மத யானை நடை அழகு தவ சீல நடை அழகு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

பெரியவர், சிறுவனை நடந்தே அழைத்துச் சென்ற குருகுலவாச யாத்திரைகளே மிக மிக அதிகம். எத்தனை மலைத் தலங்களில் ஆயிரமாயிரம் படிகள் ஏறி, இறங்கி எத்தனை நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து, நடந்து, எத்தகைய அரிய இறை அனுபூதிகளை, அனுவபங்களை, இறை லீலைகளை, சித்தர்கள், மகரிஷிகளின் தரிசனங்களாகச் சிறுவன் துய்த்து, தன் குருவருளாய்ப் பெரியவராம் தன் “வாத்யாரிடம்” இருந்து பெற்று உய்த்துள்ளான்!

அச்சிறுவனே, குருமங்கள கந்தர்வா ஆக, கலியுகத்தில் இன்று கனிந்து, தம் சற்குரு மொழிந்த குருவாய்மொழிகளை, கலியுக மக்களின் நல்வாழ்விற்காக, சித்தர்களின் பிரசாதமாக, ஸ்ரீஅகஸ்திய விஜய தளத்தில் பிரசாதமாக வைத்தளித்து உவக்கின்றான்! என்னே பெரும் பேறிது, சிறுவனுக்கும், நமக்கும்!

பொதுவாக, யாருடைய கர்மங்களிலும் இறைவனே குறுக்கிடுவது இல்லை. உதாரணமாக, ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீபிரம்மாவைச் சிறையில் அடைத்தபோது, அவரது படைப்புத் தொழில் தடைபட்டது. அதற்குப் பரிகாரமாக ஸ்ரீமுருகப் பெருமான் பூலோகம் வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து தீர்த்தார்.

சற்குருவின் மேல் கொண்டுள்ள சிறு பக்தி காரணமாக, சித்தர்களின் ஆசியே, குருவருள் பிரசாதமாகத் தேடி, நாடி, ஓடி வருகின்றது என்றால், இனியாவது சற்குருவை அடைவதே வாழ்க்கையின் லட்சியம் எனத் தெளிந்து, பிற ஜீவன்களுக்குச் சேவை ஆற்றும் மனப்பான்மையுடன் வாழ்ந்திட வேண்டும். இதனைத் தார்மீகமாக உணர்த்துபவைதானே அடிமை கண்ட ஆனந்த பொக்கிஷங்கள்!

பெரியவருடன் திருஅண்ணாமலை கொல்லி மலை, பொதியமலை போன்ற சித்தர் வாழ் தலங்களுக்குச் செல்லும் போதெல்லாம் சிறுவன் மிகவும் குஷியாகி விடுவான். காரணம், தெய்வீகப் புத்துணர்ச்சி ஊட்டும் பல புதிய ஆன்ம அனுபவங்களோடு அவன் திரும்பி வருவானன்றோ!

கொல்லி மலையில் பெரியவருடன் உலா வந்த போது, பல வனதேவதைகள், விருட்ச தேவதைகளின் தரிசனங்களோடு, கோரக்க சித்தர் தரிசனத்தையும் அவனுக்குக் காட்டி உள்ளாரே!

எழும்பிய ஜோதி(ர்) லிங்கம்

கோரக்க சித்தர் வாழ்ந்த (இன்றும் உள்ள) சிறு குகையில் பெரியவர் கற்றுத் தந்த பீதாம்பர யோக சக்தி மூலமாக, தரையில் இருந்து தாமாகவே எழும் ஆகர்ஷண சக்திகள் அவனிடம் கோள யோக நல்வரமாய்ப் பதிந்தன. இதை மூலமாகக் கொண்டே சோம்நாத்தில் – பல நூற்றாண்டுகளுக்கு முன் எவ்வாறு தரையில் இருந்து, சற்று உயரத்தில் எழும்பிய பாவனையில் சுயம்பு லிங்கம் இருந்ததோ அதே தோற்றத்தில் – சோமநாத ஜோதிர் லிங்க தரிசனத்தைப் பெற்றான். சற்குரு மூலம் மட்டுமே அடையப் பெறுவதன்றோ இந்த பாக்யம்!

கேதார்நாத், பத்ரிநாத் செல்கையில், இமய மலையில், பல இடங்களில் அஷ்டவக்ர மாமுனி, காஸ்யப மஹரிஷி, ஆத்ரேய மஹரிஷி போன்றோர் கலியுகத்திலும் தவம் பூண்டு கிடக்கின்ற காட்சி அவனுக்கு வியப்பளித்தது!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

இமயமலையில் ஓரிடத்தில் பசுக்கள் சூழ, ஒளிப் பிரகாசம் நிறைந்த மேனியுடன் ஒரு மகரிஷி தவம் புரிவதைச் சற்றுத் தொலைவில் நின்று பெரியவர் காட்டினார். அவர்தாம் மேன்மைமிகு வசிஷ்ட மாமுனி என அறிந்ததும், சிறுவன் ஆனந்தக் களிப்பால், வெகு தொலைவில் நின்று பார்த்தாலும் சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து நமஸ்கரித்தான்.

“ஏன் வாத்யாரே! இவங்க இப்பக் கூட இன்னமும் தவத்துல இருக்காங்களா, அதுவும் கலியுகத்துல?”

“நாம வசிக்கற இந்த பூமியில இது கலியுகம்டா! இன்னொரு பூலோகத்துல கிருத யுகம் நடக்குது! அடுத்த பூமியில திரேதா யுகம் நடக்குது! அந்த பூமியில, தேவலோகத்துலேந்து காமதேனு பசுவை பூமிக்குக் கொண்டு வரணுமே, அதுக்குத் தாண்டா இங்கே வசிஷ்டர் தபசுல இருக்காரு!”

சிறுவன் கண்களை விரித்தான், வியப்பின் அழுத்தம் தாங்காது!

“எத்தனை தடவை வாத்யாரே திருப்பித் திருப்பி இதே புராணம் நடக்குது?”

“இதுக்கு பதில் வேணும்னா நாம துவாரகைக்குப் போகணும்டா கண்ணு!”

பெரியவர் “பொடி” வைத்துப் பதில் சொல்லி விட்டாரே! சிறுவன் மௌனமானான்!

ஆனால் துவாரகை செல்லும் பயணமும் பின்னால் நெடுங்காலம் கழித்து வந்தது. ஆனால் கால இடைவெளியில் சிறுவன் இக்கேள்வியை மறந்தே போய் விட்டான்.

அப்போதெல்லாம் துவாரகையில் நிறைய தீவுகள் இருந்தன. ஒரு படகில் பெரியவர் அவனை ஒரு சிறு தீவுக்கு அழைத்துச் சென்றார்.

“ஸ்ரீகிருஷ்ண பகவான் தியானம் பண்ணின இடமப்பா இது! இன்னும் கொஞ்ச வருஷத்துல பூமியிலேந்து சுத்தமா மறைஞ்சிடும்!”

மனைவி – இல்லறக் காரியங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பவள்
பத்தினி – கணவனைக் கரையேற்றுபவள், உயிரை மீட்டுத் தருபவள் (சாவித்திரி, நளாயினி போன்றோர்)
கற்புக்கரசி – கணவனை உடலோடு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்பவள்

ஆங்கே சிறுவனுக்கு இதுவரை அவன் அறியாத பல கடுமையான பிராணாயாமப் பயிற்சிகளைப் பெரியவர் கற்றுக் கொடுத்தார். இனம் புரியாத யோக சக்தி அங்கு மிளிர்வதைச் சிறுவன் கண்டுணர்ந்தான்.

“ஏன் வாத்யாரே... ” என்று ஏதோ கேட்க வந்தவனைப் பெரியவர் மடக்கினார்.

அறியாதது அறிவோம்!

“நீ என்ன கேட்க வர்றேனு தெரியுதுடா... உன மனசையே நாங்க, எங்க உள்ளங்கை palm T.Vல பதிவு பண்றோமே! எங்க palm டீவியை ஆன் பண்ணிட்டு... உன்னை எப்பவும் பார்த்துக்கிட்டு இருக்கோமே!” என்று சொல்லியவாறே பெரியவர் தம் உள்ளங் கையைத் திறந்து காட்டினார்.

அதில் சிறுவன் தலை தெரிந்தது. அதிலிருந்து  ஊதுபத்திப் புகை போல் சிறு சிறு புகைச் சுருள்கள் வந்து கொண்டிருந்தன.

“இது தாண்டா உன் எண்ண அலைகள்! இதைப் பார்த்தாலேயே நீ என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுடுமே!”

“இதோ பார்! இது என்னன்னு தெரியுதா?”

அவர் உள்ளங்கைக்குள் படங்களுடன் உரையாடலும், கேட்பதையும் கண்ட போது அவனுக்கு மிக, மிக ஆச்சரியமாக இருந்தது! ஆம், அவன் எப்போதோ பெரியவரிடம் பேசியவை இப்போது வெளிவந்தன!

அதில்...

... “எத்தனை தடவை வாத்யாரே திருப்பித் திருப்பி இதே புராணம் நடக்குது?”

“இதுக்கு பதில் வேணும்னா நாம துவாரகைக்குப் போகணும்டா கண்ணு!”...

“...ஆங்!... இது இமய மலையில் கேதார்நாத் அருகே நடந்த சம்பவ உரையாடல் அல்லவா! நான் மறந்தே விட்டேனே!” – சிறுவன் நினைவு கூர்ந்தான்.

“நீ இமய மலையில் விட்டதை இங்கே அலை மூலமா துவாரகைல புடிக்கறோம்டா!” – பெரியவர் கண்களைத் திறக்காமல் பேசினார்.

“அது சரி வாத்யாரே! இப்பனாச்சும் சொல்லு! இதே துவாரகையிலத்தான் கிருஷ்ணர் இன்னொரு துவாபர யுகத்துல திரும்பவும் வருவாரா?”

“ஆமாம்டா கண்ணு!”

சிறுவன் திரும்பவும் பெரியவரைக் கேள்விக் கணையால் நன்கு “பிடித்துக்” கொண்டான்!

வருவதும், போவதுமாய்!

“ராமரும், கிருஷ்ணரும் வர்றது, போறது, எத்தனை தடவை வாத்யாரே திருப்பித் திருப்பி இதே புராணம் நடக்குது?”

“அதுவா, இந்த துவாரகை கடலைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது?”

“என்ன இது, குறுக்குக் கேள்வி போடுகின்றார் ...”, என்று எண்ணி வியந்த சிறுவன், “இந்தக் கடலைப் பார்த்தா அதே அலைகள் ஏன் திரும்பித்  திரும்பி வருதுன்னு கேட்கத் தோணுது?”

“கரெக்டாச் சொன்னேடா! இது வெறும் கடல் அலைகள் இல்லேடா ராஜா! அனைத்து ஜீவன்களும் பரவெளியில் வெளியிடற எண்ணங்களும் தாண்டா கடல் அலைகளா ஆகி வருது!”

“இந்த அலைகளுக்கும், புராண நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம் வாத்யாரே!?”

“நடந்ததே, நடப்பவையாக நடக்கும்கற” சித்தர்கள் எளிமையாகக் காட்டற வேத ரகசியத்தை, தெய்வீக உண்மையை, உன்னை மாதிரி எல்லாரும் புரிஞ்சுக்கற வரைக்கும், அலைகள் வரும், புராணங்கள் நடந்துக் கிட்டே இருக்கும்! இதெல்லாம் எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முடியாத தெய்வ ரகசியம்டா! குருவருள்னாலேயே, ஏன் எதுக்குன்னு, தானே தன்னால தெரிய வரும்!” என்று கூறியவாறு கலகலவென்று சில்லறையைக் கொட்டினாற் போல் அண்டம் ஒலிக்கச் சிரித்தார்.

அறிந்தது போதும்!

அவர் கையில் ராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகள் சிலவும் தத்ரூபமாகத் தெரிவதைக் கண்டான்.

“என்ன இது, புராணங்களும் தெரிகின்றன. அவனுடைய எண்ணங்களும் வருகின்றன, என்ன முடிவிற்கு வருவது?”

சிறுவன் குழம்பினான்! டக்கென்று தன் உள்ளங் கைகளை மூடிக் கொண்ட பெரியவர், “ஆனா என்ன எண்ணம்னு தெரிஞ்சுக்க, ஒரு ரெண்டு நிமிஷம் எங்க palm T.Vயைத் திறந்து பார்த்தா.. எங்களோட 200 வருஷ தபஸ் சக்திகள் செலவாகும்! பரவாயில்லையா?”

சிறுவன் அதிர்ச்சி அடைந்தான்! “இவ்வளவு புண்யத்தைச் செலவழித்து, இவற்றை ஏன் பெரியவர் தனக்குக் காட்ட வேண்டும்?”

“நேரம் வரும்டா, இதையும் தெரிஞ்சுக்கறதுக்கு!” என்று உள்ளங் கையைப் போல் சப்ஜெக்டையும் மூடினார் பெரியவர். அவரையே பார்த்துக் கொண்டு சிறுவன் கண்களை மூடிச் சிந்தித்தான்!

யோகம் திரளும் பூமி!

எத்தனையோ புராண நிகழ்ச்சிகள் அவன் கண்களுக்குள் வேக வேகமாய் வந்து ஓடின! எல்லாவற்றிலும் பெரியவர் ஒரு ஓரத்தில் நிற்கக் கண்டான். அவனுக்குக் கண்களைத் திறக்கவே மனமில்லை! ஆனால் அனைத்து உலகங்களையும் இழுத்து மூடினாற் போல், அமைதி நிலவிடவே, பேரமைதியைத் தாங்க இயலாது கண்களைத் திறந்தான்.

ஆம்... ஆங்கே டக்கென்று கடலில் அனைத்து அலைகளும் நின்று போயிருந்தன! சிறுவன் பயந்தே போனான்! ஆனால் பெரியவரோ மிக அமைதியாக எழுந்து, நடந்து கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அலறி அடித்து அவரைத் துரத்திப் பிடித்தான்!

“எல்லாம் உன் தலைஎழுத்துடா! உலகத்துல எண்ணங்களே இல்லாத இடத்துக்குக் கூட்டி வந்து, உன்னை தியானம் பண்ண வைக்கலாம்னு பார்த்தா, நீயோ யோக வரம் தர வர்ற யோக லக்ஷ்மியை இப்படியா வேண்டாம்னு சொல்றது?”

இத்தகைய வார்த்தைகளை அடிக்கடிக் கேட்டுக் கேட்டுப் பழக்கம் ஆனதால், சிறுவன் அவரை மிகவும் கோபமாகவே பார்த்தான்! ஆனால் அவர் கூறியது உண்மைதானே!

--- ஆனந்தங்கள் தொடரும்.!

எச்சில் பொறுக்கி ஸ்ரீஆறுமுகச் சித்தர்

எத்தகைய தீவினைகளாகிய எச்சங்களையும், ஜீவன்களின் பிறவித் தளைகளில் இருந்து பொறுக்கி எடுத்துக் களையும் அற்புதச் சித்தர்! தற்போது காரைக்குடி அருகே கோட்டையூரில் குருமூர்த்தம் (ஜீவசமாதி) பூண்டு நித்தியச் சித்தராய், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் கலியுக மக்களுக்கு அருளும் சித்தர்.

தம் ஆதிமூலம், பூலோகம் வந்த காரணம், புவியுலகச் சேவைகளைப் பற்றி அதிகம் பூவுலகிற்கு அறிவிக்காது, மறைவேதப் பொருளாய் தோன்றி, மறைந்து, தோன்றி அருளும் உலவாப்புலச் சித்தர்களின் வழி சார்ந்த மகத்தான சித்தர்பிரான்!

காலத்தை வென்ற காலமறியாச் சித்தர் ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர், எச்சொல் பொறுக்கும் ஆறுமுகச் சித்தர.

ஸ்ரீஆறுமுக சித்தர் ஜீவாலயம்
கோட்டையூர்

‘எச்சம்’ என்றால் கர்ம வினைச் சொச்சங்கள் என்று பொருள். எத்தனையோ கோடி காரணங்களுக்காகப் பூவுலகிற்கு இறைத் தூதுவர்களாக வரும் சித்தர்களில், மிக மிகக் கடினமான துறையான “கர்ம பரிபாலன” இயக்கத்தை, இறையருளால் தாங்கி வருகின்ற சித்தர்கள் மிகச் சிலரே, துன்பங்களால் வாடும் மக்களின் துன்பச் சுமைகளைத் தம்முள் ஏற்றுத் தாமே அனுபவித்துத் தம்மை அண்டியவரைக் காக்கும் கர்ம பரிபாலனச் சித்தர்களே, உலவாப்புலச் சித்தர்கள், உலாநிதிச் சித்தர்கள் என்று பல காரணப் பெயர்களைப் பூண்கின்றனர். பொதுவாக, பச்சை வண்ண உடைகள் பூண்ட சித்தர்கள் யாவரும், அஸ்தீக சித்தர், சதாதப சித்தர், குப்பைச் சித்தர், கௌஸ்துப சித்தர் வழி வந்தவர்கள் ஆவர்.

இவர்கள் – வந்த வினை (சஞ்சித கர்மா), வருவினை (ஆகாமிக் கர்மா) வந்திட்ட வினை (பிராரப்த கர்மா) – ஆகிய மூன்றையும் அறிந்து, அவற்றை நிவர்த்திப்பதற்கான, அந்தந்த ஜீவனுக்கு உரிய அறவழிகளை அளிக்க வல்லவர்கள் ஆவர். ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர், மனம் சுமந்தான் சித்தர் போன்றோர் இத்தகைய ‘கர்ம பரிபாலன இயக்கச் சித்தர்கள்’ ஆவர்.

இவ்வாறு உலவாப்புலச் சித்தர்கள் பாரம்பரியத்தில் தோன்றிய எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர், பல இடங்களில் தூல சரீரத்தில் புவியில் பல புலங்களில், ஆங்காங்கே தோன்றி, எண்ணற்றோர்க்கு, இலை மறை கனியாய் அருளியுள்ளார். இன்றும் அருள்கின்றார்.

இவர், தன் தூல உடலை உகுக்கும் பருவத்தே சமீப காலத்தில், காரைக்குடி அருகே கோட்டையூரில் உறைந்து பின், கோட்டையூரிலேயே ஜீவாலயம் (ஜீவசமாதி) ஏற்றவர். எப்போதும் குப்பை கூளமருகே நின்று எச்சில் பொறுக்கும் நிலையில் இருக்கக் கண்டு பலரும் இவரைச் சுடுசொல் கொண்டு பாய்வித்த போது – அனைத்தையும் ஆற்றி, இன்முகமாக ஏற்று, “எச்சொல் பொறுக்கும் ஆறுமுகச் சித்தர்” எனவும் காரணப் பெயர் கொண்டார்.

தற்போது இங்கு, கோட்டையூரில், இவருடைய திருஉடல் மேல் ஜீவலிங்கப் பிரதிஷ்டை ஆகி, ஜீவாலயம் பூண்டு அருள்கின்றார்.

ஸ்ரீஆறுமுக சித்தர் ஜீவாலயம்
கோட்டையூர்

வினைகள் ஆறுமே!

ஆறுமுகச் சித்தர் என்பதும் ஒரு காரணப் பெயரே! ‘முகமற்ற முக்தி நிலை’ என்பது இறப்பு, பிறப்புகளைத் தாண்டிய மோட்ச நிலையைக் குறிப்பதாகும். ரணமாகிய வினைகளால் வரும் பிறவிகளை (முகங்களை), ஆறிய வினையாக்கும் அற்புதமே ஆறுமுகக் க(ரு)ணை! எனவே, ஆறு(ம்) முகம் என்பதாய், கர்ம ரண வினைகளை நீக்கும் சித்தம் பூண்டவராய், அன்றும், இன்றும், என்றுமாய் வாழும் ஏகாந்த ஜோதியாய், கோட்டையூரில் தற்போது ஜீவாலயம் பூண்டு, ‘எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர்பிரானாக’ அருள்கின்றார். இவர் குப்பைச் சித்தர் பாரம்பரியத்தைச் சார்ந்தவர். பலரும் அறியாப் பண்புடைச் சித்தர்!

“எச்சில் பொறுக்கி ஆறுமுகம்” என்பதால், எச்சமாகிய வினைகளால் வரும் வினைகளை, (கருணைக் கடாட்சத்தால்) பொறுக்கி எடுத்து, ரண முக வினைகளை ஆற்றி, பிறவிகளற்ற தெய்வப் பேரின்ப நிலையை அளிக்க வல்லவர். (ஆறு சித்தமுக) ஷடாட்சரக் கடாட்சப் பரிபாலன சக்திகளைப் பூண்டவரே, எளிய காரணப் பெயர் பூண்டு, எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தராக, நம்மைக் காத்தருள இங்கு தற்போது ஜீவசமாதியில் மலர்கின்றார்.

எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர் என இச்சித்தர்மகான் காரணப் பெயர் கொண்டதில், மேற்கண்ட ஆன்ம விளக்கங்கள் பலவும் நிறைந்துள்ளன. இவர் குப்பை, கூளம் என அனைத்து உலகியல் வேறுபாடுகளைக் கடந்த உத்தமச் சித்தராய்ப் பொலிந்தவர். தன்னை வெளிக் காட்டி கொள்ளாதவர். மூலமறியா முகச்சுடர்ச் சித்தர். எளிமையான தோற்றத்துடன், பல இடங்களிலும் உறைந்து, எண்ணற்றோரின் துன்பங்களை, வேதனைகளை, மன ரணங்களை ஆற்றியவர், தற்போது குருமூர்த்தம் (ஜீவாலயம்) மூலம் ஆற்றியும் வருபவர். புவி உலகத்தார் மட்டுமன்றி, விண்ணுலகத்தாருக்கும், தேவாதி தேவர்களுக்கும் அருள் சுரக்கும் சித்த புருடத் திவ்யத் தலமே இச்சித்தர்பிரான் அதிர்ஷ்டானம்.

பிரசித்தி பெற்ற சித்தர்கள், மகான்கள் தம் பூவுடலில் ஆற்றிய ஒரு சில அனுபூதிகளையே நாமறிவோம். ஏட்டில் வராது, நாமறியா வகையில் இவர்கள் அளித்த அனுபூதிகள் பல்லாயிரக் கணக்கானவை ஆகும். இவை யாவும் ஏனைய சற்குருமார்கள் மூலமாக, அவ்வப்போது இதுபோல் கலியுலகில் அளிக்கப் பெறும்.

‘எச்சப் புரியார்’ – எச்சப் புரித் தீர்த்தம்

எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர்பிரான், சித்தர்களால் ‘எச்சப் புரியார்’ என்றும் அழைக்கப்படுகின்றார். அதாவது “புரி” என்பது, கர்மங்களைக் களையும் தெய்வீக சாதனமாகப் பொலிவதாகும். மூன்று வகை மலங்களை மாய்க்க வல்லதே முப்புரியாகிய பூணுல், ஜாதி இன பேதமின்றி நம் முன்னோர்கள் யாவரும் முப்புரி அணிந்து தியான, ஜப விதானங்களில் சிறந்து பெருங்குடும்பத்துடன் எளிமையாக, அமைதியாக, சமுதாயத்திற்குச் சாந்தம் புகட்டி வாழ்ந்தனர்.

எச்சபுரி என்பது ஜீவ உடல் தரிக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும், தெய்வ ரீதியாக, வினை (பொறுக்கி, பொறுத்துக்) களைதல், தியாகம், அன்பு ஆகிய முப்புரியால் களைவதே எச்சப்புரி வகை கர்ம பரிபாலனச் சித்தமுறையாம். இவ்வகையில், உலகில் அனைத்து ஜீவன்களின் அனைத்து வகைக் கர்மங்களை, எச்சங்களைக் களைய வல்ல சித்தர்குலச் சற்குருவாக அருள்புரிவரே ‘எச்சப் புரியார்’ ஆவார். எச்சப்புரியம் என்பது மேல் லோகங்களில் விரஜா நதி போன்ற மிகப் புனிதமான, சகல கர்ம வினைகளையும் களையும் தீர்த்தமாகும்.

இலை என்பது நம் உடல், எச்சில் என்பது நம் உடலில் ஏறி இருக்கு கர்மப் பதார்த்தங்கள் (கர்மவினைகள்), பொறுக்குதல், என்றால் நன்றாக வழித்து, எடுத்து, பஸ்மம் செய்து சுத்திகரித்துதல் என்று பொருள். இவ்வாறு, நல் உடல் இலையில், தொக்கிச் சொச்சமாய் இருக்கும் எச்சக் கர்ம வினைகளை வழித்து, எடுத்து, நீக்கி, உடலைத் தூய்மை ஆக்கித் தருபவரே எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர்பிரான். இவர், குப்பைகளில் எச்சில் பொறுக்கி நின்ற இவர் தம் எளிமையான அருட்கோலமானது, புவியுலகில், பரவெளியில் மிதந்து கிடக்கும் தீவினைகளை, தீய எண்ண எச்சில்களை, தம் யோக சித்தியால், பொறுக்கி எடுத்துச் சுத்திகரிக்கின்ற திருவருட் கடாட்சத்தை உணர்விப்பதாகும். பல இடங்களில், பல வடிவுகளில், பல காலங்களில் தோன்றியவர்.

தைதுலை கரண நாள் வழிபாடு

எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர், தைதுலைக் கரண நாள் தோறும் விசேஷமான ஞானப்ரகாசம் புலப்படத் துலங்கியவர் ஆதலின், கோட்டையூரில் அமைந்திருக்கும் இவருடைய ஜீவாலயத்தில், வியாழக் கிழமை அன்றும் தைதுல கரண நாளிலும் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். இரண்டும் அபூர்வமாகச் சேரும் நாளில், பாக்யம் உள்ளோர்க்குச் சித்தர்பிரானின் திருக்காட்சியும் தூல, சூக்கும வடிவுகளில் கிட்டும்.

லட்சுமணன் மனைவி ஊர்மிளை தான் பூப்படைந்த உடனே துவங்கி, 14 ஆண்டுகள் தொடர்ந்து பூஜை செய்து வந்தாள். கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் ஆலயத்தில் ஊர்மிளை லிங்கம் உள்ளது. ஊர் முலை என்றால் ஊறுகின்ற கற்பு என்று பொருள். கற்பற்றவர்கள் யாருமே எதிரே நிற்க முடியாது.

27 நட்சத்திரங்களைப் போல, பவம், பாலவம், கௌலவம், தைதுலம் போன்று 11 கரணங்கள் உண்டு. தைதுல கரணம் வரும் நாளைப் பஞ்சாங்கத்தைப் பார்த்து அறியவும். பஞ்சாங்கம் காட்டும் பஞ்ச கால அங்கங்களான கிழமை, நட்சத்திரம், திதி, யோகம் ஆகியவற்றுடன் கரணமும் சேர்ந்து காலத்தின் (ஐந்து) பஞ்ச அங்கங்களாக, ஆகின்றன என்பதை நாமறிவோம்.

பலரும், இங்கு ஜீவசமாதியில் இரவில் தங்கி, அன்னதானம் செய்து தங்கள் வினைகள் நீங்குகின்ற அற்புதத்தைக் கண்டு செல்கின்றனர்.

தலைமுறைத் துன்பங்களைத் தீர்க்கும் ஜீவாலயம்

இங்கு, வாழை இலை நிறைய் ஆறு பதார்த்தங்களை வைத்து, முழுமையாக அன்னதானம் செய்து, வழிபடுவோர்க்கு சந்ததிக் குற்றங்கள், தலைமுறை தோஷங்கள், பித்ரு சாபங்கள், தீவினை எச்சங்கள், எண்ணப் பாவங்கள், தீய செயல்வழிக் கார்ப்புகள் ஆகிய ஆறு துக்க வழித் துன்பத் தளைகள் நீங்குவதற்கு அருள்புரியும் அற்புதச் சித்தர் சமாதி இதுவே!

வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ, பிறர் அறியும் வகையிலோ, அறியா வகையிலோ பெரும் தவறுகளை, கொடிய பாவ வினைகளைப் புரிந்தோர், இங்கு எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர்பிரான் ஜீவாலயத்தைச் சரணடைந்து, வியாழன் மற்றும் தைதுலைக் கரண நாளில், இங்கும், தம் ஊரிலும், தமக்கு விருப்பமான இடங்களிலும், வாழை இலை நிறைய ஆறு பதார்த்தங்களுடன் அன்னதானம் அளித்து வந்தால், தாம் செய்த குற்றங்களால் அவதியுறுவோர்க்கு, தக்க நிவாரணங்களைத் தந்து தீவினைகளைக் களைகின்றார்.

அவரவர் இயன்ற அளவிற்கு பொரி, அவல், வெல்லம், தேங்காய், கற்கண்டு, பொட்டுக் கடலை என்றவாறாக ஆறு, ஆறு பதார்த்தங்களை அவரவர் வசதிக்கு ஏற்றவாறு செய்திடலாம். அடியார்கள் உண்ட பின் மீந்திலைகளைப் பணிவுடன் எடுத்துச் சுத்திகரிப்பதுதான் மிகவும் விசேஷமானது. சித்தருக்கும் மிகவும் ப்ரீதியானது. இச்சேவை தாம் துன்பங்களையும், ரணங்களையும், மன வேதனைகளையும் தணிக்க வல்லதாம்.

இங்கு, இயன்றால் அங்கப் பிரதட்சிணம் செய்வது மிகவும் விசேஷமானது. வியாழன் கூடியுள்ள திருவாதிரையில் வழிபட, பலத்த கர்ம வினைகள் கழிவதற்கான அற வழிகளைப் பெறுவர். வியாழன், உத்திரம், கிருத்திகை, விசாகம், ஷஷ்டி, தைதுலைக் கரண நாட்களில் இங்கு வழிபடுதல் மிகவும் நன்மை தரும். ஐஸ்கிரீம், முந்திரிப் பருப்புப் பாயசம், கட்லட், பாதாம் அல்வா போன்றவற்றை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஏழைகளுக்கு, இங்கு சங்கல்பம் செய்து இவற்றை அன்னதானமாக அளிப்பதால், பல தடங்கல்களால் கை கூடாத நற்காரியங்கள், தடங்கலாகி உள்ள காரியங்கள் நன்கு நிறைவு பெற அருள்வழி பிறக்கும்.

இங்கு ஏழைச் சிறுவர், சிறுமியர்களுக்கான – நன்கு தைக்கப் பெற்ற பச்சை வண்ண ஆடைகளை – ஜீவலிங்கத்திற்குச் சார்த்தி, நேர்த்தி வைத்து, ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதால், பெண்ணின் திருமண வாழ்வு சரியாக அமையவில்லையே என்று ஏங்கும் பெற்றோர்களுடைய மன வேதனைகள் தணிவதற்கான தக்க தீர்வுகள் கிட்டும்.

மனம் சுமந்தான் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்.

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

ஜீவன்களுக்கு நல்வழிகளைக் காட்டிட மானுட சரீரத்தில் திருஅண்ணாமலையில் தோன்றி, மறைந்து ஜீவாலயம், குருமூர்த்தம், ஜீவசமாதி பூண்ட, பல்லாயிரக் கணக்கான சித்தர்களை இப்பூவுலகம் மறந்து விட்டது. அவர்களுடைய பொன்னான தெய்வீக காலத்திற்கு அடியார்களை இட்டுச் செல்கின்றோம்.

கன்னிப் பெண் இயற்கையாக இறந்தால் சப்த கன்னிமார்களுடன் சேர்ந்து விடுகின்றனர். யார் வேண்டுமானாலும் ஈமக் கிரியை செய்யலாம். சப்த கன்னிமார்களின் ஆசி கிட்டும்.

1800 ஆண்டிற்கு முன்னர் திருஅண்ணாமலை மலையில் வாழ்ந்து அருட்சுரந்த சித்தர்களைப் பற்றி எவருமே சுவடிகளிலோ, அச்செழுத்துக்களிலோ வடிக்காமல் விட்டு விட்டதால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருஅண்ணாமலைச் சித்தர்களின் மகிமையைப் பற்றி நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள் அருளியபடி, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய்மொழிகளாய் இத்தொடரில் அளிக்கின்றோம்.

இத்தொடரில், வேப்பிலைக் கட்டிச் சித்தர், கண தங்கணான் சித்தர், ஹரிக்கேன் விளக்குச் சித்தர் போன்ற அரிய சித்தர்களின் வரிசையில் அடுத்தபடியாக நாம காண இருப்பது மனம் சுமந்தான் சித்தரின் மகத்துவம் ஆகும். சற்று நேரம் மரத்தடியில் அமர்வதைத் தவிர, எப்போதும், எந்நேரமும், இடைவிடாது, களைப்படையாது இரவும் பகலுமாய் திருஅண்ணாமலையை எப்போதும் கிரிவலம் வந்த அதிஅற்புதச் சித்தர் பெருமான்! எந்த இடத்தில், எப்போது இருப்பார் என்று சொல்ல இயலா வண்ணம், எப்போதும் கிரிவலம் வந்த உத்தமச் சித்தர் இவர்!

தம்மை நாடிச் சரண் அடைபவர்களின் மனச் சுமையைத் தாமே சுமந்து, அதன் விளைவுகளாய் வரும் நோய்த் துன்பங்கள், ரணங்களையும் தாமே அனுபவித்து அடியார்களைக் காப்பாற்றுபவர்!

இவரிடம் ஒரு முறை சில நிமிட நேரம் உரையாடினால் கூடப் போதும், மனபாரம் குறைந்து, பேரானந்தம் கிட்டுவதை உணர்ந்திடலாம். எப்போதும் மனோரஞ்சிதப் பூக்களைக் கைகளில் சுமந்து கொண்டு இருப்பார். இவர் அமரும் இடமோ மனோரஞ்சித மரத்தின் கீழேயாம். வேறெங்கும் இவர் அமர்ந்து எவரும் பார்த்ததில்லை! மனச் சுமையைத் தணித்து ரஞ்சிதமான சாந்தத்தை அளிக்க வல்லவர். மனோரஞ்சித மரம் இல்லாத இடத்திலும், இவர் அமர்வதெற்கென ஆங்கே மனோரஞ்சித மரம் தோன்றும். இவர் அமர்ந்து எழுந்தவுடன் மரம் மறைந்து விடும்!

பெண்களின் மாதவிலக்குத் துணியை எடுத்து, எது வேண்டுமானாலும் செய்யலாம். எனவே, வெளியே எறியக் கூடாது.

மனச் சுமையைத் தாங்கிக் காக்கும் மகத்தான சித்தமாமுனி!

குறிப்பாக, நோஞ்சானாக இருக்கும் குழந்தைகள், சவலைப் பிள்ளைகள், மூளை வளர்ச்சி இல்லாதவர்களைக் கூட்டிக் கொண்டு, எண்ணற்ற பெற்றோர்கள் இவரிடம் வந்திட, அவர்களிடம் தெய்வீக விஷயங்களை உரையாடிய வண்ணம், கூடவே கிரிவலம் வந்து, உரையாடலின் ஊடே அவர்களுடைய மனச் சுமைகளைத் தன்னிடம் வாங்கித் தாங்கிடுவார். எனவேதாம் சித்தர்களுக்கே உரித்தான பாணியில் மனம் சுமந்தான் சித்தர் என்ற காரணப் பெயரைச் சூடினார்.

எப்போதும் கிரிவலம் வந்த வண்ணமே இருக்கும் மனம் சுமந்தான் சித்தரின் தரிசனம் காணுதற்கு அரியது என்றாலும், தினந்தோறும் சந்திர ஹோரை நேரத்தில், தாமே வெளிவந்து மக்கள் புழங்குகின்ற இடத்தில் உலா வருவார். சந்திர ஹோரை நேரத்தில் இவரைத் தரிசித்துத் தங்கள் மனக் குறைகளை எடுத்துச் சொல்வோருடைய மனச் சுமைகளை எல்லாம் சித்தர்பிரான் தன்னுள் ஏற்று அவர்களுக்கு மன நிம்மதியை அளித்திடுவார்.

மனமடங்க வழிகாட்டும் மாமுனிச் சித்தர்!

எவ்வளவு சோக நிகழ்ச்சிகளாக இருந்தாலும் மிகவும் சாந்தமாக, பொறுமையாக நிதானமாகக் கேட்டு, வந்தவருடைய கண்களுக்குள் ஊடுருவி நோக்கி, பின் மலையை நோக்கிக் கை தொழுது தரையில் வீழ்ந்து நமஸ்கரிப்பார். இது நிகழ்ந்த உடனேயே, குறைகளைச் சொல்லிய அடியார்களுடைய மனபாரம் இறங்கி, நிம்மதியும் சாந்தமும் ஏற்படுவதை உணர்வர்! இதன் பிறகு அவர் உருவம் மறைந்து வேறு பகுதியில் தென்படுவார்!

சுவாமிக்கு ஒரு அடி தள்ளியே தீபம், சூடம் ஏற்ற வேண்டும். காம்பவுண்ட் சுவரில், கதவில் சுவாமி படம் மாட்டுவது தவறு.

பலரையும் சில சைகைகளாலும், வரைந்தும், குறித்த சில அருணாசல மலை தரிசனப் பகுதிகளுக்கு வரச் செய்வதும் உண்டு. இவர்கள் அங்கு செல்லும் முன்னரேயே, மனம் சுமந்தான் சித்தர் அங்கு மலை தரிசனத்தை வணங்கிக் கொண்டிருப்பார். நல்ல உரையாடல்களாலும், மௌன மொழியாலும் அளப்பரிய அனுகிரகங்களைப் பெற்றுத் தந்த சித்தர், இன்றும், திருஅண்ணாமலையில் பௌர்ணமி அன்று சந்திர ஹோரை நேரத்தில், சூட்சும வடிவிலும் கிரிவலம் வந்து சந்திர லிங்கப் பகுதி, சந்திர மகாலிங்க தரிசனப் பகுதி, சந்திர மௌளீஸ்வர தரிசனப் பகுதிகளில் அருள்பவர். இவரே நடப்பு சுபானு ஆண்டின் பங்குனி மாத சிவராத்திரி நாளில் தூல வடிவில் அருணாசல கிரிவலம் வந்து அருள்கின்றார்.

தினமுமே திருஅண்ணாமலையில் கோடானு கோடி மகரிஷிகள், சித்தர்கள் வலம் வரினும், சற்குருமார்கள் மூலமாகக் குறித்த சிலருடைய மகாத்மியங்கள் தாம் விளக்கப்படும். பாக்யம் உள்ளோர்க்கு இம்மாத சிவராத்திரி கிரிவலத்தில் இவருடைய தரிசனம் கிட்டும். பல வடிவங்களில் வரும் இவருடன் பேசும் வாய்ப்பு அல்லது அருகில் செல்லும் பாக்யம் கிட்டினாலே போதும், மனச் சுமை கண்கூடாகத் தணிவதை உணரலாம்! ஒரு மஞ்சள் பையில் நவதானியங்கள், கேழ்வரகு போன்ற தானிய மணிகளைச் சுமந்து,

கோடி கோடி மகாதானாத் கோடி கோடி மஹாவ்ரதாத்
கோடி கோடி மகா யக்ஞாத் பரா ஸ்ரீபாது ஸ்ம்ருதி:
கோடி கோடி மந்தர ஜபாத் கோடி தீர்த்தா வகாஹநாத்
கோடி கோடி தேவார்சநாத் தேவி பரா ஸ்ரீபாதுகா ஸ்மிருதி:

இராகு காலத்தில் அப்பிரதட்சிண கிரிவலம் வருவது நல்லது. கிரகண நேரங்களிலும் வரலாம். மனைவியோடு சண்டை போட்டு இருந்தால் வரலாம். கோர்ட் வழக்கு தீர, செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் கிரிவலம் வரலாம்.

தமிழில்:

கோடி தான, கோடி விரத, கோடி கோடி மந்திரம்
கோடி ஹோம, கோடி தீர்த்தக் கோடி கோடி தியானமாம்
கோடி கோடியாய்க் குவிந்தும் குருவிற்கீடு இல்லையே!
ஓடி, ஆடி, பாடித் தேடி குருவின் பாதம் நாடுவீர்!

- என்ற மந்திரத்தை ஓதியவாறு, அருணாசல வலம் வந்து, தானியங்களை ரவைகளாக்கி பட்சிகள், கோழி, சேவல், மயில், எறும்புகளுக்கு அவரவர் ஊர் ஆலங்களில் இட்டிட, மன வேதனைகளுடன் வாழ்வோருடைய வருத்தங்கள் தணிய வழி பிறக்கும்.

பிள்ளையார் பிரதிஷ்டை

பிள்ளையார் மற்றும் தெய்வ மூர்த்தி பிரதிஷ்டை

ப்ளாட் வகை அடுக்கு மாடிக் கட்டிடங்கள் பெருத்து வரும் இக்காலத்தில், மிக அருகில் உள்ள பழமையான, பாடல் பெற்ற ஆலயங்களுக்கு தரிசனத்திற்காக செல்கின்ற தினசரிக் கடமை மறந்து (மறைந்து), அவரவர் அடுக்கு மாடித் தரைதளத்திலேயே, சின்னஞ்சிறு பிள்ளையார் சந்நதியை எழுப்பி வைத்து விடுகின்றனர். இதற்கும் முறையாக தினசரி பூஜைகளை ஆற்றுவது கிடையாது.

கட்டை விரல் அளவிற்கு மேல் உள்ள எந்தத் தெய்வ மூர்த்திக்கும், தினசரி, குறைந்தது ஒரு வேளையேனும் முறையான பூஜைகள் நிகழ்த்துதல், நைவேத்யம் படைத்தல் வேண்டும். மேலும் பல முச்சந்திகளிலும், ப்ளாட்டுகளில் காம்பவுண்ட் சுவர் வெளியிலுமாக, ஒரு பிள்ளையாரை வைத்து விட்டு அவர் திருஷ்டியை நீக்கிடுவார் என்று சர்வ சாதாரணமாக எண்ணி விடுகின்றனர். இது தவறானது! 800, 1000, 1200 சதுர அடிகள் என்று லட்சக் கணக்கில் பணத்தைக் கொடுத்து ப்ளாட்டை வாங்குபவர்கள், தரைத் தளத்தில், பிள்ளையாருக்காகப் பத்து சதுர அடி கூட வைப்பதற்குத் தயங்குவது மிகவும் வேதனைக்குரியது. மேலும் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்வதற்கு முன், குறைந்த பட்சம் ஒரு மண்டலமாவது (48 நாட்கள்) பலவிதமான திரவிய, தைல வாசங்களை அளிக்க வேண்டும். அதாவது, புதிதாகக் கல்லில் வடிக்கப் பெற்ற பிள்ளையார் அல்லது எந்த தெய்வ மூர்த்தத்திலும்,

வெள்ளெருக்கு விநாயகருக்கு செம்பருத்தி மலர் சிறப்பானது. வடக்கு திக்குப் பார்க்க வைக்கவும். அரைத்த சந்தனம் இட்டு, அடுத்த நாள் எடுத்து கஜானாப் பெட்டியில் வைத்தால், பணம் விருத்தி அடையும். குழந்தைகளுக்கு வைத்தால் படிப்பு வளரும். விநாயகர் அகவல் அல்லது விநாயகர் கவசம் மொத்தம் 7 முறை படிக்க வேண்டும். ( காலை – 3 முறை, மாலை – 3 முறை, இரவு – 1 முறை)

1. கல்லில் உள்ள புவி தோஷங்கள், கல் சாபங்கள், தவளைக் குற்றங்கள், நீர்ச் சுழல்கள், கோட்டுப் பிழைகள் போன்றவை அகல்வதற்கும்

2. பிள்ளையார் அல்லது தெய்வ வடிவு பலவிதமான அபிஷேக ஆராதனைகளையும், திரவியங்களையும் ஏற்று தெய்வீக சக்திகள் பரந்து நிரவி, நன்கு பரிணமித்து, பரிமளித்துப் பூரணம் பெறுவதற்கும், நெல் வாசம், அரிசி வாசம், தான்யங்கள் வாசம், நவதான்ய வாசம், பசு நெய் வாசம், வெண்ணெய் வாசம் போன்று நெல், அரிசி, நெய் வெண்ணெய் போன்றவற்றில் பிள்ளையாரையும், அவருடைய வாகனத்தையும் முழுமையாக அமிழ்ந்து வைத்திட வேண்டும்.

தேன் வாசம் என்றால் பிள்ளையார் முழுமையாகத் தேனில் இருக்க வேண்டும். பொரி, அவல் வாசம் என்றால் பிள்ளையார் மூர்த்தம் நிரம்பும் அளவிற்கு ஒரு கூடையிலோ, பாத்திரத்திலோ, பொரி, அவல் தான்யங்களை நிரப்பி வைத்திட வேண்டும். இவ்வாறாக, பஞ்சாமிர்த வாசம், எள் வாசம், காய்கறிகளை முழுமையாக நிரப்பிக் காய்கறிகள் வாசம், கனிகள் வாசம், மூலிகைப் பொடிகள் வாசம், அச்சு வெல்ல வாசம், சர்க்கரை வாசம், கல்கண்டு வாசம், கரும்புத் துண்டுகள் வாசம், ஏலக்காய் வாசம், ஜாதிப் பத்திரி, ஜாதிக்காய், புனுகு, ஜவ்வாது, பாதாம் பருப்பு போன்ற வாசங்களிலும் அந்தந்த திரவியத்தில் பிள்ளையாரை முழுமையாக வைக்க வேண்டும்.

3. அரிசி அன்னம், கேழ்வரகு அன்னம், கோதுமை அன்னம் போன்ற சாதங்களின் வாசம், விபூதி, குங்குமம், மஞ்சள், செந்தூரம் ஆகியவற்றிலும் தனித்தனியாகப் பிள்ளையார் மூர்த்தி வாசத்தை நிறைவேற்ற வேண்டும். துளசி, வில்வம், அருகம்புல்,வன்னி, வேம்பு ஆகியவற்றின் இலைகளைப் பரப்பிய புண்ணிய விருட்ச வாசங்களும் உண்டு. மா, பலா, வாழை முக்கனி வாசம், மிளகு வாசம், அனைத்து வகை நறுமண புஷ்பங்கள் வாசமும் ஆற்றுதல் சிறப்பானது. மருதாணித் தைலம், செம்பருத்தித் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம், பொன்னாங்கண்ணித் தைலம், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், நீலிபிருங்காதி (நெல்லிக்காய்த் தைலம்), நெல்லிக்காய் வாசம், பஞ்சகவ்ய வாசம் (பசு நெய், பசுந் தயிர், பசும்பால், புனிதமான கோமேயம் – பசு மூத்திரம், பசுஞ்சாணி ஆகிய ஐந்தும் சேர்ந்தது), பசும்பால் வாசம், பசுந்தயிர் வாசம், பல் வகைப் பழச்சாறு வாசம், நன்னாரி, வெட்டி வேர் போன்ற வாசனை வேர்கள் வாசம், மூலிகைச் சமித்துகள் வாசம், தேங்காய்ப்பூ வாசம், இளநீர் வாசம் போன்றவையும் மிகவும் சிறப்புடையன. இவ்வாறாக, பிரதிஷ்டை ஆக உள்ள எந்த ஒரு தெய்வ மூர்த்தியும் 108 வாசங்களில் திளைப்பதால், அவர் மகத்தான வரசித்திகளை அளிக்கும் மூர்த்தியாகத் துலங்கிடுவார்.

இவற்றிற்காகப் பெரிதும் செலவாகுமே என்று என்ணிடாது, பலரும் சத்சங்கமாக இணைந்து இதனைப் பரிபூரணமாக 108 அல்லது குறைந்த பட்சம் 36 வாசங்களையாவது நிகழ்த்திட வேண்டும். அந்தந்த வாசத்திற்குப் பிறகு தெய்வ மூர்த்தி வாசம் செய்த பொருட்களை ஏழைகளுக்குத் திரவியங்களாக அளித்தல், உணவாக்கி அன்னதானமாக அளித்தல், பிரசாதமாகப் பலருக்கும் அளித்தல் போன்றவற்றை நிகழ்த்துவதால், பிரதிஷ்டா மூர்த்திகளுக்கு நல்வர சக்திகள் பிரகாசம் கொள்கின்றன.

வாத்ய வாசம் , சப்த வாசம் என்பதாக பிரதிஷ்டா மூர்த்தி இருக்கின்ற இடங்களில் வாய்ப்பாட்டு, இன்னிசைக் கருவிகள் இசைப்பதால் பிரதிஷ்டா மூர்த்திக்கு சங்கல்ப நிவர்த்தி சக்திகள் மேன்மை கொள்கின்றன, எள் மாவு, கொள் மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, தான்ய மாவு, 108 மூலிகைப் பொடி மாவு போன்றவற்றிலும் பற்று வாசங்களை பிரதிஷ்டா மூர்த்திக்கு அளிப்பதால் நோய் நிவாரண சக்திகள் நன்கு விருத்தியாகின்றன.

இவ்வாறாக, குறைந்தது 108 வாசங்களில், குறைந்தது 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அதற்கு மேலும், இயன்ற அளவேனும் பிள்ளையார் போன்ற தெய்வ மூர்த்தியை நல்வாசமுற வைத்துப் பிறகு பிரதிஷ்டை செய்வதால் அனுகிரக மூர்த்தியாகக் கனிந்து, தெய்வத் திருஅருள் திரளும்.

கும்பாபிஷேகத்திற்கு முன் பாலாலயம் செய்யப்பட்ட தெய்வ மூர்த்திகளுக்கும் இவ்வாறு பலவிதமான வாசங்களை, பற்றுக்களை அளித்து இறையாக்கம் ஊட்டுகின்ற ஆகம முறைகளும் உண்டு. தக்க சற்குருவை நாடி அறியவும். இதற்கான விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் பெற்றிடலாம்.

ஜாதகப் பொருத்தம்

ஜாதகப் பொருத்தத்தில் பிழைகள் வரின் என் செய்வது? ஜாதகம் (பொருத்தம்) பார்ப்பதற்கான தெய்வீக வழிமுறைகள்!

தற்காலத்தில், “நன்கு ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தானே திருமணம் செய்தோம், இப்படி ஆகிவிட்டதே!” என்று வருந்துவோர் பலர் உண்டு. பக்திப் பூர்வமாக ஜோதிடத் தொழிலை, மிக, மிகப் புனிதமாகக் கைக்கொண்டு ஜாதகப் பொருத்தத்தைக் கணிக்கின்ற ஜோதிடர்களும் அருகி வருகின்றார்கள். வாக்குப் பலிதம், ஆழ்ந்த ஜோதிட ஞானம், பல்லாண்டு அனுபவம், ஸ்ரீராமர் ஜாதகம் மற்றும் விநாயகர் ஜாதக பூஜைகளை முறையாக ஆற்றுதல், வியாபார நோக்கில் அல்லாது ஜாதகத்தைப் புனித பொருளாக மதித்தல், ஜாதகக் கணிப்பில் ஈட்டிய பொருளில் கணிசமான பங்கைத் தெய்வீகப் பணிகளுக்கு அர்ப்பணித்தல் – போன்றவை மூலமாகத்தான் ஜோதிட கணிதம் நன்கு பலிக்கலாகும். வெறும் ஏட்டுப் படிப்பும், புத்தக ஆராய்ச்சியும் உதவாது!

ஸ்ரீசீதா ராம ஜாதகம்

ஆனால் சிலருடைய ஜோதிடக் கணிப்பில் உள்ள குறைகளைக் கொண்டு, புனிதமான ஜோதிட வித்யைத் துறையையே ஏசுதல் கூடாது. ஜோதியிடமிருந்து வந்த வித்யையாக இருப்பதால் ஜோதிடம் ஆயிற்று.

ஒருவர் ஜாதகத்தை நன்கு கணிக்கின்றாரா என்பதைச் சாதாரணப் பாமரரால் எப்படி அறிந்து கொள்ள முடியும். “இவர் நன்றாகக் கணிப்பார்” என்று ஒருவரை நம்பி, ஜாதகப் பொருத்தத்தை ஒப்படைத்து, அவர் சொல்வதை நம்ப வேண்டிய நிலைகள் சாதாரணமானவர்களுக்கு நிச்சயமாக ஏற்படும். இந்நிலையில் ஒரு சாதாரண குடும்பத்தவர்கள் எப்படித்தான் ஜாதகப் பொருத்தத்தை நம்பிக் கடைபிடிப்பது?

மனப் பொருத்தம் என்று ஆயிரம் சொன்னாலும், ஜாதகப் பொருத்தம் பார்த்ததுத்தான் திருமணத்தை நிச்சயிக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியமானதே, இதற்காக, பெற்றோர்கள் ஆரம்ப ஜாதகக் கணிப்பு நிலையில் இருந்தே முறையான அறவழி முறைகளைக் கைக்கொண்டால் இவ்வாறு ஜாதகத்தின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையே, அவர்களைத் தக்க நல்ல ஜோதிடரிடம் சேர்க்கும். மேலும் ஜாதகத்தின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை கிரகங்களின் வழிபாடாகவும் ஆவதால் ஜோதிடக் கணிப்பு எப்படியாக இருந்தாலும் இந்த அசைக்க முடியாத, ஆழ்ந்த ஜோதிட நம்பிக்கையே, பல தவறான கணிப்புகளையும் ஒதுக்கி, நன்மை பயக்கும்படி செய்திடவும் வாய்ப்பு உண்டு.

தசாவதார காயத்ரீ மந்திரங்கள்
1, மச்ச அவதாரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
ஜல லலாடாய தீமஹி
தந்நோ மச்சேந்திர ப்ரசோதயாத்
2. கூர்ம அவதாரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
க்ஷீர ஸாகர சமுத்ர தேவாய தீமஹி
தந்நோ கூர்ம தேவ ப்ரசோதயாத்
3. வராஹ அவதாரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
வேத பூமி ரட்சகாய தீமஹி
தந்நோ லக்ஷ்மி வராஹ ப்ரசோதயாத்
4. நரசிம்ம அவதாரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
சிம்ம ரூபாய தீமஹி
தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத்
5, வாமன அவதாரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாமன ரூபாய தீமஹி
தந்நோ த்ரிவிக்ரம ப்ரசோதயாத்
6. ராம அவதாரம்
ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்
7. பரசுராம அவதாரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
பிரம்மச்சர்ய விரத தேவாய தீமஹி
தந்நோ பரசுராம ப்ரசோதயாத்
8. கிருஷ்ண அவதாரம்
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்
9. பலராமர் அவதாரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
ஹலாயுத மஹிமாய தீமஹி
தந்நோ பலராம தேவ ப்ரசோதயாத்
10. கல்கி அவதாரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
அதிகோப பரி ஆசனாய தீமஹி
தந்நோ கல்கி அவதார புருஷ ப்ரசோதயாத்

முதலில் திருக்கணித முறையில் உங்கள் பிள்ளைகளுக்கு ஜாதகக் கணிப்பை மேற்கொண்டிடுங்கள். இதுவரையில் கம்ப்யூட்டர் மூலமாகவே பிற ஜோதிடர்கள், ஜோதிட நிலையங்கள், ஹரோஸ்கோப் சாப்ட்வேர் மூலமாகவோ ஜாதகத்தைச் கணித்தவர்கள் இவற்றைச் சரியானதா என்று எவ்வாறு அறிவது? திருக்கணித முறையில் இருவரிடம் கணித்துச் சரிபார்த்துக் கொண்டிடுக!

பனை ஓலையில் முதல் சுழி

பொதுவாக, ஒருவருடைய ஜாதகத்தை முதன் முதலில் எழுதிட, பனை ஓலையையே பயன்படுத்த வேண்டும். வளர்பிறை, புதன் கிழமை அன்று, புத ஹோரை நேரத்தில் நாலைந்து தளங்களுடன் கொத்தாக வரும் பனை ஓலைக் கொத்தையோ (விசிறி செய்யப்படுவது), அல்லது ஒரு பனை ஓலையிலோ, முழுவதுமாக மஞ்சள் பூசி ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீதாளவனேஸ்வரர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசாகம்பரி தேவியை வேண்டி, ஒரு மண் தாம்பாளம் அல்லது மரத் தாம்பாளத்தில் (தங்கம், வெள்ளித்  தட்டு சிறப்புடையது), நவ தான்யங்களைப் பரப்பி, நவகிரக சக்திகளை வேண்டி, இதன் மேல் பனை ஓலையை வைத்து, குறைந்தது மூன்று நாட்கள் பூஜிக்க வேண்டும்.

மூன்று நாள் பூஜையில் ஓத வேண்டிய மந்திரமாவது:

உத்கீத ப்ரணவோத் கீத
சர்வ வேதேஸ்வர:
அட்சர சக்தி நாம சக்தி
அருளும்! அருளும்! அருள்மிகு நாதா!

பிறகு வளர்பிறை புதன் கிழமை, புத ஹோரை நேரத்தில், ஜாதகதாரருடைய பிறந்த நேரம், நாள், இடம் மூன்றையும் ஏற்கனவே மூன்று நாட்கள் பூஜிக்கப்பட்ட பனை ஓலையில் எழுத்தாணியாலோ அல்லது மயில் பீலிகையை நீலம் அல்லது பச்சை நிறை மையில் (இங்க்) தோய்த்து எழுதி இறைவன் முன் வைத்துக் குறைந்தது 21 நாட்கள் நவகிரகத் துதிகளை ஓதிப் பூஜிக்க வேண்டும்.

எழுத்தாணி என்பது மறந்து விட்ட தொன்மையான கலாச்சாரம் என்று எண்ணாது, நன்கு பழுத்த தம்பதிகளை வைத்து, பனை ஓலையில் குறிப்புகளைப் பதித்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறு தாம்பாளத்தில், பழம், பூ, தாம்பூலம் வைத்து நவகிரகத் துதிகளை ஓதியும்,

ஸ்ரீநவசக்தி விநாயகாய நம:
ஸ்ரீநவசக்தி விநாயகரே போற்றி
ஸ்ரீகால பைரவாய நம:
ஸ்ரீகால பைரவரே போற்றி

ஸ்ரீநவ கிரக மூர்த்தயே நம:
ஸ்ரீநவகிரக மூர்த்திகளே போற்றி
ஸ்ரீபித்ரு மூர்த்தயே நம:
ஸ்ரீபித்ரு மூர்த்திகளே போற்றி

-என்று துதித்தும் தினமும் 1008 முறை ஓதி, பனை ஓலைக்குப் பசு நெய் தீபம் காட்டிப் பூஜிக்க வேண்டும். இதன் பிறகுதான் தக்க ஜோதிடர்களிடம் பனை ஓலையை எடுத்துச் சென்று திங்கள், புதன், வியாழன், வெள்ளி நாட்களில், வளர்பிறையில் அந்தந்த நாளுக்கான சுப ஹோரை நேரத்தில் (பகை ஹோரை நேரத்தைத் தவிர்த்து) ஜாதகம் கணித்திட அளித்திட வேண்டும்.

ஸ்ரீஅனுராதா கிரமண சரஸ்வதி

பொதுவாக, திங்கள் அன்று சந்திர ஹோரை, புதன் அன்று புத ஹோரை, வியாழன் அன்று குரு ஹோரை, வெள்ளி அன்று சுக்ரஹோரை நேரத்தில் ஒரு புதுத் தாம்பாளத்தில் அரிசி, நெல் பரப்பி, வெற்றிலை, பாக்கு, நறுமணப் புஷ்பம், தேங்காய் வைத்து, புனிதமான ஜோதிடத்திற்கு மதிப்பளித்து ஜோதிடரிடம் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஜோதிடரும் அவரவருடைய குரு அளித்த முறையில் புனிதமான முறையிலேயே தங்களிடம் வரும் ஜாதகத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்துப் பூஜித்துப் பிறகே நல்ல வளர்பிறை சுப ஹோரை நேரத்தில் அந்தந்த ஜாதகருக்கு உரிய லக்ன நட்சத்திரத்திற்குப் பகை இல்லாத நல்ல சுப ஹோரை நேரத்தில் வளர்பிறையில் கணிக்கத் துவங்கிட வேண்டும். கம்ப்யூட்டரில் ஜாதகம் கணிப்பது என்பது அந்தந்த சாப்ட்வேரின் துல்லியமான கணிப்பு முறையைப் பொறுத்ததாகும். கம்ப்யூட்டர் முறையை ஏற்பது தவறில்லை என்றாலும், திருக்கணித முறையில் குறித்தலும், குறித்த கம்ப்யூட்டர் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் மிகமிக முக்கியமானதாகும்.

தவறான முறையில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. ஜாதகம் கணிக்கக் கம்ப்யூட்டரைப் புனிதப் படுத்தும்போது முதலில் முழுமையாக format செய்து, format செய்யும் போது, அகமர்ஷண சூக்த மந்திரம் அல்லது, வேயுறு தோளி பங்கன் தேவார மந்திரத்தை நன்கு சப்தமாக ஒலித்திட வேண்டும்.

வைரஸ் என்பது தீய சக்திகளின் (negative forces) ஆயுதம் என்பதை நன்றாக மனதில் கொள்ளுங்கள். வைரசால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர், தீய அசுர சக்திகளுக்கு ஆட்படுவதால், வைரசை நீக்கும்போது, புண்ணிய தீர்த்தங்களைப் பற்றிய சூக்தங்களை ஓதியும், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய “நீர் பரந்த நிமிர்புன் சடை..” என்று தொடங்கும் தேவாரப் பாடலை ஓதியும், வைரஸ் நீக்கப்பட்ட பின்னர் புருஷ சூக்தம் மற்றும் வரிய மறையார் பிறையார்... என்று தொடங்கும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய தேவாரப் பாடலையும், திவ்ய பிரபந்தத்தில் திருமஞ்சனப் பதிகங்களை ஓதியும், கம்ப்யூட்டரில் அனுராதா க்ரமண சரஸ்வதியின் தாமரைப் பீடமாக உய்த்தும் (wallpaper) வழிபட வேண்டும்.

கம்ப்யூட்டரில் ஜாதகத்தைக் கணிப்போர் கோளறு பதிகம், ஆயுஷ்ய, நட்சத்திர சூக்த, உதக சாந்தி மாமந்திரங்கள், ஔவையார் அருளிய சீதக் களப... என்று தொடங்கும் விநாயகர் அகவல் மந்திரங்கள், மாணிக்கவாசகர் அருளிய திருவுந்தியார் திருப்பதிகம், அகஸ்தியர் நட்சத்திரத் துதிகள் போன்ற துதிகளை ஓதி, தம் குருவை நினைந்து வழிபட்டு, ஜாதகத்தைக் கணிக்க வேண்டும்.

தம்முடைய சற்குரு யார் என்று இதுவரையில் அறிந்திடாத ஜோதிடர்கள், தமக்கு வந்துள்ள ஜாதகங்களை (கும்பகோணம் அருகே உள்ள) இன்னம்பூர் சிவாலய மூலவர் ஸ்ரீஎழுத்தறிநாதரிடம் வைத்துப் பிறகு கணித்திட வேண்டும்.

கும்பகோணம் மகாமகம்

33 கோடி தேவாதி தேவர்கள், 66 கோடி தீர்த்த மூர்த்திகள், 99 கோடி ஹோலிகா மூர்த்திகள் புனித நீராடும் மகத்தான திருநாளே மகாமகத் திருநாள்! பித்ருக்களையும் உய்விக்கும் நன்னாள்! சந்ததிகள் நல்ல தர்ம நெறியில் தழைக்கச் செய்யும் பெருநாள்! கும்பகோணம் மகாமகத் திருவிழா!

குடும்ப ஒற்றுமைக்கு
யாதேவீ ஸர்வ பூதேஷு ஸம்ஸார ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

சிருஷ்டி காலத்தில் இருந்து, அனைத்து ஜீவன்களையும் ஆண்ட தர்மவான்களே மனுக்கள் ஆவர். ரௌச்யக மனு, பௌச்ய மனு, சாட்சுச மனு, அக்னி சாவர்ணி மனு, சூர்ய சாவர்ணி மனு, தாமஸ அனு, ஸ்வாயம்புவ மனு, ஸ்வாரோசிஷ மனு, இந்திர சாவர்ணி மனு, ரைவத மனு, வைவஸ்வத மனு, ருத்ர ஸாவர்ணி மனு, ப்ரம்ம ஸாவர்ணி மனு, உத்தம மனு – ஆகிய 14 மனு தர்மச் சக்கரவர்த்திகள் தாம் இப்பூவுலகை ஆண்ட மிகமிகப் புனிதமான தர்மவான்கள், இவர்களுள் ப்ரம்ம ஸாவர்ணி மனுசக்தித் திருநாளும் மாமாங்க தினத்தன்று கூடி மலர்வதால், மகாமக நாளில், அமாவாசையில், மாதப் பிறப்பில், மாத மக நாளில், ஆண்டு மாசி மக நாளில் 14 மனுக்களுக்கும் மாமாங்கத் திருக்குளத்தில் அர்க்யம் அளிப்பது நாட்டில் தர்மம் செழிக்கச் செய்ய உதவும் மகத்தான சமுதாய இறைப் பணியாகும்.

அனைவரும் மனு தர்மமூர்த்தி வழி வந்தவர்களே!

இப்பூவுலகின் அனைத்து நாட்டு மக்களுமே, 14 மனு தர்மச் சக்கரவர்த்திகளின் வழி வந்தர்வர்களே! தெய்வ கடாட்சம் நிறைந்த 14 மனுக்களும், சிருஷ்டி காலத்தில் இருந்து, இறைவனின் பிரதிநிதியாய்ப் பூவுலகை ஆண்ட காலத்தில், மக்களிடையே எவ்வித ஜாதி, மத, இன, குல பேதமும் கிடையாது. மாதம் மும்மாரி பெய்த தர்மமிகு யுகங்களவை! உலகெங்கும் பல தீர்த்தங்களில், பல கோடிப் புனிதத் தீர்த்தங்கள் நிறைந்த மகாமகப் புனித தீர்த்தத்தைச் சேர்க்கின்றவர்கள் தாம் உத்தம நிலைகளைக் கொண்ட உத்தம மனு தர்மச் சக்கரவர்த்திகள் ஆகின்றனர்.

ஷண்ணாவதித் தர்ப்பண நாட்கள் எனப்படும் வருடத்தின் மிக முக்கியமான 96 தர்ப்பண நாட்களில், 14 மனு சக்திகளுக்கு உரிய நாட்களும் சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தற்போது நாட்டை வழி நடத்திச் செல்லும் அரசியல் துறையைச் சார்ந்த யாவருமே, தினமும் இல்லத்திலும், குறிப்பாக மாமாங்கத் திருநாளிலும், மாத மக நட்சத்திர நாளிலும், ஆண்டுதோறும் மாசி மக நாளிலும், இங்கு கும்பகோணம் மகாமகக் குளத்திலும், புனிதமான 14 மனு தர்மச் சக்கரவர்த்திகளுக்கும் புனிதமான நீரால் மிக மிக எளிமையான முறையில் அன்னதானத்துடன் அர்க்யம், தர்ப்பண அர்க்யம் அளித்து வழிபட்டு வர, தர்மம் தழைக்க இது உதவுவதுடன், தாமும் அரசியலில் நன்கு தார்மீகமாகப் புகழ் பெறவும் நன்கு உதவும் அதியற்புதத் தர்ப்பணப் பூஜையாகும்.

ஆண், பெண், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்ற எவ்வித பேதமும் இன்றி, மக்களிடையே எவ்வித வித்தியாசமும் காட்டாது, மிகுந்த தர்மத்துடன் ஆட்சி புரிந்தவர்களே மனு தர்ம மூர்த்திகள், அனைத்துக் கோடி மக்களின் ஜீவன்களின், நல்வாழ்விற்கான பெரும் பொறுப்பை ஏற்றமையால், எந்த ஒரு மனுதர்ம மூர்த்தியும், ஒரு சிறு தவறைச் செய்தால் கூட, அதுவே மனுதர்ம மூர்த்திக்கு, சங்கல்ப இயற்கையாகவே, பெரும் துன்பங்களாக அமையும் என்ற புனிதமான தர்மநெறிக்குத் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு மகத்தான தர்மசக்திகளாக ஆட்சி புரிந்தவர்களே மனுதர்ம மூர்த்திகள் ஆயினர்.

ஸ்ரீமஹிஷாசுரமர்த்தனி காயத்ரீ
யாதேவீ ஸர்வ பூதேஷு மகிஷாசுரமர்த்தனி ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

இவ்வாண்டு மகாமகத்தின் மற்றொரு விசேஷமான அம்சம் யாதெனில் வாஸ்து நாளும் இதில் சேர்வதாகும். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாமாங்க தினத்தில், மகா மகத் திருக்குளத்திற்குப் புனித நீராடலுக்கு வருவதால், இந்த வாஸ்து நேரத்தில் அனைவரும் புனித நீராடுதல் என்பது பெரிதும் கடினமானதே! அனைத்து ஜீவன்களும் நீராடல் பெற வழிவகை செய்திட வேண்டி, இதனைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்க்க தரிசனமாக உணர்ந்தவரே பிரம்ம சாவர்ணி மனு மூர்த்தி! தாம் மனு தர்ம மூர்த்தியாக ஆட்சியைப் பெறும் முன்னரேயே, பல்லாயிரம் ஆண்டுகள், இதற்காகவே மகாமகத் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றவாறு, ஊண், உறக்கமின்றி, ருத்ர மந்திரங்களை ஓதிப் பெரும் தவம் புரிந்தார்.

பவித்ரமான பதிஷத் ருத்ர மந்திரம்

இதன் பலாபலன்களாக, பதிஷத் ருத்ர மந்திரம் எனும் அரிய மந்திரங்களை வாமதேவ மகரிஷி மூலமாக உபதேசம் பெறும் மகா பாக்யத்தையும் பிரம்ம சாவர்ணி மனு பெற்றார். இதற்கு “பதிஷத் ருத்ர மந்திரம்” என்று பெயர்.

மகாமகத் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு, பன்கோடி முறை ருத்ர மந்திரத்தை ஜபிப்போர்க்கே ஸ்ரீருத்ர கோடீஸ்வரர் தரிசனம் கிட்டும். பன்முறை ருத்ர கோடீஸ்வர தரிசனம் பெறுவோர்க்கு, பதிஷத் ருத்ர மந்திரமானது, கிராத லிங்க மூர்த்தியின் திருக்கண் பார்வையில், வாமதேவ மகரிஷியால் உபதேசிக்கப்படும், பங்க்தீ சந்தஸில் அமைந்து வாமதேவ மகரிஷியை மூலரிஷியாகக் கொண்ட இந்த மந்திரத்திற்கு பதிஷத் மூர்த்தியே தெய்வ மூர்த்தியாவார். தத் எனும் பீஜாட்சர சக்திகளைத் தோற்றுவிப்பவரே ஸ்ரீபதிஷத் ருத்ர மூர்த்தி, ஹ்ராம் பீஜத்தையும், ஹ்ரீம் சக்தியையும், ஹ்ரூம் தேவதா சக்தியையும் கொண்டதே பதிஷத் தேவதா மந்திரம் ஆகும்.

பித்ரு காயத்ரீ
ஓம் ஜீவ நாராயண ஸ்வரூப பித்ரு தேவாய வித்மஹே
வசு ருத்ர ஆதித்ய தேவாய தீமஹி
தந்நோ பித்ரு தேவ ப்ரசோதயாத்

ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ர ஆகிய ஆறு அங்கந்யாச முறைகளைக் கொண்டது. இவை அனைத்தையும் தன்னுள் பதித்துள்ள பதிஷத் ருத்ர மந்திரம் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.

“ஓம் நமோ ருத்ராய பதிஷதே
ஸ்வஸ்திமாம் ஸம்பாரய||”

இவ்வளவு பதிஷத் ருத்ர மந்திர சக்திகள் என்று சொன்னோமே, இது ஆறே வார்த்தைகளுக்குள் அடங்கி விட்டதே என்று எண்ணி விடாதீர்கள். இந்த ஆறு வார்த்தை மந்திரத்தை உபதேசமாகப் பெறுவதற்கே பிரம்ம சாவர்ணி மனு பல யுகங்கள் கழுத்தளவு நீரில் மகாமகத் திருக்குளத்தில் தவம் புரிந்தார்! அந்த யுகச் சுபானு ஆண்டில் வாஸ்து நாளுடன் கூடிய மகாமக நாளில், இங்கு தோன்றுகின்ற மாமாங்க அமிர்த சக்திகள் அனைத்து உலக மக்களும் நீராடிப் பயன்பெறும் வகையில் அமைய வேண்டுமல்லவா, இதற்காகத் தானே இப்பெருந்தவம்!

ஒரு மண்டல காலம் அமிர்த சக்திகள் பொழிவதாம்!

துவாதச பித்ரு படிக்கட்டு மந்திரம்
யாதேவீ ஸர்வ பூதேஷு ஸகஸ்ர பாதுகா ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநமஹ

மாமாங்க அமிர்த சக்திகளை அனைவரும் பெற்றிட, மாமாங்க தினத்திலிருந்து, ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) அத்திருக்குளத்தில் இவ்வமிர்த சக்திகள் திளைத்து நிரவிட வேண்டும் என்று பிரம்ம சாவர்ணி மனு வரம் பெற்ற நாளும் இதுவேயாம். எனவே, இந்த நல்வரத்தைப் பெற்றுத் தந்த பிரம்ம சாவர்ணி மனுவிற்கு மாமாங்க தினத்திலோ அல்லது இதனை அடுத்து வரும் ஒரு மண்டல (48) நாட்களில், நீரைக் கைகளில் ஏந்தி, குதிகாலில் நின்று, குளத்திலே நீரை வார்த்து அர்க்யம் அளிப்பதுடன்

“ஓம் நமோ ருத்ராய பதிஷதே
ஸ்வஸ்திமாம் ஸம்பாரய||”

என்று ஓதி நீராடுதலும், தலையில் நீரை ஸ்பரிசித்துக் கொள்தலும் மிகவும் விசேஷமானதாகும்.

இச்சேவைகளை ஆற்றுவீரே!

வசதி இன்மை, ஆரோக்யமின்மை, நெடுந் தொலைவு, கர்ப்பம் தாங்குதல், முதுமை போன்ற முக்கியமான காரணங்களால், மகாமகக் குளத்தில் நீராட இயலாதவர்களுக்கு, தீர்த்தத்தை ஒரு சிறு குவளையில் அல்லது கண்ணாடி பாட்டிலில் (எவர்சில்வர், பிளாஸ்டிக்கைத் தவிர்க்கவும்) அமிர்தப் பிரசாதமாக எடுத்துச் சென்று, பதிஷத் ருத்ர மந்திரத்தை ஓதி, அளித்து அதை ஆலயம், வீடு, கிராமம் முழுவதும் தெளித்தலும் சிறப்பானதாகும்.

Dead Sea அல்ல, அல்ல! லவணகுணக் கடல் இதுவே!

அம்மான், ஜோர்டான் நாடுகளை ஒட்டியுள்ள Dead Sea என்று தற்காலத்தில் மிக மிகத்  தவறாக அழைக்கப்படும் மரணக் கடல் (சாவுக் கடல்), ஒரு தவறான அடைமொழியே! இவ்வகையில் இங்கு எழுதுவதும் கூடத் தவறானதே! ஆனால் நீங்கள் இந்தக் கடலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பலரும் பூகோளப் பூர்வமாக அறிந்ததை இங்கு அளிக்கின்றோம். லவணகுண சமுத்திரம் என்று இக்கடலை, அழைப்பதே சிறப்பானது. அரிய பல லவண கடாட்ச மந்திர சக்திகள் நிறைந்ததே இந்த லவணகுண சமுத்திரம்.

லவணகுண சமுத்திரம்

ஸ்ரீலவண துர்க்கை உபாசனையில் வல்லவரான வாமதேவ மகரிஷியே இப்பூவுலகில் கழிக்க முடியாத நிலையில் வானத்தில், பூமியில், நீரில் தேங்கியுள்ள பாவங்களை, தீய சக்திகளை, முக்கோணப் பிரிசங்களாக்கி, இந்த லவணகுண சமுத்திரத்தில் நனைத்துச் சுத்திகரிக்கின்றார் அதாவது பல யுகங்களிலும் கழிபடாது தேங்கி நிற்கும் கர்ம வினைகலைக் களைய வல்லதே லவணகுண சமுத்திரமாகும். ஆனால் இதற்கு மாமாங்க மகாமகத் தபோ பலன்களைக் கொண்டிருக்க வேண்டும். இதற்குரிய தவ சக்திகளை, வாமதேவ மகரிஷி பெற்ற திருநாளே, வாஸ்துநாளும், பௌர்ணமியும், பிரம்ம சாவர்ணி மனுவாதி நாளும், ஹோலிகா மந்திரத் திருநாளும் சேர்கின்ற அபூர்வமான மகாமகத் திருநாள். இவை அனைத்தும் கூடி நம் வாழ்நாளில் மாமாங்கத் திருநாளாக அமைவது நமக்குப் பெரும் பேறே!

எனவே இப்பூவுலகிற்கு மகத்தான இறைச் சமுதாய நற்பணியை ஆற்ற விரும்புபவர்கள், மகாமகத் திருமண்டல நாட்களுக்குள் (48 நாட்கள்) இப்புனித நீரைச் செப்புப் பாத்திரம், வெள்ளி அல்லது தங்கப் பாத்திரம், மரப் பாத்திரம், கண்ணாடிப் பாட்டிலில் (எவர்சில்வர், இரும்பு, ப்ளாஸ்டிக் பாத்திரத்தைத் தவிர்க்கவும்) எடுத்துச் சென்று, லவணகுண சமுத்திரத்தில் (தற்போதைய Dead Sea), இயன்றால் கோதூளி லக்ன நேரத்தில் (காலையில் பிரம்ம முகூர்த்தத்திற்கும், சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட விடியற்காலையில் பசுவிடம் பாலைக் கறக்கின்ற மிக மிகப் புனிதமான நேரம்), சேர்க்கின்ற நற்கைங்கர்யமானது, இப்பூவுலகில் பரவி வரும் விஷத்தனம் நிறைந்த கர்ம வினைகளைக் களைவதற்கும், வன்முறைத் தீய சக்திகளை மாய்ப்பதற்கும், கழிப்பதற்கும் மிகவும் உதவும்.

அறியாமலும் தவறு செய்யாதிருக்க…
வா வா ஜெய வேலவா
சிவசக்தி சூலா வா வா
ஓம் அரஅர சிவசிவ
ஐயும் கிலியும் சௌவும் ஜகத்காரணா
தேவசேனா வள்ளியுடன் வா வா

இவ்வாறு லவணகுணக் கடலில், ஸ்ரீலவண துர்க்கைக்கான கீழ்க்கண்ட மூல பீஜாட்சர மந்திரத்தை ஓதி,

ஸ்ரீலவண துர்க்கா மந்திரம்

ஓம் சிடிசிடி சண்டால்யை
மஹா சண்டால்யை
அமுகம் மே
வசமானய ஸ்வாஹா

கும்பகோணம் மகாமகத் திருக்குள நீரைத் தீர்த்த சங்கமம் செய்விப்பதால், உலக சமுதாயத்திற்குப் பல அற்புதமான நற்பலன்கள், ஆன்மீக ரீதியாகக் கிட்டும். உண்மையில், லவணகுண சமுத்திரத்தில் இருப்பது பரளீய இந்துப்பூ வகையைச் சார்ந்த ஒரு திரவியம் ஆகும். இதனை நன்முறையில் வைத்தியைத் துறையில் பயன்படுத்துவதற்கான லவணாயுர்வேத கஷாய முறைகளும் உண்டு.

இந்த லவணகுண சமுத்திர நீரைக் கிரிஸ்டல்களாக்கி, அக்னி சக்தியை மேம்படுத்தும் மெய்ஞ்ஞான யோக முறைகளும் உண்டு. இவை தக்க சற்குரு மூலமாக அறியப் பெற வேண்டியவை. மேலும் லவணாஸ்திர தனுர்வேத முறையில், கொடிய விஷமுள்ள அம்புகளையும், விஷமற்றதாக்கும் பிரயோக சக்திகள் நிறைந்துள்ளன.

இவற்றைக் கொண்டு தற்போதைய அணு ஆயுதக் கழிவுகளின் கொடிய தன்மையை ஆன்மீக ரீதியாக எளிதில் கழித்து விடலாம். அதாவது தீயவற்றைக் கழிக்கும் இந்துப் பூ சமுத்திரமே லவண குண சமுத்திரம் ஆகும். இதில் கும்பகோண மகாமகப் புனித நீரைச் சேர்க்கும்போது, ஒரு சில துளிகளாக இருந்தாலும் கூட இது லவணகுண சமுத்திரத்திற்குப் பெரும் புனிதத்தைச் சேர்த்துத் தரும் அதிஅற்புத இறைப் பணியாகும்.

நியாயமான சொத்துக்கள் வந்து சேர…
அம் என்னும் மந்திரம்
ஆழ்ந்து அகழ்ந்து
ஐ என்னும் சுருக்கால் சுருட்டி எடுத்து
ஹம் எனும் எழுத்தால் உயிர் ஊட்டி
வம் எனும் எழுத்தால் முடித்து வா வா !
வாலையே வா வா !

உலக சமுதாய நல இறைப் பணியாம்!

வெளிநாடுகளில் வசிப்போரும், இந்த அரிய சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் இத்தீர்த்தத்தைத் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு எடுத்துச் சென்று அட்லாண்டிக் சமுத்திரம், பசிபிக் சமுத்திரம், மத்தியத் தரைக் கடல் மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சி போன்ற பெரிய நீர் நிலைகளில் சேர்ப்பது மகத்தான உலக சமுதாய சேவையாகின்றது.

கடல் நீரிலிருந்தும் மழை உண்டாவதால், பூலோகத்திலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும், மக்களுக்கும், மகாமகத் திருக்குள அமிர்த நீர் அருளும் புண்ணிய வள சக்தியை இவ்வாறு நிரவிடுக! அயல் நாட்டில் வசிப்பவர்கள், தாம் பொருளீட்ட உதவும் சகோதர நாட்டின் சமுதாய நலன்களுக்கு, ஆன்மீக ரீதியாக ஆற்ற வேண்டிய அத்தியாவசியக் கடமைகளுள் இதுவும் ஒன்று.

ஒருதலை சிறந்த சமுதாய சேவையைச் செய்ய விரும்புவோர், இறைவனை வேண்டி, மகாமகத் திருக்குள நீரைப் பிரசாதமாக எடுத்துச் சென்று, தங்கள் பகுதியில் உள்ள ஆறுகள், குளங்கள், கிணறுகள், ஏரி, கடல் போன்ற அனைத்து நீர் நிலைகளிலும் சேர்த்தலால் அரிய நல்வரங்களை, பெரும் புண்ணிய சக்திகளைப் பெறலாம்.

எறும்பு, பட்சிகள் மற்றும் பல ஜீவன்களுக்கும் இவ்வாறு மகாமகக் குளத்தில் நீராடிய பலன்களைப் பெற்றுத் தரும் அரிய சேவையாகவும், இது மலர்கிறது. இப்புண்ணியத் தீர்த்தத்தை உணவில் சேர்த்துச் சமைத்து, ஏழைகளுக்கு அன்னதானமாக அளிப்பதால் பல நல்ல சந்ததிகளை உருவாக்கக் கூடிய நல்சக்திகள் வருங்காலத்தில் உலகெங்கும் நிரவி, உலகளாவிய அமைதியும், சமாதானமும் செழிக்க உதவுகின்றது.

உழைப்புக்கேற்ற ஊதியம் பெற…
கம் எனும் மந்திரத்தால்
வாசியைக் கூட்டி இறக்கி
மாற்றி அமைத்துப் பார்த்து
ஹ்ரீம் எனும் அட்சரத்தால்
ஆழ்ந்து சுவாசித்து
க்லீம் எனும் மந்திரத்தால் ஜபித்திடில்
உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவாய் !

உலக ஜீவன்களின் எண்ணிக்கை

உலக மக்கள் தொகை கூடுவதோ, குறைவதோ கிடையாது! ஜீவ எண் சக்தியை நிர்ணயிப்பவர்களே மாமாங்க தேவதா மூர்த்திகள்!

 மகாமக தேவதா மூர்த்திகளின் மேற்பார்வையில் உலக ஜீவன்களின் எண்ணிக்கை!

மாமாங்கம் எனப்படும் மகாமகமானது, ஜீவசிருஷ்டியுடன் மிகவும் தொடர்புடையது. தற்காலத்தில் மக்கள் தொகை பெருகி வருகின்றது என்று பேசப்படுவதைக் காண்கின்றோம். உலகில் இத்தனை மண் புழுக்கள், இத்தனை மரங்கள், இத்தனை மனிதர்கள், இத்தனை மீன்கள் இருக்க வேண்டும் என்பதைத் தினசரியே நிர்ணயிக்கின்ற மூர்த்தியே பார்த்திப பிரம்ம மூர்த்தியாவார். இவரே மாமாங்க தேவ மூர்த்திகளின் மூலம் ஜீவ எண்ணிக்கைகளைத் திட்டத்துடன் அளிக்கின்றார்.

என்னதான் நம்முடைய விஞ்ஞானம் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக, குடும்பக் கட்டுபாட்டுத் திட்டம், கருச்சிதைவு போன்றவற்றைக் கொண்டு வந்தாலும், இவற்றில் பல பாவச் சுழல்களும், கொடிய கர்ம வினைகளுமே பதிந்திருக்கின்றன. மெய்ஞ்ஞானக் கணக்குப்படி அந்தந்த யுகங்களுக்காக, மனுக் காலங்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள, மனித குலத்தின் எண்ணிக்கை ஒரு போதும் கூடுவதோ குறைவதோ கிடையாது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்ற பொருளாதாரக் கணக்கும் ஆன்மீகத்தில் எடுபடுவதில்லை, எவருக்கு, எவ்வளவு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டால் கருச்சிதைவால் பிறப்பைக் கட்டுப்படுத்துவது போல் தோன்றினாலும், ஒரு தம்பதியருக்குக் குழந்தைப் பிறப்பு  தடைப்பட்டதாக, வெளிப்படையாகத் தோன்றினாலும், ஒரு தம்பதி பூவுலகில் எவ்வளவு குழந்தைகளைப் பெற வேண்டுமோ, அவற்றை இப்பிறவியிலும், எதிர் வரும் பிறவிகளில்  பெற்று நிறைவு செய்தால்தான், பிறவித் தளை சற்றே அகலும். உலகின் பல புண்ணிய மதங்களும் குழந்தைப் பிறப்புத் தடுப்பை ஏற்பதில்லை. இதனைப் பெரும் பாவச் செயலாகவே அவை கருதுகின்றன.

புத்தி, புகழ், பலம், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை இத்தனையும் வேண்டுமா? இவை அனைத்தும் ஸ்ரீஆஞ்சநேயரிடத்தில் பூரணமாய் இருக்கிறது. அவரைத் தொழுங்கள், இவை பெறலாம், இதற்கு உரித்தான மந்திரம் இதோ…
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத் வம்ச
அனுமத் ஸ்மரணாத் பவேத்

விஞ்ஞான முறையில் ஆணா, பெண்ணா என்று அறியும் முறையைச் செய்து பெரும் கர்ம வினைகளுக்கு ஆளாகாதீர்கள். வருவதை ஏற்போம் என்ற மனக் கட்டுப்பாடு, மனோ வைராக்யம் ஒவ்வொரு தம்பதியிடமும் மிளிர வேண்டும். நம் முன்னோர்கள், நிறையக் குழந்தைகளுடன் குறைந்த, நடுத்தர வருமானத்துடன் மன நிறைவுடன் வாழ்ந்ததை நாம் நன்கு அறிவோம்.

அக்காலத்தில் 10, 15 குழந்தைகள் நிறைந்து இருந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை நிகழும் இல்லத்தில், ஒரு நாளில் சேர்ந்த குப்பையை விடத் தற்காலத்தில் மூன்று, நான்கு பேர்கள் மட்டுமே வசிக்கும் ப்ளாட்டில் ஏற்படும் குப்பைகள் பன்மடங்காகப் பெருகி விட்டன. பல புதிய விஞ்ஞான முறைக் கண்டுபிடிப்புகளால் இல்லறப் பணிகள் எளிமையாக்கப்பட்டவை போல் தோன்றினாலும், உண்மையில் வீட்டுக் காரியங்களினால் பெண்களுக்குக் கிட்டிய யோகப் பயிற்சிகள், மன சாந்தம், கைகளின் நாளம் மற்றும் ரேகை விருத்திகள் போன்றவையும் தற்போது மறைந்து விட்டன. நிறைய குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கித் திருமண வாழ்வை அளித்திடுவதும் மகத்தான இல்லற யோகங்களுள் ஒன்றாகும்.

சிருஷ்டிகா முகூர்த்தம்

சித்தர்களுடைய ஆதி கிரந்தங்களில், சிருஷ்டியின் எண்ணிக்கை முறை பற்றி நன்கு விளக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் இதனை சூக்குமமாக உணர்த்துபவைதாம் கந்தாயக் கணக்குகள், கிரக பீடாதிபத்யம் எனப்படும் ராஜா, மந்திரி, சேனாதிபதி, அர்க்யாதிபதி, தான்யாதிபதி, சஸ்யாதிபதி, ரசாதிபதி, மேகாதிபதி, நீரஸாதிபதி போன்ற கிரக அதிபதித்துவங்கள் ஆகும். மேலும் மகர சங்கராந்திப் பலன்களில் மகர சங்கரமணத்தின் சில அம்சங்களும் ஜீவன்களின் எண்ணிக்கையைக் குறிக்க வல்லன. மேலும் மத்யம, நிஜ, ராகு, கேது கிரகங்களின் ஸ்புட விஷயங்களும் ஜீவன்களின் எண்ணிக்கையைக் குறிப்பனவாகும்.

ஒவ்வொரு தமிழ் ஆண்டின் சிருஷ்டிகா முகூர்த்தம் அமைகின்ற நாட்களின் லக்ன துருவங்களைக் கூட்டிக் கழித்தும், ஜீவன்களின் எண்ணிக்கையை அறிகின்றோம். நட்சத்திரக் கந்தாயங்கள், ஆதார விரயங்கள், சுக பாக்ய நிலைகளைக் குறித்துத் தந்தும் ஜீவ எண்களை அறிவதற்கும் உபயோகம் ஆகின்றன. சூரிய கதியை ஒட்டி நட்சத்திராதி பலன்களைத் தருகின்ற நேத்திர ஜீவன் அம்சங்களை பஞ்சாங்கத்தில் 0, 1 கால், அரை ஆகிய பஞ்சாதி அம்சங்களை குறித்து இவற்றின் மூலமும், காக்கை, குருவி, கால்நடை போன்ற ஜீவன்களின் எண்ணிக்கையையும் நன்கு அறிந்திடலாம். கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்ச அங்கங்களில் (பஞ்சாங்கம்), கரணமானது திதியில் பாதி காலமாக இருப்பினும், பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரம், வனிஜை, பத்திரம் ஆகிய ஏழு கரணங்களும் திரும்பத் திரும்ப வந்து, இதன் பிறகுதான் சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய ஸ்திர கரண நாட்களின் அம்சங்களை வைத்தும் இத்தனை குருவிகள், இத்தனை ஒட்டகங்கள், இத்தனை தாமரைக் கொடிகள், இத்தனை மனிதர்கள் என்று துல்லியமாக ஜீவ எண்ணிக்கையைக் கண்டிடலாம். எனவே இவற்றின் மூலமாக ஜீவன்களின் எண்ணிக்கை அதாவது மக்கள் தொகை மகாமகதேவதைகள் வழிபடும் காலபைரவ லோகத்தில் பார்த்திப பிரம்ம மூர்த்தியால் நிர்ணயிக்கப்படுகின்றது.

மங்களம் நிலைக்க வழி
இடியாப்ப சித்த ஈசருக்கு வெற்றி தந்தா அங்காளி !
சகலகலா வல்லியான அங்காளி !
படிப்படியாய் ஞான ஜோதியைக் காட்டிய அங்காளி !
சுத்த பிரம்ம சக்தியான அங்காளி !
வாழ்வில் நல்அடியெடுத்து வைத்து அருளிடும் அம்மா அங்காளி !
எங்கள் அன்னை தன்னைப் போற்றி செய்துமே !
இன்ப நல் மடியெல்லாம் நல்வரங்கள் குவியுமே !
மங்களங்கள் பொங்கி வந்து கூடுமே !

சர்வே ஜனாஸ் சுகிநோ பவந்து

விஞ்ஞான மருத்துவ முயற்சியால், ஜீவப் பிறப்பு தடைபடுவதாகவோ, நிறுத்தப்படுவதாகவோ தோன்றிட்டாலும், உண்மையில் இது இவ்வாறு நிகழ்வதில்லை, இவ்வகையில் கட்டுப்படுத்தப்பட்ட பிறப்பு. இதே பிறவியிலோ, ஏனைய பிறவிகளிலோ பெற வேண்டிய குழந்தைகளைப் பெற வைத்து நிவர்த்தியாகிவிடும்.

எனவே ஆன்மீகத்தில் மனித ஜீவன்களின் பிறப்பைச் செயற்கையாகத் தடை செய்ய முயலும் கருக்கலைப்பு போன்றவற்றை ஏற்பதில்லை. “சர்வே ஜனாஸ் சுகிநோ பவந்து” என்ற வாக்கியத்தின்படி, அனைத்து உயிரினங்களும் சகோதரத்துவத்துடன் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்ற கடமை மனித குலத்திற்கு இருக்கும்போது, தன்னிடமே, தன் வீட்டிலேயே ஜீவப் பிறப்பிற்குத் தடைக் கல்லாக நின்றால் இதனால் விளையும் கர்மச் செயல்களை என்னென்று சொல்வது?

நம்பிக்கையில் மாசு படாமல் தடுக்க வழி இதோ...
பயோ நதி தீர நிவாஸ லிங்கம்
பாலார்க்க கோடிப் பிரதிமம் த்ரிநேத்ரம்
பத்மாஸநே நார்ச்சித திவ்ய லிங்கம்
விந்தாமஹே மார்க்க சஹாய லிங்கம்
           (சுப்பிரமணிய தீட்சிதர் அருளியது)

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்!

கலியுக மக்களின் கர்ம வினைகள், மது, புகைப் பிடிப்பு, முறையற்ற காமத் தீயொழுக்கங்கள், ஏமாற்றுதல், பிறர் சொத்தை அபகரித்தல், குரு துரோகச் செயல்கள் போன்றவற்றால் மலை போல கர்மங்களைப் பெருக்கிக் கொள்வதால், பல சந்ததிகளினரும் பல நற்காரியங்களைச் செய்தால்தான் பாவ மூட்டைகள் கழியும் என்ற நிலை உலக சமுதாயத்திற்கு ஏற்பட்டு வருகின்றது.

“மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்!” என்ற நல்ல சொல்வழக்கும், ஜீவன்களின் பரிபாலன மேன்மையைத்தான் குறிக்கின்றது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலே வியப்புடன் பார்க்கும் நிலை கலியுகத்தில் தோன்றி இருப்பது வேதனைக்குரியது. உண்மையில் ஒவ்வொரு குழந்தையையும் வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்வித்து, தங்கள் கடமைகளைப் பெற்றோர்கள் முறையாக நிறைவேற்றும் போது, பெற்றோர்களின் பெரும்பாலான கர்ம வினைகள் தார்மீகமாக நியாயமான முறையில் கழிந்து விடுகின்றன. இதிலும் பெண் குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குத் திருமணம் செய்வித்து, குழந்தைப் பேறு போன்ற பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றும் போது, பல பிறவிகளில் மெல்ல மெல்லக் கழிய வேண்டிய கர்ம வினைகள் ஒட்டு மொத்தமாகக் கழியும் அற்புதத்தை இறைவன் நிகழ்த்துகின்றான்.

எனவேதான் திருமணத்தைக் கன்னிகாதானம் என்று புனிதப்படுத்தி, அன்னதானத்தை விடப் பன்மடங்குத் தெய்வீக சக்திகளை இறைவன் இதற்கு அளித்துள்ளார். காரணம், புனிதமான கன்னிகாதானத்தில் உற்பவிக்கும் அன்பின் புனிதம் மூலமாகவும் பல அற்புதச் சந்ததிகள் மூலமாகத்தானே இறைமையை இப்பூவுலகில் தழைத்திட செய்ய முடியும். எப்பிறவி எடுத்தாலும், மனிதப் பிறவி மூலமாகத்தான் முக்தி மோட்ச நிலைகளை அடைய முடியும். பிரபஞ்சத்தில் எங்கு பிறந்தாலும், நம்முடைய புனிதமான பாரதப் புண்ணிய பூமியில்தாம், இதிலும் தென்னாடுடைய சிவனுக்குரிய தமிழகத்தில் தான் முக்தி மோட்ச நிலைகளை அளிக்க வல்ல பல்லாயிரக்கணக்கான சுயம்பு மூர்த்தித் தலங்கள் நிறைந்திருப்பதால் இங்குதாம் எவ்வுயிரும் பிறப்பிறப்பில்லா நிலையை அடைந்து உய்த்துணர வேண்டும். இதுதானே இப்பூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் இறை நியதி. இந்த நியதியைத் தழைக்கச் செய்வதுதானே உண்மையான மனித லட்சியம். இந்த நியதியை மாற்ற இயலுமா, மாற்றுதலும் கை கூடுமா? நன்கு ஆத்ம விசாரம் செய்து சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பெரும் பேற்றுடையவனாகவே பிறக்கின்றான். ஆனால் கர்ம வினை அழுத்தங்களால், ஆசாபாசங்களால் துன்பங்கள் நேர்ந்திட்டாலும், மிகுந்த மனோ வைராக்யத்துடன் நிலை நின்று, சற்குருவின் திருப்பாதங்களை நாடி வாழ்வது மூலமாகத் தான் இறைப் பேரின்பத்தை உணர முடியும். இதற்கான தெய்வீக வாய்ப்பை, ஒரு மனிதன் எங்கு பிறந்திட்டாலும், எந்த நாட்டில் இருந்திட்டாலும் நிச்சயமாகப் பெற்றிருக்கின்றான். எனவே விஞ்ஞானம் புகட்டும் செயற்கைப் பிறப்புத் தடைமுறைகள் யாவும் தெய்வீகத்தை மாசுபடுத்தும், கர்ம வினைகளின் சுமையைப் பெருக்கி விடும் என்பதை உணர்ந்து, இந்த விளக்கங்களின் மூலமாவது மனிதப் பிறப்பின் மகத்துவத்தை நன்கு உணர்ந்திடுங்கள்.

காமதகனம்

இளைய சமுதாயத்தை காமத் தீயொழுக்க வலையில் இருந்து மீட்டு, நற்பண்புகளுடன் வாழ வைக்க உதவும் பழமையான காமதகனப் பண்டிகை!

இதுவரையில் வாழ்வில் செய்த முறையற்ற காமக் குற்றங்களுக்குப் பரிகாரம் தேட உதவும் காமதகனப் பூஜை!

பிறர் சொத்துக்கு ஆசைப்படுவதும் காமமே! இவ்வாறு பகைமை, குரோதம், கோபம், விரோதம் காரணமாகச் செய்த குற்ற வினைகளாகிய காமங்களும் தீர உதவும் பூஜை!

காமதகன பூஜை என்ற மிகவும் தொன்மையான வழிபாட்டு முறை ஒன்று உண்டு. இந்நாளில் ஆடவரும், பெண்டிரும், நம் கிராமப்புறங்களில்  மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, மயானமோ அல்லது மருத்தி, ஐயனார், மாடன், காடன், சங்கிலிக் கருப்பு, ஒண்டி முத்து, காத்த முத்து போன்ற எல்லை, காவல் மூர்த்தி ஆலயங்களிலோ, சிவாலயங்களிலோ அக்னி பூஜையாக வழிபடுதலே இதன் மகத்துவமாம். இந்நாளில், முறையற்ற காமத் தீய சக்திகளை, அக்னியில் பஸ்ம தகனம் செய்து வழிபடுவர். நாம், ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் பன்முறை வலியுறுத்தி வருவது போல, ஜாதி, மத, குல, இன பேதமின்றி, அனைத்து நாடுகளின் சுபிட்சத்திற்காக வழிபட வேண்டிய இறைலட்சியக் கடமை, புண்ணிய பாரதத்தில் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

உலகெங்கும் வெகு வேகமாகப் பரவி வருகின்ற காமத் தீயொழுக்கங்கள், கொலை, கொள்ளை, வன்முறை போன்ற சமுதாயத் தீயசக்திகளைத் தணித்திடவும், பாரதப் பிரஜைகளாகிய நாம், பல்வேறு இறை வழிபாடுகள், ஆலய தரிசனங்கள், புண்ணிய தீர்த்த நீராடல்கள், ஹோம பூஜைகளைத் தெய்வீகக் கடமையாகக் கட்டாயமாக நிறைவேற்றியே ஆக வேண்டும். தற்காலத்தில் அனைத்து நாடுகளிலும், மக்கள், குறிப்பாக, இளைய தலைமுறையும், கல்லூரி மாணவ சமுதாயமும், பள்ளிப் பருவத்தினரும் அறியாமை மிகுந்த தங்கள் இளவயது காரணமாக, சினிமா, டீவி, தரமற்ற பத்திரிகைகள் மூலமாகப் பலவிதமான காம இச்சைகளுக்கு பலியாகின்றனர். ஆடை அணியும் முறைகளில் பலத்த (அழிவை நோக்கிய) மாற்றங்கள் காரணமாக, காம இச்சையை மனவடக்கம் கொண்டு பண்படுத்த இயலாது, மனித சமுதாயம் தவறான வழிகளுக்கு ஆட்பட்டு, தங்கள் உடலையும், உள்ளத்தையும் மாசு படுத்திக் கொள்ளும் கொடுமையை, வேதனையுடன் நாம் எங்கும் காண்கின்றோம்.

எனவே, வரும் காலங்களில், மனித சமுதாயத்தைத் தீயொழுக்கங்களில் இருந்து காக்கும் ஓர் அருமருந்தாகவும், நம் முன்னோர்களால் கடைபிடிக்கப் பெற்ற ஓர் ஆன்ம சாதனமே, காம தகன பூஜையாம். ஜாதி, மத, இன பேதமின்றி, அனைவரும் தங்கள் ஊர்களில், கிராமங்களில் உள்ள பிள்ளையார், சிவன், பெருமாள், ஆலயங்களில் நிறைவேற்ற வேண்டிய மிக,மிக எளிமையான, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த கூட்டு வழிபாட்டுச் சத்சங்கப் பூஜை இதுவே!

நம்பிக்கை வீண் போகாமல் இருக்க வழி இதோ
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.

இளமையிலேயே வீணாக விந்து விரயம், சகோதர பாவனையில்லாது, கன்னியரைக் காம உணர்ச்சிகளுடன் நோக்குதல், அருவருப்பான திரைப்படக் காட்சிகளைக் காணுதல், ஆபாசமான வெப்சைட்டுகளைப் பார்த்தல் போன்ற தீயொழுக்கச் செயல்களினால், நடப்புக் கலியுகச் சமுதாயம், குறிப்பாக மேல்நாட்டுப் பருவ இளைஞர்கள் தறி கெட்டுத் திசை மாறி, கெட்ட பாதையில் உழல்வதைத் தடுப்பதற்கும், அவர்களை நல்வழிப்படுத்தவும் காம தகன பூஜாசக்திகளே பெரிதும் உதவுகின்றன. எனவே இது உலகளாவிய சமுதாய நலப் பூஜை! இதில் அக்னி பூஜை, வாயு பூஜை, பரவெளி பூஜை, நில பூஜை ஆகிய நான்கும் சங்கமித்து, மனிதர்களின் உடலில் பெரும்பான்மையாக உள்ள ஜலாம்சங்களை, நீராஜன அக்னி சக்தி மூலம் சீரமைக்கின்றது.

ஸ்ரீஅகஸ்திய விஜயம் மார்ச் 2001 இதழில், தொன்மையானதாகி, கலியுக மனித சமுதாயத்தால் தற்போது மறக்கப்பட்டு விட்ட, காமதகன பூஜைக்கான விளக்கங்களை நன்கு அளித்திருந்தோம். நம் நாட்டில், ஒவ்வொரு குடும்பத்தினரும், இக்காம தகன பூஜையைச் சத்சங்கமாகப் பலருடன் ஒன்று சேர்ந்து, ஸ்ரீகாமேஸ்வரர், ஸ்ரீகாமேஸ்வரி, ஸ்ரீகாமகலா காமேஸ்வரி (சென்னை திருவல்லிக்கேணி), மன்மதன் ரதி தேவி தம்பதியர்க்கு இறைவன் காட்சி அளித்த தலம், மன்மத மூர்த்தி சாம்பலாகிய தலம், உத்தம பத்தினியான ரதி தேவி தன் கணவராம் மன்மதனை அரிய தபோபலத்தால் மீட்ட தலம், மன்மதன் ரதிதேவி எழுந்தருளும் தலங்கள், அம்பிகையும் ஈஸ்வரனும் எதிரே அமைந்து (விழுப்புரம் அருகே திருஆமாத்தூர்) தரிசனம் தரும் அற்புதத் தலம் அல்லது சுவாமியும், அம்பிகையும் கிழக்கு, மேற்காக (லால்குடி இறைவன் மேற்கு நோக்கியும் அம்பிகை கிழக்கு நோக்கியும் எழுந்தருளிய தலம்) அல்லது தெற்கு, வடக்காக அமைந்து அருளும் தலங்களில் காமதகனப் பூஜையை ஆழ்ந்த பக்தியுடன் கடைபிடிப்பது மிகவும் விசேஷமானதாம். இவ்வரிய வழிபாடானது, பெண் குழந்தைகளும், ஆண் பிள்ளைகளும் நல்லொழுக்கத்தில் திளைத்து, அமைதியான சாந்தமான வாழ்வைப் பெற நன்கு உதவும்.

உலகெங்கும் பலத்த வன்முறைகள் நிலவுகின்றனவே, உலக சாந்தத்திற்கு நம்மால் உடலால் எவ்வகை நற்சேவையும் ஆற்ற முடியவில்லையே என்று ஏங்குவோர், தங்கள் ஊரில், இவ்வரிய காம தகன பூஜையை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கொண்டாடிட, இதன் பலன்கள் உலகெங்கும் பரவி, தீயோரையும் திருத்தி, நல்வழியில் நடக்கச் செய்கின்ற தேவ சக்திகளைக் கொண்டவையாம்.

காமம் என்றால் முறையற்ற தீய உடல் ஒழுக்கம் என்பது மட்டும் பொருளல்ல. காமம் என்றால் விருப்பங்கள் என்றும் பொருள். தார்மீகமான விருப்பங்களுடன் வாழ்வதே இல்லறமாகும். முறையற்ற விருப்பங்கள் இருந்தால், அவை பேராசை, பகைமை, விரோதம், குரோதத்திற்கு ஆட்படுத்தி விடும். எனவே அதர்மமான, அசத்தியமான, அவலமான, ஆசைகளை பஸ்மம் செய்வதற்கும், முறையற்ற காமத் தீயொழுக்க எண்ணங்களைக் கழிப்பதற்கும் காமதகன பூஜை பெரிதும் உதவுகின்றது.

குழந்தைகள் மனப்பாடம் செய்ய வேண்டிய மந்திரம்
சிவஸ்த்வம் குரு ஸத்வப்ச சக்திஸ் தமேவ
த்வமேவாஸி மாதா பிதா த்வமேவ
த்வமேவாஸி வித்யா த்வமே வாஸி பந்துர்
கதிர்மே மதிர்மே தேவீ ஸர்வம் த்வமேவ

கலியுகத்தில் விஞ்ஞானத்திற்கு மனிதன் ஆட்பட்டு வருவதால், கண்ணால் காண்பதே மெய் என்பதற்கு மனிதன் அடிமையாகி விட்டான். அனைத்திற்கும் ஒரு வடிவமைத்துக் கண்டு அறியும் வழக்கத்திற்கே, மனித மனம் பழகியிருப்பதால், மனதில் உள்ள தீய எண்ணங்களுக்கு எல்லாம் ஒரு வடிவு கொடுத்து, அது மீண்டும் எழா வண்ணம் பல ஆன்மீக சாதனங்களால் அவற்றைப் பஸ்மம் செய்வதும் காமதகன பூஜையின் ஓர் அங்கமாகும்.

தனக்குப் பிடிக்காதவரை உருவகப்படுத்திக் கண்டித்து துணி வடிவை நெருப்பில் எரித்தல் என்ற வகையில் தற்காலத்தில் கொடும்பாவி எரித்தல் என்ற ஒரு தவறான வழக்கம், தவறான அணுகு முறையில் நிலவுகின்றது. ஆனால், தன்னுடைய தூய சரீரத்தின் உள்ளே இருக்கின்ற அசுத்தமான எண்ணங்களை, ஒரு பஞ்ச பூத சக்திகள் நிறைந்த பருத்தித் துணி வடிவில் உருவகப்படுத்தி, ஆன்மீக சாதனங்களின் மூலம், அவற்றைப் பஸ்மம் செய்வதும், அத்தகைய தீய எண்ணங்கள் மீண்டும் உள்ளே புகுந்து கிளைத்து விடாமல் இருப்பதற்கான தற்காப்பு முறைகளில் ஒன்றாகும். இவ்வரிய ஆன்மீக விளக்கத்தின் பால் அமைந்ததும் காமதகன பூஜையாகும்.

சிரசு முதல் பாதம் வரை மனித தேகத்தில் 27 அங்கசாரங்கள் உள்ளன. இவற்றைத் தாம் 27 நட்சத்திரங்களின் பரிபாலனமாக, 12 ராசிக் கட்டங்களுக்குள் ஜோதிட ரீதியாக அடக்கி உள்ளோம். இந்த 27 அங்கச் சாரங்களில், பல நாளங்களில், தீயவகையான காமசக்திகள் குடிபுகுந்து விடும். இவற்றைக் கிரகித்து, வெளியே ஒரு காமதளத் துணி வடிவாக அமைத்து, பல சக்தி வாய்ந்த பஞ்சபூத சக்தி மந்திரங்களை ஓதி, மூலிகைப் புகைச் சாரத்தால், பல அரிய திரவிய மணத்தால், இத்தகைய தீயகாம சக்திகளை பஸ்மம் செய்வதும் காமதகனப் பூஜையின் அம்சங்களில் ஒன்றாகும். உண்மையில் சாம்பிராணி, தூப, பூக்களின் நறுமணங்கள் தீயவற்றை வாயுவாக்னி மூலமாக பஸ்மம் செய்ய வல்லவை!

குழந்தைகள் மனப்பாடம் செய்ய வேண்டிய ஸ்லோகம்
தந்தை மனம் உந்துயர் நந்த இருள் வந்த விரல் நந்தன் மதலை
எந்தை இவன் என்றமரர் கந்த மலர் கொண்டு தொழுநின்ற நகர்தான்
மந்த முழவு ஓசை மழைஆக எழுகார் மயில்கள் ஆடுபொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே!

கழிவு என்றால் மலம் என்ற ஒரு பொருளும் உண்டு அல்லவா! கழிவிலும் சில நல்ல சக்திகள் உருவாகின்றன. ஆனால், ஆன்மீக ரீதியாக இவற்றை அறிந்து கடைபிடித்தால் தான் நன்மை பயக்கும். இல்லையேல், கழிவே, விஷசக்திகளைப் பாய்ச்சி விடும். உதாரணமாக மனித மலமானது, ஒதுக்கப்பட்ட வஸ்துவானாலும், பன்றிக்கும், மலப் புழுக்களுக்கும் உணவாகவும், நன்கு காய்ந்து நல் உரமாகவும் மாறுவதை அறிவோம். பல கால்நடைகளின் மலங்கள் அபூர்வமான மூலிகை சக்திகள், இயற்கை சக்திகள், ஆன்மீகச் சக்திகளைக் கொண்டவையாக விளங்குகின்றன. உதாரணமக, பசுஞ்சாண விராட்டியில் ஏற்படுகின்ற நறும் புகை பரவெளியையும், மனிதனுடைய உடலையும், உள்ளத்தையும் தூய்மை செய்கின்றது. எனவேதான், அனைத்து ஹோமங்களிலும், பசுவிராட்டியை ஆஹூதியாக அளித்து மந்திர சக்திகளை விருத்தி செய்கின்றோம். மேலும் எதை நாம் பசுவின் மலம் என்று நினைக்கின்றோமோ, அந்த பசுஞ் சாணி கூடிய பஞ்சகவ்யமே இறைவனின் அபிஷேகத்தில், தூய திரவியமாக பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம்.

பஞ்சகவ்ய அபிஷேகமானது, அனைத்து இறைமூர்த்திகள், சுயம்பு மூர்த்திகள், உற்சவ மூர்த்திகள், எல்லை தெய்வங்களுக்கும் வாரம் ஒரு முறையாவது, அவசியமானதாக, சத்சங்கப் பூஜையாக நிறைவேற்றுதல் சிறப்புடையது. பன்றியின் மலம் கூட மிகச் சிறந்த நல் உரமாக விளங்குகின்றது. யானையின் மலத்திலிருந்தும், பல கால்நடைகளின் மலத்திலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆட்டுப் புழுக்கையும், மாட்டு மலமும் மிகவும் சக்தி வாய்ந்த நில உரமாகப் பயன்படுகின்றன. பல கால்நடைகளும் மூலிகைத் தளங்களையே, புற்களையே, பொருட்களையே உணவாக ஏற்பதால், அவற்றின் தாவர உணவு ஜீவனமே, மனிதர்களுடைய கர்ம வினைகளைக் கழிக்கின்ற மலக் கர்ம நிவாரணியாகவும் பொலிவுறச் செய்கின்றன.

எனவேதாம் காமதகன பூஜையில் அக்னியில் பஸ்மம் செய்வதற்காகப் பயன்படும் வஸ்திரதளத்தில் (துணியில் வைக்கப் பெற்ற காம பிம்பத்தில்) பசுஞ்சாணி, யானைச் சாணி, ஆட்டுப் புழுக்கை, கழுதை விட்டை போன்றவை இயற்கை திரவியங்களாகக் கொடும்பாளத்தின் வயிற்றுப் பகுதியில் வைக்கப் பெற்று அக்னியில் பஸ்மம் செய்யப்படுகின்றன. வஸ்திர தளத்தின் (துணி வடிவு), தலை முதல் கால் வரை, ஒவ்வொரு பகுதியிலும், பல விதமான திரவியங்கள், மூலிகை தளங்கள், கால் நடைச் சாணி வகைகள் வைக்கப் பெற்று, ஏனைய பகுதிகளில் முழுவதுமாக இயற்கைத் திரவியங்கள் ஆவதால் இது பரவெளியைத் தூய்மைப்படுத்துகின்றது. இதில் எழும் மூலிகை நறுமணப் புகை, நம் உடல் நாளங்களில் சேர்ந்து, முறையற்ற காம மலங்களை, காமத் தீய சக்திகளை பஸ்மம் செய்து விடுகின்றன. பரவெளியில் இது ஆன்மீக சக்தியாக நிலவுவதால் இது நற்பிராண சக்தியாக வாயுவில் கலந்து இளைய சமுதாயத்தையும் நல்வழிப்படுத்த தெய்வீக ரீதியாகவும் உதவுகின்றது.

குழந்தைகள் மனப்பாடம் செய்ய வேண்டிய ஸ்லோகம்
பவாநீ பவாநீ பவாநீ திவாணி
முதாரா முதாராம் முதாயே பஜந்தி
ந சோகோ ந ப்ரபோந ரோகோந ம்ருத்யு
கதாசித் கதாசித் கதாசித் நராணாம்

ஒவ்வொரு மனிதனுடைய தீய எண்ணங்களும் எப்போதும் பரவெளியில் காற்றுப் பைகளாக மிதந்து கொண்டு, தீவினை சக்திகளைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருக்கும். அத்தீவினை எண்ணங்களை, முறையாக பஸ்மம் செய்தால்தான், தூய நற்சக்திகளை ஆக்கப்படுத்தும் ஓஸோன் காற்று மண்டலம் வலிமை பெற்று, பூமியில் ஆரோக்கியம் மலரும். எனவே காமதகன பூஜையும் எந்நாட்டிலும் ஓஸோன் காற்று மண்டலத்தை புனிதப்படுத்தி தூய்மையாக்கும் வழிபாடுகளில் ஒன்றாகும். உண்மையில், ஓஸோன் காற்று மண்டலத்தில், ஆகாய விமானங்கள், ராக்கெட்டுகள், குண்டுகள் ஏற்படுத்தும் ஓட்டைகளும் மனிதர்களின் முறையற்ற காம எண்ணங்கள் ஏற்படுத்தும் ஓட்டைகளும் வெகுவேகமாகப் பரவி, பூமியின் உஷ்ண நிலையையும், பூமிவாழ் மக்களின் ஆரோக்கியத்தையும் மிகவும் பாதிக்கின்றன.

காமதகன பூஜை முறை

இவ்வாறு, மனித உடலில் ஆங்காங்கே தவறான எண்ணங்களாக, ஆசைகளாக, தீராத விருப்பங்களாக தேங்கிக் கிடக்கும் முறையற்ற காம மலக் கழிவுகளை அகற்றி, நல் உரமாக்கி அளிப்பதும் காமதகன பூஜையின் பலாபல அம்சங்களாகும். இதற்காகவே வஸ்திரபாளம் எனப்படும் பருத்தித் துணியில் காம பிம்ப வடிவ அமைப்பை ஏற்படுத்தி, அதனைத் தரவடி மனிதனாக உருவகப்படுத்தி, அந்த வடிவில், 27 இடங்களில், 27 விதமான திரவியங்களை வைத்து, அக்னியில் பஸ்மம் செய்வதே காமதகன பூஜை.

விளக்கு பூஜை ஸ்லோகம்
கீழ்கண்ட மந்திரத்தை மனப்பாடம் செய்து, வெற்றிலையில் விளக்கு வைத்து குங்குமத்தால் அர்ச்சித்தல் வேண்டும்.
புராராதே ரந்த புரமஸி ததஸ் த்வச் சரணயோ:
ஸபர்யா மர்யாதா தரல கரணான மஸுலபா
ததா ஹ்யதே நீதா: சத மக முகா: ஸித்தி மதுலாம்
தவ த்வாரோ பாந்த ஸ்திதிபி ரணி மாத்யாபி ரமரா
விளக்கு பூஜையில் வெற்றிலை மீது விளக்கு வைக்கும்போது வெற்றிலையின் காம்பு கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்,

காமதகன பூஜையில் ஒரு பருத்தித் துணியில் சிரசு, கை, கால்களுடன் மனித வடிவம் அமைக்கப்படும்.

தலைப்பகுதியில் கொப்பரைத் தேங்காய், மாதுளை ஓடு, விளாம்பழ ஓடு!

முகப் பகுதியில் கோதுமை மாவிட்டு, நிறைய கண்களை உடைய மாதுளம்பழம், மூன்று கண்களை உடைய உடைத்த மூடித் தேங்காய்கள், தான்ய மணிகள்!

உளுந்து மணிகளால் காதுப் பகுதி, மஞ்சள் பூக்களால் மூக்குப் பகுதி, கழுத்துப் பகுதியில் வைக்கோல், கருந்திராட்சைப் பழம், அன்னாசிப் பழம்

கைப் பகுதிகளில் அனைத்து வகை சமித்துகள், முந்திரி, புடலங்காய், பிரண்டை, முருங்கைக் காய், நல்ல மரப்பட்டைகள்

நெஞ்சுப் பகுதியில் வில்வப் பழம், வில்வம், துளசி, வேம்பு, அரசு, ஆல் சமித்துகள்

மேல் வயிற்றுப் பகுதியில் யானை, ஒட்டகம், ஆடு, குதிரை, கழுதை, பன்றி இவற்றின் காய்ந்த சாணங்கள், பசு விரட்டி, வைக்கோல்

கீழ் வயிற்றுப் பகுதியில் பருப்புகள், நவதானியங்கள்,

கால் பகுதியில் பார்லி, நிலக் கடலை போன்ற அனைத்துக் கடலை வகைகள், வைக்கோல், மூலிகை சமித்துகள், நவ தான்யங்கள் பாதப்பகுதியில் வெட்டி வேர், நன்னாரி, பரங்கிப் பட்டை

காம தகனப் பூஜையில் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற செயற்கை எரிபொருளை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது. இது சாபங்களையே பெற்றுத் தரும். பசு நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை மட்டுமே தகன பூஜையில் பயன்படுத்த வேண்டும். மேலும் சொக்கப்பானை கொளுத்துவது போல் கண்டவற்றையும் தகனப் பூஜையில் பயன்படுத்தக் கூடாது. மேற்கண்ட இயற்கை திரவியங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பரவெளியை மாசு படுத்தும் வகையில் ப்ளாஸ்டிக், டயர், ட்யூப், ரப்பர் போன்றவற்றைத் தயவு செய்து சேர்த்து விடாதீர்கள்.

காம தகன பூஜை என்பது ஒரு சத்சங்க பூஜையே. இதில் ஜாதி, மத, இன, குல பேதமின்றி அனைவரும் பங்கேற்று ஒரு சமுதாய பூஜையாக நிறைவேற்ற வேண்டும்.

ஆலயமருகே ஒரு சிறு பள்ளம் எடுத்து அடியில் சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி பூசிய 24 செங்கற்களை வைத்து இதில் வஸ்திரபாளக் காம வடிவை வைத்து பசு நெய் வார்த்து ஒரு பஞ்சுத் திரியில் மரக் கரண்டியில் தீபத்தை ஏற்றி மிகவும் பணிவுடன்

கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலையில் துதிக்க வேண்டிய துதி
நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ?
சேவை செய்வோரைத் தடுத்துச் சிரித்தேனோ?
கலந்த சினேகரைக் கலகம் செய்தேனோ?
கருத்து ஒருமித்த குருவைப் பழித்தேனோ?
இரப்போர்க்குப் பிட்சை இல்லை என்றேனோ?
கோள் சொல்லிக் குடும்பம் குலைத்தேனோ?
பணத்தை வேண்டி அலைந்தேனோ?
பாவி பலவும் பேசித் தடுத்தேனோ?
எந்த குற்றம் செய்தேனோ?
எப்படி எல்லாம் திரித்துச் சொன்னேனோ?
அருணாசலா அடைக்கலம் அடைக்கலம்
வழி காட்டுவாய் நீயே !

அக்னிசாரேஸ்வராய வித்மஹே
அக்னிமூலேஸ்வராய தீமஹி
தந்நோ பிரகாசாக்னி ப்ரசோதயாத்

என்ற அக்னி காயத்ரீ மந்திரத்தை அனைவரும் உரக்க ஓதி காம வடிவிற்கு அக்னி மூட்டி அனைவரும் வலம் வந்து வணங்க வேண்டும்.

தமிழில்
பிறைசூடிப் பிஞ்ஞகனாய்
மறை நாலும் மாமலராய்
இறையாளும் ஈசபதி- எம்
குறைதீரும்! காமக் குறை தீரும்!

என்ற துதியுடன் தேவாரம், திவ்ய பிரபந்தம், தேவமொழி மறைத் துதிகளையும் ஓதி வலம் வந்து காமதகனேஸ்வரரை வழிபடவும்.

மன்மத மூர்த்தி காமத்தைப் பெருக்குபவர் அல்ல. நன்முறையில் வாழ்வதற்கு முறையான நல்ல விருப்பங்கள் தேவையே., விருப்பு வெறுப்பு அற்ற நிலை துறவி நிலையாகும். இது அடைவதற்குக் கடினம். அடைவதற்கு முயன்றாலும் தீய காமத்தின்பால் சிக்கினால் பெரிதும் வழுக்கி விட்டு விடும். எனவேதான் இல்லறத்தோடு கூடிய இனிய நல்வாழ்க்கையையே நம் பெரியோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திரைலோக்கி சிவத்தலம்

மன்மத மூர்த்தி விருப்பங்களை முறைப்படுத்தித் தருபவர். எது தர்மமான ஆசை, எது முறையற்றப் பேராசை என்று பகுத்து உணர வைப்பவரே மன்மத மூர்த்தி. பதிவிரதையாகிய ரதி தன் கணவராம் மன்மதனுக்குத் தினசரிப் பாத பூஜை செய்து பதிவிரதா சக்திகளை உலகப் பெண்களுக்கு அளிக்கின்றாள். எனவே அனைத்துப் பெண்களும் ரதி தேவியை வணங்கி பெறுதற்கரிய புனிதமான கற்பு சக்திகளைப் பெற்றிட வேண்டும். இதற்கும் காம தகன பூஜை துணை புரிகின்றது. கணவனும் மனைவியும் புனிதமான அன்புடன் இணை பிரியாது இல்லறம் நடத்திட வேண்டும் என்று விரும்புபவர்கள் தம்முடைய திருமண நாள் மற்றும் வியாழக்கிழமைகளில் திரைலோக்கித் தலத்தில் வழிபட வேண்டும்.

இறைவனுடைய அம்பில் மறைந்த மன்மதனை தன் பதிவிரதத் தன்மையால் மீட்டுத் தம்பதி சகிதம் குருவின் நேரடி தரிசனத்தோடு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசனிடம் ரதி தேவி தம்பதி சகிதம் வரம் பெற்ற திருத்தலமே கும்பகோணம் கஞ்சனூர் அருகே உள்ள – திரைலோக்கி ஆகும்.

இங்கு ரிஷபத்தில் அம்பிகையுடன் இறைவன் அமர்ந்த கோலமும், இடப்புறம் குரு வணங்கி நிற்க முன்னே மன்மத ரதி தம்பதிகள் வணங்கும் அற்புதத் திருக்காட்சி வாழ்க்கையில் பெறுதற்கரியதாகும். வியாழன் தோறும் இங்கு வழிபட்டு அஞ்சலி ஹஸ்தராய் வணங்கும் குரு மூர்த்திக்கு மஞ்சள் பட்டு வஸ்திரம் சார்த்தி, ரிஷபாரூட சிவமூர்த்திக்கு ஆரஞ்சு வண்ணப் பட்டாடை சார்த்தி மன்மதன் ரதி தம்பதி மூர்த்திகளுக்கு நீல நிறப் பட்டாடை சார்த்தி அனைத்து விதமான நறுமணப் பூக்களிலும் 64 பூக்களைக் கொண்டு தாமே மாலையைத் தொடுத்து ரதி மன்மதனுக்கு அணிவித்து ஒரு சேர வணங்குதல் வேண்டும். இதனால் கணவன் மனைவி இடையே உள்ள பிணக்குகள் தீர்வதுடன் அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கையைப் பெறவும் இது உதவும். விதிவசத்தால் விவாகரத்துப் பெற்ற கணவனோ, மனைவியோ இங்கு வந்து வழிபட்டிட திருமண தோஷங்களுக்கு ஓரளவு நிவர்த்தி பெற்றிடலாம். நல்விதி இருப்பின் நன்முறையில் மறுமணம் அமையும்.

இத்தலத்தில் காமதகன பூஜையை ஆற்றுவது இல்லறத்தில் நல்ல ஒற்றுமையைப் பேணித் தரும். மேலும் திருமணமாகிச் சென்ற தன் பெண், பிள்ளைகள் நன்முறையிலே திருமண வாழ்வைப் பெற்றுத் தம்மையும் நன்கு பேணி வாழ்ந்திட இங்கு காமதகன பூஜையை மேற்கொள்தல் சிறப்பானது. பொதுவாக மன்மதனின் உருவம், ரதியின் கண்களுக்குத்  தெரியலாகும் என்ற நியதியானது ரதியின் பதிவிரதைத் தன்மையால் ஏற்பட்டதாகும். ஒரு உத்தம பத்தினித் தம்பதிகளை இப்பூவுலகம் கண்டு வணங்கி பெண்கள் புனிதமான கற்பு நிலையை அடைந்திட வேண்டும் என்று இறைவனே விருப்பத்துடன் காட்சி தந்து அருள்கின்ற தலம்.

கிருத்திகை திரிதினம்

மூன்று நாட்களுக்கு கிருத்திகை நிரவும் மிகவும் அபூர்வமான நாள்!

சகஸ்ர கிருத்திகா தூல பூஜை பலன்கள் நிறைந்ததாய் அதாவது ஆயிரம் கிருத்திகை விரத சக்திகளைத் தரும் அதிஅற்புத கிருத்திகை திரிதின நாள்! உத்தம மனுச் சக்கரவர்த்தி மூர்த்தி அவதரித்த திருநாள்!

ஒவ்வொரு திதிக்கு ஒவ்வொரு பெயருடன் பல மகத்தான திதி சக்திகளும் உண்டு. இவ்வழிபாடே மிகவும் சக்தி வாய்ந்த திதி நித்யா வழிபாடாகும். நம் உடலானது, பூமித் தன்மை, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளினால் ஆனது போல, இந்த பஞ்ச பூத உடலின் ஜீவனமாகிய வாழ்க்கை நிலையும், கிழமை, நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய பஞ்ச கால சக்திகளுடன் இணைந்ததாய் அமைந்துள்ளது. திதி ஒவ்வொன்றும் எத்தகைய பலாபலன்களைத் தரும், எந்த வாழ்க்கை நிலைகளுடன் ஒவ்வொன்றும் சம்பந்தப்பட்டது என்று ஒருவர் நன்கு அறிந்து கொண்டால், இந்த உலகில் அனைத்துக் காரியங்களும் காரண, காரியங்களுடன் தான் நடைபெறுகின்றன என்பதை உணர்ந்திடலாம்.

காரிய சாதனையால் கிட்டுவது தேஜஸ்
மனத்தெளிவு (குழப்பம் இன்மை) அளிப்பது வீர்யம்
பலமே ஆரோக்கியம்
ப்ராண சக்தியே ஓஜஸ்
ஆத்ம விசாரத்தால் கிட்டுவது மன்யூ
தனக்கு மட்டும் நினைத்துக் கொள்ளாத நிலையே ஸஹோஸி

இதில் நட்சத்திரமாகிய பஞ்ச கால சக்தியானது, பஞ்ச பூத சக்திகளுள் நெருப்போடு பிணைந்து ஆகும். அக்னி நட்சத்திரம் என்று கத்ரி வெப்ப காலத்தைக் குறிக்கின்றோம். இதே போல, சீதள நட்சத்திரம், ம்ருதுள நட்சத்திரம், மிச்ர நட்சத்திரம், சமகுண நட்சத்திரம் ஆகிய மேலும் நான்கு வகை நட்சத்திரங்கள் உண்டு. நட்சத்திரங்களுள்ளும் பஞ்சபூத சக்திகளை நட்சத்திர வாரியாகப் பிரித்திருக்கிறார்கள் தீப அஸ்வினி, பிரளய அஸ்வினி, பிரம்ம அஸ்வினி, பிரகாச அஸ்வினி, ப்ருத்வி அஸ்வினி போன்ற ஐந்து பஞ்சபூத சக்திகள் உண்டு. நட்சத்திரங்களுக்குள் பஞ்ச பூத, பஞ்ச கால சக்திகள் ஐந்து, ஐந்தாய் இவ்வாறாக 27,000 நட்சத்திர பாத அனுபூதி அம்சங்கள் உண்டு. ஆனால் இவற்றை எல்லாம் விவரித்தால், கலியுக மனித மூளையால் ஏற்க இயலாது குழப்பமாகி விடும். ஆரிய பட்டர், வராஹ மிஹிரர் போன்றோர் ஸ்ரீதீப துர்க்கையை வழிபட்டு, ஒவ்வொரு நட்சத்திரத்தின் 27,000 அம்சங்களிலும் நன்கு சிறப்புப் பெற்றனர். உலகளவை விஞ்சிய இந்த நட்சத்திர ஞானத்தைப் பற்றி இங்கு சிறு கோடு இட்டுக் காண்பிக்கின்றோம்.

ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை
மானாமதுரை

லட்ச நட்சத்திர பாத லட்சணங்கள்

உதாரணமாக அஸ்வினி நட்சத்திரமானது, ஏழு கிழமைகளிலும், 12 லக்னங்களிலும், 27 யோகங்களிலும், 11 கரணங்களிலும், அமிர்தயாதி, சித்த யோகங்கள் என்பதாகப் பல காலக் கலவைகளுடன் சேர்ந்து வரும். அஸ்வினி நட்சத்திரத்தில், மேஷ லக்னத்தில், வஜ்ர யோகத்தில், கௌலவ கரணத்தில் – இவ்வாறான காலத்தில் எந்த பூஜைகளைச் செய்ய வேண்டும். எந்த பலாபலன்களைப் பெற்றிடலாம். எத்தகைய காரியங்களைச் செய்ய வேண்டும். எவற்றைச் செய்தல் கூடாது என்ற வரைமுறை நியதிகள் உண்டு. இதே போல அஸ்வினி நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதத்திற்கும், இன்ன பாதத்தில், இன்ன ராசியில், அஸ்வினி இருக்கும்போது, மேஷம் முதல் மீனம் வரை, எந்த ராசியில் எந்த கிரகம் எப்படி சத்ரு, மித்ரு, சம பாவனைகளில் 12 பாவங்களில் இருப்பதால் ஏற்படும் பலன்களையும் நிர்ணயிக்கும் அற்புத ஜோதிட வழிமுறைகள் உண்டு. இவ்வாறு அஸ்வினியின் ஒரு பாதத்திற்கே 27000க்கும் மேற்பட்ட பஞ்சகால கிரக பந்தங்கள் உண்டு என்றால், அஸ்வினி நட்சத்திர ஒரு பாத  பலன்களையே நன்கு அறிவதற்கே பல வருடங்கள் பயின்றிட வேண்டும். அப்படியானால் மெய்ஞ்ஞான ஜோதிட விஞ்ஞானமானது எத்தகைய அண்டசராசரப் பெருங்கல்வி என்பதை இனியேனும் உணர்ந்திடுங்கள்.

27 நட்சத்திரங்கள் X  4 பாதங்கள் X  27000 X 12 ராசிகள் X 12 லக்னங்கள் 27 யோகங்கள் ... என்றவாறாகப் பெருக்கினால்... அப்பப்பா எத்தனை பெரியது ஜோதிடக் கலை! லட்சக் கணக்கான இக்கூட்டு முறைகளை ஒருவர் பயில்வதற்கு, 60 வருடங்களுக்கு மேலும் ஆகும். இத்தகைய ஜோதிட வல்லுநரே பஞ்சகோச விதான ஜோதிடராவார். இத்தகையோர், இப்பூவுலகில் ஒரு சிலரே உள்ளனர். அவர்களும், தங்களை ஞான ஜோதிடராய் எப்போதும் வெளிக்காட்டுவது கிடையாது. பாமரரோடு பாமரராய் வாழ்ந்து, பவித்ரமான ஞானத்தின் திவலைகளை, ஆழ்ந்த நம்பிக்கையுடன் தன்னை அண்டி வருவோர்க்கு மட்டுமே புகட்டுகின்றனர்.

ஆம், ஒரு நட்சத்திரத்தின் ஒரு பாதத்தைப் பற்றிய நட்சத்திர ஞானமே இமயமலையை விஞ்சிய, உலகை விஞ்சிய அளவு என்றும் உரைத்தமையால், இத்தகைய நட்சத்திரங்களின் பலன்களைப் பெறுவது எப்படி என்று கேட்கத் தோன்றும் அல்லவா!

ஸ்ரீசந்திர பகவான்
மானாமதுரை

இதற்காகத்தான், இறைவனே மஹா காலபைரவராய், திரிதின நட்சத்திர நாள் என்ற அபூர்வமான தினத்தை அளித்துள்ளார். இந்நாளில், அந்தந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் பிறந்தோரும், குறித்த பல வழிபாடுகளை மேற்கொண்டு வந்தால், அனைத்துக் கோடி நட்சத்திரங்களின் அருளைப் பெற நல்வழி காட்டப் பெறும்.

ஆனால் திரிதினம் எனப்படும் ஒரு நட்சத்திரமோ, திதியோ மூன்று தினங்களுக்கு நிரவுவது என்பது மிகவும் அபூர்வமாக அமைவதே! எவ்வாறு வாஸ்து நாளோடு மகாமக மாமாங்க நாளும் இவ்வாண்டு கூடுகின்றதோ, இதே போல கிருத்திகை நட்சத்திரமானது மூன்று தினங்களுக்கு நிரவி வருவதே கிருத்திகா திரிதினமாகும். கிருத்திகை தினத்தின் மேன்மையை விருத்தி செய்வதே இத்திரிதினத்தில் அமைகின்ற ஏனைய விசேஷப் பண்டிகைகள் ஆகும்.

இதில் 25.3.2004 அன்று 24 மணி நேரமும் கிருத்திகை நட்சத்திரம் நிரவி, முழுமையாகப் பரிணமித்து இருப்பதால், கிருத்திகா பரமேஸ்வரி எனும் விசேஷமான அம்பிகையின் அருள் பரிபூரணமிக்கும் தினமாகவும் அமைகின்றது. மூன்று நாளுக்கு ஒரு நட்சத்திரமானது நிரவுவதால் மனித உலகிற்கு என்ன பயன்?

ஒரு நாளில், எந்த நட்சத்திரம் அமைகின்றதோ அந்த நட்சத்திரப் பொழிவுகள், அந்நாளில் நிறைந்திருக்கும் என்பது பொருளாகும். கிருத்திகை நட்சத்திரம் விசேஷமாகப் பொலியும் திருத்தலங்களுள் ஒன்றே மானாமதுரை ஆகும். இங்கு ரோஹிணி, கிருத்திகை தேவியர்களுடன், சந்திர பகவான் சேர்ந்து அருள்கின்றார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் இவ்வாறு கண்டிடலாம்.

ஸ்ரீசோமநாதர் மானாமதுரை

சந்திரத் தலமாம் மானாமதுரை

கிருத்திகை நட்சத்திரத்திற்குப் பல அடிப்படைத் தெய்வீக அம்சங்கள் உண்டு. மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசோமநாதர் ஆலயமானது, பலரும் அறியாத மிகவும் சக்தி வாய்ந்த சந்திரத் தலம். குறிப்பாக கிருத்திகை தேவி, இங்கு நான்கு பாதங்களிலும் நிரவும் (4 x 27000) பஞ்ச கால சக்திகளைத் தம் பூஜையால் பெற்று அளிக்கின்ற உத்தமமான திருத்தலம். பொதுவாக, தனி விமானம், தனிக் கலசத்துடன் சந்திர மூர்த்தி சன்னதி கொண்டு அமைவதே அபூர்வமானதாகும்.

நன்கு பசி எடுத்து உணவு ஏற்க…
யாதேவீ ஸர்வ பூதேஷு துரிய அக்னி ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநமஹ

தட்ச யாகத்தில், ஈஸ்வரனை மதியாத காரணத்தால், சூரிய மூர்த்தி தன் ஒளியை இழந்திட, இதில் பங்கு கொண்ட சந்திர மூர்த்தியும் தன்னுடைய 16 கலைகளை இழந்தமையால், சந்திர மூர்த்தியின் 27 தேவிமார்களும் பல அரிய பூஜைகளையும், மகத்தான யோக வழிபாடுகளையும் ஆற்றி, சந்திர மூர்த்தி பெற்ற சாபத்திற்கு, நல்ல நிவர்த்திகளைப் பெற்றுத் தந்தார்கள்.

கார்த்திகை நட்சத்திரம், அக்னி நட்சத்திரங்களுக்கெல்லாம் தலையானது ஆகும். ரோகிணி, குரு மண்டல நட்சத்திரங்களின் தலைமைப் பீடமாகும். சத்குருவின் திரண்ட குருவருளாலும், குரு பெற்றுத் தரும் இறைப் பேரருளாலும்தான், ஜோதி ஸ்வரூப இறை தரிசனம் கிட்டும் என்பதாலும், கார்த்திகை, ரோகிணி நட்சத்திர தம்பதி சமேதரராக, சந்திர பகவான் இங்கு மானாமதுரையில் தோன்றி ஏனைய நட்சத்திர தேவியர்களுடன் பரிபூரணமாக உலகிற்கு உணர்த்தினார். 25 நட்சத்திர தேவியரும், கார்த்திகை , ரோகிணி சமேத சந்திர மூர்த்திக்குப் பாத பூஜை செய்த தலமாக, மானாமதுரை ஸ்ரீசோமநாதர் ஆலயம் துலங்குகின்றது.

நாலொளியே நம் பார்வை

நம் கண்பார்வை நன்கு அமைவதற்கு நான்கு விதமான நேத்ர ஜோதி அம்சங்கள் உதவுகின்றன. பார்க்கும் பொருள் அமைந்திருக்கும் பரவெளியில் உள்ள ரூபவடி வெளிச்சம், பார்க்கும் பொருளில் உள்ள சுயம்பிரகாசம், கண்ணுக்குள் நிறைந்திருக்கும் அந்தர் ஜோதி ப்ரகாசம், கண்ணுள் பார்க்கும் பொருள் ஏற்படுத்தும் வடிவப் பிரகாசம் என்ற நான்கு ஜோதிப் பிரகாச அம்சங்களுடன் தான் நாம் பார்க்கும் பொருள் மிளிர்கின்றது. இந்த நான்கும்தான் கார்த்திகை நட்சத்திரத்தின் நான்கு நட்சத்திர நேத்திர ஜோதி பாதங்களாகத் திகழ்கின்றன. நமக்கு அளிக்கப்பட்டுள்ள கலியுகத்திற்கான ஜோதிட இலக்கணத்தில் தசை, புக்தி, அந்தரம் ஆகிய மூன்று கிரகப் பாதங்கள் குறிக்கப் பெறுகின்றன. இதே போன்று ஒவ்வொரு நட்சத்திரத்திலும் உள்ள நான்கு பாதங்களில் ஒவ்வொரு பாதத்திற்குமான நட்சத்திர தசை, நட்சத்திர புக்தி, நட்சத்திர அந்தரம் என்று நட்சத்திரங்களுக்கான நட்சத்திர பாத சாரங்கள் நிறைய உண்டு. நவாம்சத்தின் மிகவும் ஆழ்ந்த பதிப்பே இந்த நட்சத்திரப் படல்பரல் பாடமாகும். இவையாவும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய மூன்றிலும் நன்கு துலங்கின. கலியுகத்தில் இவை மறைவு பெற்றுள்ளன.

ஸ்ரீசோமநாதர் ஆலயம்
மானாமதுரை

சந்திரத் தலமாம் மானாமதுரை

நட்சத்திரப் பாத ஞானம்

பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவன் இந்த நட்சத்திரப் பாத ஞான ஜோதிடத்தில் உத்தம நிலைகளை அடைந்த ஞான நட்சத்திர யோகி, 27 நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, வானில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் பாத சஞ்சாரங்களையும் நன்கு அறிந்தமையால்தான், சகாதேவனின் வாக்கு என்றும் பொய்த்தது கிடையாது. பகைவர்க்கும் நன்னாள் குறித்துத் தந்த பகலவ சமயோசித சித்தி உடையவன். ஜோதிட ஞானத்தில்  கரை கண்ட சகாதேவன் வழிபட்ட சந்திரத் தலங்களுள் மிகவும் முக்கியமானதே மானாமதுரை ஸ்ரீசோமநாதர் ஆலயம். இங்குள்ள பைரவரே த்ரிகாலசக்தி பைரவர். சகாதேவன் கிருத்திகா திரிதினத்தில் தோன்றியவன். அதாவது மூன்று நாட்களுக்குக் கிருத்திகா நட்சத்திரம் நிரவிய திரிதின விசேஷ தினத்தில், கிருத்திகை நட்சத்திரம் நிறைந்த முழு நாளில் தோன்றியவனே சகாதேவன். ஞான பூஷணனாக விளங்கிய சகாதேவனின் பரந்த, விசாலமான, தெளிந்த அறிவை ஸ்ரீகிருஷ்ண பகவானே நன்கு அறிந்திருந்தார்.

கர்ப்பம் கலையாமல் இருக்க…
யாதேவீ ஸர்வ பூதேஷு கர்ப்ப நாச நிவர்த்தி ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
அல்லது
கூட்டிய கருவைக் குறித்தே கலைக்க எண்ணிடாமல்
ஆட்டியே படைப்பாய் அருணாசல தேவனே

இவ்வாறு திரிதினமாக கிருத்திகை நட்சத்திரம் அமையும் நாட்களில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, சகாதேவனோடு முழுநாள் இருந்து அற்புதமான பரவெளி பற்றிய ஞானத்தை அவனுக்கு உரைத்திட்டார்.

கற்பூர புத்தி காண...

சொன்னவுடனேயே டக்கென்று புரிந்து கொள்ளும் அறிவைக் கற்பூர புத்தி என்று சொல்வதுண்டு. மானாமதுரை ஸ்ரீசோமநாதர் ஆலயத்தில், திங்கள் தோறும், மூன்றாம் பிறை நாளிலும் இங்கு சந்திர பகவானை வழிபட்டு வர, கற்பூர புத்தி சக்தி பிள்ளைகளுக்கு நிரவும். கற்பூரம் என்றால் கற்பக விருட்ச சக்தி, சுமங்கலித்துவம் போல் என்றும் நிலைத்து நிற்கும் ஆசீர்வாத சக்தி, அனைத்தையும் தர வல்ல கற்பக மந்திர சக்தி, நன்முறையில் பயன்படுகின்ற ஹோம அக்னி போன்ற அக்னி சக்தி, நவரத்தினங்கள் போல் பரிபூரணமாக ஒளிபூரிக்கின்ற கற்பூரம் போன்ற அக்னி வஸ்து என்று பல அர்த்தங்கள் உண்டு. இந்த கற்பூர சக்தியில் கற்பக விருட்சமும் தோன்றி, நிலை பெற்று, விருத்தியாகின்ற அக்னி நட்சத்திரத் தலங்களுள் ஒன்றே மானாமதுரை கிருத்திகா நட்சத்திர மண்டலமாகும். இங்குதான் அம்பிகையாம், அன்னபூரணி, கிருத்திகா பூரணியாக, ஆனந்த வல்லியாக கிருத்திக ஜோதிப் பிரவாகத்துடன் ஆலயம் கொண்டு அருள்பாலிக்கின்றாள்.

பூலோகத்தில் மட்டும்தான் கோயில்கள் உள்ளன என்று எண்ணாதீர்கள். அனைத்து நட்சத்திர, கிரக மண்டலங்களிலும் ஆலயங்கள் உண்டு. எனினும் பூவுலகில் இருக்கின்ற சுயம்பு லிங்க ஆலயங்கள்தாம் மகத்தான சிறப்பைப் பெற்றுப் பிரகாசிக்கின்றன. எனவேதாம் அனைத்துக் கோடி தேவாதி தெய்வ, தெய்வராதியர், தேவதா மூர்த்தி யாவரும் பூவுலக ஆலய தரிசனத்திற்கு ஓடோடி வருகின்றனர்.

ஸ்ரீபடிக்காசு நாதர்
அளகாபுரி

அமிர்த நீரோட்டத் தலங்கள்

கற்பூர ஜோதி உற்பவிக்கின்ற கிருத்திகை நட்சத்திர மண்டலத்தில் ஞாபக சக்தி ஞானத்தை அபரிமிதமாகப் பெற்றுத் தரும் கற்பக விருட்சத்தில், சடாமிர்த சக்திகள் தோன்றுகின்றன. அமிர்தம் என்பது பாற்கடலில் மட்டும் ஊறுவது அன்று, அமிர்தக் கிணறு, அமிர்த தீர்த்தம், அமிர்த விருட்சம், அமிர்த லோகம், அமிர்த கிரகம் போன்ற பல அமிர்தச் சாரங்களிலும் அமிர்தம் பொங்குவது உண்டு. அமிர்த நீரோட்டம் என்ற ஒன்று பூவுலகு, பாதாள லோகம், அண்ட சராசரம் எங்கும் தங்க இழையினும் மெல்லிய இழையாக ஸ்வர்ணாம்ருத நீரோட்டமாய் ஓடுகின்றது. இதன் ஒரு சாரத்தை, கர்நாடகாவில் கொல்லூர் மூகாம்பிகையின் லிங்க சக்தித் திருமேனியில் தங்க ரேகை நீரோட்டமாகக் காணலாம். இது ஸ்வர்ணாம்ருதத்தின் ஒரு ஜ்வாலை ஆகும்.

பவானி முக்கூடல் (அமிர்தம் மூன்று நதிகளில் கரைந்த இடம்), கும்பகோணம் அருகில் உள்ள அழகாபுத்தூர் (ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர்), சிதம்பரம் (தங்க ஓடு வேயப் பெற்றது) போன்ற பொன்னொளித் தலங்களிலும், கும்பகோண மகாமகத் திருக்குளத்திலும் அமிர்த நீரோட்டச் சுரப்பு உண்டு. மேலும் அமிர்தச் சுரப்பு என்றால் கண்ணுக்குத் தெரிந்த ஜல நீரோட்டம் போல் மட்டுமே என்று எண்ணாதீர்கள். பரவெளியிலும், பிராண அமிர்த நீரோட்டங்கள் உண்டு. இவற்றைத்தாம், ஆலய கலசங்களும், தல விருட்சங்களும், ராஜ கோபுர தேவதா மூர்த்திகளும் கிரகித்துப் பூமியில் சேர்த்து நமக்கு அளிக்கின்றன.

எனவே ஆகாச அமிர்த நீரோட்டம் இன்றும் பல தலங்களில் உள்ளது. இவையாவும் ஆலயத்தின் மேலே சென்று பக்தர்கள் வழிபடுமாறு மிகவும் விசேஷமாக அமைந்திருக்கும். சீர்காழி போன்ற கட்டுமலை ஆலயங்கள், திருக்கோஷ்டியூர், உத்திரமேரூர் போன்ற மேல் தள ஆலயங்கள், திருவையாறு அருகே உள்ள கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர், தேனி மலை முருகன் ஆலயங்கள், ஸ்ரீஅமிர்தகடேஸ்வர லிங்கம் அருளும் லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆலயம் போன்ற தலங்கள் அமிர்த சக்திகள் நிறைந்தவை.

மன வேதனைகள் தீர

மிகுந்த மன வேதனைகளுடன் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்போர், அமிர்த யோக நேரம், அமிர்தம் சுரக்கும் கார்த்திகை நட்சத்திர நேரத்தில், இத்தகைய அமிர்த சக்தித் தலங்களில் தேனபிஷேகம் செய்து கோமுகம் வழியாக தேனபிஷேக தீர்த்தத்தைப் புரசு இலையில் ஏந்திப் பிரசாதமாக அருந்தி வந்தால், வேதனைகள் தணிய வழி பிறக்கும். இவ்வாறு, கிருத்திகை நட்சத்திரத்திலும், அமிர்த யோக நாட்களிலும், ஸ்ரீஅமிர்த லிங்கேஸ்வரர், அமிர்தநாயகி, அமிர்தவல்லி, தேனி மலை முருகன் போன்ற அமிர்தவகை நாமம் பூண்டுள்ள மூர்த்திகளின் ஆலயங்களில் தேனபிஷேகம் செய்வதால், அவற்றில் பதிந்துள்ள அமிர்த சக்தியை நன்கு சுரக்கச் செய்து, பலருக்கும் நல்வர சக்திகளைப் பெற்றுத் தந்தவர்கள் ஆகின்றோம்.

ஒரு முறை திருஅண்ணாமலையை பௌர்ணமி அன்று கிரிவலம் வருதலால், ஆயிரம் அமிர்த லிங்க மூர்த்திகளுக்கு தேனபிஷேகம் செய்த பலாபலன்களைப் பெற சற்குருமார்கள் அருள்புரிகின்றனர்.

உத்திரமேரூர்

கணவனுக்கு மனைவி மீது அன்பு வளர…
யாதேவீ ஸர்வ பூதேஷு பர்த்தா வஸ்ய ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோநமஹ

தற்போது நாம் பூஜையில் பயன்படுத்தும் கற்பூரம் ரசாயனக் கலவை கொண்டதே. இதைப் பற்றியும் சித்தர்களுடைய கிரந்தங்களில் நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் சித்தர்களின் மருத்துவ மெய்ஞ்ஞான விளக்கங்களை எடுத்துரைத்தால் அவற்றை ஜீவ சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் நன்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் சுயநலத்தோடு அவற்றைப் பயன்படுத்தினால் சாபங்களே வந்து சேரும். இதற்காகத்தான் பல இயற்கை சக்தி சாதன விளக்கங்களும் மறைபொருளாய் கற்பூரம் ஜோதி மூலமாகவே பெறப்படுவனாக வைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோலின் மூலம் அறிவீர்

நாப்தா, பெட்ரோல் உருவாகும் இயற்கை எண்ணெய் அதனுடைய இயற்கைத் தன்மைகளை சற்றும் மாசுபடாது பயன்படுத்தும் முறைகளை மெய்ஞ்ஞான பூர்வமாக நாம் அறிந்து கடைபிடித்தால் விஷத் தன்மையற்ற பல திரவியங்களை நாம் பெட்ரொலின் மூலத் தைலத்திலிருந்து உருவாக்கிடலாம். மூலிகை வகை எரிபொருள் மருந்துகள், மின் சக்தி பொருள் போன்று பல அறிதற்கு அரிய இயற்கை ரகசியங்கள் பெட்ரோலின் இயற்கை எண்ணெயில் அமைந்துள்ளன. மனித சமுதாயத்திற்கு இவற்றைத் தியாக மனத்துடன் நன்கு பயன்படுத்த வல்ல உத்தமர்களுக்கே இத்தகைய நல்ல விளக்கங்கள் உணர்த்தப் பெறும். வியாபார நோக்கு கொண்டால் இந்த இயற்கை இரகசியங்கள் யாவும் மறைக்கப் பெறும்.

60 நாழிகை தீபம் காண்பீர்!

முற்காலத்தில் கற்பூர மர திரவியங்களிலிருந்து எடுக்கப் பெற்ற கற்பூரமே பயன்படுத்தப்பட்டு வந்தது. கற்பூர ஜோதி எனும்போது ஆன்மீகமாக நாம் அறிய வேண்டியது யாதெனில் ஜோதி ஸ்வரூபமாக இருக்கின்ற இறைவனை பாமரரும் அறிந்த சிறிய ஜோதிப் பொருள் மூலமாக ஜோதி வடிவில் ஜோதியை வணங்குகின்றோம் என்பதாகும். எனவே ஜோதிகா நட்சத்திரமாக விளங்குகின்ற திரிதினமாக மூன்று தினங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் இருக்கின்ற நாட்களில் இல்லத்தில் மிகவும் பாதுகாப்புடன் தொடர்ந்து மூன்று நாட்களிலும் விளக்கை ஒளிர வைக்க வேண்டும். இந்த ஜோதியை மூன்று நாட்களிலும் ஒரு கண்ணாடிக் கூண்டு, பிருங்கி விளக்கு போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தீபத்தை ஒளிர வைக்க வேண்டும். வேலை, அலுவல், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற பல்வேறு காரணங்களால் வீடுகளில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஜோதி பரிபாலனம்தனை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்போர் கோயில்களில் தூண்டா விளக்கு ஏற்றத் தேவையான எண்ணெய், திரி, பசுநெய் இவற்றை நிறைய அளிக்கலாம்.

வடலூர் வள்ளலார் சுவாமிகளின் ஜீவாலயத்தில் என்றும் ஒளிரும் ஜீவ ஜோதியைத் தரிசனம் செய்து இயன்ற அன்னதானம் செய்வதும் சிறப்பாகும். சென்னை மயிலாப்பூர், மற்றும் மகாராஷ்டிரா ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் தொடர்ந்து பிரகாசிக்கும் ஹோமாக்னிக்கு தேவையான ஆஹூதிப் பொருட்களையும் அளித்தல் விசேஷமானது. கேதார்நாத் செல்லும் வழியில் குப்த காசி அருகில் உள்ள திரியுகி நாராயணன் ஆலயத்தில் மூன்று யுகங்களாகப் பேணப்பட்டு வரும் அக்னியைத் தரிசனம் செய்து அதைத் தொடர்ந்து பேண ஆவண உதவிகளைச் செய்திடல் வேண்டும்.

ஸ்ரீதுர்கை மானாமதுரை

முசிறி, காஞ்சீபுரம் போன்ற இடங்களில் புனிதமான சில பெரியோர்களின் இல்லங்களில் பல நூறு ஆண்டுகளாக இடைவிடாது போஷிக்கப் பெறும் அக்னி ஹோத்ர ஹோம அக்னி இன்றும் ஒளிர்ந்து வருகின்றது. நன்கு விசாரித்து குடும்பத்தோடு அங்கு சென்று தக்க அனுமதியுடன் இந்த அக்னியை வலம் வந்து வணங்கி அந்த அக்னியைப் பேணும் பெரியோர்களையும் அக்னியையும் வணங்கி வருதல் விசேஷமானதாகும்.

எனவே கிருத்திகா ஜோதி பரிணமிக்கும் அன்று இத்தகைய ஜோதிகளின் தரிசனமும் வழிபாடும் மிகவும் விசேஷமானதாகும். காரணம் இவ்வாறு பல தலைமுறைகளாக பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வளர்ந்து விருத்தியாகி வரும் ஜோதியில் 60 நாழிகையும் கிருத்திகை நட்சத்திரம் இருக்கின்ற நாளில் மிகவும் விசேஷமான வேத கிருத்தியம் என்று ஜோதி சக்தி தரிசனத்திற்காக ஏற்படுகின்றது. இந்த தரிசனத்தில் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர், ஸ்ரீபரமாச்சார்யார் சுவாமிகள், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் போன்ற சித்தர்கள், மகான்களுடைய தரிசன ஆசீர்வாத சக்திகளையும் ஜோதி ரூபமாக பெற்றிடலாம்.

முத்துக்கள் மூன்று தித்திக்கும்
மானாமதுரை

எனவே திரிதின கிருத்திகைகளில் மானாமதுரை ஸ்ரீசோமநாதர் ஆலயம், திருவானைக்காவல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் போன்ற ஆலயங்களில் திரிதின கிருத்திகை நாளில் கிருத்திகை தேவியின் திருப்பாதங்களில் பச்சை கற்பூரக் காப்பு சார்த்தி, குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுதலால் சுமங்கலித்துவ சக்திகள் நன்கு பரிமளிக்க நட்சத்திர தேவியர் அருள்கின்றனர். மேலும் மருமகள், மாமியார் இடையே உள்ள மனக் கசப்புகள் தீர்ந்து நன்கு ஒற்றுமை பெருகிட திரிதின வழிபாடு உதவும். படிக்கும் பிள்ளைகளுக்கு மனன சக்தி நன்கு விருத்தியடையவும். கற்பூர புத்தி எனப்படும் துரிதமாக புரிந்து கொள்ளக் கூடிய சக்தி மேன்மை பெறவும் உதவும்.

திரிதின மூன்று தினங்களிலும் வலது மற்றும் இடது கைகளில் காசிக் கயிற்றில் பவளம் கோர்த்து அணிந்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரம் காலம் முழுவதும் இடையறாது ஓதி வர வேண்டும்.

கிருத்திகா மகேஸ்வரீம்
கிருத்திகா லக்ஷ்மீம்
கிருத்திகா சரஸ்வதீம்
கிருத்திகா துர்க்கா பரமேஸ்வரீம்
கிருத்திகா காயத்ரீம்
கிருத்திகா புவனேஸ்வரீம்
சகல கிருத்ய பரிபாலன க்ஷேமார்த்தம்
சம்போ சிவ சம்போ

திருஆனேஸ்வரர்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் ஆயுள் முழுதும் வழிபட வேண்டிய ஸ்ரீதிருவானேஸ்வரர்! எண் சக்திகள் நிறைந்த அற்புதத் தலம்! எண் ஏழு பிறந்த சப்த சக்தி சிவத்தலம்! கஜபூஜையில் அபரிமிதமான நல்வரங்களை அளிக்கும் கோயில்! பெற்றோர் – பிள்ளைகள் இடையே உள்ள பிணக்கைத் தீர்க்க வல்ல ஆலயம்! ரெங்கநாதபுரம் ஸ்ரீகாமாட்சி சமேத திருவானேஸ்வரர் ஆலயம்!

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுளில் வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான தலங்களுள் ஒன்றே தஞ்சாவூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் ஸ்ரீகாமாட்சி சமேத ஸ்ரீதிருஆனேஸ்வரர் ஆலயம்.

குழந்தைகளுக்கு ஜுரம் வராமல் இருக்க…
கண்ணால் கண்ட கனிக்குத்தான்
கருத்துடன் கருகிய கவின்குளு
சுரம் மாற்ற அருள்வாயே
சுந்தர நாதா அண்ணாமலையானே

ஜோதிடத்தின் மிக முக்கியமான அங்கங்களுள் ஒன்றே எண் கணிதம். எண்களின் தெய்வீக மகத்துவத்தை அறிந்து, எண் சக்திகளைப் பெறுவதற்கான பூஜைகள், ஹோமம் போன்ற ஆன்ம சாதனங்களைக் கடைபிடித்தால், ஜோதிட விளக்கங்கள், பலாபலன்கள் மிகவும் பிரகாசம் பெறும்.

25வது நட்சத்திரமாகப் பொலிவதே பூரட்டாதி, 25 என்ற கூட்டு எண்ணானது, எண் கணித ரீதியாக, ஏழின் மகிமையுடன் மிகவும் சக்தி வாய்ந்தது, எண் 2 என்பது மதிகாரகராகிய சந்திர மூர்த்திக்கும், எண் 5ஆனது வித்யாகாரகராகிய புத மூர்த்திக்கும் உரித்தானது என்பதுடன், சந்திர மூர்த்தியின் தவப் புதல்வரே புத மூர்த்தி என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சந்திரன் மனதை ஆள்பவர். புதன் அறிவை ஆள்பவர். நல்மனம், கற்பூர புத்தி, கூர்மையான அறிவு, நல்ல கல்வி இவைதாமே, தம் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் காண விழைவது!

ஏழில் எழு எழில்

இரண்டும், ஐந்தும் கூடும், 25வது நட்சத்திரமான பூரட்டாதி, ஏழின் எண் கணித சக்திகளை உவப்புடன் தருவதாகும். புதன், நவமி, பூரட்டாதி, சந்திர ஹோரை நேரம், ஏழாம்பாவ சுபாம்சங்கள், ஏழாம் கரணம், தேதி 25 ஆகிய ஏழு சப்தக் கூட்டு அம்சங்களுடன் ஜாதகம் கொண்டுள்ளோர் சகாதேவனைப் போல் அனைத்துக் கலைகளிலும் சிறந்து பிரகாசிக்க புத, சந்திர மூர்த்திகள் அருட்கடாட்சங்களை நிரம்பப் பொழிவர். இவ்வாறாக அறிவில், ஒழுக்கத்தில் சகாதேவனைப் போல் பிரகாசிக்க திருவானேஸ்வரர் ஆலய வழிபாடு பெரிதும் துணை புரிகின்றது.

மேலும், எண் 25ல் பொலியும் 2+5 = 7 என்பது கஜ கடாட்ச எண், கஜ கடாட்ச சக்திகள் நிறைந்த விமானத்தைக் கொண்டதே திருவானேஸ்வரர் ஆலயத்தின் எழில் மிகு ஏழு யானைகள் தாங்கும் சப்தகஜ பாவனமும், விமானமும் ஆகும். ஏழில் நிறையும் சப்த வர்கங்கள் யாவும் யானைகளுக்கு மிகவும் பிரியமானவை. ஏழு கவளப் பரிகார முறை, நாடி ஜோதிட முறையில் கஜப்ரீதியைக் குறிக்கும். ஜீவகுருபாவன லயப்படி, பூவுலகிலும் தேவலோகத்திலும் ஆறு யானைகளுக்கு ஒரு சற்குரு கஜேந்திரர் அமைவார்.

ஐராவதம் போன்ற கஜ குருமார்களும், இந்திரனும் அடிக்கடி வழிபடும் திருத்தலமாக திருவானேஸ்வரர் ஆலயம் துலங்குவதால், இங்கு தொடர்ந்து ஏழு நாட்களுக்குத் தினந்தோறும் சந்திர ஹோரையில் வழிபடுவதால் பதவியில் ஏற்படும் திடீர்த் துன்பங்கள் தீர்ந்து பதவி ஸ்திரமாகும்.

ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்
ரெங்கநாதபுரம்

கண் சம்பந்தமான பிரச்னைகள் தீர…
ஓம் தத் புருஷாய வித்மஹே
நேத்ரசக்திசித்தி தீட்சண்யாய தீமஹி
தந்நோ நேத்ரசிவ ப்ரசோதயாத்

ஏழின் வல்லமை

ஏழு யானைகள் இருக்குமிடத்தில், சித்தர்களும், மகான்களும், ஆச்சாரியார்களும் எப்போதும் தவம் புரிவர். எனவே தியான, யோக சக்திகள் நிறைந்த தலமிதுவே! மூன்று கழுத்து மணி மாலைகள், இரு கரங்களிலும் இரண்டு மணி கங்கணங்களுடன் இரண்டிரண்டு மணி கங்கணங்களுடன் இங்கு வில்வ மரத்தடியில் தியானம் பயின்றிட, மகான்களின் தரிசனமும், அருளும் கை கூடும் தலம்.

ஸ்ரீராமர் தம்முடைய யானைப் படையில், தமக்கென சப்த கஜஸ்த்வம் என ஏழு யானைகளை வைத்திருந்தார். பீம மகாராஜாவின் கைச் சுண்டு விரல் மட்டும் ஏழு யானைகளின் பலத்தைக் கொண்டதாகும். கை ரேகை சாஸ்திரத்திலும் உள்ளங்கையில் மிக முக்கியமான ஏழு ரேகை அம்சங்களையே முதலில் மூலாதாரமாகக் கணிப்பர்.

ஏழு என்ற தனி எண்ணை விட, 25ல் பதிந்து வரும் கூட்டு எண் ஏழுக்கு மிகுந்த சக்தி உண்டு. 25ம் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கு உரிய ஆயுள் கால வழிபாட்டுத் தலமாக விளங்குகின்ற தஞ்சாவூர் – திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ரெங்கநாதரபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத திருஆனேஸ்வரர் ஆலயத்தில், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஏழு மாலைகள், ஏழு திரவியங்கள் கூடிய சப்தாமிர்த காப்பு (பஞ்சாமிர்தம் + பாதாம் பருப்பு, முந்திரி), ஏழேழு வகை நைவேத்யங்களுடன் வழிபடுதலால், ஏழேழு ஜன்மங்களாகத் தொடர்ந்து வரும் இன்னல்கள் தீர வழி பிறக்கும்.

ஏழு எழுந்த தலம்

பண்டைத் தமிழில் ஆனம் என்பது ஏழு, ஏனம் என்பது எட்டு,  ஓனம் என்பது ஒன்பது. ஏழு யானைகளின் மீது அமைந்த ஆன (ஆனைக்) கோயில் இது. சப்தாவரண சக்திகள் பூவுலகில் நிரவிட, இங்கு ஸ்ரீகாமாட்சித் தாய், உலக அன்னையாய், ஏழு யானைகள் கூடிய ரதத்தில் தாம் பவனி வருகின்றாள். ஸ்ரீகாலபைரவர் ஏழு கிழமைகளைப் படைத்து, அவற்றை, ஏழு யானைகள் மீது வைத்துக் கால (வாரச்) சக்கரத்தைப் படைத்தளித்த திருத்தலம் இது.

ஏழு என்பது ஆதிகால சக்திகளை உடையது. துவக்கத்தில் ஏழு கிரகங்கள், ஏழு கிழமைகள், ஏழு தேதிகள், ஏழு நட்சத்திரங்களே இருந்தன. இத்தலத்தில் தியானம், யோகம் புரிவதும், மௌன விரதம் பூணச் சங்கல்பித்து, விரதம் இருந்து பிறகு நிறைவு செய்வதும் மிகவும் சிறப்புடையது. இதனால் அற்புதப் பலன்களைக் கண்கூடாகக் காணலாம்.

கருப்பர், அய்யனார், சாஸ்தா, சங்கிலி மூர்த்திகள் போன்ற எழுவருடன் வில்வ மரத்தில் திருஆனேஸ்வரர் காட்சி அளித்த திருத்தலம். ஏழு ஆதிராகங்களில் இங்கு பாடுவதும், ஏழு வாத்யங்களுடன் இசைப்பதும் மிகவும் சிறப்புடையது. இசையில் அவரோஹண (ஏழு) பீஜங்கள், ஸ்ரீதட்சிணா மூர்த்தியால் வில்வ மரத் தளங்களில் வைத்து ஆஞ்சநேயருக்கு அளிக்கப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீசாகம்பரி தேவி இங்குள்ள திருக்குளத்தில், ஏழு அல்லி இலைகளைத் தோற்றுவித்து, வேத அல்லி மலர் குரு பீடத்தை உலகிற்கு அளித்தாள். ஏழேழு ஜென்மங்களும் கடைத்தேற, ஒவ்வொருவரும், தம் வாழ்வில் இங்கு ஏழு தினங்களேனும் வில்வ மரத்தின் கீழ் தவம் புரிய வேண்டும். திருவானம் என்பது ஏழு வண்ண வானவில் போன்ற பிறை வடிவு ஆகும். இங்கு இத்தரிசனத்தை விண்ணில் பெறுதல் நல்ல சுபசகுனத்தைக் குறிக்கும்.

இங்கு ஏழு வண்ண ஆடைகளைத் தானம் அளித்தலால் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் சாபங்கள் தீரும். இங்கு ஏழு யானைகளை வைத்து, கஜ பூஜை ஆற்றுவதால் ஏழேழு ஜன்மப் பாவ வினைகள் தீரவும், சந்ததிகளுக்குத் தம் குறைகள் தொற்றாமல் காத்துக் கடைத்தேறவும் மிகவும் உதவும். ஏழு தினங்களிலும் வழிபட வேண்டிய சிறப்பான ஆலயங்களுள் இதுவும் ஒன்று.

கனிந்த கனி தம் தல யாத்திரையின் போது இத்தலத்தில் அபூர்வமாக ஏழு நாட்கள் தங்கியிருந்து சேவை புரிந்த தலம். பரமாச்சாரியார் வில்வ மரத்தின் கீழ் தங்கி தவமியற்றிய தவப்பீடத்தை பக்தர்கள் இன்றும் தரிசனம் செய்து பயன் பெறலாம்.

ஜாதகம்

ஜாதகத்தைப் பரிபாலிக்கும் முறை

தங்கள் குடும்ப ஜாதகம் நல்ல ஜோதிடர்களை அடைந்து நன்முறையில் கணிக்கப் பெற்றிடவும், ஜாதகப் பொருத்த கணிதம், அனைத்தும் நன்னம்பிக்கையுடன் இறையருளால் அமைந்திடவும், ஆரம்ப ஜோதிடக் குறிப்பு நிலையில் இருந்தே பல வழிபாடுகளைக் கடைபிடித்திட வேண்டும். இவ்விளக்கத்தின் முதல் தொகுதியை (ஜாதகம் பொருத்தம்) எனும் தலைப்பில் இவ்விதழில் கண்டிருப்பீர்கள்.

மூட்டு வலி குறைய…
ஓம் தத்புருஷாய வித்மஹே
பாத க்ருத்க்ருத்தாய தீமஹி தந்நோ பாதசுக ப்ரசோதயாத்
அல்லது
குடைச்சல் கடைச்சல் குறை நிவர்த்தி செய்யும்
சங்கமேஸ்வரா சாந்தி தருவாய் சக்தி நாயகா

ஜாதகத்திற்கான நட்சத்திர வழிபாடு

ஜோதிடரிடமிருந்து கணிக்கப் பெற்று, ராசிச் சக்கரம் அமைக்கப் பெற்று ஜாதகம் வந்த பின்னர், ஜாதகத்தை, ஒரு (பனைஓலையால் முடைந்த) பனைப் பையில் வைத்து, தினமும் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டுக் கண்களில் ஒற்றி வைத்து வணங்கி வர வேண்டும். பொதுவாக, ஜாதகம் தாங்கிய பனை ஓலைப் பை, பூஜையில், ஸ்வாமி அருகே இருப்பது சிறப்புடையது என்றாலும், ஜாதகக் குறிப்பைப் பல்லாண்டுகளாகப் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக, உள்ளே, பாதுகாப்பறையில் வைப்பதில் தவறில்லை., இவ்வாறு வைத்திடில், புதன் கிழமை, பஞ்சமி திதி, நவமி திதி அவரவருடைய நட்சத்திர நாளில், ஜாதகத்தை வெளியில் எடுத்து, சந்தனம், குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.

முதலில் ஜாதகம் கணித்து வந்த பின்னர், அவரவர் நட்சத்திரத் தலத்திற்குச் சென்று, ஜாதகத்தை நட்சத்திர ஆலயத்தில் வைத்துப் பூஜித்திட வேண்டும். குடும்பத்தில், அனைவருடைய ஜாதகங்களையும் ஒரு சேரப் பூஜித்திட, நட்சத்திர லிங்கங்கள் உள்ள சென்னை திருவொற்றியூர், திருவிடைமருதூர் மற்றும் நட்சத்திர மூர்த்திகள் வழிபடும் (சேலம் அருகே) தாராமங்கலம், கும்பகோணம் அருகே தாராசுரம், ஆவுடையார் கோயில் போன்ற இடங்களில் அஸ்வினி, ரேவதி இணைந்து வரும் நாட்களில் வழிபடுதல் விசேஷமானது. ரேவதி நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தின் இறுதி மூன்றரை நிமிடங்கள், அஸ்வினி நட்சத்திர முதற்பாதத்தின் முதல் மூன்றரை நிமிட காலத்திலும் சேர்த்து வழிபடுவது சிறப்புடையது. இரண்டும் இணையும் ஒரு நிமிட காலத்திற்குப் பாரிஜம் என்று பெயர். மிகவும் சக்தி வாய்ந்த, மிக, மிகப் புனிதமான நேரமிது.

இவ்வாறு ஜாதகம் கணித்த காலத்திலிருந்தே வழிபட்டு வந்தால், ஜாதகப் பொருத்தம், நல்ல ஜாதகரிடம் கணிக்கப்படுவதாக, இயற்கையாகவே அமையும். திருமணத்திற்கு முன்னும் பின்னும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், திருவேடகம், இன்னம்பூர், சூரியனார் கோயில் போன்ற தலங்களுக்கு, ஜாதகத்தை பனைஓலைப் பையில் எடுத்துச் சென்று வழிபட்டு வருதல் நன்மை தரும்.

திருவேடகம்

சர்க்கரை வியாதி தீர…
யாதேவீ ஸர்வபூதேஷு மதுமேக நிவர்த்தி ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

ஜாதகத்திற்கு நகல் எடுக்கும்போது, கைப்பட எழுதி, கிரகங்களின் ஆசிகளைப் பெற்றிடுங்கள். ஜெராக்ஸ் எடுப்பதைத் தவிர்க்கவும். பழைய ஜாதகங்கள், வாக்கியக் கணித முறையில் கணிக்கப் பெற்றிருந்தால் அவற்றைத் திருக்கணிதத்திற்கு மாற்றி எழுதிக் கொண்டு, இதே முறையில்தான் பூஜைகளை ஆற்றிட வேண்டும்.

பொதுவாக, குழந்தை பிறந்த 18 மாதங்களுக்குள் ஜாதகம் எழுதுவது மிகவும் விசேஷமானது. ஜாதகம் எழுதுவது வேறு, கணிப்பது வேறு. ஜாதகம் எழுதுவது என்றால் ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம் போன்றவற்றைப் பகுத்து, வகுத்துத் தருவதாகும். இயன்ற வரை, ஜாதகத்தை எழுதும்போது பலாபலன்களையும் பார்க்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். கம்ப்யூட்டர் ஜாதகப் பலன்கள் பொதுவானவையாகவே இருக்கும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்க!

‘இட்டது கிட்டும்’ என்பதால், கம்ப்யூடரில் நுழைக்கப் பெறும் மூல விஷயங்களில் (input) பிழைகள் இருப்பின், கம்ப்யூட்டர் திரட்டித் தரும் விடைகளிலும் (output) தவறுகள் திரளும். பலரும் கம்ப்யூட்டர் தவறே செய்யாது என்றும், சிலரோ கம்ப்யூட்டர் தவறு செய்து விட்டதாகவும் சொல்வர். உண்மையை இனியேனும் அறிக!

அரசு விருட்சம் அபிவிருத்தி தரும்

பெண் அல்லது பிள்ளையின் திருமணத்திற்காகப் பொருத்தம் பார்ப்பதற்கு முன், பெண் அல்லது பையன் ஜாதகத்தை, அரசமரத்தடிப் பிள்ளையாரின் (ஸ்ரீஅஸ்வத விநாயகர்) திருப்பாதங்களில் வைத்து, வெண்பட்டு வஸ்திரம், வெண்பட்டுத் துண்டு சார்த்தி, அபிஷேக ஆராதனைகளுடன், முந்திரிப் பருப்பு, திராட்சை, பாதாம் பருப்பு கலந்த பருப்பு பாயாச அன்னதானத்துடன் ஜாதகம் பொருத்தம் பார்க்கும் வைபவத்தை இனிமையுடன், அன்னதானப் புண்ய சக்தியுடன் தொடங்க வேண்டும். வசதி இல்லாதோர் எளிமையாக மூன்று சிதறு தேங்காய்களுடன் கூடிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

ஜாதகப் பொருத்தங்களில், பத்தில் ஏழு பொருந்துகின்றதா என்று சராசரிப் பொருத்தக் கணக்குள் போடாது, ஆண், பெண் இருபாலாரின் ஜாதகங்களில் உள்ள பொதுப் பொருத்தங்களுடனும் நின்று விடாமல், கோசார கிரக அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறாக, எளிய இறைவழி முறைகளைக் கடைபிடித்தால் ஜாதகப் பொருத்தம் பார்ப்பவர் சரியாகக் கணிக்கின்றாரா என்ற அச்சங்கள் எழாது, நல்ல ஜோதிடரும் அமையப் பெற்று, கிரக மூர்த்திகளே நம்மைக் காப்பாற்றுவர்.

ஸ்ரீஅரசம்பலவாணர்
பேரூர்

எலும்பு முறிவு குணம் அடைய…
ஓம் அனுமந்தா வாயுகுமாரா வரவர எலும்பு வளைந்திடாமல் ஸ்ரீம் க்லீம் காப்பாய் கருணாமூர்த்தியே

எல்லாவற்றையும் விட, சிறப்பான முறையில் ஜாதகப் பொருத்தம் அமைந்து திருமண நல்வாழ்வைப் பெற்றிட, தினசரி ராசிச் சக்கர, தினசரி கிரக சஞ்சாரச் (கோசர கிரகச்) சக்கர வழிபாடுகளை மேற்கொண்டு வருதல் வேண்டும். நோட்புக் ஒன்றில், தினமும் இந்த இரண்டு விதமான ராசிச் சக்கரங்களையும் தினமும் கையால் எழுதி, மஞ்சள், குங்குமம் இட்டுத் தொழுது வருதல், மிகவும் சக்தி வாய்ந்த நவகிரகச் சக்கர வழிபாடாகும்.

அதாவது, உங்களுடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள், நீங்கள் பிறந்த நேரத்தில் விண்வெளியில் கோள்கள் நிலவுகின்ற நிலையாகும். இதுவே ஜாதக ராசிச் சக்கரம். இதுதான் பிறந்த நாள் ராசிச் சக்கரமாக, உங்கள் ராசிச் சக்கரத்தையும், பிறகு அந்நாளின், சூரிய உதய நேரத்தில், விண்வெளியில் உள்ள கிரக அமைப்புகளையும், உங்களுடைய கிரகக் குறிப்பு நோட்டில் தினசரி கிரக நிலைப் படமாக எழுதி, மஞ்சள், குங்குமம் இட்டு வணங்கி வாருங்கள்.

தினசரி ஒன்பது கிரகங்களின் வான சஞ்சார நிலையை எவ்வாறு சரியாக அறிவது?

பெரும்பாலான பஞ்சாங்கங்களில், அந்தந்த மாதப் பக்கத்தின் வலது புறத்தில், அந்தத் தமிழ் மாதத்தின் முதல் தேதி அன்று, விண்வெளியில் ஒன்பது கிரகங்களின் நிலையை, மேஷத்தில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது என்றவாறாகக் குறித்திருப்பார்கள்.

அந்தந்த மாதத்திற்குள் எந்தெந்த நாளில், எந்த ராசியிலிருந்து எந்த கிரகம், எந்த ராசிக்குச் செல்கின்றது என்பதும் இந்தச் சக்கரத்தின் மத்தியில் தேதிவாரியாகக் குறிக்கப்பட்டிருக்கும். சில பஞ்சாங்கங்களில், தினசரி கிரக நிலைகளையே, 365 நாட்களுக்கும் குறித்திருப்பார்கள்.

தத்தெடுத்த பிள்ளையை உதாசீனப்படுத்தாமல் இருக்க…
பார்த்துப் பார்த்து பாலகனை
சேர்த்தே எடுத்து அன்பர்காள்
ஊர்த்து உள்ளுகந்துணைக்கு வந்திடில்
பார்த்துப் பார்த்து பிள்ளையைத் தந்திடாதே

இவ்வாறு, ஆரம்ப நிலையில் இருந்து கிரக சக்திகளை, இல்லத்தில் எளிமையாக, அனைவரும் ஒன்று கூடி, வழிபட்டு வர, ஜாதகக் கணிதம், ஜாதகப் பொருத்தங்கள் நன்முறையில் கணிக்கப்படுவதற்கான நல்வழி முறைகள் கிட்டும். மேலும், தினசரி கிரக வழிபாடே, கிரக வழிபாட்டுப் பலன்களே, அந்தந்த கிரக தசை, புக்தி, அந்தரக் காலங்களில் துன்பங்களையும் பெரிதும் தணிக்க உதவும்.

ஆலயங்களில், நவகிரக மூர்த்திகளைத் தினமும் தரிசித்து வழிபடுவது போல இல்லத்திலும், நவகிரக சஞ்சார நிலைச் சக்கர வழிபாடாக அமைந்து, நம் தலைக்கு மேல், விண்வெளியில், எந்தெந்த இடத்தில் எந்தெந்த கிரகம் அமைந்துள்ளதோ, அதை அறியும் ஞானமும் உண்டாகி, அந்த கிரக மூர்த்திகளையும் ஆனந்தப்படுத்தும் அல்லவா!

மேலும், தினசரி கிரக சஞ்சாரக் கோசாரச் சக்கரத்தை (தினராசிப் படம்) வரைந்து,  உங்கள் சட்டைப் பாக்கெட்டிலோ, அலுவலகத்தின் மேஜையிலோ, வீட்டில் ஹாலில் ஒரு டிஸ்ப்ளே போர்டில் வைத்து அவ்வப்போது தரிசித்து வரவும். இதனைப் பிறரும் அறியும் வண்ணம் நல்வாய்ப்புக் கிட்டும்படி, தினசரி கோள் சஞ்சாரச் சக்கரத்தை, வீட்டில் ஹாலிலும், அலுவலகத்திலும், ஆலயத்திலும் வைத்திருந்து பலருக்கும் பயன்படும்படிச் செய்திடலாம்.

சிறுநீரக சம்பந்தமான பிரச்னை தீர…
ஓம் தத்புருஷாய வித்மஹே
மூத்ரசோக நிவர்த்திகராய தீமஹி
தந்நோ ஸஹஸ்ரலிங்க ப்ரசோதயாத்

தினசரி கிரக சஞ்சாரச் சக்கரத்தை யாவரும்  காணச் செய்வீர்!

இதனையே சற்று பிரம்மாண்டமான சமுதாய இறைவழிபாடாகக் கைக் கொள்ள முடியுமாயின், வாரத்தில் ஒரு சில நாட்களிலாவது அந்தந்த நாளின் கோசார கிரகச் சக்கரத்தைப் பச்சரிசி மாக்கோலத்தால் இல்லத்தில் அல்லது ஆலயத்தில் அல்லது பொது வழிபாட்டுத் தலத்தில், சத்திரத்தில் பெரிதாக வரைந்து, அந்தந்த ராசிக் கட்டத்தில் அந்தந்த கிரகத்திற்கான மூலிகை, வண்ணத் துணி, நவரத்தினக் கல், புஷ்பம், நவதானியம், உலோகம் போன்றவற்றை வைத்து வழிபடுவது நவகிரக ப்ரீதி வழிபாடாக, பீடா பரிகார பூஜையாகவும் மலர்ந்து பீடைகளையும் தோஷங்களையும் தணித்து நன்மைகளைத் தரும்.

கிரக சஞ்சாரச் சக்கர பூஜை சமுதாய பூஜை ஆகட்டும்!

இதனை மகத்தான சமுதாய பூஜையாக ஆற்ற விரும்புவோர், சனிக்கிழமை தோறும், பெரிய பிரகாரம் உள்ள ஆலயங்களில், பிரம்மாண்டமான அளவில், பச்சரிசி ரவை, கோதுமை ரவை, பாசிப் பருப்பு ரவை போன்ற தான்ய ரவைகளைக் கொண்டு, பெரிய அளவு கிரக சஞ்சாரச் சக்கரக் கோலத்தை, 12 ராசிக் கட்டங்களாகப் பிரகாரத்தில் வரைந்து, வழிபடுதல் மிகச் சிறந்த சமுதாய வழிபாடாகும்.

வயிறு சம்பந்தமான பிரச்னை தீர…
யாதேவீ ஸர்வபூதேஷு தொந்திஅவஸ்தா நிவர்த்தி ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
உய்வு அடைய வந்தெம்மை
உணர்வின் மூலமாகவே
தொய்வு இல்லாமல் வாழ்வில்
துணையாய் நின்று காக்கவே
பைய பைய விளிக்கின்றோம்
பார்வையில் எம்மைக் காக்கவே
உய்ய வந்த அம்மாவே
உணர்வாய் என்னுள் இருந்திடவே
ஐய இவளும் பெண் என்று
யாரும் என்னை ஏசிடாமல்
பைய பைய உயர்வடைய
பணிவோம் எங்கள் அம்மாவே
மெய்யாய் இருக்கும் அன்னையே
பொய்யால் நாங்கள் போகிடாமல்
உய்ய உய்ய வாழ்வளிப்பாய்
உண்ணாமுலைத் தாயே
வாழ்வில் உணவுப் பஞ்சம் என்றுமே ஏற்படாதிருக்க மேற்கண்ட பாடலை குறைந்தது 51 முறை ஓதவும்

பக்தர்களும், இந்நாளில் அந்தந்த கிரகத்திற்கான நவதானியங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் போன்றவற்றை அளித்து, அந்தந்த ராசிக் கட்டத்தில் வைத்து, அனைவரும் சத்சங்கமாகக் கோளறு பதிகம், நவகிரகத் தோத்திரம் போன்றவற்றை ஓதியவாறு, 12 முறை வலம் வருதல் மிகச் சிறந்த சமுதாய நல நவகிரக வழிபாடு ஆகும். இவற்றை ஆலயப் பிரகாரத்தில் வரைவதால், வானிலிருந்து அனைத்து கிரக மூர்த்திகளும், சமுதாய இறை பூஜையைக் கண்டு, மனமகிழ்ந்து தாமே முன்வந்து ஆசி அளிப்பர்.

இதற்கு அகண்டகார கோசார கிரக சஞ்சார நவகிரக பூஜை என்று பெயர். பழங்காலத்தில், தற்போதைய சூரியனார் கோயில் ஆலய பூமியில் பண்டைய மன்னர்கள் அகண்டகாரச் சக்கரமாக, மிகவும் பிரம்மாண்டமான ராசிச் சக்கரத்தை வரைந்து, மேஷத்திலிருந்து மீனம் வரை, அந்தந்த கிரக மூர்த்தியைப் பிம்பமாக வைத்து, அந்தந்த கிரகத்திற்கு உரிய அனைத்துத் திரவியங்களையும் அந்தந்த ராசிக் கட்டத்தில் வைத்து, மூன்றாம் தளத்திலிருந்து ஆயிரக் கணக்கான மக்கள் தரிசிக்கும்படியான மகா மண்டபங்களைக் கட்டித் தந்தார்கள்.

மாறன் பெருந்துறையான் என்ற சோழ மன்னனும் கிட்டத்தட்ட 40 ஏக்கர் நிலப் பரப்பில் இத்தகைய நவதான்ய நவகிரக பூஜைகளை தினமும் நிறைவேற்றி அந்த நவதான்ய மணிகளை எல்லாம் சர்க்கரை கலந்து இடித்து அருகிலுள்ள பல திருத்தலங்களுக்கும் செல்லும் பாதைகளில் மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்பி வழி நெடுக இட்டு அற்புத சேவை செய்தான். சுவாமி மலையில் இறைவனை தரிசனம் செய்த ஒருவர் தாராசுரம் சென்று இறை தரிசனம் செய்வதற்கு வழியை அறிய விரும்பினால் அவர் இந்த “சர்க்கரையைப் பாதையைத்” தொடர்ந்து சென்றாலே போதும். சர்க்கரைப் பாதை என்பது குரு காட்டும் பாதை, குரு வழி செல்லும் பாதை அல்லவா ?

இவ்வாறு, தற்போது, ஆலயங்களில் நவகிரக சஞ்சாரச் சக்கரக் கோல பூஜையை முறையாகச் செய்து வருபவர்களுக்கு, தம்முடைய பெண்கள், பிள்ளைகளுக்கு நல்ல ஜாதகரிடம் சென்று நன்முறையில் கணிப்பு, பொருத்தம் பார்த்தல் அமைய உதவும். நல்ல வரன்களும் அமையும்.

அனைத்து கிரகப் பெயர்ச்சிகளின் வழிபாடுகள் மலர்வதாக!

தற்போது குருப் பெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மக்கள் கொண்டாடி வருகின்றார்கள். இரண்டே கால் நாளுக்கு ஒரு முறை சந்திர பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்கின்றார் அல்லவா, இது சந்திரப் பெயர்ச்சி ஆகும். இதே போல சூரியப் பெயர்ச்சி, சுக்கிரப் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி, ராகுப் பெயர்ச்சி, கேதுப் பெயர்ச்சி எனவும் உண்டு.

ஆலயங்களில் அந்தந்தக் கிரகப் பெயர்ச்சியின் போது, குறித்த கிரக மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவது சிறப்பானது. உதாரணமாக 9.3.2004 அன்று, புத மூர்த்தி, கும்பத்திலிருந்து, மீன ராசிக்குப் பெயர்ச்சி பெறுகின்றார். இதனைப் புதப் பெயர்ச்சியாகக் கொண்டு ஆலயங்களில் வழிபடுதல் சிறப்பானது. நவமியில் வரும் சரஸ்வதி பூஜை போன்று கல்விகாரகரான புத மூர்த்திப் பெயர்ச்சியையும், வித்யா சக்திப் பூஜையாக வழிபட்டு வர, படிப்பில் மந்தமாக இருப்போர், குறைந்த மார்க்குகள் வாங்கியிருப்போர், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வழி பிறக்கும்.

மகா மாமாங்க மகிமை

மகா மாமாங்கம் எனப்படும் மகா மக நட்சத்திர தினமானது, நடப்பு சுபானு ஆண்டின் மாசி மாதமக நட்சத்திரப் பௌர்ணமி நாளில் அமைவது, நம் வாழ்வில் பெரும் பாக்யம் ஆகும். இதனை வாத்சல்ய வாதூல மாமாங்கம் என்று சித்தர்கள் போற்றுகின்றனர். அமிர்த யோகம், சித்த யோகம் கூடிய பிரம்ம ஸார்வணி சக்திகள் நிறைந்த வாஸ்தவ்ய, வாத்சல்ய, வசந்த சோபனப் பௌர்ணமியும் நிறைந்த நாளில் ஸ்ரீவாஸ்து மூர்த்தி உற்பவித்தமையால், வருடத்தின் எட்டு நாட்களில் ஒன்றாக, மாசி 23ந் தேதியுடன் வாஸ்து நாளும், பௌர்ணமியும் மகாமகத் திருநாள் மூன்றும் சேர்கின்ற மகா திவ்யப் பிரகாச நாளாக வரும் மாமாங்க தினம் அமைகின்றது. விஷ்ணு அம்சங்கள் பலவற்றுடன் பிரகாசிக்கின்ற வாஸ்து பகவான், அமிர்தயோகமும், சித்த யோகமும் கூடிய சனிக்கிழமையில் தோன்றிய திருநாள் நம் வாழ்வில் மாமாங்க விசேஷ நாளாக வந்து சேர்வது நாம் பெற்ற பெரும் புண்ணியமாகும். 14 மனுக்களும் ஒரு சேர பூஜித்து, 99 கோடி ஹோலிகா தேவதா மூர்த்திகளுடன் சேர்ந்து பூஜிக்கின்ற சுபவேளையிலேயே ஸ்ரீவாஸ்து மூர்த்தி உற்பவித்தார். இத்தகைய அனைத்து தேவ அம்சங்களும் பொழிகின்ற திருநாளே நடப்புத் தமிழ் ஆண்டின் மகா மாமாங்கமாகப் பிரகாசிக்கின்றது.

ஸ்ரீகிராத மூர்த்தி
கொறுக்கை

திருஅண்ணாமலையானே...
தீயினும் தெறல் நீ
பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ
சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ
மறத்தினுள் மைந்து நீ
வேதத்து மறை நீ
பூதத்து முதலும் நீ
வெஞ்சுடர் ஒளியும் நீ
திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ அனைத்தின் உள்பொருளும் நீ
பிறவாப் பிறப்பிலை
பிறப்பித்தோர் இலையே அருணாசலா

எல்லாவற்றையும் விட மிகவும் இதில் விசேஷமாக அமைவது ஸ்ரீவாஸ்து மூர்த்தியே, 66 கோடி தீர்த்தங்களும் உறைகின்ற மகாமகத் திருக்குளத்தின் அடித் தளத்தில் மகாஸ்வாமி சர்வ லிங்கத்தை சர்வ ஆனந்தத்துடன் பூஜிப்பதாகும். சிருஷ்டியின் போது ஈஸ்வர மூர்த்தி கிராத மூர்த்தியாகத் தோன்றி ஜீவ சிருஷ்டியைத் தோற்றுவிக்கின்றார். பூதேவி, வாஸ்து மூர்த்தி, சூரிய சந்திர மூர்த்திகள், புண்ணிய நதி தேவதா மூர்த்திகள் போன்ற பூலோக ஜீவசிருஷ்டி பரிபாலனத்திற்கு உதவுகின்ற தேவாதி தெய்வமூர்த்திகள் யாவரும் – கிராத மூர்த்தியை முதலில் லிங்க வடிவில் பூஜிக்கின்றனர். இத்தகைய கிராத மூர்த்தி லிங்கம், ஆதிகாலத்தில், தற்போது மகாமகக் குளம் இருக்கும் இடத்தில் சுயம்புவாய்த் தோன்றிட, இதிலிருந்துதான் விண்ணளாவ விஸ்வ ஸ்வரூபத்துடன் கிராத மூர்த்தி தோன்றினார். அப்போது மகாமக வளாகத்தில் மகாஸ்வாமி லிங்க பூஜை செய்கின்ற பாக்யத்தைப் பெற்றவர்கள்தாம் பூமா தேவியும், ஸ்ரீவாஸ்து மூர்த்தியும் ஆவர். இவ்வாறு ஒவ்வொரு மகாபிரளயத்தின் முதலிலும், பூர்ணத்திலும் கிராத லிங்கமும், கிராத மூர்த்தியும் தோன்றுவதுண்டு.

எனவே வரும் மகாமகத் திருநாளில், புனிதமான வாஸ்து நேரமான காலை 10.31 மணி முதல் 11.07 மணி வரை ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக சயனத்தில் இருந்து மீண்டு மகாமகத் திருக்குள அடித் தேவதளத்தில் சுயம்புத் திருமேனியாம் ஸ்ரீகிராத மூர்த்தியைப் பூஜிக்கின்றார். இதனைத் தரிசிப்பதற்கென்றே சர்வ லோகங்களிலிருந்தும் அனைத்துக் கோடி தேவதா மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 99 கோடி ஹோலிகா தேவ மூர்த்திகளும், 66 கோடி தீர்த்த தேவதைகளும் சூட்சுமமாகக் குழுமுகின்ற விசேஷமானத் திருநாளாகவும் வரும் மாமாங்கத் திருநாள் அமைகின்றது.

இவ்வாறு வாஸ்து நாளில் மகாமகம் அமைவது மிகவும் விசேஷமானது. காரணம், வாஸ்து மூர்த்தியே அனைத்துக் கோடிப் புண்ணிய தீர்த்தங்களினால் பதிஷத் மூல லிங்கத்தை வழிபடும் திருநாள் ஆதலின், ஸ்ரீவாஸ்து பகவானே அபிஷேகித்த புண்ணியத் தீர்த்தத்தை ஸ்பரிசிக்கும் பாக்யத்தை நாம் பெறுகின்றோம். தெய்வீக ரீதியாக, மகாமகத் திருநாளிலும், அதனை அடுத்து வரும் 48 நாட்கள் கூடிய மண்டல மாமாங்கப் புனித மண்டலத்திலும், இத்திருக்குளத்தில் நீராடும் மகத்தான பாக்யத்தைப் பெற்றவர்களுடைய உடலிலே அவரவருடைய வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திகள் குடி கொண்டு நீராடுதலின் மாமாங்கப் புண்ய சக்தியைப் பெறுகின்றனர். அதாவது வசு, ருத்ர, ஆதித்ய மூர்த்திகள் சூக்கும சரீரத் திவலைகள் பதிந்தவர்களால் தாம் மாமாங்க மண்டலத் திருநாட்களில் இத்திருக்குளத்தைத் தரிசிக்கவோ இங்கு நீராடவோ முடியும் என்பதே இதன் தாத்பர்யமாகும். எனவே, வாஸ்து பகவானே பூஜிக்கும் தீர்த்தத்தில், 66 கோடி தீர்த்த தேவதைகள் நீராடும் திருக்குளத்தில் நம்முடைய அசுத்தமான கால்கள் படுவதா என்று எண்ணுதல் வேண்டாம்.

நிலத்தில் நிற்றல் நிழல்  மனிதன்,
நீரில் நிற்றல் நீழல் சரியை

என்ற யோக சூத்திரத்தின்படி, நீரில் ஒரு மனிதன் இறங்கும்போது, அவன் சரியை யோக சரீரத்தைப் பெறுவதால் அவன் மனித சரீரத்தை உகுத்தவன் ஆகின்றான். இதனால்தான் நீராடுதல் புனிதம் தருவதாகவும், நீராடியபின் ஆசார அனுஷ்டானத்தின் படி புனிதம் நிறைந்தவனாகவும் ஆகின்றான். அதாவது புனிதமான நீரில் நீராடும்போது, சரியை யோகப்படி கர்மவினைகள் பாய்ந்த மனித சரீரத்தை உகுத்து சரியை சரீரத்தைத் தாங்கிப் பிறகு மீண்டும் மனித சரீரத்தில் புகுவதால் இரு பிறவி ஏற்ற, மரு களைந்த மாமனிதனாக ஆகுதற்குப் புனித நீராடல் துணை புரிகின்றது. புண்ணிய நதி தேவதைகளே அறியாத இந்த ஜல தேவ தாத்பர்யத்தை அவர்கள் வாமதேவ ரிஷி மூலம் இதனை உபதேசமாகப் பெற்றத் திருத்தலமும் மகாமகத் திருக்குளமாகும்.

துர்வாசர் மாலையை இந்திர பகவானுக்குக் கொடுத்தது
(கதலீ குந்தவன ரகசியம்)
ஓம் தேவ விஸ்வரூபாய தேவ ஸிரஸ் குஞ்சர:
இந்த்ர தேவ வாஹனாய ஐராவதாய நமோநம:
நமோ தபஸ்வி சேவகாய பரமானந்த ரூபிணே
ஸ்ரீசிவப்ரியாய சிவசேவகாய ஐராவதாய நமோநம:
ஓம் தத்புருஷாய வித்மஹே
தேஜோமய ஸ்வர்க்க சேவகாய தீமஹி
தந்நோ ஐராவத ப்ரசோதயாத்

முப்பத்து முக்கோடி தேவர்களும், 66 கோடி தீர்த்த தேவதைகளும், 99 கோடி ஹோலிகா தேவதைகளும் மாமாங்கத் திருமண்டல நாட்களில் (48 நாட்களில்) கும்பகோணத்திலிருந்து ஐந்து பஞ்சகோசத் தலங்கள் இருக்கும் இடம் வரையில் பூமியடி நீரோட்டமாக மாமாங்கப் புனிதத்தை நிரவுகின்றார்கள். எனவே அன்னதானம், ஆடை தானம், பொன் மாங்கல்ய தானம் போன்ற தானதர்மங்களை இந்நாளில் இத்தலங்களில் ஆற்றுதலால் மேற்கண்ட 198 கோடி தானதர்ம தேவதைகளும் மகிழ்வைகின்றனர். குறிப்பாக இந்நாட்களில் அன்னதான சேவையை, ஆற்றுவோர்க்கு, மாமாங்கத் திருக்குளத்தில் நீராடிய புண்ணிய சக்தியின் அன்னசாரப் பலன்கள் தாமாகவே வந்து சேர்கின்றன. அன்னதானம் தெய்வீகக் கைங்கர்யம் என்பதால் இந்நாளில் அன்னம் பாலிக்கப் பயனாகும் நீரில், காய்கறிகளில் பூமியடி நீரோட்டமாக, மாமாங்க சக்திகள் நிரவுகின்றன. மொத்தத்தில் பல ரோக தோஷங்கள், சந்ததிக் குற்றங்கள், பித்ரு சாபங்கள் நிவர்த்தி அடையவும், வருங்காலச் சந்ததிகள் நல்ல தெய்வீக பாதையில் நின்று திளைத்திடவும் மாமாங்க நீராடல் பெரிதும் துனை புரிகின்றது.

ஒவ்வொரு ராசிக்காரர்களும் இந்த 48 நாட்கள் கொண்ட ஒரு மண்டலத்திலும் நீராட வேண்டிய புனிதமான நேரமும் உண்டு. ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தம் (கடல்), ஒப்பிலியப்பன் கோயில் ஆலய அகோராத்ர தீர்த்தம், வேதாரண்யம் அகஸ்தியத் தீர்த்தம் (கடல்) போன்று மாமாங்க மண்டலத் திருநாட்களில் இரவும், பகலும் நீராடுவதற்கான விசேஷமான அனுமதியைப் பெற்றுள்ளதே மாமாங்கத் திருக்குளமாகும்.

எனவே இத்தகைய மாமாங்கத் தெய்வீக திருக்குளத்தைப் படகுப் பிராயணம் போன்று கேளிக்கைப் பொருளாக ஆக்கிடாது, இத்திருக்குளத்தில் மகரிஷிகளாக நிறைந்திருக்கும் மீன்களையும் பிடித்திடாது, அனைத்துத் துறையினரும் மக்களும் ஒன்று சேர்ந்து மகாமகத்  தீர்த்தத்தின் புனிதத்தைப் பேணிக் காத்திட வேண்டும்.

ஒருவருடைய வாழ்க்கையில் எத்தனை மாமாங்கங்களைக் கண்டிட்டாலும், வாஸ்து நாளும் பிரம்ம சாவர்ணி மனுத் திருநாளும், அமிர்தயோகமும், சித்தயோகமும் அமைந்த வாத்சல்ய வாஸ்தவ்ய மாமாங்கத் திருநாளாய்ப் பெறுவது பாக்யமோ பாக்யமாகும். இத்தகைய மாமாங்க மகத்துவ அரிய விளக்கங்களை, தம் சற்குரு நாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரிடமிருந்து பெற்று, பூலோக ஜீவன்களின் நலனுக்காக அளித்திடும் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.

வீட்டில் விளக்கேற்றும்போதும், லைட் சுவிட்ச் போடும்போதும் சொல்ல வேண்டிய மந்திரம்
தீபம் ஜோதி பரப்ரம்ஹம்
தீபம் ஸர்வ தமோபஹம்
தீபேன சாத்யதே ஸர்வம்
ஸர்வ தீப நமோஸ்துதே

கடந்த மாமாங்கத் திருநாளில் நம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாகக் கும்பகோணத்தில் அன்னதானமும், “மகாமக மஹிமை” என்ற புனிதமான நூலை வெளியிடும் பாக்யமும், ஸ்ரீகிராதமூர்த்தி, ஸ்ரீகும்பேஸ்வரர், ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீசாரங்க பாணி, மூர்த்திகளின் திருவருளால் கிட்டியது. வரும் மகாமகதினத்தை ஒட்டி, சித்தர்கள் அளிக்கின்ற பல அரிய விளக்கங்களுடன் மகாமக மஹிமை – தொகுதி 2 இறையருளால் வெளி வருகின்றது. இதில் மகாமக விளக்கங்களுடன், மாதந்தோறும் வரும் மக நட்சத்திர மகிமையும், ஆண்டுதோறும் வரும் மாசி மக மகிமையும் விளக்கப்பட்டுள்ளமையால், என்றும், எப்போதும், அனைவருக்கும், நம் சந்ததிகளுக்கும் பயன்படும் அரிய தெய்வீக நூல்! இதன் விற்பனைத் தொகை யாவும் திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தின் பல அரிய இறைப் பணிகளுக்கு அர்ப்பணம் ஆகின்றது.

மார்ச் 2004 பௌர்ணமி நாள் : 6.3.2004 சனிக்கிழமை விடியற்காலை 5.37 மணி முதல் 7.3.2004 ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 4.44 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள்: 6.3.2004 சனிக் கிழமை இரவு.

19.3.2004 வெள்ளிக்கிழமை விடியற்காலை 5.18மணி முதல் 20.3.2004 சனிக்கிழமை விடியற்காலை 4.30 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பங்குனி மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 19.3.2004 வெள்ளிக் கிழமை இரவு.

அமுத தாரைகள்

ஆசார அனுஷ்டான நியதிகளில், எச்சில் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றிருந்தாலும், எச்சில் இலைகளின் மீது அங்கப் பிரதட்சிணமாக வருகின்ற ‘மீந்திலைப் பிரசாத நேர்த்தி’‘ முறையில், அதே எச்சில் இலைகளே, எச்சமாகிய கர்ம வினைகளைப் போக்கிடும் அற்புத ஆன்ம சாதனமாய் மலர்ந்து, தர்ம நியதியாய் அமைவதும் அதியற்புத இறைலீலைதானே!

ஆயிரக் கணக்கானோருக்கு அன்னப் பிரசாதம் அளிக்கையில், எந்த இலையானது, மகரிஷிகள், சித்தர்களின் அருட்கரம் பட்டது என்பதை யாரறிவார்! இதற்காகவே, திருஅண்ணாமலை நம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தில், பௌர்ணமி அன்னதானத்தில், பிரசாதம் உண்ட அடியார்களின் மீந்திலைப் பிரசாத (எச்சில்) இலைகளை எடுத்துச் சுத்திகரிக்கும் அருட்கடாட்ச அறப்பணியை, கிரிவலம் வரும் பல உத்தம அடியார்களும், தாமாகவே எடுத்துச் செய்வதை இன்றும் காணலாம்.

மந்திரங்களை கிரகிக்கும் சக்தி, ஞாபக சக்தி, புத்தி வளரும். தத்தம் துறையிலேயே இருக்க உதவும். உதாரணமாக, கணக்கு படித்தோருக்கு அதிலேயே வேலை கிடைக்கும். 1008 முதல் 10008 முறை உரு ஏற்ற வேண்டும்.
மந்த்ரே தீர்த்தே த்விஜே தைவே
தைவக்ஞே பேஷஜே குரௌ
யாத்ருஷி பாவனா யஸ்ய
ஸித்திர் பவதி தாத்ருஷி:

‘எச்சில் இலை பொறுக்குதல்’ என்பதை ஒரு தாழ்வான செயல் என எண்ணாது, அன்னதானத்தில் இலை சுத்திகரிக்கும் பணியை அறப்பணியாக ஏற்றுச் செய்கையில் விசேஷமான புண்ய சக்தி கிட்டுவதுடன் அகங்காரம், ஆணவத்தைக் களையும் நல்மார்கமாகவும் அமைகிறது. இவ்வரிய அறப்பணியால், சந்ததிகள் நல்லொழுக்க முறையில் தழைத்துத் தலைமுறையும் நன்கு விருத்தியாகும். ஆண், பெண் சந்ததி இன்றி வருந்துவோர், தம் குறைகள் தீர நல்வழி காண்பர். பிறர் சொத்துக்களை ஏமாற்றி அனுபவிப்போர், தம் தீச்செயல்களுக்குப் பரிகார வழிமுறைகளைப் பெற்றிடலாம். பலத்த நோய்களால் பாதிக்கப்பட்டு மனம் வருந்துவோர் தக்க நிவாரண வழிகளைப் பெறுவர்.

வசதி உள்ளவர்கள், தங்கள் கடைகளிலும், ஆலயங்களிலும், பெரிய போர்டுகளை வைத்து, தினசரி கிரக சஞ்சார நிலையை, ஜாதகக் கட்டமாக அமைத்துப் பலரும் வழிபடும்படி செய்வதும் சிறந்த நவகிரக வழிபாடாகும். அதாவது கிரக கோசார சஞ்சார ஜாதகக் கட்டத்தில் தினந்தோறும் வானில் அந்தந்தக் கிரகம் இருக்கும் இடத்தைக் குறித்து வழிபடுதலால், அந்தந்த கிரக மூர்த்தியின் இருப்பிடத்திற்கே சென்று வழிபடுகின்ற அதிஅற்புதப் பலாபலன்களைப் பெற்றிடலாம்.

அன்பர்கள் அவரவர் ஊர் ஆலயத்தில் சூரிய, சந்திர பெயர்ச்சி முதல் அனைத்து கிரகப் பெயர்ச்சிகளையும் கொண்டாடி, உலக மக்கள் அனைவரின் மேன்மைக்காக ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சிச் சமுதாய பூஜையை நிறைவேற்ற வேண்டியது நம் பாரதப் பிரஜைகளின் தெய்வீகக் கடமையாகும். ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியைப் பற்றியும் நன்கு விளக்கி அனைத்து கிரகப் பெயர்ச்சிகளையும் மக்கள் கொண்டாடி நவகிரகங்களின் சக்தியைப் பெற வேண்டியது ஜோதிடர்களின் கடமையாகும். இதன் மூலம் அவர்கள் வாக்பலிதம், ஜோதிட அறிவு, தீர்க்க தரிசனம், கால ஞானம் நன்கு விருத்தியாகும். ஜோதிடத்தை வியாபாரமாகக் கொண்டு சேர்த்த கர்ம வினைகளும் குறையும்.!

ஸ்ரீகுறைகேள் நந்தி மூர்த்தி
கடுவெளி

சந்ததி இல்லாதோர், ஆண் அல்லது பெண் சந்ததி இல்லாதோர், இந்த 96 ஷண்ணாவதி திவச, தர்ப்பண நாட்களிலும் மகாமகத் திருக்குளத்தில் தர்ப்பணம், இத்திருத்தலத்தில் திவசம் அளித்து வர, சந்ததி விருத்திக்கு நல்வழி காண்பர்.

உயரமான கட்டிடங்கள், புது வீட்டு வேலைகளை ஆரம்பித்து விட்டு, பணமுடை, தடங்கல்கள், sanction கிட்டாமை போன்றவற்றால் முடிக்க இயலாது தவிப்போர், திருவையாறு அருகே உள்ளே கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரரை வேண்டி, மூன்று முகூர்த்த நாழிகைக்குத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகளும் ஆற்றி, கிழங்கு உணவு வகைகளை அன்னத்துடன், மந்தாரை இலை நிறைய வைத்துத் தானமாக அளித்து வந்திடத் தடங்கல்கள் நீங்கிட ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் அருள்புரிவார்.

எந்தத் தம்பதியருக்கு எவ்வளவு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பது முன்னரேயே ஆன்மீக ரீதியாக நிர்ணயிக்கப்பட்டதே! இவற்றைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றால் அதே கணவன் மனைவி உறவு முறை அமையும் வரை பிறவிகள் பெருகிப் பெருகி, பாக்கியாக உள்ள குழந்தைகள் பிறக்கும் வரை பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் உலக மக்கள் அனைவருக்குமான ஆன்மீக ரீதியான விதிமுறையாகும். திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்துக் குழந்தை பிறப்பதற்கும் இதன் காரணங்களுள் ஒன்றாகும்.

அயல் நாடுகளிலும் மற்றும் அடிக்கடி வன்முறை, சமுதாயக் கொந்தளிப்புகள் நிகழும் இடங்களிலும், வசிக்க வேண்டிய நிலையில் இருப்போர், சாந்தமான வாழ்வைப் பெறவும் காமதகன பூஜை தேவையானதே! தீவிரவாதம், பயங்கரமான வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய உலகத்தில், தீவினை சக்திகளை மாய்க்க உதவுவதும் இப்பூஜா பலன்களாகும். தீவிரவாதமும், வன்முறையும் காம வகையே ஆகும். இவை மாய்ந்து, நல்ல ஆன்மீகச் சார சக்திகள் நிரவிடவும், காமதகன பூஜை துணை புரிகின்றது.

மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு, முறையாகத் தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யத்தைத் தினந்தோறும் அளித்து வந்தால், அவர்கள் நல்ல மன வளர்ச்சியையும், உடல் வளர்ச்சியையும் பெறுவார்கள் என்பது ஆயுர்வேத மருத்துவ சக்தியாகும். மேலும், இது தோல் வியாதிகளை நீக்கி, மூளைத் திறனையும் மேம்படுத்தும். பஞ்ச கவ்யத்தால், இறை மூர்த்திகளுக்கு, வாரம் ஒரு முறையாவது, குறிப்பாகத் திங்கள் கிழமைகளில் அபிஷேகம் செய்து அதை ஆலய கோமுகப் பிரசாதமாகப் பெற்றுச் சிறிது அருந்தி வர, நோய் நிவாரண சக்திகளை உண்டாகும். இதை, வறண்டு போன ஆறுகளிலும், குளம், ஏரி இவைகளில் தெளித்தும் வர, மழைவளம் பெருகி, நிலத்தடி நீரும் பெருகும்.

உயிர் பிரிந்த உடலை, நாம் கழிவு என்று நினைத்து, அக்னியில் பஸ்மம் செய்யும் போது, அதிலும் சில விதமான காமதகனங்கள் ஏற்படுகின்றன. சடலத்தைப் பரிசுத்தமன அக்னியில் தகனம் செய்யாமல், பல பகுதிகள் பச்சையாகவே தேங்கிக் கிடந்தால், அதுவே விஷமாகி, பல நோய்களுக்கும் வித்திடுகின்றது.

கீழ்க்கண்ட மந்திரத்தை லட்சத்து எட்டு முறை உருவேற்றினால் “சர்வ மங்கள மாங்கல்யே...” சொல்லத் தகுதி வருகின்றது.
ரக்தோத்பல ஸமப்ரக்யாம் பதபத்ர நிபேஷணாம்
இஷிகார்முக புஷ்பௌக பாசாங்குச ஸமன்விதாம்
சுப்ரசன்னம் சசிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
ஷுப்ரபதா ஸனஸ்யாம் தாம் பஜாமி ஸர்வ மங்களாம்

“கருதரிக்கு முன்னலாம் காயம் நின்றதெவ்விடம்
உருதரிக்கு முன்னலாம் உயிர்ப்பு நின்றதெவ்விடம்
அரு(ட்)தரிக்கு முன்னலாம் ஆசை நின்றதெவ்விடம்
திருக்கருத்து கொண்டதே சிவாய மென்று கூறுவதே!”

“கருதரிக்கு முன்னலாம் காயம் நின்ற தேயுவில்
உருதரிக்கு முன்னலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருதரிக்கு முன்னலாம் ஆசை நின்ற வாயுவில்
திருகருத்து கொண்டதே சிவாய மென்று கூறுதே!”

என்று (சிவவாக்கியப்) பழந்தமிழ் வேதவாக்கியங்கள் சடலத்திற்கு அக்னி தகனமே சிறப்புடையது என்ற முக்கியமான தாத்பர்யமும் விளக்கப்படுகிறது. தற்காலத்தில் நிகழ்வது போல, மின்சார தகனம் என்பது ஆன்மீக ரீதியாக ஏற்புடையதல்ல. மின்சார தகனத்தில் கழிய வேண்டிய கழிவுகள், சரியாகக் கழிக்கப்படுவதில்லை. இதனால் வரும் சந்ததிகளுக்கு கழிவு பெறாக் கழிவுகளே வார்க்கப்படுவதால் அக்னி மூலமாக சடலத்தை பஸ்மம் செய்வதே சந்ததிகளுக்கு நல்வாழ்வைத் தரும்.

கிணறு, ஆறு, குளங்களில் நல்ல நீர் வளம், நீர்ச் சுரப்பு ஏற்பட, இத்தகைய கோமுகத் தேனபிஷேக தீர்த்தத்தை அமிர்த நேரத்தில் தெளித்து வர வேண்டும். சந்திர கிரணங்கள் மூலமாகவும் பூமிக்கு அமிர்த சக்திகள் கிட்டுவதுண்டு ! திருஅண்ணாமலையில் பௌர்ணமி உச்சமாக இருக்கின்ற இரவு நேரத்தில், மலையின் அனைத்துப் பகுதிகளிலும், கிரிவலப் பாதையிலும், பூமியடியிலும், நாம் நடந்து செல்லும் பரவெளி ஆகாசத்திலும், மலையில் இயற்கையாகத் தோன்றும் பிரகாசத்திலும் அமிர்த சுரப்பு நிரவுகின்றது. இதற்காகவே பௌர்ணமி கிரிவலம் மகத்துவமும் பெறுகின்றது.

திருச்சி அருகே உள்ள நீர்ப்பழனி ஸ்ரீவளர்ஒளி ஈஸ்வரர் சிவத்தலத்தில் உள்ள சந்திராமிர்த தீர்த்தமும் அமிர்த சக்தி நீரோட்டத்தை உடையது. இங்கு திங்கட்கிழமை அமிர்தயோகம் கூடிய நேரத்தில் பூஜித்தால் மனைவியின் உடல் நிலை பற்றிக் கவலைப்படுகின்ற கணவனின் மனத்துயர் தீர ஸ்ரீவளர்ஒளி ஈஸ்வரர் அருள்புரிகின்றார்.

ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தருடைய ஜீவாலயம் (கோட்டையூர்)

எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தருடைய ஜீவசமாதி, காரைக்குடியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கோட்டையூரில் அமைந்துள்ளது. கோட்டையூர் – அழகாபுரி சாலையில் நடந்து, ITI Institute எதிரே உட்புறம் செல்ல வேண்டும். புதுக்கோட்டை – திருமயம் – அரண்மனைப்பட்டி- கோட்டையூர் – காரைக்குடி பஸ் மார்கம் அருகிலேயே அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலம், சாக்கோட்டை ஸ்ரீஉய்யவந்த அம்பாள் ஆலயம், அமாவாசைத் தர்ப்பணத் தலமான நெடுங்குடியும் அமைந்துள்ளன.

தொடரும் ஆனந்தம் ...

ஆனேஸ்வரர் என்றால் யானைக்கு ஈஸ்வரர் என்ற பொருளும் உண்டு அல்லவா ? இந்தப் பொருளை விளக்கும் வண்ணம் யானை ஒன்றிற்கு ஈஸ்வரனாக விளங்கி துயர் தீர்த்த குரு கருணை நிகழ்ச்சி ஒன்றை இங்கு விவரிக்கிறோம். ஒரு முறை திருவிடைமருதூர் திருத்தலத்தில் நம் சற்குரு அடியார்களுடன் திருப்பணி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். மாலை திருப்பணி நிறைவுறும் சமயம் அங்குள்ள பிரகாரத்தில் உள்ள சித்திரங்கள் அமைந்த பகுதிகளை எல்லாம் நீர் பாய்ச்சி சுத்தம் செய்து கொண்டே வந்த நம் சற்குரு அங்கு நின்று கொண்டிருந்த கோயில் யானையைப் பார்த்தார். யானைப் பாகனிடம், “இந்த யானைக்கு குடிக்க நீர் கொடுக்கவா ?” என்று கேட்க அந்தப் பாகனும் சம்மதிக்க இதற்குள் இவர்கள் சம்பாஷணையைக் கேட்ட அந்த அறிவுள்ள யானையும் தன் வாயைத் திறந்து கொண்டு நின்றது. நம் சற்குருவும் கையில் இருந்த விசைக் குழாய் மூலம் அந்த யானையின் வாய்க்குள் தண்ணீரைப் பொழிந்தார். என்ன ஆச்சரியம் ... ஒரு பெரிய தொட்டியை நிரப்பும் அளவிற்கு நீரைக் குடித்த பின்னரே அந்த யானை அமைதி அடைந்தது.

யானைகள் தாங்களாக நீர் அருந்தும்போது தங்கள் துதிக்கையைப் பயன்படுத்தும் என்றாலும் மற்றவர்கள் உணவுக் கவளங்களை உருண்டையாக அளிக்கும்போது வாயைத் திறந்து அவைகளைப் பெற்றுக் கொள்ளும். அவ்வாறு நம் சற்குரு அளித்த நீரைப் பெறுவதற்கு வாயைத் திறந்த அந்த யானை தன் துதிக்கையை எப்படி வைத்துக் கொள்ளும் என்பதே சற்றே ஆத்ம விசாரம் செய்து அந்த காட்சியைக் கண் முன் கொண்டு வந்து தரிசிப்பீர்களேயானால் அந்த யானை தன் துதிக்கையை உயர்த்தி நம் சற்குருவை ஆசீர்வாதம் செய்யும் முறையில், கஜேந்திர கடாட்ச சக்திகளை அருளும் பாவத்தில் திகழும் என்ற உண்மை புரியவரும். இவ்வாறு பெறும் கஜேந்திர ஆசி சக்திகளை தம் பாக்கெட்டிலா வைத்துக் கொள்வார் நம் சற்குரு. அற்புத இந்த கஜேந்திர கடாட்ச சக்திகளை எல்லாம் தம் குருவருளால் மேலும் புனிதப்படுத்தி தம் அடியார்களுக்கு அளிப்பார் அல்லவா ? எனவே ஒரே ஒரு உழவாரப் பணியில் திரளும், திகழும் இறையருளைப் பற்றி நாம் புரிந்து கொள்ளவே எத்தனையோ பிறவிகள் தேவைப்படுமே !

சுழுமுனைபீட கஜேந்திர மூர்த்தி
ரெங்கநாதபுரம்

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மனிதர்களைப் போல் ஒவ்வொரு வாய் நீர் அருந்திய பின்னரும் வாயை மூடாது, நம் சற்குரு நீர் வார்க்க, வார்க்க சற்றும் வாயை மூடாது அந்த கோயில் யானை நீரை அருந்திக் கொண்டே இருந்ததுதான். வாயை மூடினால் ஒரு வேளை நீர் தரையில் விழுந்து வீணாகி விடும் என்று நினைத்ததோ என்னவோ அந்த புத்திசாலி யானை. இவ்வாறு யானைப் பாகனே அறியாத அந்த யானையின் நீர் வேட்கையைத் தீர்த்த ‘ஆனேஸ்வரர்’ நம் சற்குருதானே. ஒரு கோயில் யானையின் நீர் வேட்கையை உணர்ந்து ஓடோடிச் சென்ற நம் சற்குரு நம் ‘வேட்கையை‘ அறியாதவரா என்ன ? தேவை நம்பிக்கை, நம்பிக்கையே.

ஆனால், எந்த விஷயத்தையும் அனுபவித்துப் பார்த்தால்தானே அதன் சுவை தெரியும். தற்போது திருஅண்ணாமலையில் உள்ள அறுபத்து மூவர் மடத்தில் கார்த்திகை தீப அன்னதானம் நடந்து கொண்டிருந்த சமயம். மதியம் நல்ல வெயில். அந்த உச்சி வெயிலில் ஒரு அடியார் வரிசை (உணவு விநியோக க்யூ) அமைப்பதற்காக அங்கு பல குழிகளைத் தோண்டி கம்புகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு மிகுந்த தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இருந்தாலும் அந்தப் பணியை முடித்து விட்டு நீர் அருந்தலாம் என்ற எண்ணத்தில் வேலையை முடிப்பதில் தீவிரமாக இருந்தார். அப்போது, “தண்ணியைக் குடித்து விட்டு, வேலையைத் தொடரலாமே, சார்...”, என்ற தேனினும் இனிய குரல் தன் அருகில் கேட்கவே அந்த அடியார் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தார். ஒரு பெரிய டம்ளர் நிறைய நீரை வைத்துக் கொண்டு நம் சற்குரு அங்கிருந்து குரல் கொடுப்பதைக் கண்டார். அதுவே அவர் சற்குருவிடம் இருந்து பெற்ற முதல் ஆசீர்வாதம் ... இல்லை உபதேசமா ? ஆனால், இன்று வரை அந்த அடியார் நெஞ்சில் நிறைந்து, நெஞ்சில் ஈரமான உணர்வுகளை கொட்டிக் கொண்டே இருக்கிறது என்பதே ‘ஆனேஸ்வரர்’ திருக்கரங்களில் பொழிந்த அருளமுதம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam