கண்டங்களை நிவர்த்தி செய்வாள் கண்டவள நாயகி !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

பெரியவரிடம் அனைத்தையும் கொடுத்து விட்டு, பாரம் அனைத்தும் குறைந்த நிலையில், “ஹாய்யாக” பெரியவர் பின்னால் நடக்கலாம் என்று எண்ணிய சிறுவனுக்கு, பெரியவர் லாந்தர், மண்ணெண்ணெய் டின்களைத் தூக்கிக் கொண்டு இவ்வளவு வேகமாக முன்னால் நடப்பார் என்று சற்றும் எண்ணத் தோன்றவில்லையே!

இப்போது சற்று இருட்டத் தொடங்கினாலும், இன்னும் சிறிது நேரத்தில் நல்ல கும்மிருட்டு வரத் தொடங்கி விட்டால்.. லாந்தரின் வெளிச்சம் அவனுக்கு முன்னால் சிறிது தூரத்திற்கே தெரிந்தது. இருவருக்கும் உள்ள தூரம் பெரிதாக வந்தால் வெளிச்சமின்றி எப்படி நடப்பது?

சிறுவன் ஓரளவு தெரிந்த லாந்தர் வெளிச்சத்தில் நடப்பதற்கே மிகவும் தத்தளித்தான். “கல்லும் முள்ளும் கால் நகங்களைப் பெயர்த்திடுமோ” – என்ற அளவிற்குப் பாதையில் என்ன இருக்கின்றது என்று தெரியாது, தோராயமாகவே அவன் நடக்க வேண்டிய சூழ்நிலை!

இந்த இசையை மூன்று முறை
கேட்டும் உங்களுக்கு உறக்கம் வராவிட்டால்
நீங்கள் ஒரு சுயம்பு மூர்த்தியை
தினமும் 12 முறை வலம் வர வேண்டும் !

சில காலம் முன்பு பெரியவரோடு.. இமாலயப் பகுதியில் மணலி அருகேயும் அமர்நாத் செல்லும் வழியிலும், மானசரோவர் பாத யாத்திரையிலும் வெள்ளரிப் பழம் போல் நீண்டு, குண்டு, குண்டாக, நீட்டமான வாக்கில் அவனை வெருட்டிய பெரிய, பெரிய அட்டைகள் அவன் நினைவிற்கு வந்து இப்போது பயமுறுத்தின, பெரியவரோ அநாயசமாக பெருத்த அட்டைகளின் ஊடே நடந்தார். உண்மையில், அட்டைகள் இவரைப் பார்த்ததும் வழி விட்டன போலிருந்தது, அவனுக்கு நன்கு நினைவுக்கு வந்தது, அதைப் பார்க்கும் போது, வெள்ளியங்கிரிப் பயணம் எவ்வளவோ பரவாயில்லை போல் இருந்தது!

“சிவத் தொண்டிற்காக, சிவசேவைக்காக வெள்ளியங்கிரி வந்தவர்களுக்குக் கடவுள் இப்படியா சோதனைகளைக் கொடுப்பது?” என அவன் எண்ணிட்டான்.

சொல்லாமற் செய்வதே சிவசேவை!

பெரியவர் இதற்காகவே காத்திருந்தாற் போல் சற்றே நின்று திரும்பி, “எலேய்! நீ மனசுக்குள்ளாற பேசறதெல்லாம் வெள்ளியங்கிரியானுக்கு நல்லாவே தெரியும்டா! நீ இன்னமும் ஒண்ணுமே செய்ய ஆரம்பிக்கலை! அதுக்குள்ளாற ஏதோ “சிவ சேவை”, அது இதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டியே! உண்மையிலேயே சிவசேவை செய்யறவன் வாயாலேயோ, மனசுலேயோ எதுவுமே சொல்லாம, எதையுமே தன்னோட கடமையாச் செய்வான்னு தெரிஞ்சுக்கோ!”

சிறுவன் உஷாரானான், எனினும் உள்ளூரப் புலம்பல் ஓயவில்லை! தான் ‘பிரபஞ்சத்தில் பிரசித்தி பெற்ற, சித்த மஹாபுருஷரிடம் குருகுலவாசம் கொண்டிருக்கின்றோம் என்ற நினைப்பே அவனிடம் வரவில்லையே! இதையும் அவர் “மாயையாய்” மறைத்திட்டாரோ!

ரம்பாடாவில் “அப்பாடா” என ஓய்வோ

தளக்காவூர் மானகிரி

அவனுக்கு இப்போது கேதார்நாத் நடைப் பிரயாணத்தில் நிகழ்ந்த அனுபூதிகள் மீண்டும் உள்ளத்தில் மலர்ந்தன. கேதார்நாத் செல்லும் வழியில் முதலில் கீழே கௌரி குண்டத்தில் தங்கி, பிறகு நடுவில் ரம்பாடா என்ற இடத்தில் மேலே தங்க வேண்டும், ரம்பாடா மிக மிகச் சிறிய கிராமம்.

இங்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்த பெரியவரும் சிறுவனும், ஒரு கடை வாசலில் விரித்திருந்த வாடகைப் பந்தலில் இரவில் தங்கிட முடிவு செய்தனர். கபாலம் உறையுமளவு வெளியே ஒரே குளிர்மயம்! வாயால் பேசினால் டைப் அடிப்பது போல் உடல் நடுங்கும்!

குளிரடைக்கும் பந்தெலன்ன பந்தல், நான்கு குச்சிகளை நிறுத்தி வைத்து ஒரு படுதாவை விரித்து நான்கு புறமும் இழுத்துக் கட்டி இருந்தார்கள், அவ்வளவுதான்! சுற்றிலும் நான்கு புறமும் ஏதோ பழைய துணிமணிகளைக் கட்டி இருந்தார்கள். படுப்பதற்கு இரண்டு காலி எண்ணெய் டின்கள் மேல் ஏற்றப்பட்ட ஓட்டை உடைசல்களுடன் கூடிய பழைய பலகையே பெஞ்சும் ஆயிற்று!

“நீல் ஆம்ஸ்ட்ராங்கின்” சந்திர மண்டல யாத்திரை போல, பெரியவர் வாங்கிக் கொடுத்த புஸ் புஸ்ஸென்று வீங்கி இருக்கும் கம்பளி டிரஸ்ஸிற்குள் சிறுவன் நெளிந்து கிடந்தான். அவன் ஆயுளில் இவ்வளவு குளிரைப் பார்த்ததில்லை!

எப்படி, இப்படி சுவாமி?

பெரியவரோ வழக்கம் போல் இடுப்பில் கோவணத்துடன். .. வழுக்கைத் தலையில் தொப்பி கூட இல்லாது, கூடாரத்தின் வெளியில் ஒரு சிறு பலகையின் மேல் அமர்ந்து வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். நடுங்கும் குளிரில் ஒரு சிறிதும் நடுங்காது, வெறுங் கோவணாண்டியாய் வானம் பார்த்து அமர்ந்த பெரியவரை, வருவோர், போவோர் எல்லாம் பயபக்தியுடன் வணங்கினர்.

ஸ்ரீகண்டவள நாயகி
தளக்காவூர் மானகிரி

அவர்கள் அவரிடம் பலவிதமான மொழிகளில் ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க, இவரும் பஞ்சாபி, பெங்காலி, ஹிந்தி, மராத்தி என அவரவருடைய பாஷையிலேயே இலகுவாக பதில் அளித்தது அவனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. பலரும் அவரிடம், “இவ்வாறு கம்பளியில்லாமல் கோவணாண்டியாய் எவ்வாறு வெளியில் உலாவ முடிகின்றது?” என்று பலரும் கேட்டிட,

“கேதாரீஸ்வரன் அடியேனுக்கு என்ன வேண்டுமோ, அதை நிச்சயமாகக் கொடுப்பான்!”

“நான் சுத்த அத்வைதி, நிழலுக்கு கூட மரத்திற்குக் கீழே ஒதுங்க மாட்டேன்!”

“ஆத்மாவிற்குக் குளிரும், வெப்பமும் கிடையாது!”

“உங்கள் கண்ணுக்குத்தான் அடியே கோவணாண்டி! இறைவனின் பார்வையில் ஒரு பெரிய கோடீஸ்வரன்!”

என்று விதவிதமான பதில்களை சளைக்காமல் அளித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாய் இரவுப் பொழுது மெதுவாய், மெதுவாய் நகர்ந்தது.

விடியற்காலையில் அவர் சிறுவனை எழுப்பி விடவே, பெரியவருடன் விறு விறு என்று சிறுவன் மேலே நடக்கலானான். வெளியில் பனியோ பொல பொலவென்று கொட்டியது. எப்படித்தான் அவனால் அப்போது விரைவாக நடக்க முடிந்ததோ தெரியவில்லை.

சற்று விடிந்ததும் பனிக்கட்டியில் சூரிய வெளிச்சம் பட்டுப் “பளீர் பளீர்” என்று கண்ணைப் பறித்தது.

ஆங்காங்கே டீக்கடை இருக்கும் என்று எதிர்பார்த்த சிறுவனுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது!

வெள்ளியங்கிரிப் புனிதப் பயணத்தின் போது, சிறுவனுக்கு இத்தகைய கேதார்நாத் அனுபூதிகள் ஏன் நினைவிற்கு வரவேண்டும்? வெள்ளிப் பனித் தலையராகிய ஈஸ்வரன் இல்லாத இடமேது?

மலை மேல் மலையேறிய “மா”தவர்!

ரம்பாடாவைக் கடந்தவுடன், பெரியவர் வழியில் ஒரு பெரிய பாறை மேல் ஏறி, அங்கிருந்து ஓடி வந்த நீரோடை அருகே தனியே சென்று வானை நோக்கிப் பல முத்திரைகளைக் காட்டி ஏதேதோ சொல்லி, செய்து விட்டுத் திரும்பி வந்தார்!

சிறுவன் அவரை அப்பாவித்தனமாகப் பார்த்தான்!

வயிற்றுக்கு உணவா? செவிக்கு உணவா?

“நம்ப சித்தர்கள் வகை குரு ஸ்வாமிங்க செவ்வாய் மண்டலத்துலேந்து, குருமண்டல லோகத்துலேந்து பேசறாங்கடா!”

ஸ்ரீநந்தீஸ்வரர்
தளக்காவூர் மானகிரி

“ஏன் வாத்யாரே, இங்கேயே உட்கார்ந்த இடத்துலேந்தே மேலுலகத்துக்கு உன்னால பேச முடியாதா என்ன?”

அவன் எதைக் கண்டு அடிக்கடி பயப்படுவானோ, அஞ்சி அலறுவானோ அந்த அலாதியான அதீத “மௌனத்தை” எடுத்து அப்போது பெரியவர் மாட்டிக் கொண்டார்! சிறுவனும் இவ்வாறு அசட்டுத்தனமாகக் கேட்டு நன்கு “மாட்டிக்” கொண்டான்!

“ஏண்டா நாங்க ஒண்ணு செஞ்சா, அதுக்கு ஆயிரத்தெட்டு காரண காரியம் இருக்கும்னு உனக்கு ஆயிரத்தெட்டு வாட்டி சொல்லி இருக்கேனுல்ல! இன்னும் மாங்கா மடையனாவே இருக்கியே! இதையெல்லாம் நீயாத் தானே புரிஞ்சுக்கணும்? கீழேந்து, கௌரி குண்டத்துலேந்து (Gaurikunt) லொங்கு லொங்குன்னு மேல ஏறி நடந்து வந்து, கை வலிக்க, கால் வலிக்க, முட்டி தேய ஏறி, இவ்வளவு உயரத்தில் வந்ததும், இன்னும் மேல ஏறி ஒரு நீரோடை கிட்ட மட்டும்தான் ஒரு வானத்துலேந்து தெய்வீக விஷயம் வந்து சேரணும்னு எழுதி இருக்கறப்போ, தெய்வ சங்கல்பத்தை யாருட மாத்த முடியும்?”

“இந்த மாதிரித் தெய்வீகத் தகவலைக் கிடைக்க வக்கறதுக்கு ஆண்டவன் இவ்வளவு உயரம், இவ்வளவு தூரம் ஏற வைக்கறப்பொவே நல்லா யோசிச்சுப் பார்க்கணும்! இதுக்கெல்லாம் ஆயிரம் கோடிக் காரணம் இருக்கு, இப்ப நான் சொல்ல ஆரம்பிச்சா...”

“சரி, சரி, விடு! விடு! உனக்கு ஒண்ணும் இப்போதைக்குப் புரியாது!” பெரியவர் சற்றே நிறுத்தினார்!

அங்காரக மேடிது!

“இதுக்கு அங்காரக மேடுன்னு அதாவது செவ்வாய் மேடுன்னு பேருடா! நம்ப ஊருலே தேனிமலையில இந்த மாதிரி அங்காரக மேடு இருக்கு! செவ்வாய் கிரக தேவதா மூர்த்திகள், சித்தர்கள், மஹரிஷிகள் வந்து இறங்கற இடம்! சொன்னா யாரு நம்புவாங்க! நீயும் என்னோட தேனிமலைக்கு வந்திருக்கியே! அப்ப சொல்லாத தெய்வீக ரகசியத்தை இப்பச் சொல்லேறன்! ஏன்னா எதை எங்க சொல்லணுமோ, அதை அதை அங்கங்க சொல்றதுதான் ஆன்மீகம்!”

ஸ்ரீசர்வலட்சண விநாயகர்
தளக்காவூர் மானகிரி

இந்த “அங்காரக மேட்டுலதான்” செவ்வாய் (Mars) மண்டலத்துலேந்து தெனமும் நெறய தேவலோகப் பறக்கும் தட்டுகள் (flying saucers) வந்து இறங்கும். செவ்வாய் கிரஹ சித்தருங்க, மஹரிஷிங்க செவ்வாய் ஹோரை நேரத்துல இங்கே வந்து இறங்குவாங்க! நம்ப ஊரு நுங்கம்பாக்கத்துலயும், பங்களூர்லயும், ஹைதராபாத்துலயுமா அவங்க வந்து இறங்க முடியும்? ஏன்னா, பூலோகத்துல ஒரு சில இடங்கள்லதான் அவங்க வந்து இறங்கற மாதிரி சீதோஷ்ண பந்தனங்கள் இருக்கும். அது அதுக்குன்னு தெய்வீக வரைமுறைகள் நிறைய இருக்குடா தம்பீ!

“எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா மட்டும் போறாது.. அதைத் தெரிஞ்சுக்கறதுக்கான முறைகளைத் தெரிஞ்சு, தெய்வீகத்துல சுயநலமா இல்லாம, தியாகமயமா எல்லாருக்கும் பயன்படற மாதிரி வாழறதுக்கு நல்லா ட்ரெயின் ஆகணும் நைனா!”

செவ்வாய் உஷ்ணம் பல்லாயிரம் டிகிரியா?

“ஏன்னா, செவ்வாய் கிரகத்துலேயும் வாழறவங்க இருக்காங்க! செவ்வாய் கிரக மனுஷங்களோட உடம்பு உஷ்ணமும் குறைஞ்சது 10,000 டிகிரி இருக்கும்! வேற எங்கேயாவது அவங்க இறங்கினா, அவங்களோட கால் நகம் கொஞ்சம் பட்டாக் கூட, தாங்க முடியாத உஷ்ணத்துல, அங்கே தரை பிளந்துக்கும்!”

“தேனிமலை மாதிரி, செவ்வாய் கிரகத்துலேந்து அங்காரக தேவதைங்க வர்ற இடமும் கேதார்நாத்துல இதுதான்! அவங்க உடம்பு உஷ்ணமோ லட்சோப லட்சம் டிகிரியா இருக்கும்! அவங்க ரோமம் கொஞ்சம் பட்டாக் கூட, அங்கே இருக்கற பாறை, கல் எல்லாமே பஸ்மமாயிடும்!”

“இதெல்லாம் நம்மால நெனச்சுப் பார்க்கக் கூட முடியாதுடா! எடுத்துச் சொன்னாலும் கட்டுக் கதைன்னு சொல்லிடுவாங்க! இப்ப நான் செஞ்சு காட்டின முத்திரை எல்லாம், செவ்வாய் கிரஹ தேவதைங்களோட தேவ முத்திரை மொழி! உத்தம தெய்வீக நிலைகள் வர வர, அங்க வாய் வார்த்தைக்கு வேலையே கிடையாதுடா! உபதேசம் கூடக் கிடையாது! எல்லாம் முத்திரை மொழிதான்! அதுதான் தட்சிணா மூர்த்தி சின்மய முத்திரையாக் காட்டறாரு! ஒவ்வொரு முத்திரைக்கும் கோடி, கோடி அர்த்தங்கள் இருக்கும்!”

ஸ்ரீபிரதோஷ நாயகர்
மானகிரி

“நம்ப உள்ளங்கையிலேயே செவ்வாய் மேடு இருக்கே, அதுல வர்ற ஒளியை வச்சு, முத்திரைகளை மாத்தி, ஒளி பாவனைகளை உருவாக்கி, ஞானப் பூர்வமா நெறய உணர்ந்துக்கலாம்., ஒரு முறை இந்த முத்திரையைப் போட்டா, அதுல குறைஞ்சது 12000 ஒளி அட்சரங்கள் சங்கமமாகும். இந்த முத்திரை சங்கேத தேவமொழிக்கு அதிபதிங்க தான் தட்சிணா மூர்த்திக்குக் கீழே இருக்கற சனகாதி மாமுனிவருங்க!”

இதே போல் இன்னொரு இடத்திலும் “அங்காரக கிரந்தி மேடு” என்றுரைத்து, அவ்விடத்திலும் சற்றுக் கஷ்டப்பட்டு மேலே ஏறி விண்ணுலகத்தாரோடு உரையாடி வந்தார்!

சிறுவனுக்குக் கேதார்நாத்தில் கிட்டிய முத்திரை ஞானப் பாடமிது! இதற்காக 1,200 மைல்கள் க(ந)டந்து 15,000 அடி ஏறி இறங்கியாக வேண்டும்!

ஆனால் இதனை இப்போது இந்த குருகுலவாச அனுபூதி மூலம் நீங்கள் ஒரு சில நிமிடங்களில் பெற்று விட்டீர்கள் தானே! என்னே பாக்யம்! அனைத்தும் சற்குரு கருணையே!

நான்கு மனுக்காலத் தொன்மை மலை!

“ஏண்டாப்பா கேதார்நாத் போய்ட்டு வந்தாச்சா!” பெரியவரின் இந்த கேள்வி உலுக்கலில்தான் சிறுவன், தன் நிலை மீண்டு வெள்ளியங்கிரிக்கு வந்தான். பெரியவர், இப்போது இருளில் சற்று ஆயாசமாக அமர்ந்தார்.

“இந்த வெள்ளியங்கிரி பூலோக மக்கள் தரிசனத்துக்குன்னு நான்கு மனுக் காலமா இருக்குதுப்பா! நாலும் யுகம் சேர்ந்தது ஒரு மனுக்காலம். கிருத யுகத்தில் “வண்ணப் பிரதாபன்” என்ற இந்திரன் காலத்துல, பட்டி முனிவர் இந்த மலையை மரகதப் பச்சையா, மரகத வெள்ளியங் கிரியா தரிசனம் பண்ணி இருக்காரு!”

“திரேதா யுகத்தில, ஹரிச்சந்திரன் காலத்துல, வேத வியாசர், கோமுனிச் சித்தர் பூஜிக்கும் போது, இந்த வெள்ளியங்கிரி, பசும்பொன் மரகத கிரியா இருந்தது. அற்புதமான தங்கக் கட்டிகளை வெட்டி எடுக்கலாம். ஆனால், அப்போ தங்கத்துக்கு ஆசைப்பட்டவங்க யாருமே கிடையாது. அதானல தங்க மலையா, கடைசி வரைக்கும் அப்படியே ஸ்வர்ண மலையா இருந்தது. துவாபர யுகத்துல சந்தனு மகாராஜா காலத்துல ஏகபாத முனிவர் இந்த மலையைத் தாமிர மலையா இருக்கக் கண்டார். இந்த கலியுகத்துல, இந்த மலையில் தினமும் நவகோடிச் சித்தர்கள் இங்கே தினமும் வந்து வாசம் செய்யறாங்க! இங்கேந்துதான் தினமும் பல லோகங்களுக்கும் போறாங்க!”

ஸ்ரீமுருகப் பெருமான்
மானகிரி

மூலிகை, சமூலம் முத்தான மாமலையில்!

“ரசவாதக் காரிய சித்தி மூலங்கள், 64 சித்து கனகக் குளிகைகள், கர்ண சூடா மூலிகைகள், பத்து மாத்திர குத்துச் செடிகள், பூத வேதாள வேர் மடக்கிகள், அஷ்ட துரித ச்ருங்கார மூலிகைகள், தன விருட்சம், அருண விருட்சம், சுவர்ண விருட்சம், துரிதராஜ போக விருட்சம், யெளவன யோக விருட்சம், ஆட்டுக்கால் கிழங்கு – இந்த மாதிரி நெறைய அற்புதமான மரங்களும், மூலிகைகளும் நிறைஞ்ச இடம்!”

இவ்வாறு அவர் சொல்லி வரும் போதே தூரத்தில் பறக்கும் தட்டு போன்ற ஒன்று இறங்கக் கண்டான் சிறுவன்! அதைச் சுற்றிலும் சூரியனையே நிறுத்தி வைத்தாற் போல் பேரொளி சூழ்ந்து நின்றது.

சிறுவன் பெரியவரின் தெய்வீக உரையைக் கேட்பதை விட்டு விட்டு, பறக்குந் தட்டு அதிசயக் காட்சியால் உந்தப்பட்டு, வெகு வேகமாக எழுந்து நின்று அதை எட்டி, எட்டிப் பார்க்கலானான்.

“கண்ணா, இதையெல்லாம் பார்க்கற தெய்வீக சக்தியைக் கத்துக் கொடுத்த மூலத்தை விட்டுட்டு எங்கேடா போறே? அடிக்கடி உனக்குக் கலியுக அரைகுறை அறிவோட மனுஷ புத்தி வந்துடுதே! (இறைப்) பகுத்தறிவோட வேலை செய்யணும்டா!” – என்று சிரித்துக் கொண்டே கூறிய பெரியவர், அவன் கையைப் பிடித்து அமர வைத்தார்!

தன் செயலுக்காகச் சிறுவன் வெட்கித் தலையைக் குனிந்து கொண்டான்!

“(உள்ளம்) சும்மா” இருப்பது சுகமே...

ஒருபுறம் பறக்கும் தட்டு வந்து இறங்கிக் கொண்டிருக்க, பெரியவரோ எதையுமே கண்டும் காணாதவர் போல் பேச்சைத் தொடர்ந்தார்.!

அருகில் சூரியனே வந்து இறங்கியது போல் ஒளி வெள்ளம் பெருகிக் கிடக்க, இவரால் எப்படி, இப்படி அமைதியாக இருக்க முடிகின்றது?

“அதுதாண்டா, அடிக்கடி ஒண்ணு சொல்லுவேனே, அடுத்தது என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்குற பகுத்தறிவுப் பக்குவம் வந்திடுச்சுன்னா, எல்லாமே இறைவன் செயல்னு மனசு ஏத்துக்கிட்டு, “சும்மா” கிடக்கும்! இதுதான் வள்ளலார் சுவாமிகள் சொன்ன சும்மா இருப்பதே சுகம்கறதுக்கான புனிதமான அர்த்தம்!”

பெரியவர் பளிச்சென்று உரைத்திட்டார்.

“சரி, சரி நம்ப சப்ஜெக்டுக்கு வா! இந்த வெள்ளியங்கிரிக்குத் தென் கைலாயம்னு பேரு! பல மகான்கள் முக்தி பெற்ற மலை! பல மஹான்களை உருவாக்கிய மலை! சித்தர்கள், மஹரிஷிங்க கிட்டே இந்த மலையிலே ஆசி வாங்கறது ரொம்ப ரொம்ப விசேஷம்! அகஸ்தியர் தினமும் வர்ற இடம்! ஆதிசேஷன் வாசம் செய்யற சேஷதி கற்பக விருட்சமும் இங்கேதான் இருக்கு!”

தற்போது மீண்டும் மலை ஏறலானார் பெரியவர்! என்னமோ தெரியவில்லை பறக்குந் தட்டு ஆர்வம் அவனிடமிருந்து பஞ்சாய்ப் பறந்து விட்டது! எனவே, அவன் (உள்ளம்) “சும்மாவே” கிடந்தாற் போல் அவருடன் மலை ஏறலானான்!

“ஜோதிஷத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இந்த மலையில நிறைய நடக்கும்டா கண்ணு! ஏன்னா, ஜோதிடம் காலம், கோள் சம்பந்தப்பட்டது. ஆனா இதெல்லாம் வரதுக்கு முன்னாடியே வெள்ளியங்கிரி பொறந்துடிச்சே!”

பெரியவர் கலகலவென்று சிரித்தார்!

“அப்படி என்ன வாத்யாரே ஜோதிடத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் இங்கே நடந்திருக்குது, சொல்லு பார்ப்போம்!”

“ஏண்டாப்பா ஏதாச்சும் அற்புதம் நடந்தாத்தான் கடவுளை மனசு ஏத்துக்குமோ! ஏதேது, ஐயா வெள்ளியங்கிரி மலை ஏர்றதுக்கு முன்னாடியே என்ன வேகமா கேள்வி எல்லாம் வருது! என்னடா பண்றது, நீயும் எல்லா யுகத்தையும் என்னோட, சேர்ந்து பார்த்துட்டு ஞாபக மறதியோட, கலியுகத்துக்கு வந்திருக்கே! கலியுகத்துல எல்லாருக்கும் கேள்வி கேட்கத்தான் தெரியும்!”

“சரி சரி.... மேட்டுப்பாளையத்தில பழனிசாமினு ஒரு பெரியவர் இருந்தாரு, அவருக்குத் தண்ணீல கண்டம்னு ஜோஸ்யத்துல வந்தது! அன்னிலேந்து குளம், குட்டை, கிணறு, ஆறு, ஏரி, நதி இது பக்கமே அவரு தலை காட்டறதே கிடையாது! எப்பவுமே நீச்சல் தெரிஞ்ச ரெண்டு பேரைப் பக்கத்துலேயே வச்சுக்கிட்டாரு! இந்த மாதிரி தண்ணீல கண்டம்னு ஜோஸ்யர் சொன்ன குறிப்பிட்ட காலம் வரை ரொம்பவும் கவனமாக இருந்தாரு! சொன்ன காலம் முடியும் வரை அவர் எந்த ரிஸ்க்குமே தண்ணிப் பக்கமே எடுக்கலை!”

“ஒரு நாள் அப்பா வேலப்பனோடு, பழனிசாமி, வைதேகி நீர்வீழ்ச்சிக்குப் போனார். அதைச் சின்னக் குத்தாலம்னு அப்ப சொல்வாங்க., முதல்ல வேலப்பன் குளிச்சிட்டு, பிறகு பழனிசாமியைப் போகச் சொன்னார். அப்போ பழனிசாமி திடீர்னு வழுக்கி விழுந்துட்டாரு! சின்ன நீரோட்டம்தான், ஆனா பழனிசாமியை கண்ணிலேயே காணலை!”

“வெள்ளியங்கிரி அப்பா மனோன்மணித் தாயே!”ன்னு கத்திக் கிட்டே வெள்ளியங்கிரி மலை மேல ஒரு வெறியோட வேலப்பன் ஏறினாரு! அவர் வயசுக்கு அவர் அவ்வளவு வேகமா, வெறியா ஏர்றதைப் பார்த்து “என்னமோ, ஏதோன்னு” ஒரு கூட்டமே பின்னாடி தெரண்டு வந்துச்சு! இங்கே வட்டப் பாறைன்னு ஒரு இடம் இருக்கு, அதுக்கிட்ட வந்ததும் வேலப்பனுக்கு ஒரே ஆச்சரியம்!”

பெரியவர் சற்றே நிறுத்தினார்..

“ஏண்டா உனக்குப் பசிக்கலை?”

சிறுவனுக்கு அவர் சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தியது சற்றும் பிடிக்கவில்லை! ஆனால் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

“ஆமாம், பசி வந்து போய் பசியையே தின்னுடிச்சு, இப்பக் கேட்டு என்ன பண்றதாம்?” சிறுவன் மெலியதாய் முணுமுணுத்தான்..

“இதோ பாருடா, இந்த மூலிகைதான் பசி தின்னாப் பாளைச் செடி! நல்லாவே கசக்கும், இனிக்கும், புளிக்கும், சின்ன மந்திரம் சொல்லி வடக்கே பார்த்து நின்னுக் கிட்டு, ஒரு அரை இலையைத் தின்னாப் போதும், ஆறு நாளைக்குப் பசிக்காது, நல்லா தென்பாவே இருக்கும்! இப்ப என்ன சொல்றே!”

சிறுவன் அவரை விநோதமாகப் பார்த்தான்! அனைத்தும் அறிந்த இவரை எந்த ஸ்தானத்தில் வைப்பது?

ஆனந்த அனுபூதிகள் தொடரும்...

ஆந்தை வணங்கியார் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்! கார்த்திகை மாத சிவராத்திரி நாள் – ஆந்தை வணங்கியார் சித்தர் அருணாசல கிரிவலம் வரும் மாத சிவராத்திரி மஹிமை!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

சமீப காலத்தில் திருஅண்ணாமலையில் உறைந்த சித்தர்கள், யோகிகள், மஹான்களைப் பற்றியே பலரும் அறிவர். இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையிற் செறிந்து, ஜாதி, மத பேதமின்றி அனைவர்க்கும் அருள்வழி காட்டிய சித்தர்கள், மாமுனிகள், யோகியர் நிறைய உண்டு. இவ்வாறு மக்கள் சமுதாயத்தில் உறைந்து கூட இருந்தே வழி காட்டிய எண்ணற்ற திருஅண்ணாமலை வாழ்ச் சித்தர்கள், மஹான்களைக் கலியுக மக்கள் சமுதாயம் மறந்து விட்டது. அவர்களைப் பற்றி இத்தொடரில் அளிக்கின்றோம்.

தினமுமே எண்ணற்ற சித்தர்களும், மாமுனிகளும், யோகியரும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். மக்களும் அறியும் வகையில் சமுதாயத்தில் மக்களோடு மக்களாய் உறைந்து அருள்வோர் ஒரு சிலரே! கலியுக மக்கள் சமுதாயத்தில் சத்குருமார்களை மதித்துப் போற்றும் மாண்பு மங்கி, அதர்மமும், வன்முறையும், தீவினைகளும் பெருத்து வருவதால், மக்களால் அறியப் பெற்ற மஹான்களும் ஒவ்வொருவராக பூமியை விட்டுப் புறப்பட்டுவிடுகின்ற நிலை ஏற்படுகின்றது. சத்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கை பூண்டோர்க்கு அவர்கள் எங்கிருந்தாலும் தெய்வ நெறிமுறைகளை ஆசியாக அருளப் பெற்று, ஆன்மீகத்தில் நன்கு வழிகாட்டப் பெறுவர்.!

ஜீவநலப் பணிகளில் அஃறிணை உயிர்களின் பா(ப)ங்கு!

இறைவனின் படைப்பில் அனைத்து ஜீவன்களும் ஒவ்வொரு வகையில் மேன்மை கொண்டவையே! ஆனால் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் மகத்துவத்தை, ஜீவ சிருஷ்டி ரகசியத்தை உணரும் பகுத்தறிவைப் பெற்றிருந்தும், மனிதன் இதனை முறையாக நன்கு பயன்படுத்தவில்லை. உதாரணமாக, உத்தமச் சங்கு பூச்சிகளின் புனிதமான திருஉடல் ஓடாய் வரும் சங்குகள் பலவும் மகத்தான தெய்வீக சக்திகளைக் கொண்டதேயாம். எனினும் தற்கால விஞ்ஞானமய உலக மனிதனால் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்குத் தெய்வீக சக்திகளைப் பூண்டிருக்கும் சங்குகள், தம் ஆன்ம சக்திகளைத் தமக்கென்று ஒரு போதும் பயன்படுத்துவதில்லை.

மனிதனுடைய உடல் அவனுடைய மரணத்திற்குப் பிறகு மண்ணில் புதைந்தோ, அக்னிக்கு இரையாகவோ ஆகி விடுகின்றது. ஆனால் ஒரு சங்குப் பூச்சி மறைந்தாலும், அதனுடைய புனிதமான ஓட்டு வடிவு, ஆலயங்களிலும், பூஜைகளிலும், ஹோமங்களிலும், தர்ப்பணங்களிலும் மிகவும் ஆன்ம சக்தி வாய்ந்ததாகப் பயன்படுகின்றது எனில் என்னே சங்கின் மகத்துவமும், மஹிமையும்!

ஒளியின்றிக் காண வல்ல ஒப்பற்றப் பறவை!

பூவுலகின் ஒவ்வொரு உயிரினத்தினிடமும் எண்ணற்ற ஆன்ம சக்திகள் நிறைந்துள்ளன. இவ்வகையில் இரவில், இருட்டில் நன்கு பார்க்க வல்ல தன்மையைப் பெற்றுள்ளவையே பறவைகளில் ஆந்தை இனமாகும். நள்ளிரவிலும் கூர்ந்து எதனையும் பார்த்து அறிய வல்லவையே ஆந்தைகளாகும். கலியுக நடை வழக்கில் ஆந்தையைப் பற்றிப் பல தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. இது தவறான அணுகு முறை.

எது எதனுடன் சேர்ந்தால் சுபசகுனமாகும், மங்கள சக்திகளையும் தரும், எது எதனுடன் சேர்ந்தால் சுபசகுனம் ஆகாது என்பதற்கெல்லாமான ஆன்மீக நெறி முறைகள் உண்டு. உண்மையில், ஆந்தையை எந்தெந்த மரத்தில் வைத்துப் பார்த்தால் எவ்வகைச் சகுனம் அமையுமென அறியும் சாத்திர வழிமுறைகளும் உண்டு. ஆந்தையில் பொதிந்திருக்கும் தேவசக்திகளை மனிதகுலம் பெறுவதற்காகத்தான் பஞ்சபட்சிச் சாத்திரம் என்ற சோதிடச் சகுன, கணித முறையும் உண்டு.

ஆந்தையின் கண்களில் சாட்ச்யுதம் என்ற அரிய நேத்ர வியூக சக்திகள் துலங்குகின்றன! ஏனைய ஜீவன்கள் அனைத்தையும் விட ஊர்ந்து செல்கின்ற சிறு புழுவையும் கூடக் காணவல்லதான ஆந்தைக்கு, இரவில் நன்கு பார்க்கும் அதியுற்புத நேத்திரப் பரிபாலன சக்திகளும் நிறைய உண்டு.

நாமறியா, நம்மால் அறிய இயலா இரவு – பகல் விளக்கங்கள்

பகல், இரவுத் தத்துவார்த்தங்களும், தேவ ரகசியங்களும், அரிய ஆன்மீக விளக்கங்களும் நிறைய உண்டு. இவை பலவும் கலியுக மனிதப் பகுத்தறிவினால் உணர இயலாதவை! இவையாவும் உத்தம தெய்வீக நிலைகளில், அதுவும் சற்குருமார்கள் மூலமாகத்தான் முழுமையாக உணரப் பெறுவதாகும். உதாரணமாக, இரவுத் தன்மை என்பது சூரியனின் மறைவினால் ஏற்படும் ஒளியற்ற, வெளிச்சமற்ற நிலை மட்டுமன்று! மேலும் கண்களால் பார்த்திட ஒளி வேண்டும் என்பது அவசியமில்லை! கண்களை மூடிய நிலையில் எதிரில் நடப்பதையும் கண்ணுக்கு எட்டாத் தொலைவில் நிகழ்வதையும் எளிதில் நேத்திர யோகப் பூர்வமாக அறிய முடியும். ஆனால் இத்தகைய அரிய உண்மைகளை எடுத்துரைத்தால் மனித மனம் ஏற்குமா, அல்லது விஞ்ஞானம் தான் ஒத்துக் கொள்ளுமா? எனவே  ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஆன்மீகத்தை நாடுவோர்க்கே இத்தகைய சாசுவதமான தெய்வீகப் பொக்கிஷங்கள் அருளப் பெறும்.

திருஅண்ணாமலையில், அமாவாசைக்கு முதல் நாளான மாத சிவராத்திரியில், நல்ல இருட்டில் பக்திப் பூர்வமாகக் கிரிவலம் இயற்கையான திருஅண்ணாமலையைச் சுற்றி, இயற்கையான ஒளிப் பிழம்பு சூழ்ந்திருப்பதை இன்றும், என்றும் காணலாம்.

இரவிலும் ஒளி உண்டு! ஒளியற்ற நிலை இரவல்ல!

ஒளி இல்லாத இரவிலும், இரவிற்கான இருட்டுக் குணங்களிலும், பல ஒளிக் கிரணக் குணங்கள் நிறையவே உண்டு. இதை வைத்தே, தற்போது விஞ்ஞான ரீதியாக, இருளிலும் படமெடுக்கும் காமெராச் சித்தாந்தங்கள் அமைகின்றன.

அதாவது இருளிலும் ஒளி உண்டு. மின்மினிப் பூச்சி இயற்கையிலேயே ஒளிக் கிரணங்களை உமிழ்கின்றது. இந்த ஒளிக்கு பாமதிப் பிரகாசம் என்று பெயர். மின்மினிப் பூச்சியைக் காணுகையில்,

“பாமதி ஸ்ரீப்ரகாச,
வகுளாபரண வாரதீய
க்ஷேமபுல ஸ்ரீதத்த ப்ரம்ம ஸ்ரீஹரி:”

என்று ஓதிட, பாமதிப் பிரகாசக் கிரணங்களை பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காகக் கிரகித்துத் தர முடியும்.

உண்மையில் பகல், இரவு காலப் பாகுபாடு விளக்கங்கள் நாம் வாழும் பூவுலகிற்கே! பிற லோகங்களில் பகல், இரவுக்கான கணித, கால அளவை, இலக்கண முறைகள் மாறுபடும். ஏனெனில், வேறு சில பூமிகளில், நம் பூமிக்கு உள்ளது போல, ஒரு சூரியன் மட்டுமே அல்லாது, ஒன்றுக்கு மேற்பட்டு சூரிய, சந்திரக் கோள ஒளி வீச்சு உண்டு என்பதால், அங்கெல்லாம் 24 மணி நேரக் கால அளவை இல்லாது, வேறுவிதமான கால அட்டவணைகள் ஆங்கே நடைமுறையில் உள்ளன.

மேலும், சில லோகங்களில் இரவு, பகலற்ற ஜீவ வாழ்வு நிலையும் உண்டு. ஆனால், இதனைப் பகுத்துணரும் அளவிற்குக் கலியுக மனிதன் நன்கு பகுத்தறிவுப் பரிமாணம் பெற வேண்டுமே! தக்க சற்குருதாம் இத்தகைய அனைத்துலக ஞானத்தை அளிக்க வல்ல மெய்ஞ்ஞானம் பெற்றவராவார் என்பதை உலகத்தார் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒளியற்ற ஒளி நிலைக் காலம் உண்டே!

எனவே, சூரிய மறைவினால் அல்லது ஒளி இல்லாமையால் மட்டுமே இருட்டு ஏற்படுகின்றது என்ற நியதி, நாம் வாழும் பூவுலகிற்கு மட்டுமே என அறிக! பகல், இருட்டு என்பது நம் பூவுலகில் ஒளியைச் சார்ந்த கால நியதி! வேறு சில லோகங்களில் இரவே இல்லாத போது, ஒளியற்ற ஒளி நிலையே ஆங்கே நிலவுகின்றது. ஆம், ஒளி இல்லையெனில் என்ற நம் பூலோக விதி அங்கு செல்லுபடி ஆகாது.

மேலும் நம் பூமியில், அந்தந்த மனிதனின் – கண்களைத் திறந்த விழிப்பு நிலையில் மட்டுமே – இந்த பகல், இரவு, இருள், ஒளி காலநிலை நியதிகள் படிந்து வரும். ஆனால், நாம் வாழும் பூமியிலேயே, மனிதனுடைய உறக்க நிலையில் இரவு, பகல் அம்சங்களே முற்றிலும் மாறுபடுவதாகும். உறக்கத்தில் எத்தகைய ஒளி பொருந்திய, வெளிச்சமான சம்பவங்களை மனிதன் உணர்கின்றான், அனுபவிக்கின்றான் என்பதிலும் எத்தனையோ காலயோக ரகசியங்கள் அடங்கி உள்ளன!

பார்க்கும் தன்மைக்குப் பரந்த ஒளி தேவையன்று!

ஒரு புறத்தில் விஞ்ஞானமோ, ஒளியின்றி, எதனையும் பார்க்க இயலாது என உரைக்கின்றது. எனினும் ஒளியற்ற நிலையில் பார்க்க வல்ல நேத்ர நாளத் தன்மைகள் பல உயிரினங்களுக்கு, குறிப்பாக, ஆந்தைகளுக்கு, மீன்களுக்கு, ஆமைகளுக்கு உண்டு. பகலிலேயே நட்சத்திரங்களைத் தரிசிக்கும் வல்லமையைச் சித்தர்களும், மஹரிஷிகளும் பெற்றுள்ளனர். சில வகை யோக சக்திகளைப் பூண்ட பூலோக மனிதர்களுக்கும், ஒளியின்றியும் பார்க்க வல்ல மற்றும் எத்தனையோ இடங்களில், பிற லோகங்களில், நட்சத்திர மண்டலங்களில் நிகழ்வதையும் அறிய வல்ல சக்திகளும் உண்டு.

ஆந்தையில் பதியும் அற்புத நேத்ர சக்திகள்

ஆந்தையோ இருளிலும் நன்கு பார்க்க வல்லது என நாம் நன்கு அறிவோம். இதற்குக் காரணம், ஆந்தையின் கண்களில் பதிந்துள்ள ஔபராதி நேத்ரசக்தி நாளங்களாகும். நாயும், பூனையும் அவ்வப்போது மூலிகைளைக் கடித்து உண்பதைப் பார்த்து இருக்கின்றீர்கள் அல்லவா! மாமிச பட்சிணியாக இருப்பினும், ஒவ்வொரு ஆந்தையும், தினமும் நேத்திரச் சுழிப்புழி எனும் அரிய மூலிகையின் இலைகளைத் அலகுகளால் கசக்கி, மூலிகைச் சாறாக ஒரு சில துளிகளை அருந்திடும்.

பொதுவாக, இந்த நேத்திரச் சுழிப்புழி மூலிகை கிடைக்கும் இடங்களில்தான் ஆந்தைகள் அதிகமாக வாழும் வாசம் அமையும். ஆந்தைகளுக்குப் பகலில் கண் தெரியாது என்பது தவறான கருத்து. மேலும், கண் பார்வை என்பது, அந்தந்த ஜீவனின் பிரம்ம சிருஷ்டி அங்க லட்சணத் தத்துவப்படி அமைவதாகும். பல்லாயிரம் அடிகள் உயரத்திலிருந்து பூமியில் தரையில் இடப்பதை, கருடன், கழுகு போன்ற பறவைகள் கூர்மையாகப் பார்க்கும் அரிய நேத்ர சக்திகளைக் கொண்டுள்ளன. இவ்வகையில் ஆறறிவுப் பகுத்தறிவு உடையவனாய்த் துலங்கும் மனித குலத்தை விடப் பிற ஜீவன்கள் எத்தனையோ சக்திகளை, ஆற்றல்களைக் கொண்டுள்ளன.

ஆந்தைகள் கிரிவலம் வரும் உத்தம மாதச் சிவராத்திரி தினம்

ஆந்தை வணங்கியார் என்ற காரணப் பெயரைப் பூண்ட சித்தர்பிரான், தமக்குரிய பிற இறைப் பணிகளோடு, ஆந்தைகள் குலத்திற்குச் சத்குருவாய் மலர்ந்து மேன்மை தர அருட்பணி ஆற்றவும் தோன்றியவராவார். குறித்ததோர் யுகத்தில், ஆந்தைகள் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து, இச்சித்தர்பிரானை நாடித் தங்கள் குலத்திற்கு நல்வழி காட்ட வேண்டினர். ஆந்தை வணங்கியாரும், பல்லாயிரக் கணக்கான ஆந்தைகளுடன், அருணாசல மலையைக் கிரிவலம் வந்த புனித நாளே, ஒரு யுகத்தின் கார்த்திகை மாதச் சிவராத்திரி ஆகும்.

இந்நாளில் இந்த மாதச் சிவராத்திரியில் பூவுலகின் பல்வேறு பகுதிகள், நாடுகள், கண்டங்கள், கோள்களில் இருந்து எண்ணற்ற ஆந்தைகள் தூல, சூக்கும வடிவுகளில் வந்து கிரிவலம் புரிந்து ஆந்தை வணங்கியார் சித்தரை வணங்கிப் போற்றுவதுடன், கலியுக ஜீவன்களுக்குத் தாங்கள் ஆற்ற வேண்டிய இறைப் பணிகளைப் பற்றிய விளக்கங்களையும் பெறுகின்றனர். ஓரறிவு, ஈரறிவு ஜீவன்களாயினும், அவையவை பிற ஜீவன்களின் நலன்களைப் பேணிட, அந்தந்த அறிவுப் பாங்கில் செயல்படும் விதம் மனிதர்களுக்கு நற்பாடமாக அமைகின்றது.

மாத சிவராத்திரியில் மலரும் மகத்தான கிரிவல சக்திகள்

பகலற்ற நிலையின் இரவிற்கான இருட்டுக் குணங்களிலும் ஒளி குணங்கள் பலவும் உண்டு. உண்மையில் பகல், இரவு காலப் பாகுபாடுகள் பூவுலகிற்கே! சில பூமிகளில் இரவு, பகலற்ற வாழ்வு நிலையும் உண்டு.

இத்தகைய இரவு, பகலற்ற நிலைகள் பல அரிய குகைகளிலும் திருஅண்ணாமலை, கயிலை மலை, கொல்லி மலை, செஞ்சி மலை, சதுரகிரி மலை, ரிஷிகேசம், கேதார்நாத் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக சற்றும் வெளிவராது, ஊண், உறக்கம் இன்றித் தவம் புரிவோரும் உண்டு. ஆனால், இதனைப் பகுத்துணரும் அளவிற்குக் கலியுக மனிதன், தக்க சற்குரு மூலம் நன்கு பகுத்தறிவுப் பரிமாணம் பெறுதல் வேண்டும்.

பிறிதொரு யுகத்தில், திருஅண்ணாமலையில் அனைத்து லோகங்களில் இருந்தும் வந்திருந்த ஆந்தைகள் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து, தங்களுக்கு ஒரு சித்தர் பிரான் சற்குருவாய் அமைதல் வேண்டும் என்று வேண்டின. ஏனைய பிற பூமிகளிலும் உள்ள ஆந்தைகளுக்கும் சத்குருவாய் அமைந்த இச்சித்தர்பிரானே அன்றும், இன்றும், என்றுமாய் ஆந்தைப் பட்சிப் இனக் குருவாய்ப் பொலிவதால், இந்த பூமியிலும் அவர் ஆந்தைகளுக்குச் சற்குருவாய் ஆகும்படி இறையாணை பிறந்தது.

இந்த அனுபூதி நிகழ்ந்த யுகத் தாரண ஆண்டுத் திருக்கார்த்திகை மாத சிவராத்திரியே, ஆந்தை வணங்கியார் சித்தர், ஆந்தைகளுக்கு சற்குருவாய் மலர்ந்த புனித தினமாதலின், நம் ஆயுளில் சிறப்பாக வந்தமையும் இந்த தாரண வருட கார்த்திகை மாதத்தின் சிவராத்திரி நாளில், இப்பிரபஞ்சத்தின் பல பூமிகள், கோள்கள், அண்டங்களில் இருந்தும், நாம் வசிக்கும் பூமியின் பல நாட்டுப் பகுதிகளில் இருந்தும், ஆந்தைகள் இந்நாளில் தூல, சூக்கும, காரண வடிவுகளில் அருணாசல கிரிவலம் வந்து சித்தரின் அருளைப் பெறுகின்றன.

மாத சிவராத்திரி கிரிவலப் பலன்கள்

கண் சம்பந்தமான நோய்களை உடையவர்கள், கண்களை அதிகமாகப் பயன்படுத்துகின்ற துறைகளில் பணிபுரிபவர்கள் (கம்ப்யூட்டர், வானியல் கருவித் துறை, வானிலைத் துறை, டிரைவர்கள் போன்றோர்) கண் டாக்டர்கள், கண்ணாடிகள் தயாரிக்கும் துறையில் இருப்பவர்கள், கண்ணாடி வியாபாரம் செய்பவர்கள், நாடி ஜோதிடம் படிக்கின்றவர்கள், மேலும்

 ஒரே ஒரு பையன் அல்லது ஒரே ஒரு பெண்ணை மட்டும்  பெற்றிருப்பவர்கள்,

ஒரே ஒரு பையன் அல்லது ஒரே ஒரு பெண்ணைப் பெற்றிருந்தும், அவர்களுடைய திருமணத்தில் முறிவு ஏற்பட்டுப் பிரிந்தோ,

கணவனைப் பிரிந்தோ, விவாகரத்து செய்யப் பெற்றோ வாழ்பவர்கள்,

கணவன் அல்லது மனைவியைப் பல காரணங்களால் ஒதுக்கி வைத்து இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டுள்ளோர்..

இந்நாளில் சீதாப் பழம், ஜவ்வரிசிப் பாயசம், அகத்திக் கீரை, காரட் வகை உணவுகள், கண் மை போன்றவற்றைச் சுமந்து கிரிவலம் வந்து,

பொன்னாங்கண்ணித் தைலம், விளக்கெண்ணெய் தைல அகல் விளக்கு தீபங்களை இரு கண்களின் வடிவில் அடுக்கி வைத்துத் தீபங்களை ஏற்றி, வழிபட்டு,

மேற்கண்ட பொருட்களை திருஅண்ணாமலையிலோ, ஊர் செல்லும் வழியிலோ, தம் ஊரிலோ தானமாக அளித்திட வேண்டும். இதனால் நற்பலன்கள் பெரும் பாக்யமாக வந்தமையும்.

அருணாசலக் கிரிவலத்தில், ஆங்காங்கே ஆலயங்களில், கண் போன்ற அமைப்பில் அகல் விளக்குகளை வைத்து விளக்கெண்ணெய், பொன்னாங்கண்ணி கலந்த தைலத்தில் ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

இன்று அருணாசல கிரிவலத்தில் ஆந்தை தரிசனம் கிட்டிடில் மிகவும் பாக்யகரமானதாகும். பஞ்ச பட்சிச் சாத்திரத்தில், பூர்வ பட்ச, அமர பட்சப் பகல் மற்றும் இரவுத் தொழில்கள் ஆகிய வளர்பிறை, தேய்பிறை நாட்களுக்கான சகுன சாத்திரப் பலன்கள் உண்டு. ஒரு நாளை பகல், இரவாக – ஐந்து, ஐந்து ஜாமங்களாகப் பிரித்து வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்தையும் நட்சத்திரப் பட்சிகளாகக் கொண்டு பஞ்ச பட்சிச் சாத்திரம் அமைகின்றது.

அரசு, ஊண், நடை, துயில், சாவு ஆகிய ஐந்து வகைத் தொழில்கள், இந்த ஐந்து ஜாமங்களிலும் சாத்திரப் பூர்வமாக அமைத்துத் தரப்பட்டுள்ளன. இவற்றில் அரசு, ஊண் ஜாமங்கள் சுபமானவை. நடை ஜாமம் மத்தியமான பலன்களைத் தரக் கூடியது. துயில், சாவு என்ற இரண்டு ஜாமங்களும் அதமமான பலன்களைத் தரும். பஞ்ச பட்சி சாஸ்திரம் மிகவும் நுணுக்கமானது. நட்சத்திரப் பட்சிகளின் அரசு, ஊண், நடை, துயில், சாவு ஆகிய ஐந்து வகைத் தொழில்களைக் கொண்டு இதில் பலாபலன்கள் நிர்ணயம் ஆகின்றன.

சில சமயங்களில் எந்த, எத்தகைய முடிவை எடுப்பது என்று தெரியாமல் திணறுபவர்களும், எடுத்த முடிவை எப்போது செயல்படத் துவங்குவது என்று அறியாது திகைப்பவர்களும்,

சுபதின நட்சத்திர யோக, கரண, தாரண பலன், சந்திர பலன் அம்சங்கள் தெரியாவிடில் இதனையும் அல்லது இவற்றோடு நட்சத்திர பஞ்ச பட்ச சாஸ்திரத்தை முழுமையாக நம்பிச் செயல்படுவதும் நற்பலன்களை அளிக்கும்.

தற்போது இந்த அரிய சகுனக் கலை மறைந்து வருகின்றது. இதற்குப் புத்துணர்வு தந்து, பொலிவடைய செய்ய வேண்டியது ஜோதிடர்களின் கடமையாகும்.

மூல நட்சத்திர லிங்கம்

நட்சத்திர லிங்கத் தொடரில் இதுவரை ரோகிணி, உத்திரட்டாதி, கார்த்திகை, நட்சத்திர லிங்க மகிமைகளை இதுகாறும் அளித்துள்ளோம், இந்த நட்சத்திர லிங்கம் உயர்ந்ததா, அந்த நட்சத்திர லிங்கம் சிறந்ததா என்று ஒப்பிட்டு எண்ணுதல் கூடாது. எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் ஏனைய 26வகையான நட்சத்திர சக்திகளும் கூடினால் தான் ஒருவர் சிறந்து வாழ முடியும்.

அறிந்தும், அறியாத நட்சத்திர சக்திகள்

எந்த நட்சத்திர சக்தி குறைகின்றதோ அதனை நிறைவு செய்யும் பொருட்டு அந்தந்த நட்சத்திர நாளில் சில பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காகத்தான் நாமறிந்த 27 நட்சத்திரங்கள் மட்டுமல்லாது நாமறியாது நம் உடலில் பதிந்திருக்கும் எண்ணற்ற நட்சத்திர சக்திகளை நாம் நன்கு பயன்படும் வகையில் பெறுவதற்காகவே தினமும் வானில் நட்சத்திரத் தரிசனங்களை ஒரு நாழிகையேனும் பெறுதல் வேண்டும்.

ஸ்ரீவசிஷ்டர் அருந்ததி
கரந்தட்டாங்குடி

எல்லா இடங்களிலும் எல்லா நட்சத்திர தரிசனங்களையும் பெற முடியாது. ஆனால் ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தகைய முக்கியமான நட்சத்திரத் தரிசனங்களை பெற வேண்டுமோ, அவற்றை அளிக்க வல்ல தலங்கள் பல உண்டு. தேனிமலை, சேலம் அருகே தாராமங்கலம், போளூர் அருகே நட்சத்திரக் கோயில், ஆவுடையார் கோயில், 27 நட்சத்திரத் தலங்கள், ஸ்ரீவசிஷ்டர் அருந்ததி தம்பதிகளின் சிலா ரூபங்கள் உள்ள தலங்கள் (தஞ்சாவூர் கருந்தட்டாங்குடி) போன்ற தலங்களில் இருந்து நட்சத்திரத் தரிசனங்களைப் பெறுதல் மிகவும் விசேஷமானது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் இருந்து மூன்றாவது நாளான சந்திர தரிசன நாள், பௌர்ணமி, விஷ்கம்ப யோக நாள், ஐந்திர யோக நாள், கிம்ஸ்துக்னக் கரண நாள், கிருத்திகை, ரோகிணி போன்ற நட்சத்திர நாட்களில், வானில் நட்சத்திர தரிசனங்களை ஒவ்வொருவரும் நிச்சயமாகப் பெறுதல் வேண்டும். இந்நாட்களில் நட்சத்திர சக்திகள் இளகி நேத்திர தரிசனப் பலாபலன்களாகி வரும்.

மன சுத்திக்கு சுய நாம ஜபம்

“தனக்கு அதிர்ஷ்டமே இல்லை, தான் உப்பு விற்றால் மழை பெய்யும், வைக்கோல் விற்றால் காற்று அடிக்கும்!” என்று தம் விதியை நொந்து கொள்வோர் நிறையப் பேர்கள் உண்டு. “என் பெயரே எனக்கு ராசியில்லையோ என்று பலரும் வருத்தமடைவதும் உண்டு. இதற்காகத்தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு நட்சத்திரமும், எந்த எழுத்தில், எந்த அட்சரத்தில் துவங்கி அமைய வேண்டும் என்பதை நாமகரண அட்சர அட்டவணையாக அளித்திருக்கின்றார்கள். இதற்கான விளக்கங்கள் பஞ்சாங்கத்தில் இருக்கின்றன.

ஒவ்வொருவரும் மூல நட்சத்திர நாளிலும் ஸ்ரீராமஜெயம் 1008 முறை எழுதித் தன் சுயநாமத்தையும் அதாவது தன் பெயரையே இறைவனின் அட்சர வடிவாக பாவனை செய்து 10,002 முறை ஓதுதல் வேண்டும். உண்மையில் தினமுமே அவரவருடைய பெயரை சுயநாம ஜபமாக, காலையில் எழுந்தவுடன் ஓதுதல் நன்று., மன சுத்திக்கு இது உதவுவதாகும்.

ஸ்ரீவசிஷ்டர் அருந்ததி
தென்குடித்திட்டை

ஒரு மனிதனுடைய வாழ்நாள் முழுதும் ஒட்டி வருகின்ற பஹிரங்க சுதம் அதாவது, ஒரு மனிதனுடைய வெளி அங்கமாக விளங்குவது அவரவருடைய “பெயர்” ஆகும். ஏனென்றால் எந்த யுகத்திலுமே ஒரு மனிதனை அடையாளம் கண்டு கொள்வது அவருடைய பெயரை வைத்துத் தான்! மனித அங்கங்களுள் ஒன்றாக, மூல பஹிர் சக்தி சாதனமாக மிகவும் போற்றப்படுகின்றது. மூல நட்சத்திர நாளில் நிகழும் திருமணங்களில் பலவிதமான கர்ம வினைகளும் தாமே பஸ்மமாகி அற்புதமான ரட்சா சக்திகளையும் அளிக்கின்றன.

அஷ்ட தானிய வழிபாடு

பொதுவாக வீட்டிற்கு அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள் வாங்குபவர்கள் தானிய பருப்பு வகைகளை, மூல நட்சத்திர நாளில் வாங்குவதுடன் தான்ய லக்ஷ்மிக்கு மூல நட்சத்திர நாளில் தானிய அபிஷேகம், தானிய அர்ச்சனை, தானியக் காப்பு, தானிய மாலை, வெண்ணெய், சந்தனக் காப்பில் அனைத்து விதமான தானியங்களையும் பதித்தல், தானிய வகைகளால் அபிஷேகித்தல், தானிய வகை உணவுப் பண்டங்கள் (உளுந்து வடை, சுண்டல், ரவா உருண்டை, முந்திரி கேக்) தானிய எண்ணெய்க் காப்பு ஆகிய எட்டு வகையான அஷ்ட தானிய, தன வழிபாடுகளை மூல நட்சத்திர நாளில் நிகழ்த்தி வந்தால், அட்ட தரித்திரங்கள் எனப்படும் எட்டு வகைத் தரித்திர நிலைகள் அகல உதவும்.

தானிய வியாபாரிகளுக்கும், விவசாயிகளும் மூல நட்சத்திர நாளில் தான்ய லக்ஷ்மீ பூஜை, மூல நட்சத்திர லிங்க பூஜை ஆற்றுதல் பன்மடங்குப் பலாபலன்களைத் தருவதாகும்.

வெளியூருக்குப் பயணம் செய்பவர்கள் மூல நட்சத்திர நாளில் பயணம் செய்வது மிகவும் சிறப்புடையது. இந்நாளில் ஸ்ரீகாலபைரவ பூஜை, மூல நட்சத்திர லிங்க வழிபாடுகளை மேற்கொள்தல் சிறப்புடையது. யாத்திரையில் இடைஞ்சல்கள் ஏற்படாமலும், வாகனப் பிரயாணத்தில் எத்தகைய துன்பங்களும் வராமல் தடுத்துக் கொள்ள இது உதவும்.

சீமந்தம், வளைகாப்பு போன்ற – கர்ப்பிணிப் பெண்களுக்கான விசேஷமான பூஜைகளை – மூல நட்சத்திர நாளில் நிகழ்த்துவது சிறப்புடையது.

“கர்ப்ப மூலம் காத்ரய மூலம்
கஸ்தூரி மூலம் கனக மூலம்
காதம்பரி மூலம் காத்யாயன மூலம்
கஞ்சுதள மூலம் ஹனுமந்த மூலமே!”

என்ற துதியை ஓதி, மூல நட்சத்திர நாளில், மூல நட்சத்திர லிங்கத்திற்கு 1008 முறை பல்வகைத் தானியங்களால் அர்ச்சித்து, தானியங்களை ரவையாக்கி பனங்கற்கண்டுப் பொடியுடன் சேர்த்து ஆலயங்களில், பிரகாரங்களில், மரங்களின் அடியில், மதில்களின் ஓரத்தில் எறும்புகளுக்காக இட்டு வந்திடில், தினசரி உணவிற்கே பணம் இல்லாமல் அல்லல்படும் குடும்பம் பணக் கஷ்டங்களில் இருந்து ஓரளவு மீள உதவும்.

பலவிதமான நெடுங்கால நோய்களால் அல்லல்படுபவர்கள் மூல நட்சத்திர நாளில் ஆலயக் குளத் தீர்த்தம், புண்ய நதி, கிணற்றுத் தீர்த்தம், இல்லத்தில் முதல் நாள் இரவு வேப்பிலையில், வில்வத்தில், ஊறிய தீர்த்தத்தில் நீராடுதல் போன்ற வகைகளில் வழிபடுதல் வேண்டும்.

கால்நடைகளை, நாய்களை, வாங்குவதற்குச் சிறந்த நாளும் மூல நட்சத்திர தினமேயாகும். காரணம், பிரம்ம சிருஷ்டியில், பிராணிகளின் மூல பீஜங்களை, பிரம்ம மூர்த்தி மூல உயிர் ஜீவன்களாக ஆக்கிய தினமே மூல நட்சத்திர தினமாகும்.

உழவு, விவசாயம், தோட்டம், சம்பந்தமான அனைத்து விதமான தாவர, தான்ய, விவசாயப் பணிகளுக்கு உகந்த தினமும் மூல நட்சத்திரத் தினமாகும். விவசாயிகள், காய்கறி, பழ வியாபாரிகள், தோட்டப் பண்ணையாளர்கள் மூல நட்சத்திர லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வர வேண்டும்.

பரிகாரம், பிராயச்சித்தங்கள்

செய்த தீவினைகளின் விளைவுகளை உணர்வித்தல், அவற்றை அனுபவிக்க வேண்டிய தார்மீகத்தையும், அனுபவிக்க வேண்டியதைக் கடமையுமாகவும் புலப்படுத்தி அறிவுறுத்துதல், வினைகளின் விளைவுத் தன்மைகளைத் தணித்தல், இவற்றை நிவர்த்தி செய்யத் துணை புரிதல் போன்ற இவையாவும் பரிகாரங்கள், பிராயச் சித்தங்களின் இலக்கணங்களாகும்.

புனிதமான சுபநேர இலக்கணங்கள்

பரிகாரம், பிராயச்சித்தம் இரண்டுமே வெவ்வேறு விதங்களில் செயலாக்கம் கொண்டுள்ளன. திருமணத்திற்கான சுபமுகூர்த்த நேரத்தைக் கணித்து அமைக்கும் போது சுபலக்னம், சுபஹோரைகள், தாரா பலன், சந்திர பலன் போன்ற 32க்கும் மேற்பட்ட பல சுப அம்சங்களைக் கொண்டு கணித்திட வேண்டும். உண்மையில் 108 சுப முகூர்த்த அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் பொருந்தி வரும் நாள் பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும்.

இதனால்தான் பால விவாகமாக அக்காலத்தில் சிறுவயதில் நிச்சயித்து, சுபமுகூர்த்த நாளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே கணித்துப் பொன்னான திருமண வாழ்வைப் பெற்றனர். கலியுக நியதியாக, எந்த சுப அம்சங்கள் மங்குகின்றனவோ, அவற்றின் கடுமைகளைத் தணிக்க, பஞ்ச பரிகாரங்கள் போன்றவை நடைமுறைக்கு வந்துள்ளன.

எனினும், குறைந்த பட்ச சுப அம்சங்களைக் கூட கணிக்காது, தற்போதோ கல்யாணச் சத்திரம் கிடைக்கும் நாள், மாப்பிள்ளை, பெண்ணிற்கு லீவு கிடைக்கும் நாள் போன்றவற்றிற்கே முக்கியத்துவம் தந்து, சுப முகூர்த்த அம்சங்களைப் பின்னுக்குத் தள்ளி விடுவதால்தான், குடும்ப வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாதவாறு பல துன்பங்களும், கலாசாரப் பண்பாட்டில் கேடுகளும் ஏற்பட்டு, உடல், உள்ள, மன, ஒழுக்க நிலைகளும் சீர் கெட்ட நிலைகளும் உருவாகி வருகின்றன.

உதட்டளவுப் பரிகாரம் ஒட்டாது அய்யா!

மேலும் தினந்தோறும், ஒவ்வொரு நிமிடமும், விநாடியும் எண்ணத்தாலும், செயலாலும் பல தவறுகளைச் செய்கின்ற மனிதன், “sorry” என்ற ஒரே வார்த்தையில் தவறுக்குப் பரிகாரம் தேட யத்தனிக்கின்றான். “Sorry” என்று உதட்டளவில் சொல்வது பரிகாரமோ, பிராயசித்தமோ அல்ல! உள்ளத்தால், மனதால் உண்மையாகவே வருந்தி, தன்னால் துன்பம் அடைந்தவர்களுக்கு நிவாரணமும், மனசாந்தியும் அளித்தலே பரிகாரமாகும்.

“Sorry” என்ற எளிய உதட்டு வார்த்தையின் தொடர்ச்சியாகவே, இதே வகையில்தான், கலியுக மனிதன் தன் வாழ்க்கையில் இழைக்கும் கருத்தடை, பசுவதை, லஞ்சம் பெறுதல், வரதட்சிணை போன்ற ஆயிரக்கணக்கான பெருந்தவறுகளுக்கும் எளிமையான முறையில் பிராயசித்த பரிகாரங்கள் மூலம், கர்ம வினைகளின் விளைவுகளில் இருந்து முழுவதுமாகத் தப்பிக்கத் திட்டம் போடுகின்றான்.

செய்த தவறுகளுக்கு உள்ளப் பூர்வமாக வருந்துதல், மீண்டும் எக்காலத்தும் அத்தவறுகளைச் செய்யாதிருத்தல், தம் தவறுகளால் பாதிக்கப்பட்டோருக்குத் தக்க நிவாரணங்கள், உதவிகளை அளித்தல் போன்ற பலவும் தார்மீக ரீதியாகக் கூடினால் தான், பிராயசித்தம், பரிகார வழிகள் ஓரளவு கணிசமாகப் பலனளிக்கும்.

கருச்சிதைவு கலியுகப் பெரும் பாவமே!

கருச்சிதைவு செய்து கொள்வது மகாபாவகரமான செயல் என உலகின் பெரும்பான்மையான மதங்களும் ஒப்புக் கொள்கின்றன. பூவுலகிற்கு வராது தடுக்கப்பட்ட அந்தச் சிசு(க்கள்) மீண்டும் அதே தம்பதிகளுக்கே பிறக்கும் வரை, அச்சிசு கொண்டிருக்கும் பகைமை அக்குடும்பத்தைத் தொற்றிக் கொண்டே இருக்கும். கருச் சிதைவில் வளரும் உயிரின் அங்கங்கள் அணு அணுவாகச் சித்திரவதை செய்யப்பட்டு நசுக்கி அழிக்கப்படுகின்றது என்பது நினைவிருக்கட்டும். கருச்சிதைவிற்குப் பிராயசித்தப் பரிகாரமே கிடையாது.

எனவே கருச்சிதைவுப் பாவ வினைக்கு, குறித்த தம்பதிகள் ஆன்மீக ரீதியாகத் தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். முதலில் உளப்பூர்வமாக வருந்திடவும், குடும்பத்திற்குக் கருச்சிதைவுப் பாவ வினைகள் தொற்றாதிருக்கவும், சிதைத்த கருவிற்குத் தர்ப்பணம், படையலும் அளித்தாக வேண்டும். இதே போல, பிராயசித்தப் பரிகாரமில்லா எத்தனையோ பாவ காரியங்களை மனிதன் செய்து வருகின்றான்.

இதற்காக, பரிகாரங்களே எதற்குமே உலகில் இல்லை என எண்ணாதீர்கள். தக்க சற்குரு கிட்டிடில் அனைத்திற்குமே பிராயச்சித்தம், பரிகாரங்கள் உண்டு. ஆனால் முழுமையான பிராயச்சித்தப் பரிகாரங்களைத் தரவல்ல இறைத் தூதுவராம் சற்குருவும், அவரவர் தத்தம் பாவ வினைகளை அனுபவித்துத் கழிப்பதையே மிகவும் முக்கியமானதாக வலியுறுத்துவார்.

முற்பகல் செய்யின்...

தீதும், நன்றும் பிறர் தர வாரா என்பது போல, தான் செய்ததே விளைவுகளாக வந்து ஒட்டும். உதாரணமாக, தொழிலாளர்களை, பணியாட்களை, வேலையாட்களை வருத்தி வேலை வாங்கி, சம்பளம் சரியாகக் கொடுக்காத வினைகள் எனத் தெரிந்தால் அத்தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆவன செய்து அத்தொழிலாளியின் மனம் சாந்தி அடைந்தால்தான் பிராயசித்தப் பரிகார வழிகள் முழுமையாகப் பலன்களைத் தரும் என அறியலாம்.

அடுத்ததாக,

1. குடும்பத்தில் அடிக்கடி துர்மரணம், விபத்து ஏற்படுதல்,
2. குழந்தை பாக்யம் இல்லாமை,
3. திருமணம் தள்ளிப் போதல்.,
4. உடலில் பலத்த அடி அல்லது, கடுமையான வியாதி ஏற்படுதல்,

-போன்றவை தற்போதைய பிறவியில் ஏற்பட்டிடக் காரணங்கள் யாவை எனத் தெரியாது அல்லவா, காரண, காரியம் தெரியாது இவற்றைப் பூர்வ ஜன்ம வினைகளின் விளைவுகளாக அனுபவிக்கையில், இவற்றிற்கான மூல காரணங்கள் தெரியாத நிலையில், முறையான பிராயசித்த, பரிகார வழி முறைகளை அறிந்து கடைபிடித்திடல் வேண்டும் அல்லவா!

இதற்காகவே, பஞ்சாங்கத்தில் தினந்தோறும் அளிக்கப்படும் பண்டிகைகளை முறையாக ஆற்றி வர வேண்டும். இவற்றின் தொகுப்பாகத்தான் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் மின்னியல் இதழாக, http://www.agnisiksha.org என்ற வெப்சைட் மூலமாக நித்ய கர்ம நிவாரண விளக்கங்கள் தினமுமே அளிக்கப்படுகின்றன (daily updation). இதுவரையில் 500 பக்கங்களுக்கு மேலான கர்ம நிவாரண விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை நன்கு படித்து பரிகார, பிராயச்சித்தங்களுக்கான விளக்கங்கள், வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். இவற்றைப் பிறருக்கும் அறிவித்திடுவதும் மகத்தான இறைப்பணியாகும்.

பொன்னகரம்

வாஸ்து சக்தித் தலம் பொன்னகரம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரைக்குடியிலிருந்து அறந்தாங்கி சென்றிடலாம், (பஸ் மார்கம்: அறந்தாங்கி – மணமேல்குடி – மீமிசல்)

பொன்னகரம் (மணமேல்குடி) வாஸ்து சக்தித் தல மஹிமை! கடந்த இதழில் விஷ்ணுபதிப் புண்ய கால விளக்கங்கலின் தொடர்ச்சியாக இங்கு இத்தலத்தின் வாஸ்து சக்தி மகத்துவங்களும் அளிக்கப்படுகின்றன!

ஸ்வர்ணபந்தத் தலமாம் பொன்னகரம்!

பத்தரை மாற்றுத் தங்கம் என்று புனிதத்தின் உத்தம குணத்தைச் சொல்வார்கள் அன்றோ! திரேதா யுகத்தில் ஆயிரம் மாற்றுத் தங்கமளவிற்கு மகத்தான புனிதம் பொலிந்தது, முந்தைய யுகங்களிலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையிலும் கூட, ஒருவருடைய செல்வ வளத்தை அவர் வைத்திருக்கும் பசுக்களை வைத்து நிர்ணயித்தனர். இவ்வகையில் ஆயிரம் மாற்றுக் கனிமத் தங்கச் சாலைகள் நிறைந்து பொலிந்த ஸ்வர்ணபந்தத் தலங்களுள் பொன்னகரமாகிய மணமேல்குடியும் ஒன்றாம்.

ஸ்ரீஐந்நூற்றீஸ்வரர்
கீழப்பூங்குடி

பொதுவாக, தங்கம் கிடைக்கின்ற பூமிக்கு மேற்குடீயம் என்று பெயர். அதாவது, மிகுந்த உஷ்ணமான மூன்று வகை அமிலக் கூட்டின்பால், தங்கத்தை வைத்து உருக்குகையில் அது பொன்மஞ்சளில் பொங்குகையில், உலோகப் பாத்திரம் அல்லாது, பீங்கான், கண்ணாடி, களிமண் போன்ற கலவைகளால் ஆன குடீயம் என்ற குடுவைகளே பெரிதும் பயன்படுத்தப்படும். திரேதா யுகத்தில் பொலிந்த மிகமிகப் புனிதமான அபராஜித வகை ஆயிரம் மாற்றுத் தங்கமானது, தானாக பூமியிலிருந்து, இயற்கையாகவே மணல்மேல் குடிகொண்டு வருவதாகும். இதுவே பொன்னகரத்வ மணமேல்குடியும் ஆயிற்று.

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் இந்நான்கிலும், யுக நியதிகளுக்கு ஏற்பவே, தங்கத்தின் மாற்றுச் சுடர் குறைந்து கொண்டே வந்துள்ளது. ஆயிரம், ஐநூறு, நூறு மாற்றுத் தங்க திரவிய சக்தி பொதிந்த தலங்களுள், மணமேல்குடியாகிய பொன்னகரமும் அடங்கும்.

காரைக்குடி அருகே மாத்தூரில் ஐந்நூற்றீஸ்வரர் என்ற பெயரைத் தாங்கி இறைவன், கொங்கணச் சித்தருக்கு ஐநூறு மாற்றுத் தங்கத்தை உரைத்துத் காட்டிய புராண சம்பவம் நிகழ்ந்த சிவத்தலம் உள்ளது. தஞ்சை – திருச்சி இடையே உள்ள வல்லம் புனித பூமியில் ரசவாத சித்திக் கலையோகச் சாலை பூண்டிருந்த வல்லபச் சித்தர் வழிபட்ட பெருமாள் மூர்த்தியும் பொன்னகரம் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளே ஆவார்.

வல்லபச் சித்தர்தாம் பத்தரை மாற்று முதல் ஐநூறு மாற்று வரை ஆக்கவல்ல தங்க ரசவாத கலையில் மேன்மை பெற்றவர். இவ்வாறு மாற்றுத் தங்க சக்திகள் பரிமளிக்கும் தலங்கள்யாவும் கலியுகத்தில், பூவுலக மக்களின் மனதைச் சுத்திகரிக்கும் தலங்களாகவும் விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் மேல் கலியுக மக்களுக்குப் பலத்த ஆசையும், பேராசையும் ஏற்படும் என்பதைத் தீர்க தரிசனமாக உணர்ந்தே, தங்கத்தின் ஆயிரம், ஐநூறு, நூறு போன்ற அதிக வகை மாற்று சக்திகள் தாமாகவே பூமியில் காலப்போக்கில் மறையலாயின, இவ்வாறு தங்கத்தின் அபரிமித மாற்று சக்திகள் பூமியில் மறைந்த தலங்களுள் பொன்னகராகிய மணமேல்குடியும் ஒன்று. இவற்றில் பலவும் கலியுக இறுதியில்தாம் தக்க மாமுனிகள், சித்தர்கள் மூலம் மீண்டும் வெளிவரும்.

ஸ்ரீநடராஜப் பெருமான் கோனேரிராஜபுரம்

கல் வடிவம், சிலா ரூபம், மரம், மண், உலோகம், நவபாஷாணம், பாதரசம், ஸ்படிகம், ஸ்வர்ணம் (தங்கம்) மரகதம், சந்திரகாந்தக் கல், சாளகிராமம், இயற்கைப் பளிங்கு போன்ற இறைவனின் இயற்கையான சுயம்பு வடிவ மூர்த்தங்கள் பல உண்டு. இதில் தானாகத் தோன்றும் தங்க வகைகளுள் ஒன்றே அபராஜிதத் தங்கம் என்று பெயர்.

கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரச் சிவாலய நடராஜப் பெருமான் போன்று தானாகவே தங்கத்திலோ, பஞ்சலோக வடிவிலோ தோன்றும் மூர்த்திக்கும் அபராஜிதச் சிலாதளம் என்று பெயர். இதே போன்றே, பொன்னகரம் எனப்படுவதாக, திரேதா யுகத்தில் பொலிந்த மணமேல்குடித் திருத்தலத்தில் அபராஜிதப் பொன் வடிவில், “கிடந்த” கோலத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இதன் பிறகு, பல கோடி யுகங்களாக பூமியில் ஆழ்ந்து, அபராஜித சக்திகளை நிரவிப் பரிணமித்து அருளிய பெருமாள், தற்போது, கலியுகத்தில் நின்ற நிலைப் பெருமாளாக, இங்கு ஸ்ரீஆதிகேசவப் பெருமாளாகப் பிரகாசித்து அருள்கின்றார்.

பொன்னிறமாம் பொன்னகரம்

வாஸ்து தீர்த்தம்
மணமேல்குடி

பொன்னகரம் மகத்தான அபராஜித சக்திகள் நிறைந்த தலமாகப் பொலிவதை, ஆலய வளாக, பிரகாரச் சுற்றுத் திருமண் பூமியும் பளபளவென்று பொன்னிறமாய், வெள்ளியின் நிறமாய், சங்குகளின் வெண்பொன் பிரகாசத்துடன், இன்றும் மினுமினுத்து, இதன் பொன்பூமிப் பிருத்வி சக்தியை நிரூபணம் செய்தூட்டுகின்றது.

குறிப்பாக, தோல் சம்பந்தமான நோய்களால் வாடுவோர், இங்குள்ள அரசு, ஆல், வேம்பும் சேர்ந்த முக்கூட்டு “பாரதீ” விருட்சங்களோடு, வாஸ்து வாதுல்ய தீர்த்தத்தையும் சேர்த்து வலம் வருதல் வேண்டும். இவ்வாறாக அங்கப் பிரதட்சண சக்திகள் பல்வகைகளில் பூரித்து நிறையும் திருமால் தலம். இதுவே! அமாவாசை தோறும், இங்கு வாஸ்துத் தீர்த்தத்தில் தர்ப்பணம் அளித்தலால், சந்ததிகளின் நலத்திற்கு ஆசி நல்கும் ஆசி நல்கும் பூசுர பூம்ய சக்திகள், தேக நாளங்களில் கிரகிக்கப் பெற்று நன்கு விருத்தி ஆக உதவும்.

மேலும், மெல்லியதாக, பலவீனமாக இருக்கும் கர்ப்பப் பையால் கருவைத் தாங்க இயலாது வாடும் இல்லறப் பெண்களுக்கு கர்பப்பை நன்கு வலுப் பெறுவதற்கும், நல்ல வரங்களை அருளாரமாய்ப் பெற்றிடவும், ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை அடிப் பிரதட்சிணமாக வலம் வருதலும், இங்கு வாஸ்துத் தீர்த்த நீராடலும், “பாரதீ” விருட்சத்தை வலம் வருதலும் ஆற்றி வர வேண்டும்.

மணமேல்குடி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் அருளும் ஸ்ரீமுனீஸ்வர தெய்வ மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். கலியுகத்தின் கண் கண்ட வழித் துணை மூர்த்தி!

ஸ்ரீமுனீஸ்வரர் மணமேல்குடி

வழித்துணை மூர்த்தியாம் ஸ்ரீமுனீஸ்வரர்

கலியுகத்தில், ஆணும், பெண்ணும் எப்போதும் வீட்டிலேயா முடங்கிக் கிடக்க முடியும்? பெண்களும் பணிபுரியும் இக்காலத்தில் எதற்குமே நிதமும் வெளியில் சென்று வர வேண்டியதாகி உள்ளது. வெளியில் நடந்தாலோ, வெளியூர், வெளிநாடு சென்றாலோ – அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், துர்சக்திகள், மிகவும் பயம் தரும் விமானப் பயணம், திருஷ்டிக் கழிவு, பிணத்தில் பட்டு விழும் பூக்கள், பகைமை, வன்முறை, திருடர்கள், கயவர்கள், பயங்கரவாதம் – என இத்தகைய தோஷங்கள், தீவினைகள், தீய சக்திகளிடமிருந்து இருந்து மீண்டு தினமும் பணி முடிவில் வீடு திரும்புவதே பெரிய சாதனை ஆகின்றது அல்லவா! ஆனால் இதன் மூலம்தான் ஒவ்வொரு விநாடியும் இறையருளுடன் வாழ்கின்றோம் என்பது புலனாகும்.

மேற்கண்டவாறான தோஷங்கள், துர்சக்திகளில் இருந்து நம்மைக் காக்கும் வழித் துணை மூர்த்தியே ஸ்ரீமுனீஸ்வரர்! குலதெய்வப் பூஜைகளைப் பங்கமின்றி, மறக்காது நிறைவேற்ற உதவும் மூர்த்தி! முனீஸ்வரன், வாத முனீஸ்வரர், பாத முனீஸ்வரர் போன்று பல்வகை முனீஸ்வர மூர்த்திகளும் உண்டு. இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக அருள்பவரே முனீஸ்வர மூர்த்தியாவார். காத்து, கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற துர்சக்திகள் அண்டாது நம்மைக் காப்பவர்.

இங்கு, பொன்னகரம் ஆலயத்தினுள் ஸ்ரீமுனீஸ்வர மூர்த்தி வெட்ட வெளி மூர்த்தியாகவும், இங்கு வாஸ்துத் தீர்த்தக் கரையில் உள்ள முக்கூட்டு “பாரதீ” விருட்சத்தின் நடுவிலும் முனீஸ்வர மூர்த்தி அருள்கின்றார். பொதுவாக, அரசு, ஆல், வேம்பு ஆகிய முக்கூட்டு மூலிகா விருட்சங்களின் நிழலில் தர்பைப் பாய் விரித்துத் தியானித்தலும், மணலால் லிங்கம் வடித்துப் பூஜித்தலும், தர்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்தலும், வாழ்வில் பெறுதற்கரிய பாக்யமாகும்.

சந்திர கிரகத்தில் “ஸ்வர்ணபாதச் சந்திர பூமி” என்பதாக, தங்கச் சந்திர வளாகப் பகுதி ஒன்று உண்டு. இங்கிருந்து பூலோகத்தின் அருணாசல மலை, பொன் மலை வடிவில் காட்சி தரும். பூலோக மக்கள் தர்ம நெறிகளில் சிறந்து பிரகாசித்து, சத்தியமான வாழ்க்கையைக் கொண்டிருந்த யுகத்தில், திருஅண்ணாமலையானது பொன் மலையாக, அபராஜிதத் தங்கத்தால் ஆன மலையாகப் பொலிந்தது. ஆனால் அதர்மம், வன்முறையும், அசத்தியமும் பெருகி வருகின்ற கலியுகத்தில், திருஅண்ணாமலை பொன் மலையாக இருந்தால், என்னே ஆகி இருக்கும், சற்றே சிந்தித்துப் பாருங்கள்! பொன்மலையாக இருந்த திருஅண்ணாமலை தற்போது ஒன்றும் கல்மலை ஆகி விடவில்லை! இன்றைக்கும் பக்திப் பூர்வமாக, மாயா, காம காஞ்சனப் பற்றின்றி அருணாசலத்தைக் கிரிவலம் வருவோர்க்கு, திருஅண்ணாமலை பொன்மலையாகவும், வைர மலையாகவுமே தோற்றமளிக்கும்.

வல்லம் சிவத்தலம்

எனவே, மானுடர்களின் காம, காஞ்சனப் பற்றினால் தான், இறைவன் தன்னைக் கல் மலையாகத் தோன்றுமாறு ஆக்கித் தந்திருக்கின்றான். தங்கத்தின் மீது எவரொருவர் அணுத் துளியும் பற்றில்லாது ஸ்புடம் போட்ட பொன் போல, தூய, புனிதமான உள்ளத்தைக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு இன்றும் அருணாசலம் பொன் மலையாகத் தான் தோற்றமளிக்கும்.

இதே போல, பொன்னகரமாம் மணமேல்குடியில் நின்ற, கோலம் பூண்டருளும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளைப் பல கோடி யுகங்களாக வைணவ பக்தர்களாகப் பூஜித்து வருவோர்க்கு, “கிடந்த நிலை பொன் மேனித் திருமலையப்பராகப் பெருமாள்” தோற்றமளிப்பார் என்பதும் பரிபூரணமான உண்மையே!

அஷ்டவாதூல வாஸ்துத் தீர்த்தம்

இதன் எண்ணிலும், எழுத்திலும் எழிலார்ந்த மந்திரத் துதிகளிலும் உரைக்க இயலாத அற்புதமான வாஸ்து சக்திகளை உடையதே பொன்னகரக் கோயில் தீர்த்தமாகும். அஷ்ட வசுக்களும் நீராடிப் பெருமாளைப் பூஜித்தத் திருத்தலம். அஷ்ட வசுக்களுள் ஒருவரே பீஷ்மர். அஷ்ட வசுவாகத் தாமிருந்த போது தாம் ஆற்றிய காரியத்தில் ஏற்பட்ட பிழைகளுக்குப் பிராயசித்தமாகப் பூவுலகில், பீஷ்மப் பிதாமகர் தம் மூதாதையர்க்குத் தர்ப்பணப் பூஜைகளை ஆற்றி, ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வ ரூப தரிசனம் பெறத் தவம் இயற்றிய புனிதமான தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

திலதைப்பதி, இடும்பாவனம், கோவினூர், திருப்புனவாசல், தீர்த்தாண்டதானம், நவபாஷாணம் போன்ற இறைத் தலங்கள் மார்கமாக ராமேஸ்வரத்திற்குப் பாத யாத்திரையாக நடந்து சென்ற ஸ்ரீராமர், தம் பரிவாரங்களுடன் சேது சமுத்திரப் பகுதியை அடைந்த கடற்கரைத் தல வழி இதுவேயாம். பொன்னகரப் பெருமாளின் பொற்பிரகாசக் கதிர்கள் கடலில் நெடுந்தூரம் ஒளிக் கற்றையாய்ப் பரிணமித்த, இன்றும் என்றுமாய்ப் பரிணமிக்கின்ற திருத்தலம்.

மழை தந்த மறப்பாடம்

திருமணத்திற்குப் பிறகு, ஒரு நாள் அயோத்தியில் பெருமழை பொழிந்த போது, மழைப் பெருக்கினால் பலருடைய வீடுகளும் சேதமடைந்தன. இதனைக் கண்ணுற்ற சீதா தேவி ஸ்ரீராமரிடம் எடுத்துரைத்த போது, அவரும் அரசாங்கச் சார்பில் வீடுகளைச் சீர்திருத்தி அமைத்துத் தர அன்புடன் கட்டளை இட்டார். ஆனால், மகாலட்சுமியின் அம்சங்களைப் பூண்ட சீதாதேவி அனைவருக்கும் தங்கக் காசுகளை அளித்து விட்டால், அவர்கள் நன்கு பெரிய வீடுகளாக உறுதியாகக் கட்டிக் கொள்வார்கள், என உரைத்திட்டாள், இதற்கு ஸ்ரீராமர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை.

இதனைக் கேட்டு, அக்காலத்திலு பொருளாதார வேறுபாடுகள் தற்போது நிலவுவது போல் இருந்ததாக எண்ணாதீர்கள். முந்தைய யுகங்களில் அவரவர் பூர்வ ஜென்ம வினைக்கேற்பத் தமக்கு கிட்டிய வருமானத்தில் சாந்தமாகவே எவ்விதப் பகைமை, பேராசை இல்லாமல் வாழ்ந்து சமுதாயத்தில் ஆனந்தமான நிலையை, தர்மத்தை நிலை நாட்டினர்.

சீதா தேவியும், பெருமழையால் வீடுகள் சேதமுற்றவர்களுக்கு நிறைய தங்கக் காசுகளை தானமாக அளித்திட்டாள். திருமகளின் அம்சங்கள் நிறைந்த காசுகள் அல்லவா! சீதையின் திருவிரல்கள் பட்ட தங்க நாணயங்கள் நன்கு விருத்தியாகின. ஆனால், என்ன ஆச்சரியம், பெருமழையால் பாதிக்கப்பட்டு நிவாரணம் பெற்ற மக்கள் தமக்குத் தேவையான தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு அதிகமான தங்க நாணயங்களைத் திருப்பி அளித்து விட்டனர்.

ஞான மா(ம)யமா!

சீதாதேவி ராஜநீதியை உணரும் வகையில் ஸ்ரீராமர், நிகழ்த்த விரும்பிய லீலையே இப்பெருமழை என்பதை சீதாதேவி அறியாள். மறுநாள், பெருமழையின் காரணமாக, அரண்மனையில் அந்தப்புரப் பகுதியில், ஒரு மண்டபம் சற்றே சேதமுற்றது. ஸ்ரீராமரிடம் இதனைத் தெரிவித்து, அவருக்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காக சீதாப் பிராட்டி தேவி, மண்டபத்தைச் சீர் திருத்திட உதவியாளர்களிடம் ஆவன உரைத்திட்டாள். ஆனால், மண்டபத்தைச் சீர்திருத்திட எவருமே முன் வரவில்லை. இதைக் கேட்டுத் துணுக்குற்று சீதா தேவி ஸ்ரீராமரிடம் எடுத்துரைத்த போது, “நேற்று நீதானே தங்க நாணயங்களை அபரிமிதமாகத் தானமாக அளித்திட்டாய்! காஞ்சனமாகிய தங்கத்திற்கு மாயைகளை உருவாக்கும் தன்மையும் உண்டு. எனவே தான், ஒட்டுபவரிடம்தான் தங்கம் ஒட்டும். முறையாக வருகின்ற தங்கமே, தங்க ஸ்வர்ணப் பிரகாச குணங்களுடன் ஒட்டும். தங்கம் சுத்தமானது தான், ஆனால் அனைத்து வகையான எண்ணங்களையும் தன்னுள் ஏற்றுச் சுத்திகரிக்கின்ற புனித சக்திகளையும் கொண்டது. எனவே அனைவராலும் தங்கத்தில் பதியும் சக்திகளைத் தாங்க இயலாது. செல்வந்தர்களும் கூட அதிகமான அளவில் தங்க நகைகளை அணிவது கிடையாது. இறைவனுக்கே அனைத்துத் தங்க வகைகளும்!

“நீ தானமாக அளித்த தங்க நாணயங்களை வைத்துக் கொண்டு, உழைப்பே இல்லாமல் எத்தனையோ ஆண்டு காலத்தை தள்ளி விடலாம் எனப் பலரும் எண்ணுவதால், இனி யார் உழைக்க முன் வருவார்கள்? நீ அளித்த காஞ்சனமாகிய தங்கம், மாய காஞ்சனமாக சில வகை ஆசைகளை ஏற்படுத்தி விட்டது!” என்று உரைத்திடவே, சீதா தேவி வருத்தமடைந்தாள்.

அப்போதுதான் ஸ்ரீராமர் பெருமழையை அகற்றி சீதா தேவிக்கு நடந்த இச்சம்பவங்கள் யாவும் சிறு மாயையின் லீலைகளே என உணர்த்தினார். தன் அறியாமையால் “தங்கத்திற்கு மாசு ஏற்படுத்தி விட்டோமோ!” என எண்ணிச் சீதா தேவி வருத்தமுற்ற போது, ஸ்ரீராமர் “சுவர்ண சக்திகள் நிறைந்த தலங்களில் பூஜிக்கின்ற பாக்கியம் உனக்கு வருங்காலத்தில் கிட்டும். அப்போது இக்குறை தீரும்!” என வரமளித்தார்.

இவ்வாறு ஸ்ரீராமர் தம் பரிவாரத்துடன் வழிபட்ட கடற்கரைத் தலங்களுள் இதுவும் ஒன்று. இவ்வாறு சீதா தேவிக்கு நற்பாடம் கிட்டிய நன்னாளும் ஒரு விஷ்ணுபதிப் புண்ணிய காலமாகும்.

அட்ட லக்குமித் திருவருள் கொடுக்குந் திருத்தலம்

இங்கு பொன்னகரத்தில் உறையும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் அர்ச்சாவதாரத்தில் பொன் வகைக் கேசங்களைப் பூண்டவர். கேசவன் என்றால் சக்தி வாய்ந்த முடிகளைக் கொண்டவர் என்று மட்டுமே பொருள் கொள்தல் கூடாது. அச்சுதம், கேசவம், ராமம், நாராயணம், கிருஷ்ணம், தாமோதரம், வாசுதேவம், ஸ்ரீதரம், மாதவம் ஆகிய எட்டுத் திருவலம்பச் சக்திகள் நிறைந்த இத்தலத்தில்தான் அட்ட வகை அதாவது எட்டு வகையான தரித்திரங்களையும் போக்குகின்ற ஆதிகேசவப் பெருமாள் “எட்டுறை எட்டில் எட்டும் மகாலட்சுமி கடாட்ச சக்திகளுடன்” சேர்ந்து அருள்கின்றார்.

அபிஷேக ஆராதனை, ஹோம பூஜை, ஜாதி, மத பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கு மாங்கல்ய தானம், அன்னதானம், தர்ப்பணப் பூஜை, அங்கப் பிரதட்சணம், எட்டு முறை அடிப்பிரதட்சிணம், அன்னதானம் போன்ற எட்டின் மடங்கில் இங்கு பெருமாள் பூஜைகளை மேற்கொள்வது மிகவும் விசேஷமானது.

இந்த ஆலயத்தில் பரந்த வெளி பூம்ய ஜலாகாசத் திருத்தலமாக, பூமியாகிய பிருத்வி சக்திகளையும் ஆகாசப் பரவெளி சக்திகளையும், நீர் நிலப் பரப்பு இணையுமிடத்தில் வாயு ஆதிக்கம் கூடுவதால், கடற்கரை அருகில் இருப்பதால் வாயு சக்திகளையும் இணைத்துத் தரவல்ல அற்புத பீதாம்பர யோகத் தத்துவத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

எப்போதும் இங்கு வாஸ்து தீர்த்தத்தில் தர்ப்பணம் அளித்தாலும் இங்கு பீஷ்மாச்சாரியாருக்கு முதலில், 21 முறை “ஸ்ரீபீஷ்மம் தர்ப்பயாமி!” “ஸ்ரீபீஷ்மம் தர்ப்பயாமி!” “ஸ்ரீபீஷ்மம் தர்ப்பயாமி!” என்று ஓதி, அர்க்யம் அளித்துப் பிறகு தர்ப்பணம் அளிப்பது நல்ல மனோதிடத்திற்கு, வைராக்யமான மனோ நிலைக்கு வழி வகுக்கும்.

இள வயதிலிருந்தே பல கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாகி இருப்போர் மனம் திருந்தி நன்முறையில் வாழ்ந்திட, இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை தோறும் தர்ப்பணம் அளித்து, பெருமாளுக்கு, பசுநெய், பனங்கற்கண்டு, திராட்சை, முந்திரி, பாதாம் பருப்பு கலந்த சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் வைத்து அன்னதானம் அளித்து வழிபட்டு வருதல் வேண்டும்.

திருவிசநல்லூர்

கும்பகோணத்தில் இருந்து கிழக்கே நான்கு மைல் தொலைவில், திருக்கற்குடி அருகே திருவிசநல்லூர் உள்ளது!

திருவிசநல்லூரில் கங்கை பெருகும் காருண்ய தினம்

சிவகங்கை லால்குடி

ஏதோ வட பாரதத்தில் மட்டும் கங்கை நதி ஓடுவதாக எண்ணாதீர்கள். கங்கைப் பிரவாகம் திளைக்கின்ற பல தீர்த்தங்களும் அடிநீரோட்ட விருட்சங்களும் பாரதமெங்கும் பல இடங்களில் உண்டு. கங்கைக் கரையில் வசிக்கின்றவர்கள் மிகவும் புண்ணியசாலிகளே. எனினும் பிறப்பு விதி நிர்ணயங்களின்படி இறைவன் கங்கைக் கரை அருகே பிறக்க வைத்தும் கங்கையின் அருமை தெரியாது வாழ்பவர்கள்தாம் பிற இடங்களில் பிறந்து புனித யாத்திரையாக கங்கை நதித் தலங்களுக்கு வருகின்றார்கள் என்பதும் உண்மையே, மேலும் கங்கை வளாகத்தில் பிறந்து தினந்தோறும் பக்திப் பூர்வமாக நீராடி கங்கா மாதாவின் ஆசிகளைப் பெற்றோர் தம் உடல் நாளங்களில் ஆத்ம சாரமாய் செறிந்துள்ள கங்கை சக்திகளை தம் சுவாசத்தால் ஆங்காங்கே நிரப்பிட பல இடங்களிலும் பிறப்பெடுக்கின்றார்கள், என்பதும் உண்மையே!

சேவா முக்தி,  சேவா மோட்சம்

முக்தி, மோட்ச உத்தம நிலைகளின் அர்த்தங்கள் ஒவ்வொரு தெய்வீக நிலைகளிலும் மென்மேலும் சிறப்படைவதாக அமையும். கலியுகத்தில் உத்தமமான முக்தி நிலை அடைந்தவர்கள், இறப்பு, பிறப்பு இல்லாத நிலையாக இறைவனாலேயே சற்குருமார்கள் மூலமாக மீண்டும் பூவுலகிற்கு ஜீவ சேவைக்காக அனுப்பப்படுகின்றார்கள். ஆம், இதற்காகத்தானே அதாவது மக்களின் பவ வினைகளைக் கரைத்து நன்னிலையை அடையச் செய்வதற்காகத்தானே கங்கா தேவி பூவுலகிற்கு வந்துள்ளாள். எனவே தற்போது இறைச் சேவையில் மிகுந்த நாட்டம் உள்ளவர்கள் யாவருமே தாம் மீண்டும் பூவுலகில் பிறப்பெடுத்து அன்னதானம், வஸ்திர தானம், கல்வி தானம் போன்ற பலவிதமான இறைச் சமுதாய இறைப்பணிகளை ஆற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பூவுலகிற்கு வருவதே சேவா முக்தி, சேவா மோட்சம் ஆகும் என நன்கு அறிதல் வேண்டும்.

திருவிசநல்லூர் சிவாலயம்

இவ்வகையில் கங்கை நீரோட்டங்கள் நிறைந்து நிரவும் தலங்கள் பல உண்டு. சிவகங்கைத் தீர்த்தம், ருத்ர கங்கை, கங்காதீஸ்வரர், கங்காளேஸ்வரர், கங்கா தேவி, ஆகாச கங்கா, நூபுர கங்கா (மதுரை – பழமுதிர் சோலை), பாதாள கங்கை போன்ற கங்கை நாமம் உடைய மூர்த்திகள், தீர்த்தங்களில் இன்றும் குறித்த ஹோரை நேரத்தில், கங்கை தேவி ஆவாஹனம் ஆகி தீர்த்த சக்திகளை அனைவருக்கும் அளிக்கின்றாள்.

திருவிசைநல்லூரில்
கங்கை பிரவாகம்

கங்கையின் பிரவாகம்

கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் அக்ரஹாரத்தில் ஸ்ரீதரஅய்யாவாள் எனும் மஹான் தம்முடைய மூதாதையர்களுக்கானத் திவச நாளில் படையலுக்காக வைத்திருந்த உணவுப் பண்டங்களை பசியால் வாடிய ஏழைகளுக்கு எடுத்துக் கொடுத்து விட்டார். அவர் மீண்டும் கங்கையில் நீராடி வந்தால்தான் திவச பூஜைகளை நடத்த முடியும் என்ற நியதி சுட்டிக் காட்டபட்ட போது, ஸ்ரீதர அய்யாவாள் பக்தியுடன் ஏழைகளுக்கு ஆற்றிய அன்னதான மகிமையால், பித்ரு மூர்த்திகளும் ஆனந்தமுற்று, கங்கா தேவியே பரமானந்தத்துடன், அவருடைய வீட்டுக் கிணற்றில் கங்கைப் பிரவாகமாக உருவெடுத்து வீதியெங்கும் கங்கை நதி நீர் புரண்டோடிய ஆனந்த வைபவத்தைப் பலரும் அறிவர்.

ஆனால் இது ஒரு மாய வேலை எனப் பலரும் சந்தேகப்பட்டபோது, காசியில் கங்கைப் பிரவாகத்தில் என்னென்ன பிராணிகள், தாவரங்கள் தோன்றிடுமோ அதே வகையில் முதலைகள் முதலியன தோன்றி, ஆங்கே திருவிசநல்லூரில் வந்திட்ட கங்கைப் பிரவாகத்தை நிரூபணம் செய்தன.

நித்ய கங்கை தீர்த்தத் தலம்

கலியுகத்தில் இன்றும் வருடந் தோறும் கார்த்திகை அமாவாசை நாளில் திருவிசநல்லூர் சிவகங்கைத் தீர்த்தக் கிணற்றில் கங்கைப் பிரவாகம் தோன்றுவதைப் பரிபூர்ணமாக உணர்ந்திடலாம். இன்று இந்நாளில் கிணற்று கங்கைத் தீர்த்தம் கொண்டு அளிக்கின்ற தர்ப்பணத்தை, ஸ்வாஹா, ஸ்வதா பத்னிகள் சமேத அக்னி மூர்த்தி வீற்றிருக்க, அவரவருடைய வசு, ருத்ர, ஆதித்யப் பித்ரு மூர்த்திகளே நேரில் வந்து பெற்றுச் செல்கின்ற கங்காப் பிரவேச பிரம்மோற்சவமாக இன்றளவும் இத்தலத்தில் நடந்து வருகின்றது. வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்யம்.

கார்த்திகையில் அமாவாசை அன்று மட்டுமே இங்கு ஸ்ரீதர அய்யாவாள் இல்லத்தில் கங்கைப் பிரவாகம் ஏற்படுகின்றது என்று எண்ணாமல் நித்திய கங்கை வாசம் செய்யும் தீர்த்த ஸ்தலமாக, அவ்வப்போது இங்கு வந்து வழிபட்டிடுங்கள். இந்தக் கிணற்றில் ஏற்பட்ட கங்கைப் பொழிவு, அருகில் உள்ள திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகியின் திருப்பாதங்களை தழுவி நிரவிச் சென்றது. இன்றும் பாதாள கங்கையாய் பூமியடி கங்கை நீரோட்டம் பொழியும் புண்ய பூமியே திருவிசநல்லூர்.

ஸ்ரீகற்கடேஸ்வரர் சிவாலயம் திருந்துதேவன்குடி

சிறந்த சிவபக்தரான ஸ்ரீதர அய்யாவாளின் ஆசிகளை வேண்டி இன்று நாள் முழுதும் நெற்றி, கை, கால்களில் திருநீற்று பட்டையுடன் (18 இடங்கள்) துலங்குதல் கங்கா தேவியின் அருளையும் சந்ததிகளுக்கான ஆசீர்வாதமாகவும் பெற்றுத் தரும். இன்று கங்கா தேவிக்கு புனுகு, அத்தர், கஸ்தூரி, கோரோசனை, பச்சைக் கற்பூரம், ஜவ்வாது ஆகியவற்றை கங்கை நீரில் கலந்து அபிஷேகம் செய்து கோமுகம் மூலமாக அபிஷேக நீரைப் பெற்று இதை வைத்து அன்னம், உணவு சமைத்து ஸ்ரீதர அய்யாவாளின் நினைவோடு கங்காதீஸ்வரரை வேண்டி தான்மளித்தலால் பித்ருக்களுக்கு முறையாகப் படைக்காத தோஷங்கள் தணியவும் உதவும்.

ஸ்ரீராமநாம ஜபம்

ராமதாரக மந்தரமாகிய “ராம்,ராம்” என்று எப்போதும் ஓதி வருதல் மிகவும் எளிமையான, சக்தி வாய்ந்த மாமந்திரப் பூஜை நாமவழிப் பூஜையாகும். பாமரர்க்கும், பலத்த செல்வந்தர்கட்கும், கப்பலில் நடுக் கடலில் தனித்து வாழும் மாலுமிக்கும், போர் முனையில் திகிலுடன் வாழும் படை வீரர்க்கும்... இவ்வாறாக அனைவர்க்கும் எந்நிலையிலும் ஏற்று வருவதே மிக,மிக எளிமையான “ராம், ராம்” என ஓதுதலாகிய ராமநாம தாரக மந்திரப் பூஜை ஆகும்.

எத்தகைய பணிகளுக்கு இடையிலும், உள்மனதில் ராமநாம ஜப ஓடை நிரவும் அளவில், உள்ளார்ந்த ராமநாமம் ஜபிக்கின்ற தியான முறையும் தக்க சற்குரு மூலம் எளிதில் அடையவல்லதே! பெரிய அளவிலான மாமந்திரங்கள், சஹஸ்ரநாமத் (1000 போற்றித்) துதிகள் இருக்க, மிகமிகச் சிறியதாக, இரண்டு எழுத்துக்களில் உள்ள ராமநாமத்தில் மனம் எவ்வாறு லயிக்கலாகும் என்பதற்கு அனுமாரின் அனுபூதிகளும், வேடராய் விளங்கியவர் வால்மீகி மஹரிஷியாய்ப் போற்றப் பெறும் அளவிற்கு உத்தம நிலைகளை அடைந்ததும் நிரூபணமாகும்.

ஸ்ரீஆஞ்சநேயர் இவ்விரண்டெழுத்து ராமநாமம் ஓதியே சுயம்புவாய், “நவவியாகரண பண்டிதராய்”, அனைத்து வகையான வேத மாமறைகளிலும் சிறந்து விளங்குகின்றார் என்பதன் மூலம் ராமநாம ஈரெழுத்தின் மஹிமையை உணரலாகும்.

ராமநாம ஜபத்துடன் இதற்காகவே சில எளிய கடவுள் சேவைகளையும் ஆற்றிப் பிணைத்துக் கொண்டால், ராமநாம ஜபத்தில் சிறிது, சிறிதாக, மனம் ஈடுபடலாகும். ஏகபத்தினி விரதராக, “ஒரு இல், ஒரு வில், ஒரு சொல்” ஆகிய முத்துடைச் சக்திகளுடன் சத்தியவானாகத் துலங்கும் ஸ்ரீராமர், தாம் கடவுள் அவதாரம் என ஒரு போதும் வெளிக் காட்டாது, சாதாரண மனிதன் போல் வாழ்ந்து, நமக்கு மட்டுமல்லாது உலக ஜீவன்கள் அனைத்திற்குமே அறவழி காட்டி உள்ளார்.

ராம நாம ஜப முறை

தினசரி ஒரு நாழிகை நேரமேனும் (24 நிமிடங்கள்) பூஜை அறையில் மரப் பலகையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு இடைவிடாது “ராம், ராம் என உதடால், மனதால், உள்ளத்தினுள் ஜபித்தல், மாதம் அல்லது பட்சத்தில் ஒரு நாளில் – இன்று முழுவதும் ராமாயணம் படிக்க வேண்டும், ராமாயணம் தவிர, செய்தித் தாளோ வேறு எதுவுமே படிக்கலாகாது!” என்ற சங்கல்பம் பூண்டு, கடுமையான மன உறுதியுடன் ராமாயணப் பாராயணம் செய்திடுங்கள். இந்நாளில் வானொலி கேட்டல், தொலைக் காட்சியைப் பார்த்தலையும் முழுமையாகத் தவிர்த்து, முழுதும் காவிய புருஷராம் ஸ்ரீராமரோடு உலாவினோம் என்று அரிய மனத் திருப்தி, உங்கள் உள்ளத்தில் குடியேறும்படி இன்றைய வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

அனைவராலும் இதனைக் கடைபிடிக்க முடியுமா? பலவிதமான சந்தர்ப்பங்கள், வாழ்க்கை முறைகளினால் ஒரு நாள் முழுதும் ராமநாம ஜப கைங்கர்யத்திற்கு ஒதுக்க இயலாதவர்கள் என் செய்வது? இவ்வாறு சொல்வதே தவறு! கடவுளிடமிருந்து அனைத்து வசதிகளையும் நல்வரங்களாக, பூர்வ ஜன்மப் புண்யவசத்தால் பெற்று விட்டு, இறைவனுக்கான பணியில் நேரமில்லை, இயலவில்லை என்பது பொய்மையால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதும் ஏமாறுவதும் ஆகும்.

இவ்வாறு ஒரு நாள் முழுதையும் ராமனுக்காக அர்ப்பணிக்க இயலாதவர்கள், இன்று ஒரு பெரிய தர்மத்தை, நற்காரியத்தை உங்கள் வசதிக்கேற்ப ஆற்றி விட்டு, இதைப் பற்றி எவரிடமும் சொல்லாது, நம் கடமையை ஆற்றினோம் என ஆத்மத் திருப்தி அடையுங்கள்.

இந்நாளில் குறைந்தது மூன்று மணி நேரமாவது தொடர்ந்து மௌன விரதம் பூண்டு, ராம், ராம் என்று உள்ளுக்குள் ராம நாமம் ஓதிடுங்கள். இன்று மிகமிக எளிமையான முறையில் தான தர்மம் ஆற்ற வேண்டுமெனில், 25 ரூபாய்க்குப் பொரி, பொட்டுக் கடலை, நாட்டுச் சர்க்கரையையும் – தர்பைகளால் ஒவ்வொன்றாகத் தொட்டு,

“ஸ்ரீராம பரிபாலனம், சுகஜீவன மங்கள சாந்தம்!” என்று ஓதி, அகில உலகிற்கும் ராமநாம சக்தியை உங்களால் இயன்ற அளவில், மூன்று தர்பைகள் மூலமாகப் பரவெளியில் ராமநாம தியான மார்கமாகப் பரப்பிடத் துணை புரியுங்கள். பிறகு, இம்மூன்று தர்பைகளையும், ஸ்ரீராமர் ஆலயத்தில் உள்ள ஏதேனும் மரத்தடியிலோ, ஆற்றிலோ, குளத்திலோ எவர் கால் படாமலும் இட்டிடுங்கள்.

பல மொழிகளில் ஸ்ரீராமர்

இன்று குறைந்தது 1008 முறை ஸ்ரீராம ஜெயம் எழுதியும், இவ்வாறு எழுதித் தருவோருக்கு மனம் உவக்கும்படி நல்பரிசுகளை அளித்து ஊக்கியும் ராமநாம ஜபசக்திகளைப் பரப்பிடுங்கள்.

இன்று நிறைய நெல்லிக் காய்களை (குறைந்தது 108) வாங்கி அவற்றை ராம், ராம், ராம் என்ற எழுத்து வடிவில் அடுக்கி வைத்து, தர்பையால் அல்லது அரசு, ஆல் சமித்துக் குச்சியால், ஸ்ரீராம ஜெயம் என்று ஒவ்வொரு நெல்லிக்காயின் மீதும் எழுதி, 10008 அல்லது 108 முறை ராம், ராம் என ஓதி, ஒவ்வொரு நெல்லிக்காயின் பட்டைகளுக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு, நெல்லிக்காய்களை ராம நாம மூர்த்த சக்திகளாகப் பாவனை செய்து, தொட்டு, நமஸ்கரித்து வணங்குதல் வேண்டும்.

இந்த ராமநாம பாவனத்திற்குப் பூக்கள், தானியங்கள், புது நாணயங்களால் அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து வணங்கிடுக!

பிறகு, பூஜிக்கப் பெற்ற அரிசி மணிகள், நெல்லிக்காய்களைக் கொண்டு நெல்லிக்காய்த் துவையல் அன்னம், சிறிது எலுமிச்சைச் சாறு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, உப்பு, எண்ணெய், பெருங்காயம் சேர்த்து வதக்கி, நல்ல மணமுள்ள, சுவையான நெல்லிக் காய் ஊறுகாய் ஆக்கி, இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் அவரவர் வசதிக்கு ஏற்ப ஏழைகளுக்குத் தானமாக அளித்திடவும். இதனால் ராமநாம சக்திகளை அறியாத ஏழைகளுக்கும் ஜாதி, மத பேதமின்றி ராமநாம சக்திகளை நிரவச் செய்யும் பாக்யமும் குருவருளால் கிட்டும்.

இவ்வாறு ராமநாம சக்திகள் திளைக்கும் வண்ணம், ராம தர்ம சேவைகளை ஆற்றி, ராம நாம சக்திகளை சேவைப் பூர்வமாகப் பரப்பும் வண்ணம் உங்கள் வாழ்வில் மாதம் ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் ராமநாம வேள்வியாக இதனை ஆற்றி வாருங்கள்.

ஸ்ரீராம நவமியன்று அல்லது ஒவ்வொரு நவமித் திதியிலும் இவ்வகையில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. தீயவற்றின்பால் மனம் மீண்டும், மீண்டும் நாடிச் செல்வது படிப்படியாகத் தணிந்து, மனக் குற்றங்கள் சிறிது, சிறிதாக நீங்கிட உதவும்.

ஒவ்வொரு நவமியும் வித்யா சக்திகளுடன் துலங்குவதால், இதனை நவமி விரதமாகக் கொண்டு கடைபிடித்து வந்தால் மனசுத்தி நன்கு விருத்தி ஆகும். பிள்ளைகள் நல்ஒழுக்கத்துடன் வாழத்துணை புரியும்.

இலம்பையங்கோட்டூர்

அபூர்வமான பட்டை லிங்க தரிசனத் தலம்! மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத் தலம்!

கலைக்கோட்டுச் சித்தர் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் தோன்றியவர். கோட்டு என்றால் சந்திரப் பிறை என்ற பொருளும் உண்டு. கலைக்கோட்டுச் சித்தரின் சிறப்பம்சங்கள் யாதெனில், பூவுலகில் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் சுயம்பாய்த் தோன்றிய அனைத்து லிங்க மூர்த்திகளையும் அறிந்து வழிபட்டு அதன் பலாபலன்களை மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெறுபவர்களுக்கு மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளிலேயே கிடைக்குமாறு அர்ப்பணித்துச் சங்கல்பம் பூண்டுள்ளார்.

சந்திரப் பிறை மறைத் துறை

சந்திரப் பிறை என்பதற்குச் சந்திரப் பட்டம் என்று பெயரும் உண்டு. மேற்குத் திசையில் கிட்டுகின்ற மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தில், வடக்குப் பக்கம் உள்ள பட்டைகள், தெற்குப் பக்கம் உள்ள பட்டைகள் என்று இரண்டு பக்கங்கள் உண்டு.

மூன்றாம் பிறை நாளில் கூர்ந்து நோக்கிடில் சந்திரப் பிறையின் வடக்குப் பட்டைகள், தெற்குப் பட்டைகளை நன்கு கவனித்து தரிசித்திடலாம், மூன்றாம் பிறைச் சந்திர தரிசன மஹிமையால் அபரிமிதமான ஞானம் பெற்று, இதை வைத்துத் தான் நம்முடைய முன்னோர்கள் வான்வெளி சாத்திரத்தில் வல்லவர்களாய் விளங்கி, எந்தப் பகுதியில் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தின் வடக்குப் பட்டைகள், தெற்கு பட்டைகள் நன்கு தெரியலாகும் என பூகோள ரீதியாகப் பகுத்துத் தந்துள்ளார்கள்.

இதையொட்டித்தான் கும்பகோணம் – வலங்கைமான் அருகே தெற்குப் பட்டம் (ஸ்ரீசந்திர சேகரர் ஆலயம்), வடக்குப் பட்டம் என்ற பெயரிலேயே ஊர்கள் அமைந்து உள்ளன.

ஐயங்கோட்டு என்பது ஐயாறப்பனாகிய சிவபெருமானின் சிரசில் இருக்கும் “(கலைக்) கோட்டு” ஆகிய மூன்றாம் பிறைச் சந்திர வடிவாகும். இலம்பம் என்பது லம்ப காரணச் சூத்திரப்படி அமைகின்ற கைவிரல் முத்திரையாகும். புதன் விரலாகிய சுண்டு விரலின் கீழ், இரண்டு அங்குலம் தள்ளி அமைந்திருப்பதே சந்திர மேடாகும். இரண்டு கரங்களையும் நன்கு விரித்து மூன்றாம் பிறைச் சந்திரனை நோக்கி இரண்டு உள்ளங்கைகளும் பார்க்கும்படி விரித்து, பிறகு கை கூப்பிக் கும்பிட்டுச் சந்திர தரிசனம் பெறுதலே லம்ப முத்திரைச் சூத்திரமாகும்.

லம்பையங் கோட்டு அரம்பைத் துதிவள
எம்பெருமானின் எழில் சிரசாக
உம்பர் கும்பர் உள்ளறியாது
லம்பையங் கோட்டு லம்போதரனே!
பம்பைச் சந்திரக் கலைவளநாடே!

-என்பது இலம்பையங் கோட்டுச் சிவனாருக்கான சித்தர்களின் பரிபாஷை மந்திரத் துதி!

சென்னை  மப்பேடு – இலம்பையங்கோட்டூர் – தக்கோலம் – அரக்கோணம் மார்கத்தில் உள்ள இலம்பையங்கோட்டூரில் உள்ள பட்டை வடிவ லிங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் முதலில் சந்திரசேகர லிங்க தரிசனம், பிறகு வானில் சந்திர தரிசனம், பிறகு மீண்டும் பட்டை லிங்க தரிசனம் என்று எத்தனை மூன்றாம் பிறை தரிசனங்களைப் பெறுகிறோமோ அந்த அளவிற்கு கண்களில் ஒளி பெருகும், நேத்திர சக்தி நன்கு பெருகும்.

நேத்ரண்ணிச் சிகிச்சை என்ற அபூர்வமான நேத்திரத் தைல வகை சிகிச்சை ஒன்றுண்டு. கண்களில் உள்ள பல நோய்களுக்கு மாமருந்தாக மூன்று நாட்களுக்கு முன் தாய்ப் பால் அளிக்கும் தாய்மார்களுக்குக் குறித்த மூலிகை வகை உணவினை அளித்து, கண்களுக்குள் சுத்தமான தாய்ப்பாலைச் சில துளிகள் விட்டு விரைவில் குணமாக்கும் முறை ஒன்று சித்த வைத்தியப் பூர்வமாக உண்டு. இதனையே “நேத்ரண்ணிச் சிகிச்சை” என்று சொல்வார்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் ஏழை மாதர்களுக்கு மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் தாய்ப்பால் நன்கு சுரக்கும்படியான சத்துள்ள தானியங்கள், உணவு வகைகள், பழங்கள், பால், டானிக்குகள், லேகியங்கள் அளித்து, சந்திர பகவானை அமுதூட்டுப் பெருமானாக வழிபடுதலால், ஆண்/பெண் சந்ததி இல்லாது வாடுவோருக்கு தக்கப் பரிகாரங்கள் கிட்டும்.

பொதுவாக, பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுடைய தீய வழக்கங்கள், சிறைத் தண்டனை பெறுதல், வழக்கு விசாரணை போன்றவற்றால் அதர்மமாக அவமானபடுத்தப்பட்டோர், இலம்பையங்கோட்டூரில் திங்கள், பௌர்ணமி, மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாட்களில் அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுதல் வேண்டும்.

லம்ப முத்திரைச் சூத்திரம் என்பது இரு கைகளின் உட்புறமும் மூன்றாம் பிறையை நோக்கி வைத்து, இரு கைகளின் சந்திர மேடுகளும் நன்றாகச் சேர்தல் வேண்டும். இரு மோதிர விரல்களையும் சேர்த்து இதன் வழியே மூன்றாம் பிறைச் சந்திர மூர்த்தியைத் தரிசிக்க வேண்டும், பிறகு கைகளைப் பிரித்து சாதாரண முறையில் சந்திர மூர்த்தியை வணங்கிட வேண்டும்.

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போதல், மானப் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் தற்கொலையை நாடும் அளவிற்கு மனவேதனை கொள்வோர் பலர் உண்டு. அத்தகையோர் மேற்கூறிய தரிசனங்களால் நற்பலன் பெறுவார்கள்.

மரணயோகம்

மரண யோக காலப் பூஜைகள்!

மரண யோகம் என்பது குறித்த கிழமையில், குறித்த நட்சத்திரம் சேரும் போது ஏற்படுவதாகுமென நாமறிவோம். உதாரணமாக, செவ்வாய் + விசாகம், செவ்வாய் + சதயம், வியாழன் + மிருகசீரிஷம் சேர்வது மரண யோக நேரமாகும். பொதுவாக, மரண யோகத்தில் சுப காரியங்களை ஆற்றாது ஒதுக்கினாலும், மரண யோக நேரத்தில், மரண பயத்தை அகற்றும் பலாபலன்களைத் தரவல்ல விசேஷமான பூஜைகளும் நிறையவே உண்டு. நம் வாழ்க்கையில் மரண யோகத்தின் ஊடே எத்தனையோ தொடர் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தாமே இருக்கின்றன.

சூரிய, சந்திர உதய, அஸ்தமன நேரங்கள் போல, ஒவ்வொரு நாளிலும் 27 நட்சத்திரங்களுக்கான உதய, அஸ்தமன நேரங்களும் உண்டு என்பதைப் பலரும் அறியார். ஒரு நாளில் வரும் கிழமை (வாரம்), நட்சத்திரம், யோகம், கரணம், திதி ஆகிய ஐந்தில் – எது சக்தி வாய்ந்ததாக விளங்குகின்றது என்பது, அந்தந்த நாளின் கால அம்சங்களைப் பொறுத்ததாகும். உதாரணமாக, அமாவாசைத் திதியன்று, அமாவாசைத் திதியின் வலிமையால், ஏனைய நாள், நட்சத்திரம், யோகம், கரணத்தை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

இதே போல், வாஸ்து நாளில், வாஸ்து காலசக்திகள், காலஜோதி சக்திகளைப் பெற்றுப் பிரகாசிப்பதால், மரண யோகம் இருப்பினும், வாஸ்து பூஜைகளைத் தொடர்ந்திடலாம். ஏனெனில், வாஸ்து சக்திகள், மரண யோக அம்ச விளைவுகளில் இருந்து காத்திட வல்லதாகும். இவ்வாறு அந்தந்த நாளின் கால சக்தி அம்சங்களை விளக்குவதாகப் பஞ்சாங்கங்கள் அமைந்து உள்ளன.

கால தோஷங்களை நீக்கும் விரத பூஜைகள்!

கோபத்ம விரதம், சாதுர்சாகர விரதம் போன்ற விரத அம்சங்களில் காலதோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான அரிய பூஜா பலன்கள் துலங்குகின்றன.

மரண யோக நேரத்தில் பல பண்டிகைகள் வந்தமையும், இந்நாட்களில் கடைபிடிக்கப் பெறும் விரத பூஜை மஹிமையால், மரண யோகத்தில் விளையும் தீயசக்திகளின் விளைவுகள் தணிக்கப் பெறும். உதாரணமாக, மரண யோகம் முழுதுமாக நிறைந்துள்ள ஏகாதசித் திதியில் கடைபிடிக்கப்படும் விரதம் அறிந்தோ, அறியாமலோ எமகண்ட நேரத்தில் ஆற்றிய காரியங்களில் உள்ள விளைவுகளைத் தணிக்க உதவிடும். மேலும் மிருத்யு தோஷங்களைத் தவிர்க்கவும் இவை உதவும்.

மேலும் மரண யோகம் என்பதன் அர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மிருத்யு தோஷம் எனப்படும் அகால மரண சக்திகள் தலை தூக்கும் நேரம் பிரயாணத் தடங்கல்கள், கர்ம வினைப் பின்னல்கள் ஏற்படும் நேரம்.

அமிர்த சக்திகள், சித்த சக்திகள் மறையும் நேரம், Negative Forces எனப்படும் தீய சக்திகள் தலை தூக்கும் நேரம்.

நல்லன அல்லாத சக்திகள் எழும் நேரம் , வானில் காற்றுப் பரவெளியில் நிரவியிருக்கும் தீய சக்திகள் ஆக்கிரமிக்கும் நேரம்.

மரணயோக நேரம் என்பது ராகு கால துர்க்கை பூஜை போல மேற்கண்ட மிருத்யு தோஷங்களை நீக்குவதற்கான சக்திகளைத் தரவல்ல பூஜைகளை ஆற்ற வேண்டிய நேரமும் ஆகும்.

நெய்க்கொட்டாமரம்
திடியன்மலை

பிராணாயாமத்தில் கும்பம் எனப்படும் உள்ளுக்குள் மூச்சை நிறுத்தும் நேரத்தை அதிகரித்துப் பிராணாயாமம் செய்யும் நேரம்!

மிருத்யுஞ்ஜய மந்திரம், சண்ட பைரவர் காயத்ரீ, தர்மராஜத் துதிகள், எமதர்ம காயத்ரீ துதி, ஸ்ரீமிருத்யுஞ்ஜய ஸூக்தம், எமலிங்க வழிபாட்டுத் துதிகள், மிருத்யுஞ்ஜய காயத்ரீ ஜபசக்திகள் விருத்தி அடையும் நேரம் எனவாகவும் அமைகின்றது, எனவே மிருத்யு தோஷம் எழும் நேரத்தில்தாம், மிருத்யுவை வெல்ல வல்ல பூஜைகளை ஆற்ற வல்ல நேரமாகவும் அமைகின்றது.

ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தி அருள்வதாக காஞ்சீபுரத்தில் இறவாத் தானம், பிறவாத் தானம் என்று சிவாலயம் உண்டு. பிரபஞ்சத்தில் மிருத்யுஞ்ஜய சக்திகளை வேண்டுவோர்க்குப் பெற்றுத் தரவல்ல மூல மிருத்யுஞ்ஜய லிங்க மூர்த்தி இங்கு அருள்கின்றார்.

ராகுகால ஸ்ரீதுர்க்கை பூஜை போன்று, மரண யோக நேரத்தில், இறவாத் தான, பிறவாத் தான சிவலிங்க வழிபாடு மிகவும் விசேஷமானது.

கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்போர் நலம் பெறவும், விபத்து, தற்கொலை, இளவயது மரணம் போன்ற மிருத்யு தோஷங்களால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற குடும்பங்களில் மிருத்யு தோஷங்கள் அகன்று, நன்மைகளைப் பெறவும்,

அடிக்கடி விமானப் பயணம் செய்வோர், டிரைவர்கள் மற்றும் ஆபத்துகள் நிறைந்த plots, airhostess, போன்று விமானம், கப்பல், ராணுவத்தில் பணி புரிவோர்களும், அடிக்கடி காஞ்சீபுரத்தில் ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்திக்கு மரணயோக நேரத்தில் மிருத்யுஞ்ஜய வழிபாடு செய்தல் விசேஷமானது.

நெய்க்கொட்டா மரத்தில் விசேஷமான மிருத்யுஞ்ஜய சக்திகள் பொலிவதால், இன்று, நெய்க்கொட்டா மரத்திற்கு, குறிப்பாக, இதனைத் தல விருட்சமாகக் கொண்ட ஆலயத்தில் நெய்க்கொட்டா மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுதல் வேண்டும். மிருத்யுஞ்ஜய சக்திகளை விருத்தி செய்வதற்கு எமகண்ட நேரத்தில் மிருத்யுஞ்ஜயத் துதிகளை ஓதித் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

மணமேல்குடி

மணமேல்குடி சிவாலயம்

ஸ்ரீஜெகத்ரட்சகி சமேத ஸ்ரீஜெகதீஸ்வரர் ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த வாஸ்து வழிபாட்டுத் தலம்!

மஹாப் பிரளயத்திற்குப் பின், பிரம்ம மூர்த்தி, சிவஅவதாரமான, ஸ்ரீகிராத மூர்த்தியை வேண்டி சிருஷ்டித் தொழிலைத் தொடங்குகின்றார். பிரளயம் தோன்றி உலக பந்தங்கள் மறைகையில் ஜீவ சிருஷ்டிக்கான பீஜங்கள் ஒரு கும்பத்தில் வைக்கப்படுகின்றன. இந்த சிருஷ்டிப் பந்துவில் ஜீவன்களின் கிருத்தியம் ஆனவுடன் அவற்றை மென்மேலும் ஜீவ விருத்திக்காக, உலகில் நிரவ வேண்டும் அல்லவா, இதற்காக ஸ்ரீஜெகதாம்பிகா சமேத ஸ்ரீஜெகதீஸ்வரரை வேண்டி, பிரம்மா ஜகத்தில் ஜீவ சிருஷ்டியை நிரவுகின்றார்.

ஸ்ரீஜகதீஸ்வரர்
மணமேல்குடி

பிரபஞ்சம், ஜகம் என்பது வெவ்வேறா? நீரில் இருக்கும் மீன் தானிருக்கும் குளத்தையும், ஆற்றையுமே உலகமாகக் கருதுவது போல, ஜீவன்களில், மனிதர்கள் தாம் வளரும் உலகப் பகுதிகளை ஜகம் என்று அறியாமையால் எண்ணி விடுகின்றனர்.

இறைமையின் விரிவே ஜகம்!

மனிதனின் கண்ணுக்கும் எட்டாத, தொலை நோக்கி உபகரணங்களாலும் காண இயலாத எண்ணற்ற நட்சத்திரங்கள், கோள்கள் நிறைந்த அனைத்துமே சேர்ந்தே ஜகம் என ஜீவ லோகக் கணக்கில் உரைக்கப் பெறுகின்றது. பிரபஞ்சம் என்பதும் இறைமையின் விரிவு, இறைவனின் படைப்பை எப்படியெல்லாம், எவ்வளவு தூரம், தூலமாக உணரப்படுவதோ அதெல்லாம் ஜகத்தின் பகுதிகளே, மனிதன் விழிப்பு நிலையில் காணும் உலகம் வேறு, உறங்கும் நிலையில் காணும், அறியும் உலகம் வேறு!

இத்தகைய கால, கோள, சர்வ லோகங்களும் நிறைந்த பரந்த பகுத்தறிவைப் பிரபஞ்ச ஞானமாகத் தரவல்ல மூர்த்தியே ஸ்ரீஜெகதீஸ்வர சிவஅவதார மூர்த்தி ஆவார். பிரபஞ்ச ஜீவன்களைக் காத்தருளத் துணை புரியும் அம்பிகையே ஜகத்தை, அனைத்து உலகங்களும் நிறைந்த ஜகத்தை, ரட்சிக்கின்ற, காக்கின்ற ஸ்ரீஜெகத்ரட்சகி அம்பிகை.

ஜெகதீஸ்வரர், ஜெகத்ரட்சகி என்ற பெயர்களைத் தாங்கி அருளும் மூர்த்திகள் மிகவும் அபூர்வமே! பொதுவாக, ஒரு லட்சம் லிங்க மூர்த்திகளுக்கு ஒரு லிங்கமே ஜெகதீஸ்வரச் சுயம்பு லிங்கமாகத் தோன்றி பூவுலக வழிபாட்டிற்கென அமையும். இவ்வகையில் மணமேல்குடியில் மிகவும் அபூர்வமாக அருளும் ஸ்ரீஜெகத்ரட்சகி சமேத ஸ்ரீஜெகதீஸ்வரரையே குலச்சிறை நாயனார் பூஜித்துச் சிறப்புடைய தெய்வீக வாழ்வைப் பெற்று முக்தி எய்தினார்.

மகத்தான ஜகதோ தாரண சக்திகள் நிறைந்த மணல்மேல்குடி புனித பூமியில் கோயில் கொண்டருளும் தேவியே ஸ்ரீஜெகத்ரட்சகி அம்பாள் ஆவாள். ஜகத் எனும் சர்வ உலகம் வெளியில் இருப்பதாக மட்டுமே எண்ணாதீர்கள். கண்கள், மனம், அறிவு இவற்றால்தாம் ஜகத், உலகம், தன் நாடு, தன் பூமியை மனிதன் அறிவதால் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஜகத் எனும் உள்உலகம் நிலவுகின்றது. உள்ளார்ந்த ஞானம் என்பது மஹா ஜகத் ஆகும். அதாவது ஜகத் ஆகிய சர்வலோகம் அவரவரிடமே நன்கு நிறைந்து உள்ளது.

உள்ளிருக்கும் சர்வ லோகத்தையும் நாம் வெளியே காணும் லோகத்தையும் பேணிக் காப்பவளே ஜெகத்ரட்சாம்பிகை, உலகநாதன், உலகநாயகி, ஜகன்னாதன், ஜகத்ரட்சகன், ஜகன் போன்ற ஜகம், உலக சம்பந்தமான பெயர்களை உடையவர்கள் வழிபட வேண்டிய ஆலயமே மணமேல்குடி ஸ்ரீஜெகத்ரட்சாம்பிகை சமேத ஸ்ரீஜெகதீஸ்வரர் ஆலயமாகும்.

வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமை தோறும் வழிபடவேண்டிய மிகவும் முக்கியமான தலம். ஞாயிறு, திங்கள் என்ற இரண்டு நாட்களும் சூரிய, சந்திர கிரகங்களுக்கு உரிய நாட்கள் அல்லவா, சூரிய, சந்திரக் கிரண சக்திகளால் தாமே ஜீவ வாழ்க்கைக்கு மூலாதாரமாக அமைகின்றன அன்றோ!

சூரிய சக்திகள் நிறைந்த ஞாயிறு, சந்திர சக்திகள் பரிணமிக்கும் திங்கள், வாஸ்து சக்திகள் பூரிக்கும் செவ்வாய் ஆகிய மூன்று நாட்களிலும் தொடர்ந்து விரதம் பூண்டு, இங்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவோர்க்கு வீடு, தொழிற்சாலை சம்பந்தமான பிரச்னைகள், கோர்ட் தாவாக்கள், பங்குப் பிரிவினைத் தகராறுகள் தீர்ந்து, நிலபுல வளத்திற்கான வாஸ்து சக்திகளைப் பெற உதவும் தலம்.

புனுகு, கோரோசனை, வெட்டிவேர், பூலாங்கிழங்கு, நன்னாரி, பிரண்டை, சிந்தூரம், அத்தர், கஸ்தூரி போன்ற பதினெட்டு வகைத் திரவியங்களால் செவ்வாய் மற்றும் ஒவ்வொரு வருடத்திலும் வரும் எட்டு வாஸ்து நாட்களிலும் மணமேல்குடி ஸ்ரீஜெகத்ரட்சாம்பிகை சமேத ஸ்ரீஜெகதீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதலால், முடங்கிக் கிடக்கும் கட்டிட,  நிலப் பணிகள் மீண்டும் மலர்ந்து நிறைவு பெற உதவும்.

சொந்த வீடு, நிலம், கடை அமையாதோர்க்கு பூமிகாரக சக்திகள் விருத்தியாகி சொந்தமாய் இடம் அமைய உதவும்.

வாஸ்து நாட்களில், வாஸ்து மூர்த்தி யோக சயனத்தில் இருந்து மீண்டு தந்த சுத்தி, புனித நீராடல், பூஜை, பிரசாதம் ஏற்றல், தாம்பூலம் தரித்தல் ஆகிய ஐந்து நிலைகள் அமையும் 90 நிமிட வாஸ்து நேரத்திலும் (5 x 18 = 90 நிமிடங்கள்), வாஸ்து நேரம் நிலவும் 90 நிமிடங்களுக்கும், இங்கு மணமேல்குடி ஸ்ரீஜெகத்ரட்சாம்பிகை சமேத ஸ்ரீஜெகதீஸ்வரருக்குத் தொடர்ந்து பலவகையான பூஜைகளை ஆற்றுதலால் வாஸ்து சக்திகள் நன்கு பெருகி விருத்தியாகும்.

இங்கு வாஸ்து நாட்களில் தொடர்ந்து ஒரு முகூர்த்த நேரம் சாம்பிராணி தூபம் இடையறாது இட்டுப் பூஜித்து வருவதால், வாஸ்து சக்திகளின் திரட்சி இல்லாமையால் ஏதேனும் பிரச்னைகள் அடிக்கடியாய்த் தொற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், நிலங்களில் உள்ள தோஷங்கள் அகன்றிடத் துணை புரியும்.

தன் பெண்ணின் ஆஸ்தி, நகைகள், பொருட்களைப் பற்றி மிகுந்த கவலைகளுடன் வாழ்வோர், இங்கு தம்முடைய நட்சத்திர நாள் மற்றும் தம் பெண்ணின் பிறந்த நட்சத்திர நாளில் மணமேல்குடி ஸ்ரீஜெகத்ரட்சாம்பிகைக்கு– திருமேனியில் மஞ்சள் காப்பும், திருப்பாதங்களுக்கு (நன்கு விழுமி அரைத்த) சந்தனக் காப்பும், திருமுகத்திற்குக் குங்குமக் காப்பும் இட்டு வழிபடுவதுடன், ஏழைகளுக்குக் கரும்புச் சாறு தானமும் அளித்திட வேண்டும்.

கரும்புச் சாற்றில் எலுமிச்சை ரசம், சர்க்கரை சேர்த்துத் தானமளிப்பது சந்தான மாத்ரயப் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரீதி தருவதாகும். இதன் மூலம் ஆண் அல்லது பெண் சந்ததி இல்லாது நெடுங்காலம் வாடும் குடும்பங்களில் தக்க சந்தான பாக்கிய நிலைகள் ஜாதகப் பூர்வ சித்திகளின்படி வந்தமைந்திடத் துணை புரியும் திருத்தலம்.

செல்போன்

செல்போனில் செழிக்கும் சமுதாயத் தீங்குகள்

வரும் ஆண்டுகளில், செல்போன்களைப் பயன்படுத்துவதால் ஏற்பட இருக்கின்ற அதிபயங்கர நோய்களைப் பற்றி மருத்துவ உலகில் பெரும் விவாதங்களும், சர்ச்சைகளும் ஏற்பட உள்ளன. மனம் ஒருமித்தல், கவனம், மனோசக்தி, நினைவாற்றல், மூளைத் திறன், கபால சக்திகள், ஐம்புலன்கள் ஒருமித்து இயங்குதல் போன்ற மனவள, உடல் வள அம்சங்கள் அனைத்தையும் செல்போன் என்பது கடுமையாகப் பாதிக்கும்.

“செல்போன் மூலமாக எத்துணையோ நன்மைகள் ஏற்படுகின்றனவே! பின் ஏன் அதனைக் கடுமையாகச் சாடிட வேண்டும்?” சாடுவது நம் குணமல்ல! ஆன்மீக ரீதியாக எதையும் அணுகுவதே நம் பாரத குணம்! தொலைக் காட்சி என்பது மக்களுக்கு அறிவு புகட்டும் கல்வி மார்கமாக உலக மனித சமுதாயத்தில் புகுந்து, இன்று ஆபாசம், வன்முறை, பயங்கரவாதம் முறையற்ற காமம் செறியும் படக் காட்சிகள், அதர்மமான நாடக, சினிமா வசனங்கள், பாடல்கள், படப் பதிவுகள் கூடிய காட்சிகள் என்பதாகவே பெரும்பாலும் வழக்கில் வந்து புகுந்து விட்டது.

இதனால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெரியோர்கள் அனைவருடைய கண் பார்வையையும், உடல் நலம், மனம், உள்ளம் அனைத்தையும் பாதித்துச் சமுதாய நல்ஒழுக்கச் சீரழிவுக்கு மது, சினிமா, புகை பிடித்தல் போல தொலைக் காட்சியும் மூலகாரணமாக ஆகி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இதே போல் செல்போன் என்பது காதுகளை ஒட்டியுள்ள ஓங்கார நாளங்கள், நன்கு மென்மையாக நிறைந்திருக்கும், காதோலைப் பகுதிகள், கண்களுக்கும், காதுகளுக்கும், இடையே உள்ள பூச நாளப் பகுதிகள், நாசிக்கும், காதுகளுக்கும் இடையே உள்ள பஞ்சு போன்ற நாவலம்ப நாளங்களை சிறிது சிறிதாக பாதித்திடுவதாகும்.

ஸ்ரீமங்களாம்பிகை கடுவெளி

இவ்வாறு, பல்வகைகளிலும் சுகாதாரக் கேடுகளை ஆக்க வல்ல செல்வகைப் போன்களால் ஒரு சில நன்மைகள் உண்டு என எண்ணத் தோன்றும். ஓரிரண்டு நன்மைகளுக்கு ஓராயிரம் தீங்குகளை வலிய இழுத்துக் கொள்வார்களா என்ன?

“கடல் தாண்டலாகாது” என்பது பழங்கால வழக்கு மொழி என எண்ணுகின்றோம். கடல் தாண்டும் படலமே, பலவிதங்களில், சொந்த நாட்டிற்கே, வீட்டின் பண்பான ஒற்றுமைக்கே, “போதுமென்ற பொன்னான சாந்தமயக் குடும்பத்திற்கே, அமைதியான மனதிற்கே, வேட்டு வைக்கும் பேராசைக் குணங்களையும், வன்முறையையும், பயங்கரவாதத்தையும் பெருக்கி, குடும்ப நாசினியாக, மனித சமுதாயத்தையே பிளந்து கட்டி வருகின்றது.

எனவே, கடல் தாண்டலாகாது என்பதன் உண்மைப் பொருள் யாதெனில், அந்தந்த நில, நாடு, தட்ப, வெப்ப நிலைக்கு ஏற்ப, உண்மையாகத் தியாகமயமாய்ப் பெறுதற்கரிய மானுடப் பிறவியில் வாழ்தல் வேண்டும் என்பதேயாம்! கடல் என்பது மனச்சாரமாகும். இதில் பேராசைக் கடல் நீர் புகுந்தால் சர்வமும் நாசமாகும்.

செல்போன் கலக்கித் தரும் நச்சுக் கதிர்கள்

செல்போன் வழியாக ஊடுருவும் பல்வகையான தீமை பயக்கும் மின்னணுக் கதிர்கள், பிளாஸ்டிக்கைப் போலவே விஷதோஷக் கதிர்க் கற்றைகளாகும். தாமிரம், வெள்ளி, பித்தளை போன்றவை பூஜை சக்திகளை ஈர்த்து நன்கு விருத்தி செய்து தருபவை. ஆனால், பிளாஸ்டிக் ஜடமாக இருந்து நல்லதும் செய்யாது, கெடுதலைத் தடுக்காதும், மந்தப் பொருளாகவும் இருப்பதாகும். செல்போன்களை ஊடுருவி வரும் பொல்லாக் கதிர்கள் வானில், பரவெளியில் உடல் நாளங்களில் ஊடுருவி, ஆங்காங்கே ஜடச் சுவர்களாய் நின்று விடுவதால், ஆன்மீக நற்கதிர்ப் பரிமாணங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

உண்மையில், பிற லோகங்களுடன் தொடர்பு கொள்ள உதவும் டெலிபதி வகை மனோசக்திப் பாதை இதனால் பாதிக்கப்படுகின்றது. தியானத்தை, யோகத்தைப் பாதிக்கக் கூடியவையே செல்போன்கள் வெளிவிடும் கதிர்கள் ஆகும்.

தவறும், பரிகாரமும் சேர்ந்து செய்வதல்ல!

செல்போனைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது?

எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தம், பரிகாரங்களையே கலியுக மனம் தேடி, நாடுவதால் செல்போனுக்கான ரட்சா சக்திகளுக்கான வழிமுறைகளைக் கேட்டுக் கொண்டு,

- ஒருபுறம் செல்போனைப் பயன்படுத்துதல்,

- மறுபுறம் செல்போனின் அதமக் கிரணங்களிலிருந்து காத்துக் கொள்ள முயற்சித்தல் இரண்டுமே நடக்கலாகும். இது கலியுக மனித இயல்புதானே! ஒருபுறம் தினந்தோறும் தவறுகளைச் செய்து கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்தல், மறுபுறம் தீவினைகளை அகற்றிட வழிமுறைகளை நாடுதல் இரண்டுமே கலியுகத்தில் எல்லா நாடுகளிலும் மக்கள் சமுதாயத்தில் லகுவாக நடக்கக் கூடியது தானே!

சில தற்காப்பு நியதிகள்

பருத்தி ஆடைகளை அணிந்திருத்தல் செயற்கைக் கிரணங்களிலிருந்து காக்கும். இதற்காகத்தான் நம் முன்னோர்கள் பனியன், டிராயர் போன்ற பருத்தி வகை உள்ளாடைகளை அணிந்தே வெளி ஆடைகளை அணிவர். ஆண்கள் முழுக்கை நீளச் சட்டை, வேஷ்டி அணிதல் நன்று, வேஷ்டி அணிவதில் காற்றுச் சுழற்சி முறைகள் இயற்கையாக அமைந்து மன அமைதியைத் தரும்.

கைகளுக்கு ஆண், பெண் இரு பாலாருமே, மருதாணி அணிந்திருப்பதும் நச்சுத் தன்மை கிரணங்களைத் தடுக்கவல்லதாகும்.

அடிக்கடி நாசிக்குள் தடவ வேண்டிய நாஸ்யத் (நாசித்) தைலம் என்ற ஒன்று உண்டு. இது செல்போன் நச்சுக் கிரணங்கள் உட்செல்வதைத் தடுக்கும்.

நாம் செல்போன்களைப் பயன்படுத்தா விட்டாலும், செல்போன்களைப் பிறர் பயன்படுத்தினாலும், புகை பிடித்தல் போல சுற்றி இருப்பவரைத் தாக்கும் தானே!

செல்போனின் நச்சுக் கிரணங்கள் காதுகளைச் சுற்றி இருக்கும் மென்மையான “மனவாளக் கதிர்களை” மிகவும் பாதிக்கும். பொதுவாக, கண்களால் பார்ப்பது, காதுகளால் கேட்பது இவை இரண்டினாலும் தான் பெரும்பான்மையாக மனம், உடல், உள்ளம் பாதிக்கப்படும். செல்போனின் அதமக் கிரணங்கள் நிச்சயமாக உடல், மனம், உள்ளத்தை மிகவும் பாதிப்பதாகும். காதுகளில் கடுக்கன்களை அணிதல் செல்கிரண சக்திகள் தாக்குந் தன்மையைத் தணிக்கும்.

கழுத்தில், கை மணிக் கட்டுகளில் மணி கங்கண்கள், தாமரை, துளசி, ருத்திராட்ச மணிகளை அணிந்திருத்தல் போன்றவை ஓரளவு நச்சுக் கிரண தன்மைகளைக் குறைக்கும்.

எனினும் இவை யாவும் தீமைகளைக் தாக்கும் செல்போன்களை ஒரு புறம் பயன்படுத்தி வைத்துக் கொண்டே மறுபுறம் பரிகாரம் தேட முயல்வது போலாகும். பரிகாரம் என்பது செய்த தவறுகளின் விளைவுகளில் இருந்து மீளவே! ஆனால் பரிகாரம் செய்த பின், மீண்டும், மீண்டும், தவறுகள் செய்தால் பரிகாரம் பலனளிக்காது போய் விடுவதோடு, பரிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்திய பாவ வினைகளும் ஒன்றுக்கு இரட்டிப்பாய் வந்து சேரும்.

மிகவும் சக்தி வாய்ந்த கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் ஆலயம் வாஸ்து சக்தித் தலமாகவும், சப்தவள சக்தித் தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றது. வானொலி, தொலைபேசி, செல்போன், தொலைக் காட்சி, விமானப் பயணம் போன்ற பலவும் ஆகாச மார்க்கத்தைக் கொள்வதால், மனிதனுடைய கலியுக தினசரி வாழ்க்கையும், ஆகாச மார்கக் கிரண சாதனங்களை நம்பி வாழ்வதால், கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர்தான் கலியுக மக்களை, செல்போன் கிரணச் சக்திகளின் தீங்கிலிருந்து காக்க வல்ல அற்புதச் சுயம்பு லிங்க மூர்த்தி ஆவார்.

வாழ்க்கையில் செல்போன்களை முற்றிலுமாகத் தவிர்த்தலே நன்று. தேவமொழி, தமிழ் மொழி மந்திரங்களை ஓதுதல், எப்போதும் பல்விதமான காயத்ரீ மந்திரங்களை ஓதிக் கொண்டிருத்தல், இடர்களையும் பதிகம், நட்சத்திர சூக்தம், அபிராமி அந்தாதி, “உந்தி பற பற” என முடியும் மாணிக்கவாசகரின் பதிகங்கள், போன்ற வானியல், ஆகாச இயல் இறைத் துதிகளை ஓதி கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரரை வழிபட்டு வருதலும், பரவெளியில் மிதக்கும் – செல்போன் கிளப்பிய அதம மின்னணுக் கிரணங்களை மறைத்திட உதவும்.

மானகிரி

மானகிரி ஸ்ரீகண்டீஸ்வரர்

அபூர்வமான சங்கு வடிவக் குளம் அமைந்திருக்கும் மானகிரி (தளக்காவூர்) ஸ்ரீகண்டீஸ்வரர்! (சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் – தேவகோட்டை மார்கத்தில் உள்ள மானகிரி அருகே தளக்காவூர் கிராமத்தில் ஸ்ரீகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.)

வடிவில் வாய்க்கும் வேதசக்திகள்

வட்டக் கிணறு, சங்கு வடிவக் குளம், சதுரக் கிணறு போன்று நீரானது எதில் தங்கி, எந்த அமைப்பில் அமைந்து உறைந்து இருக்கின்றதோ, அதைப் பொறுத்து அதனுடைய தேவ சக்திகளும், ஜலவர சக்திகளும் அமையும், உதாரணமாக, நல்ல ஊற்றுள்ள கிணற்றுத் தீர்த்தம், நல்ல ஊற்றுச் சிறப்புடன், இளஞ் சூட்டுடன், பல பூமியடிப் புனித நதிகளின் நீரோட்டங்களுடன், பல பூமியடிப் புனித நதிகளின் நீரோட்டங்களுடன் சேர்ந்து அமைந்து வருவதால், பூஜைக்கு ஏற்ற சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளதாகும். கிணற்று ஊற்று நீர் அபிஷேகம் பன்மடங்குப் பலாபலன்களைத் தரவல்லதாகும்.

பல்கோணக் கிணறு
திருமயம்

திருச்சி அருகே திருவெள்ளறை ஸ்வஸ்திக் வடிவ குளம், திருமயத்தில் உள்ள பல்கோணக் கிணறு, பொன்னகரம் (மணல்மேல்குடியில் உள்ள) அஷ்ட துறை வாஸ்துத் தீர்த்தம் போன்றவற்றின் தீர்த்தக் குள அமைப்புகள் யோகச் சக்கரச் சக்திகளைக் கொண்டவை. நீர்ப் பரப்பினுள்ளும் வெளியும் காற்று, வெப்ப அம்சங்கள் பல கோணங்களிலும் பிரதிபலிக்கையில் யோகச் சக்கர சக்திகள் மேல் எழும்பி அருள்கின்றன.

மஹாமகம் மற்றும் ஆலயத்தில் உள்ள தீர்த்தங்களில் பல புண்ணிய நதி தேவதா மூர்த்திகளும் அவ்வப்போது வந்து நீராடி புனித நீரைச் சேர்ப்பதுடன், சித்தர்களும், மகரிஷிகளும் புண்ணியப் பண்டிகை தினங்களில் நீராடி, தங்கள் தபோ பலன்களை அர்ப்பணிக்கின்றனர். எப்போதும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் புனித ஆறுக்கென விசேஷமான தெய்வீகச் சக்திகளும் உண்டு.

இதே போன்று சங்கு, மரத் தம்ளர் மற்றும் மரத் தாம்பாளம், மூங்கில் குவளை, மண் பானை, தங்கம், வெள்ளிக் கிண்ணம், தாமிரப் பாத்திரம், பீங்கான் பாத்திரம் என எதில் நீர் அமைந்துள்ளதோ அதைப் பொறுத்து நீரின் புனிதத் தன்மையும் மேன்மை பெறும்.

பலகோணத் தீர்த்த வடிவில் பரிந்து வரும் பரிமள நல்வர சக்திகள்

இது மட்டுமல்லாது குளம் மற்றும் கிணற்றின் வடிவானது அறுகோணம், எட்டு திக்குப் படித்துறைகள், திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் ஆலயத்தின் சர்வ பாபநாசினித் தீர்த்தக் குளம்போல் பதினாறு கரைகள் பொலிந்து அருளும் தன்மை, திருஅண்ணாமலை, மதுரை, திருவெள்ளறை, உப்பிலியப்பன் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் போன்ற ஆலயக் குளங்களின் அமைப்பும் ஒவ்வொன்றும் அதியற்புத தெய்வீக சக்திகளைப் பூண்டவை!

இவ்வகையில் காரைக்குடி அருகே மானகிரி ஸ்ரீகண்டீஸ்வரர் சிவத்தலத்தில் உள்ள சங்கு வடிவில் உள்ள சங்குத் தீர்த்தம் மிகவும் விசேஷமான ஜலகோண சக்திகளைக் கொண்டதாகும். இங்கு, பிரதோஷ காலத்தில் 108, 1008 சங்கு மணிகள் கொண்ட சங்கு மாலைகளைச் சார்த்தி,

108, 1008 வகை நற்சங்குகளைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள், குறிப்பாக பிரதோஷம், துவாதசி, அனுஷம் நாட்களில் ஆற்றி வர, பண நஷ்டத்தால் அல்லல்படுவோர் நல்வகை நன்மைகளை அடைய உதவும்.

பண்டைய யுகங்களில் சங்கு வகைப் பூஜைகளான – 1008 சங்குகளின் முழக்கம், 1008 சங்காபிஷேகம், 1008 சங்கு மணி மாலை – 12, 36, 108 பசுக்களுக்குச் சங்கு மணி மாலைகள் சார்த்தி அகண்டகார கோ பூஜை நிகழ்த்தி வந்த தலமிது! கோமுனியும், பட்டிமுனியும் பசு பூஜைகள் நிகழ்த்திய திவ்யமான சிவத்தலம்.

முற்காலத்தில் இங்குள்ள சங்குத் தீர்த்தத் குளத்தைச் சுற்றி, எட்டுத் திசைகளிலும் பசுமையான வாழை இலைகளை வைத்து, இதன் மேல் மூன்று பெரிய படி அரிசியை நிரவி, அரிசியின் மேல் அவரவர் கொண்டு வரும் சங்குகளை வைத்து, சங்குகளில் தீர்த்தத்தை நிரப்பி, சங்குத் தீர்த்தத்தைச் சுற்றி சிவபுராணம் ஓதியும், சங்குகளை ஊதியும் பிரதோஷ நாளிலும், சங்கு சக்திகள் நிறைந்த நாட்களிலும் வலம் வருவார்கள்.

சங்கு சக்திகள் பூவுலகில் பூரிக்கும் தினங்கள் உண்டு. பௌர்ணமி, பிரதோஷ நாள், ரோஹிணி, திருவோணம், அனுஷம், திங்கள், பஞ்சமி நாட்களில் இங்கு பூஜித்தல் மிகவும் விசேஷமானது.

நந்தி மண்டபம்
திருப்பூந்துருத்தி

துர்வாச மகரிஷி வழிபட்ட தலம். இன்றும் இம்மாமுனி வழிபட்டுச் செல்கின்ற அற்புதத் தலம். துர்வாச மாமுனி எப்போதும் 1008 சிறு சங்குகளால் ஆன சங்கு மணியைக் கழுத்துக் கண்டத்தைச் சுற்றி அணிந்திருப்பார். துர்வாச மஹரிஷி என்ற பெயருக்கேற்ப, (தூர் – அருகம்புல்) அருகம்புல்லை மட்டும் உண்டு ஜீவித்து அதியற்புதத் தவங்களை ஆற்றியவர்.

நல்வரந் தரும் நந்தி மண்டபம்

துர்வாச மஹரிஷியின் சங்கு மணி ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அவற்றின் வண்ணங்களும் அந்தத் திதிக்கு ஏற்ப தினமும் மாறும். துர்வாச மஹரிஷி அடிக்கடி தூல, சூக்கும வடிவுகளில் தரிசிக்கும் திருத்தலமே மானகிரி ஆகும். இங்கு தனி மண்டபம் கொண்டருளும் நந்தீஸ்வரர்தாம் துர்வாச மஹரிஷிக்கு 1008 சங்குகளாலான சங்குத் தாரையை அளித்து அருளியவர். இதற்காகவே, துர்வாச மஹரிஷி நந்தீஸ்வரருக்கு மண்டப அம்சங்களுடன் எழுப்பிய விசேஷமான மண்டபம் தான் இங்கு நந்தீஸ்வர மண்டபமாக எழும்பி அமைந்திருக்கின்றது. அருகம்புல்லில் நிறைய வகைகள் உண்டு. பொதுவாக மானகிரி, கும்பகோணம் அருகே கொறுக்கை போன்று, மண்டபத்தில் எழுந்தருளும் நந்தீஸ்வரருக்கு, ஆறு வகையான அருகம்புல் மாலைகளைத் தினசரி நித்தியப் பிரதோஷ நேரமான மாலையில் அணிவித்துப் பூஜிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

இவ்வகையில் மானகிரியில் உள்ள சங்கு வடிவில் உள்ள தீர்த்தம் மிகவும் அபூர்வமாக அமைந்திருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் தேரோடிய சங்குத் திருக்குளம் இதுவே! அக்காலத்தில் சுவாமிக்கு சங்குத் தீர்த்தத்தால் அபிஷேகித்து, கோமுகத்தில் கைப்படாது சங்குகளில் தீர்த்தத்தைப் பிடித்துப் பிரசாதமாகப் பெற்று, மக்கள் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வீடு, கழனி, தோட்டம், கடைகள், நில புலன்கள், வியாபாரத் தலங்களில் தர்பைப் புல், வாழை இலை கொண்டு தெளித்துத் தோஷ நிவர்த்திகளைப் பெறுவார்கள். ஆம் சங்கு அற்புதமான தோஷநிவர்த்தி கரணியே! அக்காலத்தில் பிரதோஷம், ரோஹிணி, திங்கள் தினங்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீட்டுப் பூஜைச் சங்கை எடுத்து வந்து, சங்குத் தீர்த்தத்தில் நீர் நிரப்பி அபிஷேகம் செய்ய அளிப்பார்கள்.

இத்தகைய சக்தி வாய்ந்த சங்கு வடிவத் தீர்த்தம் நன்கு பராமரிக்கப் படாமல் இருப்பதால், இச்சங்கு வடிவத் திருக்குளத்தைச் சீர்திருத்தி ஆலயத்திற்கும் மக்களுக்கும் பயனளிக்கும்படி ஆக்குவதால் சந்ததிகள் நன்கு தழைத்திட உதவும் புண்ய சக்திகளை அளிப்பதாகும்.

ஆத்ம விசாரம்

சற்குரு குர்மங்கள கந்தர்வா அருளிய ஆத்ம விசார விளக்கங்கள்!

அடியார்: குருதேவா! வாஸ்து சாஸ்திரம் என்பது என்ன? சமீப காலத்தில் மட்டும் இது பிரசித்தி பெறக் காரணம் என்ன?

சற்குரு: உணவு, உடை, இல்லம் மூன்றுமே ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானது அல்லவா! உணவுக்கும், உடைகளுக்கும் தயாரிக்கும் மற்றும் அருந்தும்/அணியும் வகை முறைகள் உண்டுதாமே! அதாவது உண்ணுவதற்கும், உடை அணிவதற்கும் வாழ்க்கை இலக்கண நெறிகள் இருப்பது போல, வாஸ்து சாஸ்திரம் என்பது உறையுள்ளாகிய வீட்டு அமைப்பிற்கான வாழ்க்கை இலக்கண நெறிகளைக் கொண்டது.

இல்லம், மற்றும் வாழ்க்கைக்கான வருமானத்தைத் தரும் தொழில், வியாபாரம் அல்லது பணி நடைபெறும் கட்டிடம், அலுவலகம் பற்றிய வாழ்க்கையோடு இணைந்து செல்லக் கூடிய, இலக்கண நெறிகளே வாஸ்து சாத்திர நியதிகளாகும்.

மனையடி சாஸ்திரம் பன்னெடுங்காலமாக, பல யுகங்களாக இருந்து வருகின்ற வாஸ்து சாஸ்திரம், நடுவில் மனித சமுதாயத்தால் மறக்கப் பெற்று பிரதோஷ பூஜை, ஐயப்ப விரதம் போல பல்லாண்டுகளுக்குப் பிறகு புத்துணர்ச்சி, புதுப் பிரகாசத்துடன் மீண்டும் பிரசித்தி பெற்று வருகின்றது.

முந்தைய யுகங்களில் மனையடி சாத்திரம் நன்கு பொலிந்து, இடையில் பேராசை, அதர்மம், பகைமை, விரோதம், குரோதம், நாணயமின்மை, நேர்மையின்மை, காரணமாக உறைவிடத்தில் காலப் போக்கில் மக்கள் அசிரத்தை காட்டி, ஏதோ வீடு என்ற ஒன்று, சொந்தத் தொழிலகம் ஒன்று எப்படியோ வந்து அமைந்தால் சரி என்ற பாவனையில், மனதுக்குத் தோன்றியபடி உறைவிடங்களைக் கட்ட ஆரம்பித்தனர். இதனால் காலப்போக்கில் பலத்த நில, கட்டிட, நீர் வகை மற்றும் பல பிருத்வி தோஷங்கள் பெருகலாயின!

மேலும், கலியுக மக்கள் சமுதாயத்தில் எதையாவது எப்படியாவது வீடுகளை, flatsகளைக் கட்டி விற்றுப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் பேராசையின் விளைவுகளாகப் பிறந்து விட்டது. எதையாவது, எப்படியாவது கட்டி முடித்து, குடி புகுந்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற அவசரமும் விவேகம் இன்மையும் புகுந்து விட்டன.

இவ்வாறு மனிதப் பிரேதம், பசு, நாயைப் புதைத்த இடங்களில் உள்ள கோஹத்தி தோஷம், சுவாநஹத்தி தோஷத்துடன் ஆங்கே வீடுகள் எழுந்து, இத்தகையப் பரிகாரமில்லாக் கர்ம வினைகள் சந்ததி, சந்ததியாய்ச் சேர்ந்து வந்து பாதிக்கலாகிறது.

இவ்வாறாகவே, கட்டிட, வீடு தோஷங்கள் பலத்துப் பெருகி வந்து தாக்கி, இவற்றின் விளைவுகளாக, பணக் கடன் பெருத்தல், துர்மரணம், தீப்பிடித்தல், அடிக்கடி நோய் வாய்ப்படுதல், உடல் அங்கங்கள் செயல் இழத்தல் போன்றவை ஏற்படுகையில்தான் அனைவரும் வாஸ்து சாஸ்திரம் பற்றி எண்ணுகின்றனர். எனவே, வாஸ்து சாஸ்திரம் என்பது வசிக்கும் முறை, வாழும் முறை, வீட்டை ஆளும் சீரான (இலக்கண) முறைகள் ஆகும்.

அடியார்:- வாஸ்து சாஸ்திரப்படி வீடுகள் அமையாத வீடுகளில் முழு வாஸ்து சாத்திரப் பலன்களை எவ்வாறு பெற முடியும்?

சற்குரு:- வாஸ்து வகையில் கட்டப்படாமல் உள்ள வீடுகளில் நிலவும் தோஷங்களை முழுமையாக நிறைவு செய்தால்தான் கிரக இலக்குமியின் பரிபூரண வர்சம் அமையும். ஆனால் ஏற்கனவே கட்டப் பெற்ற இடங்களில் உள்ள தோஷங்களை அறவே தீர்ப்பது மிக, மிகக் கடினமே!

உதாரணமாக, பாம்புப் புற்றுகளை அகற்றி, அரசு, வேம்பு, மா போன்ற மரங்களை வெட்டிச் சாய்த்து வீடு கட்டி இருந்தால், இதில் மலையெனப் பெருகும் – சந்ததிகளையே பாதிக்கும் – கடுமையான தோஷங்களை “இடிக்காமல், உடைக்காமல்” தீர்த்திட முடியும்?

இன்றும், கிராமப்புறங்களில், சிறுசிறு நகரங்களில், எத்தனையோ தலைமுறைகளை வளமுடன் தந்து, வாஸ்துப் பூர்வமாக செழிக்கும் இல்ல அமைப்புகள் உண்டு. இதற்காகத்தான் வாஸ்துப் பூர்வமாக அமைந்த இத்தகைய இல்லங்களில், திருமணம், சமாராதனை, படையல், நவராத்திரிக் கொலு, அன்னதானம் போன்ற பலவும் கடைபிடிக்கப் பெற்று, அனைவரும் அத்தகைய இல்லங்களுக்கு வந்து சென்று, சில வகை வாஸ்து சக்திகளைப் பெற வழி வகுக்கும் சமுதாய பூஜைகளும் புனிதமான பாரத மனித சமுதாயத்தில் மலர்ந்துள்ளன.

புதுக்கோட்டை – குழிபிறை – செவலூர்- பொன்னமராவதி மார்கத்தில் உள்ள ஸ்ரீஆரணவல்லி சமேத ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயம், சகலவிதமான வாஸ்து வகை தோஷங்களையும் நிவர்த்தி தரவல்ல அற்புதத் தலமாகும்.

அடியார்:- பண்டைய யுகங்களைப் போல் கலியுகத்தில் சற்குரு பரிபாலனம் என்ற ஒன்று நன்கு தழைக்கக் கூடுமா?

சற்குரு:- சற்குரு பரிபாலனம் இல்லாத யுகங்களோ, அண்டங்களோ இல்லை. உண்மையில் ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ள பெறுதற்கரிய மானுட பிறப்பின் ஆன்ம லட்சியமே சற்குருவைத் தேடி, நாடிச் சரணடைதலே ஆகும்.

அதாவது சற்குருவை அடைகின்ற ஆன்மீகத் தியாகப் பாதையே பூலோக வாழ்க்கை ஆகும். ஆனால் மனித குலமோ முறையற்ற வாழ்க்கை நிலைகள், பேராசைகள், கோபம், பகைமை, விரோதம், அதர்மம், தீவினைகள், தீய வழக்கங்கள் போன்றவற்றிற்கு ஆட்படுவதால் நற்பாதையிலிருந்து விலகி, விலகி பல பிறவிகளாக வாழ்க்கைப் பிறவி நீள்கின்றது.

ஜாதி, மத, இன, குலத்திற்கு அப்பாற்பட்டவர்கள் குருவருட் புலத்தார்களாகிய சற்குருமார்களாகிய இறைத் தூதுவர்கள். எனவே, சற்குரு பரிபாலனம் இல்லாத நாடே புவியில் கிடையாது. எவ்வளவு கொடிய, வன்முறைகள் நிறைந்த நாடாக இருந்தாலும் அங்கு வாழும் பல நல்லவர்களையும், தியாகிகளையும், ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையோர்களையும், ஒன்றும் அறியா பாமரர்களையும் திருத்தி அருள் வழி காட்டிக் காத்திட, மேலுலகங்களில் இருந்து உத்தமர்கள் வருகின்றனர். எனவே, கலியுகத்திலும் சற்குரு பரிபாலனம் நிச்சயமாக உண்டு.

ஆனால், கலியுக சமுதாயம் சத்குருவாம் இறைத் தூதுவர்களை மதிக்கும் பண்பாட்டை இழந்து வருவதால், அனைத்து நாடுகளிலும் சத்குருமார்கள் இலை மறை கனியாக ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.

அமுத தாரைகள்

வாழ்க்கையில் எவரிடமும் சொல்ல இயலாத விஷயங்களை, துர்கனவுகளை நந்தீஸ்வரரின் திருக்காதுகளில் ஒப்புவித்து நந்திக் கலம்பக மந்திரங்களை ஓதி வருதலால் வாழ்க்கையில் நல்ல மனசாந்தியைப் பெற்றிடலாம்.

சித்தர்களும், மஹரிஷிகளும், மாமுனிகளும், சத்குருமார்களும் அனைத்து நாடுகளிலும், பூமிகளிலும், கண்டங்களிலும், கோள்களிலும் உலா வருகின்றனர். சற்குரு வந்து ஆட்கொள்ளும் அம்சங்கள் அவரவருடைய ஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்தமையும்.

கனடா, சீனா, பனாமா, யுகாண்டா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா என உலகின் அனைத்து நாடுகளிலும், அனைத்து மதங்களிலும், இனங்களிலும் சற்குரு உள்ளனர். பிரபஞ்சத்தில் இறை சாம்ராஜ்யத்தை நிறுவ அரும்பாடுபட்டு உழைத்துப் பணி ஆற்றுபவர்களே சத்குருமார்கள் ஆவர்.

ஆந்தையினம் விளக்கும் நேத்திரச் சுழி இலக்கணம்

“ஆந்தை விழிகள், போந்திர மொழிகள்!” என்பது நேத்திரச் சுழி மறைமொழி ஆகும். அதாவது, இருளில் நிலைக் குத்தி நிற்கும் ஆந்தையின் விழிகளில் இருந்து எத்தனையோ ஆன்ம சங்கதிகளை, தேவ ரகசியங்களை, ஆன்ம பரிபாஷைகளைப் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு அரச மரப் பொந்திலிருந்து, புத ஹோரை நேரத்தில் ஓர் ஆந்தை தெற்கு நோக்கிப் பார்ப்பதைக் காணுதலானது, பார்ப்பவருக்கு உரிய பித்ருக்களின் லோகத்திலிருந்து தோன்றும் உத்தமர்களின் வருகையைப் புலப்படுத்துவதால், இதைக் கண்டவர்கள் உடனடியாகப் படையல் வழிபாட்டை (திவசம்) நிகழ்த்துதல் சிறப்புடையதாகும்.

ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர்
லால்குடி

மூல நட்சத்திரமானது ஆஞ்சநேயருக்கு உரிய நட்சத்திரமாகும். தர்ம சக்திகள் நிறைந்து, எத்தகையோருக்கும் அபயம் தரக் கூடியது. குறிப்பாக, சந்தான விருத்தி சக்திகளைத் தருவதற்கான மிக மிக சிறப்பான நட்சத்திர நாள், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மூல நட்சத்திர நாள் மிகவும் விசேஷமானது.

கிரகப் பிரவேசம் செய்வதற்கும் உத்தமமான நாட்களுள் ஒன்றாக மூல நட்சத்திரம் விளங்குகின்றது. மூல நட்சத்திர நாளில் கிரகப் பிரவேசம் செய்ய இயலாதவர்கள், ஒவ்வொரு மூல நட்சத்திர நாளிலும், இல்லத்தில் மண் பானையில் அன்னம் வடித்து, வெண்பொங்கல், மண் சட்டியில் வாஸ்து சக்திகள் நிறைந்த முருங்கைக் குழம்பு, புடலைப் பொரியல் சமைத்து, வாஸ்து சக்தித் தலங்களில் தானமாக அளித்து வருதலால் கிரக தேவதைகள் நன்கு பிரவேசம் செய்து வாஸ்து சக்திகளை அருளிட மிகவும் உதவும்.

நிறையப் பணம் வந்து குவிவதால் அது உடனே லட்சுமி கடாட்சம் ஆகி விடாது. மங்களம் என்பதும் புனிதமான, உண்மையான லக்ஷ்மி கடாட்சங்களில் ஒன்று. ஒரு குடும்பத்தில் மங்களம் தழைத்திட, பெற்றோர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள், பெண்கள் யாவருமே அவரவருக்கு உரிய கடமைகளை, இறைப்பணிகளை, பூஜைகளைச் செவ்வனே ஆற்றிட வேண்டும். குடும்பமே ஒரு சத்சங்க இலக்கணத்துடன் திகழ வேண்டும். தினமுமே – சுபகரமான குரு, (வளர்பிறைச்) சந்திரன், சுக்கிரன், புத ஹோரை நேரங்களில் விதவிதமான மங்கள சக்திகள் நன்கு பூரித்துத் தோன்றுகின்றன.

மங்களத்தைப் பரிபூரணமாகத் தரவல்ல அம்பிகையே ஸ்ரீமங்களாம்பிகை., செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணற்ற மங்கள சக்திகள் வியாபிக்கின்றன. இதனால்தான் செவ்வாய்க் கிழமை மங்கள வாரம் எனப் போற்றப்படுகின்றது. செவ்வாய்க் கிழமை தோறும் குடும்பத்துடன் ஸ்ரீமங்களாம்பிகையைத் தரிசித்து, மங்கள சக்திப் பொருட்களை (மாங்கல்யச் சரடு, நல்ல குங்குமம், மஞ்சள்) போன்றவற்றை இயன்ற அளவில் தானமளித்து வந்தால், குடும்பமே சத்சங்கமாகப் பொலிய அனுகிரகம் நல்வரமாக வந்திடும்.

தோஷ நிவாரணிகளாகவும் திருமணச் சடங்குகள்!

திருமண தோஷங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில்தான் திருமணங்களில் மந்திரங்கள் ஓதுதல், ஹோமம் நிகழ்தல், அர்த்தமுள்ள பல சடங்குகள், அன்னதானம், விளக்குப் பூஜை போன்ற பல திருமணச் சடங்குகள் அமைந்துள்ளன. இவைதாம் திருமண நாளில் உள்ள தோஷங்களையும் ஏனைய பல தோஷங்களையும் பல்வகைகளிலும் கணிசமான அளவில் நிவர்த்தி செய்யும் வல்லமை பெற்றவையாகும். மேலும் திருமண வாழ்வின் முழுமைக்குமான தேவ சக்திகளையும் அளிக்க வல்லவை! தற்காலத்தில் இவற்றையும் பலர் தவிர்த்து விடுவதாலும், பலத்த கால அதம சந்தி தோஷங்கள் ஏற்படுகின்றன. தாலி கட்டும் வைபவத்திற்கு முன்னரேயே ரிசப்ஷன் என்ற பெயரில் மாப்பிள்ளை, பெண்ணை ஒன்றாகச் சேர்த்து அமர வைக்கும் தவறான வழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது. இவையெல்லாம் முறையற்றவை, திருமண வாழ்வில் கடுமையான சோதனைகளுக்கு வழிவகுப்பவை.

சிவபுரம்

சைக்கிளில் செல்கையில் ஒரு நாய் லேசாக அடிப்பட்டால் கூட, இதுவே பிராயசித்தம் இல்லாத கடுமையான பைரவ தோஷமாக மாறுகின்றது. எனவேதான் தினந்தோறும் இவ்வாறாக நிறைய பாவகரமான காரியங்களைச் செய்து, இதன் விளைவுகளாகத் துன்பங்கள் கழுத்தளவு வந்து அழுத்தும் போதுதான், “இதற்குப் பரிகாரம் எது? அதற்குப் பிராயச்சித்தம் எது?” என்று தற்போதைய மனித குலம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றது. தினமும், பசு, காக்கை, நாய்க்கு உணவிடுதல் பல பாவ வினைகளைத் தினமுமே தீர்க்க உதவும்.

நந்தித் தொட்டி எனச் சில ஆலயங்களில் உண்டு. இதில் ஆழத்தில் உள்ள நந்தி மூர்த்தியை நீரில் மூழ்க வைத்து, மிளகு, வெல்லம், கிராம்பு போன்றவற்றினால் காப்புக் கட்டி, மூன்று முதல் ஒரு மண்டலம் வரை வைத்து வழிபடுவர். இத்தொட்டியில் இரவில் குறித்த வகைத் தவளைகள் வந்து செல்வது சுபசகுன வருண ப்ரீதிச் சகுனச் சின்னமாகும். தவளைகளை அநாவசியமாகக் கொல்தல் கூடாது. இதுவே சில வகை நாக தோஷங்களுக்கும் காரணமாகின்றது. தொத்தக்கப்பன், சுதிகன், சுக்கான் மொந்தாளன், சுகிக்காதி, சொந்தாளப்பன், மஞ்சள் கண்ணன் என்று 108க்கும் மேற்பட்ட தவளை வகைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் விதவிதமான நாதயோக சக்திகளைக் கொண்டவை!

பூலோகத்தின் மகத்தான அங்கப் பிரதட்சிண சக்திகள் நிறைந்த தலங்களுள் திருப்பதி, சிவபுரம், தவசிமடை போன்று பொன்னகரமும் ஒன்றாகும். அபராஜிதப் பூம்ய சக்திகள், பொன் விளையும் இந்த பூமியில் அபிமிதமாகப் பூரிப்பதால், பொன்னகரம் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபடுதல் மூலம் குடும்பத்தைப் பன்னெடுங்காலமாக வாட்டும் பலவிதமான தோஷங்களுக்கு, கஷ்டங்களுக்கு, ஏவல் வினைகளுக்கு நல்ல நிவர்த்திகளைப் பெற்றிடலாம்.

300 வருடங்களுக்கு மேற்பட்ட விருட்சங்கள் கூடி அமைவது மிகவும் விசேஷமானது. ஒரு ஆலமரத்தின் நிழல், ஆயிரம் சதுர அடிகளுக்கு மேல் விரவுமாயின் அதற்கு “சகஸ்ர கற்பப் பிரகாச விருட்சம்” என்று பெயர். பகலிலேயே நட்சத்திரங்களைத் தரிசிக்க வல்ல அபூர்வமான நேத்ர சக்திகளை உடைய சித்தர்களும், மஹரிஷிகளும், யோகிகளும் இதற்கான அற்புத யோக நேத்ர சக்திகளைப் பெற்றிட, பொன்னகரம் பெருமாள் ஆலயத்தில் உள்ளது போன்ற “சகஸ்ர கற்பப் பிரகாச விருட்ச” நிழலில் அமர்ந்து கடுமையான தவங்களைப் புரிந்து, பகலிலேயே எண்ணற்ற நட்சத்திரத் தரிசனங்களைப் பெற்றனர்.

சங்கு சப்த பூஜை பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியானது. சங்குச் சக்கரதாரியான பெருமாளுக்கு 1008 சங்குகளால் பாலாபிஷேகமும், தேனாபிஷேகமும், இளநீர், சந்தனக் குழம்பு போன்ற 12 வகை அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்துதலால் விடுபட்டுப் போன உறவுகளில் இருக்கும் பகைமை, குரோதம், விரோதம் தீர்ந்து நல்லுறவு பரிமளிக்க உதவும்.

கங்காதேவிக்கு ப்ரீதி அளிப்பதாக கார்த்திகை அமாவாசை நாளில் கங்கை புத்திரராகிய பீஷ்மாச்சாரியாருக்கு பீஷ்ம அர்க்யம் என்பதாக “பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி” என்று 21 முறை அர்க்யம் அளித்தலும் ஏழைகளுக்கு அதிரசம், வடை, எள் உருண்டை, புடலங்காய்க் கூட்டு, வாழைக்காய் கறி, பலாக்காய் கூட்டு, வாழைத் தண்டு பொரியல், பாகற்காய் பொரியல், கருவேப்பிலை + பிரண்டை துவையல், மோர்க் குழம்பு, மிளகு ரசம், பாசி பருப்பு வகை வெஞ்சனங்கள், பழங்கள் போன்ற 24 வகை உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்தலால் ஸ்ரீதர அய்யாவாள் மூதாதையர்களுக்கு ஆற்றிய தில பூஜாப் பலன்களின் மஹிமைகளை உணர்வதற்கும் இனியேனும் ஆத்மார்த்தமாகத் திவசம், தர்ப்பணம் அளிப்பதற்குமாக, மகான்களின் அனுகிரகமும் திரண்டு வரும்.

மனங்கவரும் சோழிகள்

பிற யுகங்களின் உத்தமக் கால நிலைகளை உங்கள் வாழ்விலும் கொண்டு வர முடியும். இதற்காகவே பல பண்டிகைகள் நம் மானுட வாழ்க்கையில் வந்தமைகின்றன. ஸ்ரீராமநவமி அன்று மட்டுமே ஸ்ரீராமரைத் தொழுதல் என்றில்லாது மனக் கோயிலில் எளிதில் ஆவாஹனம் ஆக வல்ல அனுபூதிகளைத் தரும் எளிய ராமநாம தாரக மந்திர சக்திகளை உங்கள் புலனுக்குள் தியான, யோகப் பூர்வமாகப் பெற்றிடுங்கள்.

பூமியில் ஜீவன்களின் வாழ்க்கையானது, கர்ம வினைகளை ஒட்டி அமைவதால் தான், காலத்தையும், ஜீவ வாழ்க்கைக்கு ஏற்ப தக்க பலா பலன்களை நல்கிட ஏற்றவாறு, நாள், கரணம், யோக, நட்சத்திரப் பகுப்பாகத் தந்துள்ளனர். கர்மவினைப் பகுப்பிற்கு அப்பாற்பட்ட மகான்கள், சித்தர்கள் இத்தகைய காலப் பகுப்பைக் கடந்து விளங்குகின்றனர். எனினும் பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்கிடவே, இவர்களும் ராகு காலம், எம கண்டம் நியதிகளை நன்கு கடைபிடித்துக் காட்டுகின்றனர்.

இலம்பையங் கோட்டூரில் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளிலும், சந்திரனுக்குரிய திங்கள் கிழமை, பௌர்ணமி மற்றும் தினமும் சந்திர ஹோரை நேரத்தில் காராம் பசும்பாலால் அபிஷேகம் செய்வதும், பசுவிடம் கறந்த பாலை அதனுடைய இயற்கை உஷ்ணம் தணிவதற்கு முன், அதாவது கறந்த மூன்று நிமிடங்களுக்குள் அபிஷேகம் செய்து, கோமுகம் (அபிஷேகத் தாரை) மூலமாகப் பிரசாதமாக பெற்று விரதத்தை நிறைவு செய்து, விரதப்பாலை அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்து வழிபட்டிட, தக்க சந்ததி பாக்கியம் உண்டாகிட சந்தனச் சந்திராதித்யப் பித்ருக்கள் நன்முறையில் அருள்புரிவர்.

மணமேல்குடி சிவத்தலத்திலும் வாஸ்துத் தீர்த்தக் குளம் உண்டு. இங்குள்ள வாஸ்து தீர்த்தத்தில் நீராடி, உடலெங்கும் 18 இடங்களில் திருநீறு அல்லது திருமண் இட்டு அடிப்பிரதட்சிணம் செய்து வழிபடுதலால் சொந்த வீடு அமைவதற்கான வாஸ்து அனுகிரக சக்திகள் பரிமளிக்கும். வாஸ்து மாமணிச் சரடு என்று ஒன்றுண்டு. இதனை அணிந்தவாறு இங்கு பூஜித்து வந்திட, எத்தகைய வாஸ்து முரண் தோஷங்களும் நிவர்த்தி பெற உதவும்.

செல்போனின்றி வாழ்க்கையோ, வியாபாரமோ ஓர் அங்குலம் கூட நகராது என்ற நிலையில் இருப்போர், கும்பகோணம் அருகே கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் ஆலயத்தில் ஏழ்மையான, நடுத்தரக் குடும்பமான நாதஸ்வரம், தவில், கிளாரினெட், சாக்ஸோபோன் போன்ற இசைக் கருவி வித்வான்களை, பாடகர்களை அழைத்து, சப்தவழி வழிபாடுகளை ஆற்றிவர வேண்டும்.

தொடரும் ஆனந்தம்...

ஒலியும் ஒளியும் இணையும் அற்புதம்...
ஒளி என்னும் நிறமாலை VIBGYOR என்ற ஏழு வண்ணங்களில் பிரியும் என்பது நாம் அறிந்ததே. அதே போல் நாம் கேட்கும் இசையும் சரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களில் லயமாகும் என்பதும் நாம் அறிந்த ஒன்றே. இந்த இரண்டு சக்திகளின் இணைப்பை அனுகிரகமாக நாம் பெற வழிவகுத்தவரே நம் சற்குரு. நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தை திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீஆனேஸ்வரர் திருத்தலத்தில் கொண்டாடியவர்கள் இந்த அனுபவத்தை நேரடியாகவே பெற்றிருக்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்களுக்கும் வழிகாட்டுவதாகவே இங்குள்ள வீடியோ படம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நீங்கள் கேட்கும் இசையும் கஜாரண்ய திருத்தலத்தில் ஏற்றப்பட்ட 32 தீபங்களும் இந்த அற்புதத்தை அள்ளி வழங்கும் சுவையை நீங்கள் கண்டும் கேட்டும் இரசிக்கலாம். யானையின் நிறம் கருப்பு என்பதே பலரின் கோட்பாடாகும். ஆனால், யானைகள் மட்டுமே ஏற்கும் கருப்பு என்ற வண்ணமானது அனைத்து நிறங்களையும் ஈர்த்து மக்களுக்குப் பயன்படும் வகையில் அந்த வண்ண நிறமாலையை ஸ்வஸ்திக் நிறமாலையாக மாற்றும் தெய்வீக சிறப்பை உடையவை என்பதே சித்தர்கள் நமக்காக அருளும் கஜாருணமாகும். மனித கற்பனைக்கு மிஞ்சிய இந்த கஜ சக்திகளே கஜாருணம் என்பதாகும். இந்த அதீத சக்திகளை பக்தர்கள் பெறக் கூடிய ஒரே தலம் கஜாரண்யமாகும். கஜ ஆரண்யம் என்றால் யானைகளின் அதீத சக்திகள் பெருகும் தலம் என்று மட்டும் பொருளல்ல, இந்த அற்புத சக்திகள் அனைத்து ஜீவன்களுக்கும் வழிகாட்டியாய் அமைந்து நல்லருள் பொழியும் என்பதும் இந்த கஜ சக்திகள் அளிக்கும் அனுகிரகமாகும்.

கருப்பு நிறமுடைய காராம் பசுவின் வெள்ளை நிறப் பால் எப்படி சந்ததி விருத்தியை அளிக்கும் என்ற இரகசியம் இப்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் அல்லவா ? காராம் பசுவின் பாலால் ரெங்கநாதபுரம் ஸ்ரீஆனேஸ்வரருக்கு அபிஷேகம் இயற்றுவதும் சந்தான விருத்தியை அளிக்கக் கூடிய அற்புத வழிபாட்டு முறையே. மூன்றாம் பிறை தரிசனம் நாட்களில் அமையும் இத்தகைய வழிபாடுகள் சந்ததி உடையவர்களுக்கும் நற்பலன்களை வர்ஷிக்கும்.

வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்ற ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சங்குகள், சோளிகள் போன்ற கடல்வளப் பொருட்களை பலரும் கடையில் வாங்கி இறை வழிபாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய தெய்வீக படைப்புகளின் மகிமைகளை முழுமையாக உணர்ந்தவர்கள் சித்தர்களே. சங்குப் பூச்சிகள், சோளிகள் போன்றவை இயற்கையாகவே மரணம் அடைந்து கரையில் ஒதுங்கி இருந்தால், அவைகளை மட்டுமே நாம் வழிபாட்டிற்குப் பயன்படுத்தலாம். அல்லது நம் ஆஸ்ரமம் போன்று சற்குருமார்களால் அங்கீகரிக்கப்பட்ட சோளிகளை, சங்குகளை வாங்குவதால் நாம் தேவையில்லாத கர்ம வினைகளில் சிக்கி அல்லல்பட மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஸ்ரீசுப்ரமண்யர் கடுவெளி

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam