்கள் குறைய
     புற்று நோய் நிவர்த்தி
     சர்க்கரை நோய்
     நிவாரணம்
     சுப முகூர்த்த
     சோபனம்
 

நீங்கள் இங்கு கேட்கும் இசையொலிக்குப் பின்னணியாக ஹிரண்யகர்ப்பம் என்னும் அரிய நோய் நிவாரண பீஜாட்சர சக்திகள் நம் சற்குருவால் பதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இந்த இசையைக் கேட்டுக் கொண்டு வருவதால் உங்களையும் அறியாமல் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

பல்லாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி...
நம் சற்குருவிடம் அறிமுகம் இல்லாத ஒரு நபர் வந்தார். “சாமி, உன்னை எல்லோரும் சாமி, சித்தர்ன்னு சொல்றாங்க...
நான் கேட்கிறதை செய்து கொடுத்தால் நானும் உன்னை சாமின்னு ஒத்துக் கொள்கிறேன்...”, என்றார்.

ஸ்ரீஅகத்திய பெருமான்
திருக்குற்றாலம்

நம் சற்குரு, “அந்த ஆசாமியிடம் நல்ல பெயர் எடுப்பதோ, அந்த ஆள் அடியேனை சித்தர் என்று ஒத்துக் கொள்வதோ அடியேனுக்குத் தேவையில்லை. ஆனால், எங்கள் கடமையை நாங்கள் செய்தாக வேண்டுமே...அதனால் அடியேன் தொடர்ந்து, ‘சரி ஐயா, உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்க அவரோ, ‘ஆப்பிளை (அந்த ஆசாமி தெரிவித்த பிரபல நடிகையின் இயற்பெயர் இங்கு மாற்றப்பட்டுள்ளது) கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது, இதை உன்னால் செய்து வைக்க முடியுமா?’ என்று கேட்கவே அடியேனும் சற்று நேரம் யோசிப்பது போல் இருந்து விட்டு, “அப்படியா... அது ஒன்றும் பிரமாதமில்லை. ஆப்பிளின் எந்த உடல் பாகம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது... அவள் கண்களா, மார்பகமா இல்லை மர்மப் பகுதியா ? அதைச் சொன்னால்தான் அடியேன் உங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்ற முடியும்...”, என்றார்.

நம் சற்குருவின் வார்த்தைகளைக் கேட்ட அந்த ஆள் திகைத்து...,”அதெப்படி சொல்ல முடியும்... எல்லாம்தான் எனக்குப் பிடித்திருக்கிறது...” என்றார். நம் சற்குரு, “அதை நீங்கள் கூறத்தான் வேண்டும். இந்தியாவில் 20 கோடி பேர் ஆப்பிளின் கண்களைக் கேட்டால் என்ன செய்ய முடியும்? அதனால் நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள் ... அவசரமில்லை, அடியேன் முயற்சி செய்கிறேன்... என்று கூறி அந்த ஆளை அனுப்பி விட்டேன். ஆனால், இன்று வரை அந்த ஆள் திரும்பி வரவில்லை...”, என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. ஒரு பெண்ணிற்கு கவர்ச்சி என்பது அவளுடைய உடம்பில் இல்லை. நம் சற்குருவிடம் வந்த ஆள் மிகவும் புத்திசாலி. அதனால் நம் சற்குருவின் வார்த்தைகள் அவர் உள்ளத்தில் மறைந்து கிடந்த ஆத்ம விசார சக்திகளைத் தூண்டி விட்டதால், தொட்டுக் காட்டிய வித்தையாக, ஒரு பெண்ணின் ஒவ்வொரு உடல் பகுதியையும் குறித்து ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க இறைவனே உண்மையான கவர்ச்சி என்பதை அவன் உணர்ந்து விட்டான், இல்லை உணர்ந்து விட்டாரா?

குணமே குணக்குன்று
நாச்சியார்கோவில்

பணக் கவர்ச்சி, உடல் கவர்ச்சி என்ற மாயையே மனிதர்களைப் பொறுத்தவரை அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணமாக அமைவதால் நீங்கள் ஓரிரு நிமிடங்கள் இங்கு அளித்துள்ள இசையைக் கேட்டாலும் அந்த ஞான வேள்வி தொடரும்போது நிலையில்லா கவர்ச்சி அனைத்தையும் அழிக்கவல்லதாக அது அமைவதால் நீங்கள் எளிதில் முழுமையான ஆரோக்யத்தைப் பெற்று இறைவனை நோக்கி விரைவாக முன்னேறலாம்.

தன்னை அறிந்தால் தன்னலம் புரியும், தன்னலம் மறைந்தால் பெரும் பேரின்பம் ... பெரும் பேரின்பம் ... இந்த வார்த்தைகளை நம் சற்குரு கூறும்போது நம் சற்குருவின் கண்களைப் பார்க்கும் பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகளே. மேற்கண்ட நிகழ்ச்சியை ஒரே வார்த்தையில் உள்ளடக்கும் ‘பெரும் பேரின்ப நிலை’ அது.

கம்பி இசைக்கும் ஆப்பிள் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம்.
இங்கு அளிக்கப்பட்டுள்ள இசைத் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் உங்கள் மனம் லயித்தால் கூட போதும் அதில் பதிந்துள்ள ஹிரண்யகர்ப்பம் என்ற பீஜாட்சர சக்திகளால் நீங்கள் ஆத்ம விசாரத்தில் ஒன்றி இறை தரிசனம் என்னும் கனியைச் சுவைத்து மகிழலாம்.

இங்கு ஒரு விஷயத்தை அடியார்கள் அறிந்து கொள்வது அவசியம். மாதவிலக்கு துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக ஒரு கம்பி இசைத் தொகுதி இங்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘நான் என்ன பெண்ணா?’ என்று ஒரு ஆண் மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொள்ளலாம். இந்த இசையைக் கேட்பவர் ஆணாகவே இருந்தாலும் அவருடைய தாய், சகோதரிகள் நிச்சயம் பெண் தானே, அவர்களுக்காக அவர் ஏன் இந்த இசையைக் கேட்டு அதன் பலன்களை தனக்கு பல பிறவிகளிலும் தாயாய், தந்கையாய், அண்ணியாய் வந்து உதவிய பெண் உறவுகளுக்கு அர்ப்பணிக்கக் கூடாது?

மேலும் பல முந்தைய பிறவிகளிலும் நாம் பெண்ணாகவும் பிறந்திருக்கக் கூடும் அல்லவா? அத்தகைய பிறவிகளில் நாம் செய்த தவறுகள் இந்த பிறவிகளில் தொடரக் கூடுமே? உதாரணமாக மாத விடாய் காலங்களில் நாம் உண்ட மீதியை பசுவிற்கோ, கன்றுகளுக்கோ அளித்திருந்தால் அது இப்பிறவியில் நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கடுமையான வயிற்று வலியாய் தொடரும்.

ஒரு முறை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் ஒரு அடியாரைக் காட்டி, “சார், இவர் இப்பிறவியில் மட்டும்தான் சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள், போன பிறவியில் ஒரு பெண்ணாகப் பிறந்து இவர் சிரிப்பில் மயங்கி இவர் (அல்லது இவள் பின்னால்?) பின்னால் சுற்றி சுற்றி வந்த ஆண்கள் எத்தனை பேர் தெரியுமா...”, என்று கேட்கவே அருகில் இருந்த அடியார்கள் எல்லாம் தம்மை மறந்து சிரித்தார்களே பார்க்கலாம்...

சாரமின்னல் சக்தி

மனித உடலில் ஆசன வாயிலிருந்து சுமார் ஒரு அங்குல தூரத்தில் அமைந்துள்ள அழுத்த புள்ளியே (acupressure point) சாரமின்னல் சக்தி புள்ளியாகும். அகஸ்திய வாடகத்தில் இடம் பெறும் இந்த சக்தி புள்ளியின் பெயர் சற்குருவால் மாற்றப்பட்டுள்ளது. முற்காலத்தில் மன்னர்கள் இத்தகைய புள்ளிகளை தக்க மருத்துவர்கள் மூலம் ஆக்கப்படுத்தினர். தற்போது இந்த புள்ளியின் தேவை அதிகம் இல்லாததால் நம் சற்குரு போன்ற மகான்கள் ஒற்றுமையான குடும்ப வாழ்விற்கும், ஆரோக்கியமான சந்தான அபிவிருத்திக்கும் இந்த புள்ளியை ஆக்கப்படுத்தும் முறைகளை அருளியுள்ளனர்.

ஸ்ரீபோஜீஸ்வரர் சிவாலயம்
சமயபுரம்

வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்தப் புள்ளிகள் ஆக்கம் பெறுகின்றன. திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களை அஷ்டமி திதிகளில் வலம் வந்து வணங்குவதால் இந்த சாரமின்னல் சக்திகளை விரைவில் ஆக்கப்படுத்தலாம். தங்கள் விரல் நுனிகளை இந்தப் பகுதிகளில் வைத்து சாரமின்னல் சக்திகளை உணர வல்லவர்கள் எண்ணெய் நீராடல் சமயத்தில் இந்த புள்ளிகளில் எண்ணெய் தடவி அழுத்தி விடுவதால் நல்ல ஆரோக்யத்தைப் பெறலாம். இந்த புள்ளியில் விரலை வைத்து லேசாக அழுத்தினாலே உடலில் மின்சாரம் பாய்வது போன்ற சக்தி ஊடுருவுவதால் இத்தகைய காரணப் பெயர் அமைந்தது.

வீணையின்றி ஞானம்
வழங்கும் அன்னை வேதாரண்யம்

மேற்கண்ட கம்பி இசையை தொடர்ந்து கேட்டு தியானிப்பதும் இந்த சாரமின்னல் சக்திகளை கிரகிக்கும் முறைகளில் ஒன்றாகும். கம்பி இசைக் கருவிகளான வீணை, கிடார், பிடில் போன்ற கம்பி இசைக் கருவிகளே இந்த சக்தியை ஆக்கப்படுத்தும். யாழ்அமராந்தக சித்தரும் இத்தகைய சாரமின்னல் சக்திகளை திருஅண்ணாமலை, சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் சிவத்தலம் போன்ற திருத்தலங்களில் வர்ஷிக்கிறார் என்பதும் நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும்.

பத்மாசனம், வஜ்ராசனம் போன்ற ஆசனங்களில் குறைந்தது ஒரு மணி நேரம் அமர்ந்து பிராணாயாமல் பயில்வதாலோ அல்லது நலம் தரும் தேவாரப் பதிகங்களை திருத்தலங்களில் ஓதி ஒவ்வொரு பதிக முடிவிலும் ஸ்வஸ்தி நமஸ்காரம் நிறைவேற்றுவதால் சாரமின்னல் சக்தி புள்ளிகள் ஆக்கம் பெறுவதால் இது அற்புத சமுதாய சேவையாக மலர்ந்து சமுதாயத்தில் நோய் நிவாரண சக்திகள் பெருகும்.

ஒரு அடியார் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் எந்த வரிகள் சர்க்கரை வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் என்று கேட்டுள்ளார். சஹஸ்ர நாமத்தை தொடர்ந்து ஜபித்து வருவதால் தீராத வியாதிகளே இல்லை எனலாம். சகஸ்ர நாம துதிகளை ஓத தெரியாதவர்களுக்கே, ஓத முடியாத நிலையில் உள்ளவர்களுக்கே இந்த கம்பி இசை துணை புரியும். “சிவ சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒருவன் உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவனுக்கு முக்தி நிச்சயம்...”, என்பார் சேஷாத்ரி சுவாமிகள். முக்தியையே தங்கத் தட்டில் வைத்து அளிக்கும் ஒரு சகஸ்ர நாமம் நோய் நிவாரணம் அளிப்பது பற்றி கேட்க வேண்டுமா என்ன?

ஹிரண்யம் என்னும் சிவ சக்திகள் பொலிபவையே மேற்கூறிய இசை பகுதிகள் என்று அளித்துள்ளோம். இந்த ஹிரண்யம் என்னும் பீஜாட்சர சக்திகளுடன் லலிதம் என்னும் பீஜாட்சர சக்திகளும் இணைந்து பொலிவதே லலிதா சஹஸ்ரநாமம். இத்தகைய சிவ சக்தி ஐக்ய சக்திகளே இங்கு சிவ சக்தி ஐக்ய சொரூப தரிசனமாக காட்சி அளிக்கின்றன என்பதை நீங்கள் சற்று ஊன்றிக் கவனித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

திருமணம், சீமந்தம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம், சதாபிஷேகம், பிறந்தநாள் போன்ற சுப முகூர்த்ந நிகழ்ச்சிகளின் போது சம்பந்தப்பட்டவர்கள் பல பொறுப்புகளில் இலயித்து விடுவார்கள். மற்றவர்களோ உபயோகமில்லாத, நம் சற்குரு குறிப்பிடும் ‘கிழக் கதைகளை’ பேசிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய சூழ்நிலைகளில் இங்கு அளிக்கப்பட்டுள்ள சுப முகூர்த்த சோபனம் என்னும் கம்பி இசையை சத்தமாக ஒலிப் பெருக்கியில் இசைப்பதால், திருமணங்களில் நிறைவேறும் கெட்டிமேள வைபவம் போல் இது அமைந்து, அந்த சுப நிகழ்ச்சிகளில் தேவதைகள், தெய்வங்களின் சுப மங்கள ஆசிர்வாத சக்திகளை அள்ளி வழங்கும்.

     பார்வையற்றோருக்கு
     பரமசுகம்
     வாக்தேவி வாகீஸ்வரி
     விரக்தி மனப்பான்மை
     மாயமாக
     குறைபாடுகள்
     களையும் இசை
     கோமா
     மூளை செயலிழப்பு
     தனாகர்ஷண
     சங்கு நாதம்
     நச்சு எண்ணங்களை
     நசிக்கும் கீதம்
     மரண பயம்
     வெல்லும் வழி
     இதய கமல இனிய
     கீதம்
     சிப்பியில் விளைந்த
     முத்து
 

பார்வை அற்றோருக்கு பரமசுகம் என்ற தலைப்பில் இங்கு அளிக்கப்பட்டுள்ள டமரு நாதத்தை பலவித நோய்களால், முதுமையால் பார்வையில் குறைபாடு உள்ளவர்களோ, பிறவிக் குருடர்களோ அல்லது எவ்விதத்தில் தங்கள் உடலில், உடல் அங்கங்களில் குறைபாடுகள் உள்ளவர்கள், மன நோயாளிகள் அனைவரும் தொடர்ந்து கேட்டு நற்பலன் பெறலாம்.

ஊனம் ஊனமல்ல
ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆதிகுடி

வாக்கு என்ற சொல்லிற்கு ஆதாரமாக, மூலமாக, மூலாதாரமாக அமைபவளே கலைவாணி என்னும் சரஸ்வதி தேவி ஆவாள். இவளே வாக்தேவி வாகதீஸ்வரி. நம் சற்குருவை அனைவரும் அன்புடன் “வாத்யார்” என்றே அழைப்பதுண்டு. வாக் தீ யார் என்ற நமசிவாய சக்திகளே வாக்கிற்கு தீயாக, ஆதார சக்தியாக, அருளூட்டும் ஒளிப் பிழம்பாகத் திகழ்கிறது என்பதே நம் சற்குரு வழங்கும் தெளிவுரை. எனவே, பேச்சு சரியாக வராத குழந்தைகளும், ஐந்து, ஏழு வயது வரையுமே பேச முடியாமல் விளங்கும் குழந்தைகளும், திக்கு வாயாக விளங்கும் சிறுவர்களும் பெரியோர்களும், ஏன், பிறவி ஊமைகளும் கூட இங்கு நம் சற்குரு அளித்துள்ள டமரு நாத அட்சரங்களால் தெளிவு பெறுவர். பேச்சை ஆதாரமாக உடைய மேடைப் பேச்சாளர்களும், பாடகர்களும், பல துறையைச் சேர்ந்த முகவர்களும், அரசியல்வாதிகளும் வாழ்வில் ஒளி பெற, ஒலி கூட்ட இந்கு நீங்கள் கேட்கும் வாகீசப் பரல்கள் உறுதுணையாக விளங்கும்.

வரும் N2023ம் ஆண்டில் காலையில் எழும்போதே பொழுது ஏன்தான் விடிகிறதோ என்ற விரக்தி மனப்பான்மையே பலருக்கும் தோன்றக் கூடும். அனைத்து வித வசதி வாய்ப்புகள் இருந்தாலும், வளமை தாண்டவமாடினாலும் இந்த விரக்தி ‘அலைகள்’ மனதில் மோதுவது இயற்கையே. இங்கு அளிக்கப்பட்டுள்ள ராம கீதத்தை காலையிலும் இரவில் உறங்கும் முன்னும் கேட்டு வந்தால் சிறிது சிறிதாக மற்றவர்களிடம் சகஜமாகப் பழகி உறவினர்களிடம் நண்பர்களிடம் ஒட்டி உறவாடும் மனப்பான்மை உருவாகும்.

வெறுமனே ஒரு இசையை கேட்பதால் மட்டும் நம்முடைய குறைகள் தீர்ந்துவிடுமா? நிச்சயமாகத் தீராது. ஆனால், நீங்கள் இங்கு கேட்பது நம் குறைகள் மறைய வேண்டி நம் சற்குரு இறைவனிடம் முன் வைக்கும் பிரார்த்தனையாகும். ஒரே நொடியில் நம்முடைய குறைகள் யாவற்றையும் தீர்க்கும் சக்தி நம் சற்குருவிடம் அபரிமிதமாக உண்டு என்றாலும் அந்த சக்தியை நம் சற்குரு சற்றும் பிரயோகம் செய்வது கிடையாது. காரணம் நாமாகவே நம்முடைய குறைகளை உணர்ந்து, அவற்றை சீர்திருத்திக் கொள்வதுதானே சிறப்பு. நம்முடைய குறை நிறைகளை உணர்வதற்கு இங்கு நீங்கள் கேட்கும் இசை நிச்சயம் உறுதுணையாக அமையும். நம் சற்குருவின் பிரார்த்தனைகளுடன் நம் பிரார்த்தனைகளையும் இணைக்கும் ஒரு சிறு முயற்சியே இது.

முள்ளில்லா வில்வம் நகர்

Stroke, பக்கவாதம் போன்ற காரணங்களால் உடலின் ஒரு பகுதி செயலிழந்து விடுவதோ அல்லது உடல் முழுவதுமோ செயல்படாமல் கோமா நிலையில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அந்நிலையில் உடலின் பல உறுப்புகள் செயல்படாதது போல் தோன்றினாலும் உடலின் உள்ளும் பறமும் பல உறுப்புகள் பல நிலைகளில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் கோமா என்ற உணர்வற்ற நிலையிலேயே ஒரு பெண் அறுவை சிகிச்சை இல்லாமல் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள். இதுவே நம் உடல், மனதைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியவில்லை என்னும் நம் சற்குருவின் செய்தியை வலுப்படுத்துகிறது. நம் அடியார்களில் ஒருவர் சுமார் இரண்டு வருடங்கள் கோமா நிலையிலிருந்தபோதும் தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரைப் பார்க்கும்போதெல்லாம் அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து தன்னுடைய குடும்பத்தினரை நிர்கதியாக்கி விட்ட நிலையைக் குறித்து வருந்துமாம்.

எனவே எத்தகைய உணர்வற்ற நிலையிலிருந்தாலும் அவர்கள் இங்குள்ள கம்பி இசையை தினமும் உணவருந்தும் முன் கேட்குமாறு ஏற்பாடு செய்தலால் அவர்கள் வியத்தகு முன்னேற்றத்தை அடைவார்கள், அது நம்மால் மேலோட்டமாக அறிய முடியாத ஒரு முன்னேற்றமாகவும் இருக்கலாம் என்பதே நம் சற்குரு அளிக்கும் இசையின் மகத்துவம். பார்க்கும் நிலையில் உள்ளவர்கள் நகர் திருத்தல வீடியோவையும் அடிக்கடி அவர்கள் காணுமாறு செய்தல் நலம்.

ஸ்ரீஉடையவர் சன்னதி ஸ்ரீரங்கம்

நல்ல ஆரோக்யமாய் இருப்பவர்கள் ஓடி ஆடி கோயில் திருப்பணி, அன்னதானம், கிரிவலம் போன்ற நற்காரியங்களை இயற்றி, பிறருக்காக சேவை செய்து வாழலாம். கோமா நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? “அனைவரும் சுகமாய் இருக்கும்போது என்னை மட்டும் கடவள் இப்படி ஆக்கி விட்டாரே?” என்று இறைவனை நொந்து கொள்ளாமல், “இந்த நிலையிலும் சேவை செய்ய அடியேனை கடவுள் ஒரு கருவியாக ஆக்கிக் கொள்ளட்டும்...”, என்ற சங்கல்பத்துடன் வாழ்ந்தால் கோமாவிலும் கோடி நற்காரியங்களை ஆற்றலாம்.

பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையைச் சுமக்கும்போது எந்தச் சேவையைத்தான் ஒருவரால் இயற்ற இயலாது. இந்தக் கட்டுரையை கோமாவில் இருப்பவர்களுக்கு அடிக்கடி படித்துக் காட்டுவதும் ஒரு அரிய சேவையே.

கொசு நம்மைக் கடித்தால் உடனே பட்டென்று தட்டி அதன் கதையை முடித்து விடத் துடிக்கிறோம். கோமாவில் இருப்பவர்களை நினைத்துக் கொண்டால் ஒரு சில நிமிடங்களாவது அவர்களைப் போல் நாமும் அமைதியாக இருந்து இறைவனிடம் வேண்டிக் கொண்டால் கோமாவில் இருப்பவர்களுக்கும் நற்கதி கிட்டும், நம் பிரார்த்தனையால் அந்தக் கொசுவும் அடுத்து ஒரு உயர்ந்த பிறவியை அடையுமே.

உயர்ந்த எண்ணம் உடையவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று நம் சற்குருவைப் போல் தங்கள் கையால் அந்தக் கொசுவிற்கு சாமரம் வீசலாம், அப்போது அது கை அல்ல, வரதராஜ பெருமாளுக்கு சாமரம் வீசிய ராமானுஜ பெருமானின் திருக்கரங்களாக மாறும். கையைச் சாமராக மாற்றுவது உங்கள் ‘கையில்’ இருக்கிறது.

கொண்டராங்கி திருமலை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர். சந்தர்ப்பங்கள் அவர்களை ஏமாற்றுவது போல் தோன்றும், இது ஒரு பிரம்மையே. இத்தகைய நிலையில் உள்ளோர் இங்கு அளித்துள்ள தனாகர்ஷண சங்கு நாதத்தை ஆழ்ந்து கேட்டு தங்கள் கையால் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி குருணையுடன் சர்க்கரை சேர்த்து கோயில் மதில் சுவர் ஓரம் இட்டு வந்தால் இந்த நிலை நிச்சயமாக மாறும். வேதனைகளை முக மலர்ச்சியுடன் எடுத்துக் கொள்ள சற்று காலம் தேவையே.

இரு கருட மூர்த்திகளின் நோய் நிவாரண சக்திகள், துளசி தள வருண நாதம் என்ற அபூர்வ தனாகர்ஷண சக்திகள் இந்த சங்கு நாதத்தில் பதிந்துள்ளதால் தினமும் சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் முன் செல்போனில் பதித்த இந்த நாதத்தை கேட்டபின் நைவேத்யம் நிறைவேற்றுவது சிறப்பே.

விஷக்கடி, காணாக்கடி, உடம்பில் ஊறல், அரிப்பு, உடல் முழுவதும் தடித்துப் போதல், வீங்குதல், திடீர் திடீரென புண்கள் தோன்றி சீழ் பிடித்து வேதனை அளித்தல் போன்ற பல்வேறு உடல் வேதனைகளால் துன்புறுவோர் ஏராளம். இது தோல் வியாதியா, இரத்த சம்பந்தமான கோளாறா, செய்வினை தாக்கமா என்று நோயின் இனந் தெரியாமலே வருத்தும் பல வியாதிகளும் துன்பங்களும் உண்டு. இத்தகைய இனம் புரியா வியாதிகள் தாக்கும் ஆண்டே N2023 என்பதால் இத்தகைய வியாதிகளால் துன்புறுவோர் இங்கு நச்சுக்கடி நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ள கீதத்தை தொடர்ந்து கேட்டு கோயில்களில் தான்ய மணிகளில் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு தீனியாக இட்டு வந்தால் சிறிது சிறிதாக தங்கள் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறுவர். அஸ்வத்தாமன் பல்லாண்டுகள் விஷக்கடிகளால் துன்புற்றபோது அவனுக்கு நிவாரணம் அளித்து அவனைக் காத்து நின்ற திருத்தலமே ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள கொண்டராங்கி திருமலை ஆகும். இத்திருத்தலத்தில் நிலவும் தூய்மையான சூழ்நிலையில் அடியார்களால் இசைக்கப்பட்ட கம்பி இசையே இங்கு அருமருந்தாக, அருவிருந்தாக அளிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தம் பேரானந்தம்
கொண்டராங்கி திருமலை

‘இதோ வருகிறேன்...”, என்று கூறிச் சென்று அறைக்குள் தாழிட்டுக் கொண்டு மறைந்தார் வள்ளலார் சுவாமிகள். வெகுநேரம் கழித்தும் அவர் வெளியே வரவில்லையே என்று நினைத்து கதவைத் திறந்து அடியார்கள் உள்ள பார்த்தபோது அந்த அறையில் ஒன்றுமே தென்படாதது கண்டு வள்ளலார் சுவாமிகள் ஜோதியாக எழுந்தருளி விட்டார் என்று அவருடைய சீடர்கள் முடிவெடுத்து விட்டனர். அதை இன்றளவும் இனிய சோதி திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

நம் சற்குரு கூறுவதோ, “இதோ வருகிறேன்...”, என்று கூறிச் சென்ற ஒரு மகானின் வார்த்தைகள் பொய்யாகுமா என்ன? சுவாமிகள் உடனே ஜோதி வடிவில் அறையை விட்டு வெளியே வந்து அனைவருக்கும்,
அருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
என்றவாறாக ஜோதி வடிவில் காட்சி அளிக்கத்தான் செய்தார் என்றாலும் சுவாமிகளை ஜோதி வடிவில் தரிசனம் செய்யும் தகுதி எவருக்கும் இல்லை என்பதே நாம் புரிந்து தெளிய வேண்டிய ஜோதி மகிமை ஆகும்.”

இவ்வாறு நம்மைச் சுற்றி உள்ள தீய எண்ணங்களை, நச்சுக் கதிர்களை நசித்து நம்மையும் சமுதாயத்தையும் சுத்தி செய்யும் வல்லமை இங்கு நீங்கள் கேட்கும் கம்பி இசைக்கு உண்டு என்றாலும், இந்த இசையே ஸ்ரீமல்லிகார்ச்சுன ஈசனை மகிழ்விக்கும் இனிய கீதமாகவும் மாறும் என்பதே இந்த இசையின் மகத்துவமாகும். அந்நிலையில் நீங்கள் பெறுவதே ஆனந்தம், ஆனந்தம், பேரானந்தம்.

“கொட்டினால்தான் தேள், இல்லாவிட்டால் பிள்ளைப் பூச்சி...”, என்பது பழமொழி. அது போல் மரண பயம் என்பது ஒருவரை பீடித்தால்தான் அதன் கொடுமை என்ன என்பது தெரிய வரும். உலகின் மிகப் பெரிய பணக்காரரும், வலிமை மிகுந்த பயில்வானும், அறிவின் உச்சகட்டத்தில் துலங்கும் அறிவாளியும் கூட மரணபயம் வந்து விட்டால் வெலவெலத்துப் போய் விடுவார்கள். அத்தகைய மரண பயமே இந்த N2023 ஆண்டில் பலரையும் தாக்கும் நோய்களில் முதன்மையாகத் திகழும். இதிலிருந்து நிவாரணம் பெறுவது மிகக் கடினம் என்றாலும் இத்தகைய கொடுமைக்கும் ஓரளவு நிவாரணம் அளிக்கவே பாஞ்சசன்ய சங்கு நாதம் குறித்த சில தேவார கீதங்களுடன் சேர்த்து இங்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மரண பயம் என்பது பொதுவாக முதுமைக் காலத்தில், நோயின் கொடுமை அதிகரிக்கும்போது, விபத்துக்களின் விளைவாக ஏற்படுவது இயற்கை என்றாலும் பற்பல காரணங்களால் சிறு வயதிலும் சில வினாடிகள், நாட்கள் என்றவாறு இதன் கொடுமை நீடிக்கும் என்பதை பலரும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். வருமுன் காப்பாக இங்கு அளிக்கப்பட்டுள்ள சங்கு நாதத்தை முடிந்த அளவு தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்தால் மரண பயம் நிச்சயம் நம்மை அண்டாது அறவே காத்திடலாம். அவரவர் நாமத்தை, சுய நாம ஜபமாக இந்த சங்கு நாதத்துடன் முடிந்த மட்டும் இணைத்துக் கொண்டே வந்தால் சிறிது சிறிதாக மரண பயம் குறைந்து வாழ்வில் நம்பிக்கையும், ஆனந்தமும் ஏற்படும்.

ஸ்ரீஇதயகமலநாதேஸ்வரர் வலிவலம்

தாயின் கர்ப்பப்பையில் முக்கியமான 32 தசை நார் பகுதிகள் உள்ளன. குழந்தையை பிரசவிக்கும்போது இந்த தசை நார்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக விரிந்து சுருங்கினால்தான் முறையான சுகப் பிரசவம் ஏற்பட்டு தாயும் சேயும் நலம் அடைவர். இதில் ஏதாவது பிரச்னைகள் தோன்றினால் இருவர் நலத்திற்கும் குறை உண்டாவது இயற்கையே. நம் சற்குரு அளித்துள்ள நலம் தரும் தேவாரப் பதிகத்தில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்துமே இவ்வாறு நம்மைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே அடியார்களின் மரண பயத்தைக் களையும் வண்ணம் பிரகாசிக்கின்றன. ஆனால், தற்போதோ இயற்கை முறையில் பிரசவம் என்பது அருகி எங்கும் சிசேரியன் முறை குழந்தைப் பிறப்பே அதிக அளவில் நிகழ்வதால் அத்தகைய குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவே நலம் தரும் தேவாரப் பதிகங்களை ஓதுவதை தத்தம் குடும்ப நலனுக்காகவும், ஒரு சமுதாய சேவையாகவும் நம் அடியார்கள் இயற்றி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மனித இதயத்தைச் சுற்றி மொத்தம் 16 முக்கியமான இரத்த நாளங்கள் உள்ளன. இந்த நாளங்களில் ஏதாவது ஒரு நாளத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் அதுவே massive heart block என்பதாக ஏற்பட்டு மனிதர்கள் உடனே உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த அபாயத்தை வருமுன் காப்பாக தவிர்க்கக் கூடிய ஒரு இசையே இங்கு நம் சற்குருவால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நோயின் கடுமையை முழுமையாக உணர்ந்த எந்த ஒரு மனிதனும் இதைப் பற்றி விவரிக்கவே முடியாது, நம் சற்குரு ஒருவரைத் தவிர.

... ... ... ...

காரணம் என்ன ? இத்தகைய அபாயம் ஒரு மனிதனைத் தாக்கிய பின் அவன் உயிரோடு இருக்கவே முடியாது.

நம் சற்குரு மனித உடலை சட்டையைக் கழற்றுவது போல் கழற்றுவதற்கு காரணமாக இருந்ததே massive coronary block என்ற மருத்துவக் காரணம் ஆகும்.

சமீபத்தில் காமேஸ்வரத்தில் சந்திர நதி ஓரத்திலும் காமேஸ்வரக் கடற்கரை ஓரத்திலும் நம் அடியார்களால் தர்ப்பணம் நிறைவேற்றப்பட்டது. யுகத்திற்கு ஒரு முறையே பூலோகத்திற்கு வருகை தரும் காமேஸ்வரப் பித்ருக்களின் அபூர்வ அனுகிரகம் நம் சற்குருவால் இத்தருணத்தில் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த அரிய சந்தர்ப்பத்தை பல்வேறு காரணங்களால் தவற விட்டவர்கள் ஏராளம் என்பதால் இங்கு கூடிய காமேஸ்வர பித்ரு மூர்த்திகளின் அனுகிரகத்தை ஓரளவேனும் அளிப்பதாக இங்கு அளித்துள்ள “சிப்பியில் விளைந்த முத்து” என்ற வீணை கீதம் துணை புரியும். அமாவாசை, ஷன்னவதி தர்ப்பண நாட்களில் இந்த கீதத்தை கேட்டு அதன் பின்னர் தர்ப்பணம் அளிப்பதால் காமேஸ்வர பித்ரு மூர்த்திகளின் அனுகிரகத்தை ஓரளவு பெற இந்த கீதம் துணை புரியும். நம் சற்குரு, மாதா அமிர்தானந்தா இவர்களின் கனிந்த அனுகிரகம் இந்த கீதத்தில் நிரவி நிற்பதை தொடர்ந்து இந்த கீதத்தை சிரத்தையுடன் கேட்பவர்கள் உணர முடியும்.

     அமிர்த பிரவாக
     ஆலயம்
     நாகதோஷங்கள்
     நசித்திட...
     கடன் நிவர்த்தி
     உலக அமைதி
 

அமிர்த சக்திகள் எண்ணற்றவை. பால் போன்ற உணவில் கிட்டும் அமிர்தம் ஒரு வகை, இறை நாமங்களை ஒலிப்பதால் தோன்றும் அமிர்தம் ஒரு வகை, காமதேனுவால் அளிக்கப்படும் அமிர்த சக்தி ஒரு வகை. இவை அனைத்தும் எம்பெருமான் பாற்கடலில் தோன்றிய விஷ சக்திகளை நஞ்சாக உண்டபோது தோன்றிய அமிர்த சக்திகளுக்கு ஈடாக மாட்டா என்பதே நாம் உணர்ந்து தெளிய வேண்டிய மிருத்யுஞ்சய மகாத்மியமாகும். இத்தகைய மிருத்யுஞ்சய அமிர்த சக்திகள் பெருகிய ஒரு அமிர்த நேரத்தில் திருஅண்ணாமலையில் தோன்றிய அமிர்த சக்திகளை இங்கு சங்கு நாதம், வீணை நாதம், அமிர்த மழை சக்திகளில் ஈர்த்து, இணைத்து அடியார்களுக்கு அளிக்கிறோம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
தென்திருமுல்லைவாயில்

இரவில் உறங்கும் முன் திருஅண்ணாமலையை மானசீகமாக கிரிவலம் வருவது ஒரு சிறந்த தியானமாக மலரும் என்பதை நம் சற்குரு வலியுறுத்தி வந்துள்ளார் அல்லவா? இங்கு கேட்கும் திருஅண்ணாமலை அமிர்த நாதத்தை அடியார்கள் இரவு பகல் எந்நேரமும் முடிந்தபோதெல்லாம் கேட்டு அவரவரால் நினைவுக்கு கொண்டு வரக் கூடிய தரிசனங்களில் இந்த நாத சக்திகளை இணைத்து வந்தால் அவர்கள் சிறிது சிறிதாக நோய் நிவாரணம் அளிக்கும் அமிர்த சக்திகளை தங்கள் உடலில் உள்ள அனைத்து நாடிகளிலும் நிரவி நோய் இல்லா வாழ்வைப் பெறலாம் என்பது உறுதி.

அக்னி நட்சத்திர சக்திகள் நிரவும் காலத்தில் மழை பொழிவு இருந்தால் அதனால் பல தொற்றுநோய்கள் உண்டாகும். பலவிதமான அரிஷ்ட விளைவுகளும் இதனால் பெருகும். இதை ஓரளவு நிவர்த்தி செய்வதாகவே மேற்கூறிய அமிர்த கீதம் நம் சற்குருவால் அளிக்கப்பட்டுதால் அடியார்கள் முடிந்தபோதெல்லாம் இந்த கீதத்தை கேட்டு தங்கள் வாழ்வை ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டுகிறோம்.

பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் வரன்களுக்கிடையே நாக தோஷங்கள் உள்ளன என்ற காரணத்தால் விலக்கப்படுகின்றன. உண்மையில் நாகதோஷங்கள் இல்லாத ஜாதகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு நாக தோஷங்கள் நம்முடைய சமுதாயத்தில் மலிந்து விட்டது, பெருகி விட்டது என்பது உண்மைதான். அதற்காக மக்கள் அவசியமான சந்ததி விருத்தியை ஜாதகப் பொருத்தம் இல்லை என்ற காரணம் காட்டி இழந்து விடலாமா?

எத்தகைய உடல் கூறு பிரச்னைகள் தம்பதிகளுக்கு இடையே இருந்தாலும், எத்தகைய சமுதாய ஏற்றத் தாழ்வுகள் பெருகி இருந்தாலும் அதையும் மீறி வாழ்ந்து காட்டுவதுதானே மனிதனின் கடமை. அதுபோல் எத்தகைய கொடிய நாக தோஷங்கள் வரன்களின் ஜாதகங்களில் இருந்தாலும் அவை மக்களின் வாழ்வைப் பாதிக்காத வகையில் அந்த தோஷங்களுடன் இயைந்து வாழும் மனப் பான்மையை வளர்த்துக் கொள்ள இங்கு நீங்கள் கேட்கும் நாக தோஷ நிவர்த்தி கீதம் உங்களுக்கு உறுதுணையாக அமையும்.

இந்த தோஷ நிவர்த்தி கீதத்தை வாரம் ஒரு முறையாவது கேட்டு வருவதுடன் திருச்சி நந்திகோயில் தெருவில், மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீநாகநாதர் ஆலயத்தில் அருள்புரியும் சசபிந்து மகரிஷியை வணங்கி வழிபடுவதால் தீராத நாகதோஷங்களே இல்லை எனலாம்.

பிரபஞ்ச சமாதான தரிசனம்
ஐயர்மலை

சிலருடைய கனவுகளில் நாகங்கள் தோன்றி அச்சுறுத்துவதுண்டு. சிவப்பு, பச்சை, கருப்பு என்று பல நிறங்களில் இந்த நாகங்களின் வண்ணங்கள் அமைந்தாலும் அவற்றால் கனவுகளின் தன்மை பாதிக்கப்படுவதில்லை. இத்தகைய பயத்தால் வாடி வதங்குவோர் மட்டுமல்லாமல் தங்கள் இல்லங்களுக்கு அடிக்கடி வரும் நாகங்களின் தொந்தரவால் பாதிக்கப்படுவோர் ஏராளம். இத்தகையோர் வாரம் ஒரு முறையாவது அடர்த்தியாக சாம்பிராணி புகை போட்டு இங்குள்ள கீதத்தை தொடர்ந்து கேட்டு வருதால் நாகங்களால் தொல்லை இனி இல்லை என்ற நிலையை அடைவார்கள் என்பது திண்ணம்.

கடன் நிவர்த்தி அளிக்கும் ஒரு கம்பி இசையை இங்கு அளித்துள்ளோம். வெறுமனே இந்த இசையைக் கேட்பதால் கடன் தீர்ந்து விடுமா, சுமை குறைந்து விடுமா? நிச்சயம் கிடையாது. தினமும் பஞ்ச கச்சம் முறையில் வேஷ்டி அணிந்தோ அல்லது மடிசார் புடவையைக் கட்டிக் கொண்டோ தம்பதிகள் தினமும் தங்கள் கையால் சமைத்து ஏதாவது ஒரு சுயம்பு மூர்த்தி அருளும் ஆலயத்தில் தொடர்ந்து அன்னதானம் அளித்து வந்தால் நிச்சயம் கடன் தீர்வுக்கான வழிமுறைகள் கிட்டும்.

வெறுமனே இரண்டு சப்பாத்திகளை மட்டும் சுட்டு அன்னதானம் செய்யும் அளவிற்கே குடும்ப சூழ்நிலை இருந்தால் இதுவும் ஒரு பிரம்மாண்ட அன்னதானமாகத்தான் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

எதிர்பாராத விபத்து, நோய் நொடிகள், வேலை இழத்தல், பெண் குழந்தைகளின் திருமணம், அவர்களுக்கு அத்தியாவசியமான கல்விச் செலவு போன்ற காரணங்களால் கடன் பட்டிருந்தால் அவைகளை நிவர்த்தி செய்ய நினைப்போர் இங்குள்ள இசையை கேட்டவாறே அன்னதான சமையல் காரியங்களில் ஈடுபட்டால் அவர்கள் நற்பலன் பெறுவர். சூதாட்டம், போதை வஸ்துக்கள், வீண் ஆடம்பரச் செலவு போன்ற காரணங்களால் பெருகிய கடனுக்கு இந்த நிவாரணம் பலனளிக்காது.

சென்ற 14.10.2023 சனிக் கிழமை அன்று சூரிய கிரகணத்தின்போது உலக சமாதானத்திற்காக நம் அடியார்கள் ஆற்றிய கிரிவலத்தில் குழந்தைகளால் வீணை, சங்கு, ஜால்ரா போன்ற இசைக் கருவிகள் ஒலிக்கப்பட்டன. இந்த இசையின் ஒரு பகுதியை அடியார்கள் இங்கு கேட்டு இரசிக்கலாம். உலக சமாதானத்திற்கான ஒரே ஒரு எளிய வழி என்ன என்று அமிர்தானந்தா அன்னையைக் கேட்டபோது, “அது மிகவும் எளிதானதே. ஒவ்வொருவரும் தங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்த முயன்றால் அதனால் உலக சமாதானம் தானே மலரும்...”, என்றார்கள்.

ஒரு சிறு வார்த்தைக்காக, கேட்காத ஏசுதலுக்காக உயிரை வாங்கத் துணிந்த, உயிரை விடத் துணியும் மக்கள் ஏராளம். இத்தகைய பலவீனமான மனதை உடையவர்கள் இங்குள்ள ஐயர்மலை சமாதான தரிசனத்தை அல்லது தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஐயர்மலை தரிசனத்தை தங்கள் மனக் கண் முன் கொண்டு வந்து நிலை நிறுத்தி இங்குள்ள கம்பி இசையைக் கேட்டு வந்தால் மன சமாதானம், குடும்ப ஒற்றுமை, சமாதானம், சமுதாய ஒற்றுமை தானாக மலர்வதை அடியார்கள் அனுபவித்து இன்புறலாம். தற்கொலை எண்ணங்கள் கனவிலும் தோன்றாது.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam