மலம், மூத்திராதிகள் இல்லாத இடமே பக்தர்களுக்கு ஃபாரின் (அயல்நாடு)

அடியார்
ஒவ்வொரு கோயிலையும் தரிசிக்க உரிய முறைகள் இருப்பது போல ஒவ்வொரு தெய்வத்தையும் தரிசனம் செய்யும் முறைகளும் இருக்கின்றனவா, குருதேவா?

சற்குரு
ஆமாம், அதில் சந்தேகம் என்ன? ஒவ்வொரு தெய்வத்தையும் உரிய முறையில், உரிய நேரத்தில் தரிசனம் செய்தால் அதனால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். ஆனால், அப்படி அபரிமிதமாகக் கிடைக்கும் பலன்களை நீ எந்தக் காரியத்திற்காகப் பயன்படுத்தப் போகிறாய் என்பதே முக்கியம். பெரும்பாலும் தன் மனைவி, குழந்தைகள், உற்றம், சுற்றத்திற்காகவே கோயில் தரிசனம் அமைவதால் இந்த இரகசியங்களை பெரியவர்கள் அவ்வளவாக வெளியிடுவது கிடையாது. பொது நலத்திற்காக, சமுதாய மேம்பாட்டிற்காக ஒருவர் இறைவழிபாட்டை மேற்கொள்ளும்போது உரிய காலமும், வழிபாட்டு முறைகளும் அவர்களை அறியாமல் மேலுலகத்தில் இருக்கும் சற்குருமார்களால் ஏற்படுத்தித் தரப்படுகின்றன என்பதும் நீங்கள் அறியாத ஒரு தெய்வீக ரகசியமாகும்.

சில குறிப்பிட்ட கோயில்களில் நிறைவேற்ற வேண்டிய தரிசன முறைகளைப் பற்றி மட்டும் தற்போது தெரிந்துகொள்ளுங்கள்.

திருப்பதி வெங்கடாஜலபதியை தம்பதி சமேதராய் வணங்குவது சிறப்பு. காலை ஆறு மணி முதல் பத்து மணிவரை ஏழுமலையானை அங்கபிரதட்சிணம் வந்து வணங்குதல் நலம்.

மது, புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டோர் பெரும்பாலும் அதிலிருந்து மீளாமலேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம் மனதில் கற்பனையை சிறகடிக்கச் செய்து போலி சந்தோஷத்தைக் கொடுக்கும் நரம்பு மண்டலமானது நமது முன்னோர்கள் ஆதிக்கத்தில் இருப்பதுதான். கடுமையான போதைப் பழக்கத்திற்கு ஆளானோர் மூதாதையர்களுக்கு ப்ரீதி அளிக்கும் அமாவாசை, மாளய பட்ச தர்ப்பண படையல்களை விடாமல் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால்தான் தீய பழக்க வழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.சென்னை கபாலி கோயிலில் விடியற்காலை நாலு மணி முதல் எட்டு மணி வரை வழிபடுதல் நலம்.

சமயபுரம் மாரியம்மனை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வழிபடுதல் நலம். ஒவ்வொரு தெய்வமும் தினமும் நகர் வலம் என்று செல்வதுண்டு. இவ்வாறு சமயபுரம் மாரியம்மன் நகர் வலம் முடித்து தன் சிம்மாசனத்தில் அமரும் நேரமே மாலை மூன்று மணி. இந்த நேரத்தில் அம்மனை தரிசித்தல் நலம்.
மிகவும் சிறப்பான சித்த பீடமே மேல்மருவத்துõர். இங்கு எந்த நேரம் வேண்டுமானாலும் அன்னையை வழிபடலாம்.
மாங்காடு அம்மனை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை தரிசனம் செய்தல் நலம். மதியம் கடும் வெயிலில் தவம் இயற்றுகிறாள். இந்த தவக் கோலத்தில் அன்னையைத் தரிசிப்பதால் நம்முடைய கடுமையான வினைகளும் களைந்தோட அன்னை அருள் புரிவாள்.
மாயவரம் அயபாம்பிகையை அங்க பிரதட்சிணம் செய்து வழிபடுதல் நலம். திருக்கோயில் தெப்பக் குளத்தில் குளித்து விட்டு அங்க பிரதட்சிணம் செய்வது நலம்.
திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சிவராஜ சிங்க தீர்த்தம் அருகே 50 அடி வரை ஆண்கள் அங்க பிரதட்சிணம் செய்தல் நலம்.
பெண்கள் திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அங்கப் பிரதட்சிணத்தை தவிர்த்து, திருஅண்ணாமலையார் கோயிலில் அங்க பிரதட்சிணம் செய்தல் நலம்.
சபரிமலை ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கும்போது ஐயனைத் தரிசித்தல் நலம்.

அடியார்
குருதேவா, சதாபிஷேகம் எப்படிக் கொண்டாடுவது?

சற்குரு
மனிதன் பூமியில் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும், வருடமும் செல்லச் செல்ல அவனுடைய வயது அதிகரித்துக் கொண்டே போவது போல் தோன்றினாலும், உண்மையில் அவனுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலம் குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் மனிதன் இந்த விஷயத்தைத்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் நாம் இறைவனை நோக்கி முன்னேறுகிறோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் எந்த அளவு இறைவனை நோக்கி முன்னேறி உள்ளோம் என்பதை ஒவ்வொருவரும் தங்களுடைய பிறந்த நாளிலாவது ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு 60, 80 வயதைக் கடந்தவர்கள் நாம் எந்த அளவு ஆசைகளிலிருந்து விடுபட்டோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு மனிதன் தன்னுடைய ஐம்பதாவது வயதிலிருந்து ஒவ்வொரு ஆசையாக துறந்து விட வேண்டும். ஒரே சமயத்தில் எல்லா ஆசைகளையும் யாராலும் துறந்து விட முடியாது. ஐம்புலன்கள் வழியாகவே ஆசையை மனிதன் அனுபவிப்பதால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புலனால் அனுபவிக்கும் ஆசையை விட்டு விட முயற்சி செய்ய வேண்டும்.

60 வயதிற்குள் எல்லா ஆசைகளையும் அறவே நீக்கிய மனிதனே சஷ்டியப்த பூர்த்தி என்னும் 60வது பிறந்த நாளைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறான். இதுவே முதல் தகுதி. இந்தத் தகுதியைப் பெறாதவர்கள் சஷ்டியப்த பூர்த்தியை நிறைவேற்ற நினைத்தால் அது வெறும் சாதாரண பிறந்த நாள் கொண்டாட்டமாகத்தான் அமையும். இவ்வாறு உலகியல் விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே ஆசையைத் துறப்பது கடினம் என்பதால்தான் அக்காலத்தில் வானபிரஸ்தம் என்று வயது முதிர்ந்த காலத்தில் காட்டிற்குச் சென்று தவம் இயற்றும் முறையை வைத்தார்கள். தற்போதைய சமுதாய சூழ்நிலையில் இது சாத்தியமாகாது என்பதால் குடும்பத்தில் இருந்தாலும் பற்றற்ற நிலையில் உலகியல் காரியங்களை நிறைவேற்றி வந்தால் அதுவே வானபிரஸ்த நிலைக்கு இணையானதாக சித்தர்கள் கொள்கிறார்கள்.

முகூர்த்த நாளைச் சரியாகக் கணிக்காமல் திருமணங்களை செவ்வாய், குரு, சுக்கிர மூட காலத்தில் நிகழ்த்துவதால் சந்ததி விருத்தியின்மை, குடும்பத்தில் சச்சரவு, தம்பதிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன. அறிந்தோ அறியாமலோ இத்தகைய மூட நாட்களில் திருமண வாழ்வைப் பெற்றவர்களுக்கு ஸ்ரீக்ஷிப்ர கணபதி வழிபாடு ஓரளவு பிராய சித்தத்தை அளிக்கிறது. அபிஷேக ஆராதானைகளுடன் முறையாக ஸ்ரீக்ஷிப்ர கணபதியை வணங்குவோரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருமண தோஷங்கள் அகலும். மணமாகாத ஆண்களுக்கு நெடுநாள் திருமணங்கள் தடைபட்டிருந்தால் தோஷங்கள் விலகி விரைவில் திருமணம் கைகூடும். பாண்டிச்சேரி மணக்குள விநாயகரும், திருஅண்ணாமலை ஆநிறை கணபதியும் ஷிப்ர கணபதியின் சிலா உருவ மூர்த்திகள்.

தன்னுடைய 60வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதிலிருந்து தான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த, பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து அனைவரும் தன் மக்களே, உற்றம், சுற்றமே என்ற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தியாக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70வது நிறைவில் பீமரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையை பீம ரத சாந்திக்கு அடிப்படை தகுதியாகும். இந்தத் தகுதியை சிறு வயதிலேயே வாய்க்கப் பெற்றவர்களே காஞ்சி பரமாச்சார்யாள், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்கள் ஆவார்கள்.

70வது வயதிலிருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு சாதி, மத, இன பேதமில்லை. செடி, கொடி, மனிதன், விலங்கு, உயிருள்ளது, ஜடப் பொருள் என்ற பேதமில்லை. இவ்வாறு அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை 80 வயதில் ஒரு மனிதன் பெறும்போதுதான் அவன் 80 வயது நிறைவில் சதாபிஷேகம் ஏற்கும் தகுதி பெறுகிறான். 80 வயது நிறைந்த மனிதன் தானே தெய்வம் ஆகிறான். அதனால்தான் அந்த தெய்வத்திற்கு நாம் சதாபிஷேகம் என்னும் அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கொண்டாடுவதற்கு உரிய தகுதியை வளர்த்துக் கொண்டோமா என்பதை முதலில் ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும். இன்றைய உலகில் இத்தகைய தகுதி படைத்தோரை விரல் விட்டு எண்ணி விடலாம். இருப்பினும் அனைவருக்கும் பொருந்தக் கூடிய எளிமையான வழிபாட்டு முறைகளை உங்களுக்குக் கூறுகிறேன்.

1. 60, 70, 80 என வயது வரம்பின்றி அனைவருமே தங்கள் பிறந்த நாளன்று தங்கள் வயதிற்குச் சமமான எண்ணிக்கை உள்ள படி அரிசியைச் சமைத்து மற்ற பதார்த்தங்களுடன் தானமாக அளித்தல் சிறப்பு. உதாரணமாக 55 வயது நிறைந்த ஒருவர் தன்னுடைய பிறந்த நாள் அன்று 55 படி அரிசியைச் சமைத்து ஸ்வீட், பாயசம், காய்கறி பொரியல் என மற்ற பதார்த்தங்களுடன் திருக்கோயில் வளாகங்களிலோ, கல்லி நிலையங்களிலோ, முதியோர் இல்லங்களிலோ, வேத பாடசாலைகளிலோ அன்னதானமாக வழங்கலாம்.

2. அவரவர் சக்திக்கு ஏற்றபடி முதியவர்களுக்குத் தேவையான பாய், படுக்கை, கட்டில், மெத்தை, தலையணை, கம்பளி, கைத்தடி போன்ற பொருட்களைத் தானமாக வழங்கலாம்.

3. திருக்கடையூர் ஸ்ரீஅமிர்த நாராயணப் பெருமாள் ஆலயம், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் எழுந்தருளியுள்ள ஆலயங்கள், திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவநாதர் ஆலயம், சென்னை சித்துக்காடு போன்று ஜீவ சக்தி பூரிக்கும் தலங்கள், திருப்பைஞ்ஞீலி சிவாலயம் போன்று எமபயம் தீர்த்த தலங்கள் இவற்றில் தம்பதிகள் பொன் மாங்கல்ய தாரண வைபவத்தை நிகழ்த்துதல் சிறப்பாகும்.

4. பொன், வெள்ளி மாங்கல்யம், மாங்கல்ய சரடு, மங்கலப் பொருட்கள் இவற்றை சுமங்கலிகளுக்குத் தானமாக வழங்கலாம்.

5. தம்பதியரின் வயதிற்கு ஏற்ப 10 வயதிற்கு ஒரு கலசம் என்ற கணக்கில் கலசங்களில் கங்கை, காவிரி போன்ற புனித நதிகளின் நீரை நிரப்பி வேத, சூக்த, தேவார, திருவாசக, திருப்புகழ், பிரபந்த மந்திரங்களை ஓதி தம்பதிகளை அப்புனித நீரால் நீராட்டுதல் நலம்.

இத்தகைய பொதுவான அன்னதான, அபிஷேக வழிபாடுகளை நிகழ்த்தி வந்தாலே தம்பதிகள் நல்ல ஆரோக்கிய நிலையுடன் பலருக்கும் பயனுற வாழ இறைவன் அருள்புரிவார்.

அடியார்
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் 20 வருடங்களாக தியானம் பழகியும் அதில் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை என்கிறாரே. விரைவில் தியானம் சித்தியாக யாது செய்ய வேண்டும், குருதேவா?

சற்குரு
நீ தியானத்தில் எந்த அளவு முன்னேறி உள்ளாய் என்பதை உணரக் கூடிய வல்லமை உடையவர் சற்குரு ஒருவரே. சாதகன் ஒருவன் தானாகத் தன்னுடைய தெய்வீக நிலையை உணரும் நிலையைக் கைக்கொள்வது இல்லை. இருப்பினும் தியானத்தில் முன்னேறும் எளிய முறை ஒன்று உள்ளது. நீங்கள் கேளாமலேயே உங்கள் அனைவருக்கும் அந்த முறையைத்தான் தினந்தோறும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்து வருகிறோம். மகாபாரத காலத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறேன். அதைக் கேட்டால் உனக்கு எல்லா விஷயமும் எளிதில் விளங்கும்.

வாசமுள்ள மலர்களால்தான் சுவாமியை அர்ச்சிக்க வேண்டும். அவ்வாறு அர்ச்சிக்கும்போது மலர்களை சுவாமியின் மேல் துõக்கி எறியாமல் சுவாமியின் திருப்பாதங்கள், ஆயுதங்கள், திருக்கரங்கள், திருவயிறு, மார்பு, திருமகுடம் இவற்றில் மென்மையாக மலர்களை வைத்து அலங்கரித்தலே சிறப்பாகும். ஒவ்வொரு வித வண்ண மலர்களுக்கும் உரிய மந்திரத்துடன் அர்ச்சசை செய்வதால் உங்கள் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகக் பெருகும். உதாரணமாக, செவ்வந்தி, கொன்றை, பொன்னரளி போன்ற மஞ்சள் வண்ண மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ” என்றும், வெண்தாமரை, மல்லிகை, வெண்ணிற அல்லி போன்ற வெள்ளை நிற மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஹரி ஓம் சோமாய நமஹ” என்றும், செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் கார்த்திகாய நமஹ” என்றும் பவளமல்லி மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் ஈஸ்வராய நமஹ” என்றும் அர்ச்சித்தல் சிறப்பு. அனைவரும் லட்சுமி கடாட்சம் தரும் பவளமல்லியை தங்கள் வீட்டில் வளர்த்து இறைவனுக்குச் சூடி மகிழ வேண்டும் என்பது சித்தர்களின் விருப்பம்.

உத்தம குருநாதர் ஒருவருக்கு சீடன் ஒருவன் சுமார் 20 வருட காலம் அயராது சேவை செய்து வந்தான். ஒரு சிறிய ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்த அந்த குருவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் சீடன். தினமும் சூரிய உதய நேரத்திற்கே தன் குருவைக் காண வந்து விடுவான். மாலை சூரியன் மறையும் வரை தன் குருவுக்குத் தேவையான பிச்சையை அக்கம் பக்கத்து வீடுகளில் பெற்றுக் கொடுத்து, அவருக்குத் துணி துவைத்து, சிரமப் பரிகாரம் செய்து, பசுவிற்குத் தீனி வைத்து வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் செய்து வந்தான். இரவு தன் வீட்டிற்குத் திரும்பி விடுவான். தன்னுடைய சேவையில் ஒரு நாள் கூட அவன் தவறியது கிடையாது.

ஒரு நாள் நள்ளிரவு திடீரென்று அந்தக் குருநாதர் தன்னுடைய இறுதிக்காலம் நெருங்கிய விட்டதாக உணர்ந்தார். தன்னுடைய ஆருயிர் சீடனுக்காக ஏதாவது ஒரு சிறந்த பரிசை கொடுத்து விட்டுப் போக நினைத்தார். தான் விரும்பியதை ஒரு ஓலைச் சுவடியில் எழுதி அருகில் தங்கியிருந்த ஒரு கழைக் கூத்தாடியிடம் அதைக் கொடுத்து காலையில் வரும் தன்னுடைய அருமைச் சீடனிடம் எப்படியாவது சேர்த்து விடுமாறு சொல்லி விட்டு உயிர் விட்டு விட்டார் அந்த மகான். மறுநாள் காலையில் வழக்கம்போல் தன் குருவைக் காண வந்த சீடன் குருநாதர் மறைந்து விட்டது கண்டு தரையில் புரண்டு அழுது புலம்பினான்.

சீடனின் எல்லையில்லாத சோகத்தைக் கண்ணுற்ற கழைக் கூத்தாடி அவன்தான் அந்த மகான் குறிப்பிட்ட அருமைச் சீடனாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான். சீடனின் அளவு கடந்த குருபக்தியைக் கண்ட கூத்தாடிக்கு அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு சுயநலத் திட்டம் போட்டான். அதன்படி அவன் சீடனிடம், “குழந்தாய், உன்னுடைய குருநாதர் அவர் இறப்பதற்கு முன் என்னிடம் ஒரு ஓலைச் சுவடியைக் கொடுத்து, இதை என் ஆருயிர் சீடன் ஒருவன் காலையில் வருவான், என் மேல் உயிரையே வைத்திருக்கும் அவனிடம் இதை எப்படியாவது சேர்த்து விடு, என்று கூறி உடனே உயிரை விட்டு விட்டார். நீ கதறி அழுவதைப் பார்த்தால் அவர் கூறிய பிரியமான சீடன் நீயாகத்தான் இருப்பாய் என்று நினைக்கிறேன்,” என்று கூறி இடுப்பில் செருகி வைத்திருந்த ஒரு ஓலைச் சுவடியை எடுத்து வெளியே காட்டி விட்டு அடுத்த கணம் மீண்டும் தன் இடுப்பில் பத்திரமாக மறைத்து வைத்துக் கொண்டான். .

சீடனுக்கு ஒரே சந்தோஷம். “ஆஹா, நமது குருநாதர் நம்மை மறக்கவில்லை. மரணப் படுக்கையில் கூட என்னை நினைத்து எனக்காக ஏதோ ஒரு பொக்கிஷத்தை விட்டுச் சென்றிருக்கிறார்,” என்று கூறி ஆனந்தக் கூத்தாடினான். தன்னுடைய இரு கரங்களையும் ஏந்தி அந்தப் பரிசைத் தன்னிடம் தரும்படிக் கலைக் கூத்தாடியிடம் கேட்டான். ஆனால், கழைக் கூத்தாடியோ, “அப்பா, எனக்கு வயதாகி விட்டது. ஊர் ஊராகச் சுற்றி, உயரமான கயிற்றில் நடந்து ஒவ்வொரு நொடியும் மரணத்துடன் போராடி என்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறாள். என்னை விட்டால் அவளுக்கு வேறு கதியில்லை. அவள் பெரியவளானதும் யாருக்காவது மணம் முடித்துக் கொடுத்து விட்டால் என்னுடைய பொறுப்பு தீர்ந்து விடும். அதனால் அதுவரை நீயும் எங்களுடன் சேர்ந்து கொஞ்ச காலம் இருந்தால், உன்னுடைய குருநாதர் கொடுத்த ஒலைச் சுவடியை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்,” என்று சொல்லி ஓலைச் சுவடியை தர மறுத்து விடுவான்.


முன்வினையும் பின்வினையும் தீர்த்து வைப்பாய்,
எறும்பீசா

சீடனுக்கு என்ன செய்வதன்று தெரியவில்லை. வேறு வழியின்றி அந்த கழைக் கூத்தாடி செல்லும் இடங்களுக்கெல்லாம் தானும் சென்று அவர்களுடன் சேர்ந்து தானும் அந்தத் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தான். சிறிது காலம் சென்றதும் ஒரு நாள் உயரமான இடத்தில் கயிற்றில் நடந்து கொண்டிக்கும்போது அந்த கழைக் கூத்தாடிக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அந்த இடத்திலேயே உயிரை விட்டு விட்டான். கழைக் கூத்தாடியுடன் சேர்ந்தே வாழ்ந்து கொண்டிருந்த அவன் மகளுக்கு அந்த ஓலைச் சுவடியின் ரகசியம் தெரிந்திருந்தது.

உடனே அவள் அந்த ஓலைச் சுவடியை எடுத்து தன் இடுப்பில் செருகிக் கொண்டு, தான் ஒருவரிடம் பாதுகாப்பாக மண வாழ்க்கையைப் பெறும் வரை அந்தச் சீடன் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த ஓலைச் சுவடியை சீடனுக்குத் தருவதாகவும் அவள் வாக்குறுதி தந்தாள். சீடனுடைய நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது. ஏற்கனவே 20 வருடம் தன் குருநாதரிடம் அயராது சேவை செய்த அவன், கழைக் கூத்தாடியிடம் மாட்டிக் கொண்டு அவனிடம் மேலும் ஒரு 20 வருட காலம் ஊர் ஊராகச் சுற்றி அவர்களுடன் கூத்தாடி வந்தான். இப்போது “இறைவன் சோதனை இன்னும் எத்தனை வருட காலத்திற்குத் தொடரும் என்று தெரியவில்லையே” என்று மனம் நொந்தவனாக குருநாதரின் ஓலைச் சுவடி எப்படியாவது தனக்குக் கிடைக்க வேண்டும் என்று இடைவிடாது இறைவனிடம் பிரார்த்திக் கொண்டு இருந்தான்.

காலம் கடந்து கொண்டிருந்தது...

சீடனின் பரிதாபமான நிலையைப் பார்த்து மனமிறங்கிய அந்தக் கூத்தாடியின் மகள் தானாகவே ஒரு நாள் குருநாதர் தந்த ஓலைச் சுவடியை சீடனின் கரங்களில் கொடுத்து விட்டாள். சீடனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். உற்சாகத்தில் உலகையே மறந்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு மிகவும் ஆவலுடன் அந்த ஓலைச் சுவடியைப் பிரித்து அதில் உள்ள மணி வாசகங்களைப் படித்துப் பார்த்தான். அதில் எழுதி இருந்ததாவது.

நீ
ஒருவருக்குத் தானம் கொடுத்து
அந்தத் தானத்தை வாங்கியவருக்கு
தானும் தானம் செய்ய வேண்டும்
என்ற எண்ணம்
எப்போது உதிக்கிறதோ
அப்போது
உன் தியானம் கை கூடும்.

இவ்வாறு அயராது சேவை செய்து, 50 வருடங்களுக்கு மேலாக உழைத்து ஓடாகத் தேய்ந்து, அரும்பாடு பட்டு அந்த சீடன் மகாபாரத காலத்தில் கற்ற மணி வாசகத்தைத்தான் உங்களுக்கு இங்கே மிக மிக எளிமையாக சொல்லித் தருகிறோம். எப்போதெல்லாம் முடியுமோ, எங்கெல்லாம் முடியுமோ, என்னவெல்லாம் கொடுக்க முடியுமோ அனைத்தையும் தானம் செய்து கொண்டே இருங்கள். உங்களிடம் தானம் பெற்றவர்கள் என்றாவது ஒரு நாள் நாமும் இந்த நற்காரியத்தைச் செய்தால் என்ன என்று நினைத்து ஒரு சோற்றுப்பருக்கை தானம் செய்தால் கூட நீங்கள் தியானத்தில் வெற்றி அடைவீர்கள். அதுவரை தியானம் செய்வதாக சொல்லி தூங்கிக் கொண்டுதான் இருப்பீர்கள். இதுவே உண்மை.

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam